Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போலியான பிரசாரம் தொடர்பில் சீனா அதிருப்தி (லியோ நிரோஷ தர்ஷன்) காணி சுவீகரிப்பு என கூறி சீனாவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் குறித்து சீனா அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஹம்பந்தோட்டை சிறப்பு வர்த்தக வலயத்திற்கு காணிகளை சுவீகரிப்பதாக கூறி பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் மூன்று சீன நிறுவனங்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்பித்து முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6 வருடக்காலமாக இலங்கையில் செயற்படும் குறித்த நிறுவனங்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டு அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங…

  2. சிறப்பு அமைச்சர் பதவி: ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் படுகின்றனவா? சிறப்பு அமைச்சரை உருவாக்கப்போகின்ற சட்டமூலமாக ”அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்” தற்போது அநேகமானவர்களால் விபரிக்கப்படுகின்றது. அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு அமைய, மிக மேன்மையான அதிகாரங்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம், அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்களுக்கே கிடைக்கவுள்ளன. தற்போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதுடன், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக மலிக் சமரவிக்ரம பதவி வகிக்கின்றார். அபிவிருத்…

  3. ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்பு குழு விரைவில் -எம்.றொசாந்த் வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே, இன்று இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டபோதும் 201…

  4. புதிய அரசியலமைப்பில் சமஷ்டி இடம்பிடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்-அரசை எச்சரிக்கிறார் தினேஷ் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பரிசீலனை செய்து ஒற்றையாட்சியை நாசமாக்க அரசு முற்படுமா யின் அதற்கு எதிராக பொது எதிரணி, மக்கள் சக்தியைத் திரட்டி பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேவேளை, அவ்வாறான ஒரு அசியல் அமைப்பை, நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார். 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட அரசு உத்தேசித்துள்ள புதிய யாப்புத் தொடர்பில் அரசுக்குள் இதுவரை உறுதி யான தீர்வு…

  5. பொருத்தமான வீட்டுத்திட்டம் அவசியம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு உற­வு­க­ளையும், வீடு­க­ளையும், சொத்­துக்­க­ளையும் இழந்த மக்­களின் தேவைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. அந்த மக்­களின் தேவைகள் பிற்­போ­டப்­ப­டக்­கூ­டி­ய­வையோ, அல்­லது காலம் தாழ்த்­தப்­ப­டக்­கூ­டி­ய­வையோ அல்ல. அந்த மக்­களின் தேவைகள் விரை­வாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதிலும் விசே­ட­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீட்டுப் பிரச்­சினை என்­பது பாரிய பூதா­க­ர­மான விட­ய­மாக மாறி­யுள்­ளது. குறிப்­பாக யுத்தம் கார­ண­மாக தமது வீடு­களை இழந்த மக்கள் இது­வரை வீடு­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள…

  6. வடக்கு மாகாண சபைக்கு காணி,பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கக்­கூ­டாது புதிய அர­சி­ய­ல­மைப்பை கூட்டு எதி­ரணி எதிர்க்கும் என்­கிறார் வாசு (ப.பன்­னீர்­செல்வம்) வட­மா­காண சபைக்கு காணி, பொலிஸ் உட்­பட அதிக அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டக்­கூ­டாது. இதனை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக தெரி­வித்த மஹிந்த ஆத­ரவு எம்.பி.யான வாசு­தேவ நாண­யக்­கார புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் பொது எதிர்க்­கட்சி வாக்­க­ளிக்கும் என்றும் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்; ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான இந்த அர­சுக்கு எமது ஆத­ரவு எப்­போதும் இல்லை. எனவே, புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பொது எதிர்க்­கட்­சி…

  7. இரா­ணு­வத்தின் துப்­பாக்கி ஊடா­கவே ரவிராஜ் படுகொலை செய்­யப்­பட்டார் பிர­தான விசா­ரணை அதி­காரி பிரே­ம­தி­லக சாட்­சியம் (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை இரா­ணு­வத்­துக்கு சொந்­த­மான ரீ 56 ரக துப்­பாக்­கியே ரவிராஜ் படு­கொ­லைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக குறித்த விவ­காரம் தொடர்பில் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யாக செயற்­பட்ட குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­யான பிரே­ம­தி­லக அம­ர­வங்ச நேற்று நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார். மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­ல­கவின் மேற்­பார்­வையில் சிறப்பு ஜூரிகள் சபை முன்­னி­லையில் அவர் சிர…

  8. அதி சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் சிக்கியது 1200 சீ.சீ வேகம் கொண்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் பலமிக்கவராக இருந்த நபரொருவரின் மகன், இந்த மோட்டார் சைக்கிளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதாள குழுவினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/188304/அத-சக-த-வ-ய-ந-த-ம-ட-ட-ர-ச-க-க-ள-ச-க-க-ய…

  9.  ‘தாயகமும் சமஷ்டியும் வேண்டும் வேறு எதையும் ஏற்கோம்’ சுப்பிரமணியம் பாஸ்கரன் “வடக்கு - கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை என்பதை உள்ளடக்காத எவ்வாறான தீர்வையும், நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். “நாங்கள், தெளிவானதும் நேரானதுமான ஒரு பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள், தேச விடுதலைக்காக போராடுகின்ற இனம். அதில் நாங்கள், போராளிகளாக இருக்கின்றோம். அந்தப் பாதையில், எங்களுடைய பாதங்களை சரியாக வைக்கின்றோம்” என்றும், அவர் குறிப்பிட…

  10. சங்கத்தானை விபத்து: இ.போ.ச பஸ் சாரதிக்கு பிணை செல்வநாயகம் கபிலன் சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார். மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான் ஒத்திவைத்தார். இதேவேளை, வழக்கு விசாரணையின் போது, விபத்தை நேரடியாகக் கண்ட மூவரின் சாட்சிகளும், நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன. கடந்த சனிக்கிழமை (17), யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்…

  11. சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் குப்பைகளை ஆங்காங்கே வீசுவதால் சூழல் மாசடைவு (வீடியோ இணைப்பு) (க.கிஷாந்தன்) சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. பல பாகங்களிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகள் வருகை தருகின்றனர். இதேவேளை இப்பகுதியில் உள்ள சுற்றாடலை பாதுகாக்க வேண்டிய தேவைகளும் உள்ளது. சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் பொலித்தின், வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் சுகாதாரத்திற்கு சீர்கேடான குப்பை கழிவுகளை சிவனொளிபாதலை வழியில் ஆங்காங்கே வீசப்படுவதால் சூழல் மாசடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவ…

  12. வவுனியாவில் திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில் வவுனியா இறம்பைக்குளம் புனித யோசவாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசவாஸ் திருச் சொரூபம் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ் அடிகளால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காலை திருப்பலியின் பின்னர் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட புனித யோசவாஸ் திருச்சொரூபம் புதிதாக நிர்மானிக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/

  13. வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் இன்ற திறந்துவைப்பு.! வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்லிசிப் திட்டத்தில் புனர் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இப்புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ. குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்…

  14. வைகோ ஏன் எதிர்க்­கின்றார்? (பா.ருத்­ர­குமார்) இலங்கை மீன வர்­களை பாது­காக்கும் சட்­டங்­களை மறு­ம­லர்ச்சி திரா­விட முன் ­னேற்­றக்­க­ழக செய­லாளர்வை.கோபா­ல ­சாமி ஏன் எதிர்க்­கின்றார் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ கேள்வி எழுப்­பி­யுள்ளார். இரா­மேஸ்­வ­ரத்தில் ஆர்ப்­பாட்ட பேரணி ஒன்றை வைகோ நடத்­தி­யுள்ள நிலை­யி­லேயே நாமல் ராஜ­பக்ச, தமது டுவிட்டர் பக்­கத்தில் குறித்த கேள்­வியை எழுப்­பி­யுள்ளார் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வ­தது, வைகோ எப்­போதும் இலங்­கையின் தமிழ் மக்­களை பற்றி பேசு­கின்றார். எனினும் இலங்­கையின் தமிழ் மீன­வர்­களை பாது­காக்கும் வகை­யி­லான சட்­டங்­களை அவர் ஏன் எதிர்க்­க­வேண்டும் என தெரி­ய­வில்லை.…

  15. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழப்பார் ; ஜோதிடரின் கருத்தால் சர்ச்சை (க.கமலநாதன்) றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழந்து விடுவார் என்று ஆரூடம் கூறியுள்ளார். நாளந்தம் இவரின் கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடக வலுப்பெற்று வருகின்றன. எனவே இது ஆரூடமாக இருக்காது இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது ஜனாதிபதி இறந்துவிடுவார் என்ற கருத்தை சமூக மயப்படுதித்திவிட்டு அதனை உண்மையாக்கும் பாரதூரமான முயற்சியே இதுவென ஊடக அமைச்சு மற்றும் பாராளுமன்றங்கள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு குற…

  16. யாழ் சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் திங்கட்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தென் பகுதியில் இருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 11பேர் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் 11 மெழுகுதிரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தி இருந்தனர். இதேவேளை திங்கட் கிழமை காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (7…

  17. பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைப்பதின் அவசரம் என்ன? கேள்வி எழுப்புகின்றார் ரவிகரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று 2016.12.19 முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கண்டனத்தினைத் தெரிவித்தார். முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர் பிரதேச சபையின் …

  18.  ‘4ஆம் மாடி மாறும்’ அழகன் கனகராஜ் நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அரசாங்கம், நேற்றுத் தெரிவித்தது. அத்திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக, நான்காம் மாடி தொடர்பில் ஒருவகையான அச்சநிலைமை ஏற்படும். நீங்கள் சரியோ அல்லது பிழையோ என்பது பிரச்சினையில்லை. ஏன் இங்கே அழைத்துவரப்பட்டீர்கள…

  19. பொருத்­த­மான, நீண்­ட­கால தீர்வு திட்டம் அவ­சி­ய­மாகும் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் வர­லாறு முழு­வதும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்த முயற்­சிகள் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. விசே­ட­மாக தீர்வு காணும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­கும்­போது ஏதோ ஒரு வழியில் அதற்கு எதி­ரான சக்­திகள் உரு­வாகி தீர்வுத் திட்­டங்கள் வெற்­றி­ய­டை­யாமல் போகும் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. 1987 ஆம் ஆண்டு பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­ட­மா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக கொண்­டு­வ­ரப்­பட்­ட­போதும் அது தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­கள…

  20. சுவிஸ் - பிரித்தானியா நடைமுறைகளை பின்பற்றுமா இலங்கை..? மொழி, காலாசாரம், பொருளாதாரம், நிலம் மற்றும் மக்கள் கூட்டம் என்பனவே ஒரு இனத்தை தாங்குகின்ற பிரதான தூண்களாக உள்ளன. இந்த தூண்கள் அழிக்கப்படும் போதுதான் இனப்பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த தூண்கள் அழிக்கப்படுவதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துகொள்ளுதல் என்பதுதாக. இந்நிலையில், இந்த தூண்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேச நாடுகள் குறிப்பாக சுவிஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன..? அவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும்..? போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையின் அரசியல் துறை பேராசிரியர் ஜோதிலிங்கம் அவர்கள் …

    • 0 replies
    • 335 views
  21. யாழ்.காவல் நிலையத்தில் உள்ள கட்டம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது. – சி.தவராசா. யாழில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள காவல் நிலைய கட்டடம் ஒன்று அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 70 ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவல் நிலையத்தில் காவல்துறையினர் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி தொகுதி உள்ளூராட்சி சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டு உள்ளது. இவ்வாறாக வடக்கில் அவர்கள் தாம் நினைக்கும் இடத்தில் , நினைத்தவாறு சட்ட…

  22. யாழ்.இளவாலை பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார். பற்றைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் தம்பிமுத்து மரண விராசணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சடலத்தின் சட்டை பையில் இருந்து தொலைபேசி இலக்கம் ஒன்று மீட்கப்பட்டு, அந்த தொலைப…

  23. 2017ம் ஆண்டு வடமாகாணத்தில் போதைப் பொருள்பாவனை மற்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015ம் ஆண்டிலிருந்து எடுக…

  24. அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதிலும் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறுவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயகவிடம் அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பில் கூட்டமைப்பின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். அதிகார பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. எனினும…

  25. வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியதாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார். தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.