ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள் யுத்தகாலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெறமுடியாது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக திண்டாடி வருகின்றனர். மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட காணிகள் விடுவிப்பில் விரைவுத்தன்மையை காணமுடியவில்லை. யுத்தகாலத்தில் இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் தமது காணிகளைய…
-
- 0 replies
- 286 views
-
-
'ஒன்றுதான் உள்ளது என்றால் அது இலங்கை அல்ல' 'இருபது இனங்களையும் நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை மறந்தால், ஒரே இலங்கை என்பதை மறந்து விட வேண்டியதுதான்' என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, சிங்கள அரச ஊழியர்களுக்கான, தமிழ் பேச்சு மொழி பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதல் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒரே மொழி, மதம், இனம் என்று தெற்கில் கூறினால், அந்த…
-
- 0 replies
- 414 views
-
-
காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது செல்வநாயகம் கபிலன் இலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/188493/க-ர-நகர-கடல-ல-இந-த-…
-
- 0 replies
- 267 views
-
-
லசந்த - மஹிந்த உரையாடல் ஒலிப்பதிவு அம்பலம் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு, பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளுங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகியுள்ளமை பலரையும் சிந்திக்கவைத்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188361/லசந-த-மஹ…
-
- 3 replies
- 628 views
-
-
வடமராட்சி குடந்தனையில் பெண் கொலை தொடர்பில் மோப்ப நாய் உதவியுடன் நபர் ஒருவர் கைது கத்தி மீட்பு - தும்பளை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் கைது 2016-12-22 10:29:18 (வடமராட்சி நிருபர்) பருத்தித்துறை தும்பளையில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை விலக்கச்சென்ற தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக இரு சகோதரர்களும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை பருத்தித்துறையிலும் மற்றவரை சாவகச்சேரியிலும் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குடத்தனை பொற்பகுதியில் தங்கவே…
-
- 0 replies
- 154 views
-
-
மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்! மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அம் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர், பட்டிப்பளை பிரதேச செயலாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா ஆகியோரின் …
-
- 0 replies
- 131 views
-
-
தமிழ் மக்களுக்கு இறுதித் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியாவின் அழுத்தம் தொடரவேண்டும் Published by Gnanaprabu on 2016-12-22 10:18:33 தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதற்கான பிரித்தானியாவின் அழுத்தங்களை அரசாங்கம் ஏற்கனவே உணரத்தொடங்கியுள்ள நிலையில் இறுதித் தீர்வை தமிழ் மக்களுக்கு கிட்டும் வரை அவ்வகையான அழுத்தங்கள் தொடர வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தானிய பழைமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவருமான ஜேம்ஸ் பெர்ரி…
-
- 0 replies
- 154 views
-
-
1.15 பில்லியன் டொலர்களுக்கு 99 வீத குத்தகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்படும் ஜனவரியில் ஒப்பந்தம் கைச்சாத்து; அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவிப்பு (ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சீனாவுடன் முதற்கட்ட உடன்படிக்கையை செய்துகொள்ளவுள்ளோம். சீனாவின் 1.15 பில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கைக்கு 20 வீத பங்கு மற்றும் சீனாவுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்படையில் 99 ஆண்டுகால குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் வழங்கப்படும் என்று அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம …
-
- 0 replies
- 293 views
-
-
ஞானசாரர் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மட்டக்களப்பு விஜயம் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று மேற்கொண்டுள்ள குறித்த விஜயத்தில் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர். அங்கு, மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமனரத்ண தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். அங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையு…
-
- 4 replies
- 698 views
-
-
வெள்ளிக்கிழமை பிரதமர் முதலமைச்சர்களை சந்திப்பார் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தகவல் (ஆர்.யசி) ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு சிறப்பு அமைப்பு பதவிகள் அவசியம் இல்லை. அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டு நாம் ஆட்சியை நடத்தும் திட்டத்திலும் இல்லை என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் முதலமைச்சர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்…
-
- 0 replies
- 210 views
-
-
தமிழர்களையோ முஸ்லிம்களையோ அடக்கி ஆள்வதற்கு நினைக்கவில்லை மட்டக்களப்பில் ஞானசார தேரர் தெரிவிப்பு (காங்கேயனோடை, வவுணதீவு, புதிய காத்தான்குடி நிருபர்கள்) தமிழர்களையோ முஸ்லிம்களையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்கவில்லை. நாட்டில் இன, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் தெரிவித்தார். அரசாங்கம் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டு வருகின்றார். இந்த நல்லிணக்க முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றும் தேரர் சு…
-
- 0 replies
- 263 views
-
-
ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்ததாகும் ரவிராஜ் கொலை வழக்கில் மேஜர் ஜெனரல் லியனகே, பிரிகேடியர் குணரத்ன சாட்சியம் (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக் ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியானது கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் நேற்று வெளிப்படுத்தப்பட்டது. குறித்த துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியம் ஊடாக, இராணுவ புலனாய்வு ரெஜிமன்ட்டுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து பாதுகாப்…
-
- 0 replies
- 247 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காணி, பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் அமர்வில் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிகள் குப்பை நிறைந்தவையாக இருக்கின்றது. உள்@ராட்சி மன்றங்கள் இவை தொடர்பில் அக்கறை எடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு முதலமைச்சருக்கு உரியது. பொலிஸாருக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. அதனை அவர்கள் ஏற்கின்றார்களா? இல்லையா? என்பதைப் பின்னர் பார்ப்போம். பல விடயங்களில் பொலிஸாரை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. கா…
-
- 1 reply
- 415 views
-
-
வலி. வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட வீதிகள் பாதசாரிகளே செல்ல முடியாத நிலையில் உள்ளபோது இராணுவத்தினரின் பிடியில் உள்ள பகுதிகளிற்கு காப்பெற் வீதி போடப்படுவதாக மீளக்குடியமர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பலாலி கிழக்கு வாழ் மக்கள் தெரிவிக்கையில், வலி. வடக்கின் பலாலிப் பிரதேசத்தில் இருந்து 1990களில் விரட்டப்பட்ட நாம் எமது சொந்தக் கிராமங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலடிவைத்தோம். அன்று தொட்டு இன்றுவரையில் அங்கிருந்த இராணுவ எச்சங்களை அகற்றி பற்றைகள், கல்லுகள் அகற்றி வாழ்வாதார நிலங்களை பண்படுத்தி எடுப்பதில் காலம் கடந்து விட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி நகர்வதானால் அதள பாதாளங்களாக காணப்படும் எமது பகுதி வீதிகளை சீர் செய்த…
-
- 3 replies
- 703 views
-
-
சிறீலங்கா இராணுவத்துக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது பாதுகாப்புக் கருதி எந்தவொரு தகவலையும் வெளியிடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய மக்களின் வாழ்வாதாரம் நிறைந்த பிரதேசத்தினை இதுவரை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை. இதனையடுத்து மாவை சேனாதிராஜாவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து அப்பிரதேசத்திற்குள் அடங்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கு மாதாந்த வாடகை செலுத்தப்படும் எனவும் அதற்கான விபரங்களை இராணுவத்தினர் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனால் அத்திட்டம் தற்போது கைவிடப்…
-
- 3 replies
- 701 views
-
-
வடமாகாணத்தில் மக்களுடைய செயற்றிட்டங்களை மேற்கொள்ள படையினரை அழைக்கலாமா என எதிர்க்கட்சி உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையினை ஆளும் கட்சியினர் மற்றும் முதலமைச்சர் நிராகரித்துள்ளதுடன், படையினரிடம் உதவி கேட்டால் ஆயிரம் வருடங்கள் அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் மாகாணத்தில் சில வேலை திட்டங்களை முன்னெடுக்க படையினரின் உதவியை பெறலாமா? என முதலமைச்சரின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான 2ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றபோது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை உடனடியாகவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்ததுடன், இராணுவம் இங்கிருந்து வெளியேறவேண்டும். என்பதே உறுதியான தீர்மானம் என கூறினர். …
-
- 0 replies
- 214 views
-
-
குருவிட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற நபருக்கு அவரது 8 வயது மகன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைப்பட்டுள்ள தனது தந்தைக்கு, தனக்கு தெரிந்த மொழியில் சிறு பாலகன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தந்தைக்கு மகன் எழுதிய கடிதம் குருவிட்ட சிறைச்சாலையில் சிறைக் காவலாளியாக சேவை செய்யும் ஒருவரின் கையில் கிடைத்துள்ளது. அவர் தன்னுடைய உறவினரிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அப்பா நீ…
-
- 1 reply
- 344 views
-
-
மாகாணங்களின் அபிவிருத்தியைப் புறந்தள்ளிவிட்டு எவ்வாறு தேசிய அபிவிருத்தி குறித்து கனவு காண முடியும் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டத்தில் முதலமைச்சரின் நிதியொதுக்கீடு தொடர்பான விவாததத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆற்றிய உரை…… கௌரவ தவிசாளர் அவர்களே இம்முறை வரவு செலவுத்திட்டத்திலே எங்களின் மாகாண சபைக்கு 53 வீதமான நிதி குறைக்கப்பட்டுள்ளமையானது அதிகாரப்பகிர்வு குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் சாதகமான நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் வாக்குறுதிகள் குறித்து மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டுகளை பார்ப்போமேயானால் கட…
-
- 0 replies
- 231 views
-
-
வடக்கில் பொதுமக்களின் பெருமளவிலான காணிகளை இராணுவம் அபகரித்து வைத்துள்ள நிலையில் அரச காணிகளையும் சட்ட ரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு திரைமறைவில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது. பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். …
-
- 0 replies
- 271 views
-
-
'வடக்கில் மகளிருக்கு நிதி இல்லை' எம்.றொசாந்த் மகளிர் விவகாரத் துறைக்கு, 2016ஆம் ஆண்டு, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகக் காணப்படும் மகளிர் விவகாரத் துறையின் கீழ், போருக்குப் பின்னரான வட மாகாணத்தில், கடந்த காலப் போரினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மாற்…
-
- 0 replies
- 242 views
-
-
கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வா்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு இறந்துள்ளாா். குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயா்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளாா். சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி கா…
-
- 1 reply
- 506 views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில் தென்னிந்தியப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இசைக்கச்சேரி ஒன்றையும் நடாத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தற்போது இசையமைப்பாளர் இளையராஜ…
-
- 5 replies
- 720 views
-
-
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீக அரியகுண்டான் கிராமம் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த கிராமத்து மக்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக அயல் கிராமமான பட்டிகுடியிருப்பு கிராமத்து பொதுமக்களிடம் வினவிய போது, அழிவடைந்த துவரங்குள கிழக்கு கிராமத்தில் தற்பொழுதும் இராணுவத்தினரின் நடமாட்டம் காணபப்படுவதாக கூறியுள்ளனர். இதனால் மீண்டும் அங்கு சென்று மீள்குடியேற பொதுமக்கள் மறுத்துவருவதாக தெரிவித்துள்ளனர…
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கிய கருவிகளாக செயற்பட்டு வருகின்றவர்கள் பொதுபல சேனா பிக்குகள் என்பதும், அவர்களுக்கு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் அறிந்த விடயமே. இந்த இனவாதப் பிரச்சினை ஆரம்பமானது மட்டக்களப்பு மங்களராமய விகாரையும் அதன் விகாராதிபதி சுமனரத்ண தேரர் முலமாகவே என்றே தெரிவிக்கப்பட்டன. குறித்த விகாரையின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொருட்டும் மட்டக்களப்பின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் வகையிலும் புத்த சாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். இதன் போது பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் சுமனரத்ண தேரர் உட்பட பிக்குகளுடன் அமைச்சர…
-
- 0 replies
- 220 views
-
-
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அந்தத் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கின்றது கூடிய விரைவில் இது நிறைவேறும் என தம்மாலோக தேரர் உறுதி கூறினார். நேற்றைய தினம் யப்பானில் கோத்தபாய தலைமையில் ஓர் பௌத்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமான பௌத்தர்களும் பிக்குகளும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தம்மாலோக தேரர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இப்போது பெளத்தத்திற்காக குரல் கொடுத்து அதனை பாதுகாத்து சிங்களவர்களை காப்பாற்றும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமே. பௌத்தத்தை காக…
-
- 6 replies
- 426 views
-