Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் இரத்து கம்போடிய பிரதமர் ஹுன் சேன், இலங்கை உள்ளிட்ட ஏனைய மூன்று நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை, கம்போடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் செனட் தலைவர் மியன் ராசா ரப்பானியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில் மேற்கொள்ளவுள்ள முக்கிய பணிகளை நிறைவுசெய்ய வேண்டிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் வரடத்தில் அந்நாட்டில் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ப…

  2. மாவீரர் தின நிகழ்வுகளைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “ மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும். வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் சிவில் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றமையால் இராணுவ பாதுகாப்புகளை பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவில்லை” என்று…

  3. அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை நோக்கமாக கொண்டே, அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை நினைவு கூர அனுமதி வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பும் வகையிலும் அரசாங்கம் மாவீர்ர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=170794&category=TamilNew…

  4. சிங்களத்தை காணவில்லை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான பத்திரம், தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதால், அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக, நாட்டுக்காக நாம் எனும் தேசிய அமைப்பின் ஒன்றியம், தெரிவித்தது. கொழும்பு நூலக மற்றும் ஆவணாவாக்கற் சபையின் கேட்போர் கூடத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே, மேற்படி ஒன்றியம், இந்தச் செய்தியை வெளியிட்டது. இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், “யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் விநியோகிக்கப்பட்ட மேற்படி அடையாள…

    • 1 reply
    • 573 views
  5. ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அதே ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குறித்த 13 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான ரோஹினி வெலகம மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 2008 தலஹென கிருஸ்தவ தேவாலய மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13983

  6. இலங்கை ஜேர்மன் நிறுவன விரிவுரையாளர்களுக்கு பயிற்சி செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம், கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உராய்வு நீக்கி தொழில்நுட்பம் தொடர்பான உயர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை அண்மையில் நடாத்தியது. வயது வந்த இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள தொழில்சார் பயிற்சியை வழங்குவதற்காக, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், மின்சார மற்றும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பம் உட்பட, தன்னியங்கி, நிர்மாணம், உணவு பதனிடும் தொழில்நுட்பம், இயந்திரவியல் பொறியியல், என்பவற்றுடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளை வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்ட…

  7. வடக்கில் விகாரைகளை புனரமைத்து பௌத்த பிக்குகளை குடியேற்ற வேண்டும் என்று இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 'வடக்கில் சிறிய சம்பவம் நடந்தாலும் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது. தெற்கில் சிறிய சம்பவங்கள் நடந்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். வடக்கில் 270 விகாரைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விக்னேஸ்வரன் அறியாமல் இருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தி அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் விகாரைகள் தொடர்பாக தேடி அறிந்து, அவற்றை புனரமைத்து பௌத்த பிக்குகளை அங்க…

    • 3 replies
    • 582 views
  8. இந்து சமுத்­தி­ரத்தின் கடற்­பா­து­காப்பு தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல்களை தீர்க்க பொது செயற்­றிட்டம் அவ­சியம் இந்திய கடற்படை தளபதி தெரிவிப்பு (ஆர்.யசி) இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான தொடர்பு சிறுநீரி­ணையால் மட்­டுமே பிளவுபட்­டுள்­ளது. பிராந்­திய ஒத்­து­ழைப்பு மூலம் கடல்சார் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த முடியும். இதற்கு பிராந்­திய நாடுகள் ஒன்­றி­ணைய வேண்டும் என இந்­திய கடற்­படை தள­பதி அட்­மிரல் சுனில் லம்பா தெரி­வித்தார். மேலும் இந்து சமுத்­தி­ரத்தில் பாரிய பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­துள்ள கடற்­பா­து­காப்பு தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல்களை தீர்க்க பொது செயற்­றிட்டம் ஒன்று அவ­சியம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்…

  9. டுபாயில் பாரியளவு கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையருக்கு தண்டனை டுபாயில் பாரியளவு கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையர் ஓருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று இலங்கையர்கள் சேர்ந்து டுபாயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு இலங்கையர்களும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்ஜா விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது குறித்த 47 வயதான இலங்கையரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிறைத் தண்டனையை பூர்த்தி செய்ததன் பின்னர் குறித்த நபரை நாடு கடத்த உள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த நபருக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை …

  10. மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் மரக்குற்றிகள் கடத்தல்; சாரதி கைது (அப்துல் கையூம்) மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் வைத்து மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மரங்கள் மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கிரான் சந்தியில் மறைந்திருந்த பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையிலேயே இவற்றைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். மரம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சுமார் 15 அடி நீளமான 15 பெரிய தேக்கு மரக்குற்றிகள் எ…

  11. மாவீரர்களுக்கு உயிர் கொடுப்பு: மஹிந்த அணி ஆக்ரோஷம் அழகன் கனகராஜ் இது புதுமையான அரசாங்கமாகும், வடக்கில் மாவீரர்கள் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஊடாக, மாவீரர்களுக்கு உயிர்கொடுக்கப்பட்டுள்ளது” என்று, மஹிந்த அணி குற்றஞ்சாட்டியது. “பிரிவினைவாத புலிப் பயங்கரவாதிகளுக்கு உயிரூட்டிய இந்த அரசாங்கமானது, படையினரைப் பயங்கரவாதிகளாக்கி சிறைச்சாலைகளில் அடைக்கின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டியது. நாடாளுமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற, போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலு…

  12. மாவீரர் தின அனுட்டிப்பிற்கு அனுமதி வரவேற்கத்தக்கது-பேராசிரியர் தயாசோமசுந்தரம் இவ்வருடம் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் தினத்தில் பொது இடங்களில் ஒன்று கூடி, நினைவு கூருவதற்கு கடந்த எட்டு வருடங்களாக அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டி ருந்தது. உயிரிழந்த உறுப்பினர்களை அடக்கம் செய்வதற்காக வடக்கிலும் கிழக்கிலும் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயி…

  13. முறிகண்டியில் கோரவிபத்து : 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி (எஸ்.என்.நிபோஜன்) முறிகண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்றில் இருந்து யாழ். நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் மினிபஸ் ஒன்று இன்று காலை ஏழு மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த வேளையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்துக் கொ…

  14. கருணா நிதிமோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர் கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் இன்று (19) ஆஜராகியுள்ளார். நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். http://www.virakesari.lk/

  15. கோமாளி அரசியல் செய்யும் சிவாஜிலிங்கத்திடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் : மனோ கணேசன் நிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. என்றாலும் இவரது போக்கிரித்தனமான கருத்துகள் ஒரு சிலரைகூட தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் இந்த பதிலை தர விரும்புவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தன்னை பெயர் குறித்து கூறியுள்ள கருத்துகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவ…

  16. கரு­ணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கில் பல கொலை­களை செய்தேன்.! (எம்.எப்.எம்.பஸீர்) கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் பல கொலை­களை தான் செய்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் தெரி­வித்தார். ரவிராஜ் கொலை வழக்கின் இரண்­டா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே குறித்த சாட்­சி­யளர் மேற்­படி சாட்­சி­யத்தைப் பதிவு செய்தார். இந்த விட­யத்தை சாட்­சி­யாளர் வெளி­பப்­டுத்­திய போது மன்றில் பிர­சன்­ன­மா­…

  17. 24 ஊடகவியலாளர்கள் கொலை : கொலையுடன் தொடர்புடையவர் சபையில் உள்ளார் : எம்.பி. அதிர்ச்சி தகவல் (ஆர். ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை வரலாற்றில் முதலாவது ஊடகவியலாளர் படுகொலை 1981 ஆம் ஆண்டு பதிவானது. இதன்படி 1981 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் படுகொலையுடன் தொடர்புடைய பிரமுகர் தற்போதும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முன்னைய ஆட்சிக்காலத்தின் போது 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலை 24 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரம்புக்வெல்ல எம்.பி. திருத்தி வாசித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் …

    • 2 replies
    • 318 views
  18. 'ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? : இறந்தவர்களை நினைவு கூருவது தமிழர்களின் தார்மீக பொறுப்பு : வாசுதேவ ஆச்சரிய கருத்து (ப.பன்னீர்செல்வம்) விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர். இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்…

    • 2 replies
    • 432 views
  19. தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவனந்தா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கேரிக்கையை முன்வைத்துள்ளார். ஊடகத்துறையானது அதற்குரிய அடிப்படைப் பண்புகளை இழந்து நிற்பதாகவும் அளவுக்கதிகமாக ஊடக சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருவதாக பலதரப்பினரும் குற்றம்சுமத்தி வருகின்றனர். சில ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்ப…

    • 3 replies
    • 449 views
  20.  நன்றி கூறினார் டக்ளஸ் உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்…

  21. 87 இலட்சம் பெறுமதியான கஞ்சா பருத்தித்துறையில் பிடிபட்டது-மூவர் கைது யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ள தாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமாசிங்க தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்று ள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை செய்தபோது அப் படகில் மறைத்து வைக…

  22. பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் – சந்தேகநபர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர் மாணவி கொலை வழக்கில் தம்மை கைது செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொலை செய்வோம் என தாம் மிரட்டியதனை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேவேளை, குறித்த வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்த, தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணையும் இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.அதன் போது பதில் நீதிவான் குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா ? என கேட்ட போது…

  23.  ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’ வா.கிருஸ்ணா “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். “எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தனது முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதி…

  24. புலிகளை நினைவுகூர்ந்தோரை உடனடியாக கைது செய்யுங்கள் (க.கமலநாதன்) யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதாக தெரிவித்து வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களின் முன்பாக புலிகளின் பதாதைகள் ஏந்திக்கொண்டு புலிகள் நினைவு கூரப்பட்டுள்ளனர். இது இனவாதத்தினை வலுவாக்கும் செயற்பாடாகும். எனவே வடக்கில் இவ்வாறு புலிகளை நினைவு கூர்ந்தவர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியலமைப்பின் 157 ஆ. சட்டமூலத்திற்கு அமைவாக பிரிவினை வாதத்தினை தூண்டுவது தவறான செயற்பாடாகும். எனவே மேற்குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களை சட்டத…

  25. போராட்டத்தைiயும் இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம் – மனோவிடம் சிவாஜி கோரிக்கை தேசிய போராட்டத்தையும் தேசிய இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என தேசிய மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மனோகணேசன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை பயங்கரவாத இயக்கம் எனவும் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் எனவும் தெரிவித்த சிவாஜிலிங்கம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.