Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்னும் எதிர்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன! அரசியல் தீர்வு தமிழர்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல, பெரும்பான்மை இனத்திற்கும், முழு நாட்டிற்கும் தேவையான ஒன்றாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் நடராஜா ரவிராஜின் 10வது நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவச்சிலை திறப்புவிழா மற்றும் நினைவுக் கூட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரவிராஜின் கொலை யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பது பற்றி தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. ரவிராஜ் அர…

  2. இலங்கையில் சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்குமாறு ஐ.நா கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் சித்திரவதை சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது. ரொரன்டோவைச் சேர்ந்த ரோய் சமாதானம் என்பவருக்கே இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. தாம் சித்திரவதைக்கு உட்பட்டதாகக் கூறி குறித்த கனேடியர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்திருந்தார். 2007ம் ஆண்டு திருமணம் செய…

  3. தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எனது கடமை! - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேட்டி மீரா ஸ்ரீனிவாசன் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஜனவரியில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து இலங்கை அதிபரானார் மைத்ரிபால சிறிசேனா. சிறந்த நிர்வாகம், அதிபரின் அதிகாரக் குறைப்பு, தமிழர்களுடன் நல்லிணக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் வெற்றிபெற்றவர் அவர். அவரது வெற்றி, இலங்கைக்குப் புதிய தொடக்கத்தைத் தரும் என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏற்கெனவே இருக்கும் சவால்களுடன் புதிய சவால்களையு…

  4. ஐ.நா வெசாக் நிகழ்வில் பிரதமர் மோடியும் பங்கேற்பு ஐ.நா வெசாக் தின நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற வுள்ளது. இந்த நிகழ்வுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ப தாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் நாள் அதிகாரபூர்வ நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்க தேரர்களை, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று சந்தித்தார். இதற்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத…

  5. இலங்கையில் தீவிரமடையும் இனவாத உணர்வுகள்-சர்வதேச மனித உரிமை அமைப்பு க்கள் கவலை இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்பு க்கள் கவலை வெளியிட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெனீவா தீர்மானம் மூலம் இலங்கை அரசாங்கம் தன்னை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அர்ப்பணித்துள்ளது. அண்மைய நாட்களில் நாங்கள் அவதானிக்ககூடியதாகவுள்ள ஆபத்தான உரைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரி களுக்குள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் நல்லிணக்கம் பொறு…

  6. மங்களராம விகாராதிபதி விவகாரத்துக்கு சட்ட நடவடிக்கைக்கு -ஏ.எச்.ஏ.ஹஸைன் மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். நீதியமைச்சரை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து சனிக்கிழமை (19) சந்தித்தபோது, விகாராதிபதியின் அடாவடித் தனங்கள் குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் முறையிட்டேன். இதன்போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்றும் அவர் கூறினார். நீதியமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்…

  7. ஐ.நாவை கேலிக்­கூத்­தாக மாற்றும் அர­சாங்கம் ஜெனீவாவில் நடந்து வரும், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. குழுவின் 59 ஆவது கூட்­டத்­தொ­டரில் கடந்த வாரம் இலங்கை தொடர்­பான மீளாய்வு இடம்­பெற்­றி­ருந்­தது. நவம்பர் 15, 16ஆம் திக­தி­களில் நடந்த இந்த மீளாய்வுக் கூட்­டத்­துக்கு, இலங்­கையில் இருந்து 11 பேர் கொண்ட குழு, சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மையில் ஜெனீவா சென்­றி­ருந்­தது. கடந்த ஆண்டு செப்­டெம்பர் மாதம், இலங்கை தொடர்­பான இணக்கத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட – ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ருக்குப் பின்னர், இலங்கை அர­சாங்கம் அதிக பிர­தி­நி­தி­களை ஜெனீ­வா­வுக்கு அனுப்­பி­யது இதுவே முதல்­முறை. ஜெனீ­வாவில் ந…

  8. மணலாறில் மஹிந்த... முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முல்லைத்தீவு மணலாறு மயிலன்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு இன்று காலையில் விஜயம் செய்தார். (படங்கள்:சண்முகம் தவசீலன்) - See more at: http://www.tamilmirror.lk/186458/மணல-ற-ல-மஹ-ந-த-#sthash.GsLwZAUd.dpuf

  9. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பில் நியூஸ்பெஸ்டின் ஆராய்வு பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும். இது சில தினங்களாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு தற்போது எவ்வளவு? நியூஸ்பெஸ்ட் அது தொடர்பில் ஆராய்ந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 54,285 ரூபாவாகும். அதனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் எரிபொருளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களுக்கு அமைய அது வேறுபடும். 15,000 ரூபா தொடக்கம் 65,00…

  10. இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி? அர­சியல் போட்டா போட்­டிகள் கார­ண­மா­கவே இந்த நாட்டில் பல்­வேறு முரண்­பா­டு­களும் இன முறுகல் நிலையும் கல­வ­ரங்­களும் அவ்­வப்­போது வெடிக்­கின்­றன. பத­வி­யி­லி­ருக்கும் அர­சாங்­கத்தை கவிழ்க்­கவும் அதே­போன்று ஆட்­சியை கைப்­பற்­றவும் அர­சி­யல்­வா­திகள் இன ரீதி­யான செயற்­பா­டு­க­ளையே தமது ஒரே ஆயு­த­மாக கொண்­டுள்­ளனர். இதற்கு ஏற்­றாற்­போன்று கடும் போக்­கா­ளர்­களும் மத­வா­தி­களும் ஒத்­தூ­து­வதை காண­மு­டி­கி­றது. அர­சி­யல்­வா­தி­களின் மறை­மு­க­மான நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் தூண்­டப்­படும் ஒருசில மத­வா­திகள் நாட்டை குழப்­பு­வது மாத்­தி­ர­மின்றி இனங்­க­ளுக்­கி­டையே மோதல்­களை உரு­வாக்கி பதற்­ற­மா­னதோர் சூ…

  11. ஸ்ரீல.சு .க. பிள­வு­ப­டு­வதை தடுக்க மைத்­திரி – மஹிந்த பேச்­சுக்கு ஏற்­பாடு (எஸ்.கே) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாகப் பிள­வு­பட்டு செயற்­ப­டு­வதால் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­ட­வுள்ள தோல்­வியைத் தடுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டையில் துரித பேச்­சு­வார்த்­தை­யொன்றை மேற்­கொள்ள இரு­த­ரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலை­மையில் புதிய கட்­சி­யொன்றை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்ற பெயரில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்­பித்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் பிர­ச…

  12.  'உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு' -எம்.றொசாந்த் 'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, 'எமது விடுதலைப் போராட்டத்தின் தியாகங்கள், அர…

  13. "வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தீர்மானம்" வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வ…

  14. வடக்கில் இரா­ணு­வ முன்பள்ளிகள் சட்­ட­வி­ரோ­த­மென்­கின்றார் வடக்கு முதல்வர் சி.வி. விக்­னேஸ்­வரன் (ஜெ.ராஜன், எஸ்.கே.) வட மாகா­ண­ச­பையின் எல்­லைக்குள் மாத்­திரம் மாகா­ண­ச­பையின் கட்­டுப்­பாட்­டின்கீழ் சுமார் 660 முன்­பள்­ளிகள் இயங்­கு­கின்­றன. இருந்தும் இந்த எண்­ணிக்­கைக்கு நிக­ராக இரா­ணு­வத்­தி­னரும் சுமார் 580 முன்­பள்­ளி­களை நடத்­தி­வ­ரு­கின்­றனர். மாகா­ண­சபை நடத்தும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 6, 000 ரூபாவே மாதாந்த சம்­ப­ள­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. ஆனால், இரா­ணுவம் நடத்தும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 20,000 முதல் 30, 000 வரை மாதாந்த சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. வடக்கில் இரா­ணு­வத்­தினர் இது­போன்ற அத்­து­மீ­றல்­களை மேற்­கொண்ட…

  15. கூட்­ட­மைப்பு மீதான தாக்­குதல் வழக்கில் இரண்டு எதி­ரி­க­ளுக்கு சர்­வ­தேச பொலிஸ் பிடி­யாணை –நீதி­பதி மா. இளஞ்­செ­ழியன் உத்­த­ரவு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் மீதான ஊர்­கா­வற்­று­றையில் தேர்தல் பரப்­பு­ரையின்போது நடாத்­தப்­பட்ட தாக்­குதல் வழக்கு நாளை திங்­கட்­கி­ழமை முதல் ஒவ்­வொரு தினமும் விசா­ர­ணைக்கு எடுப்­ப­தற்கு யாழ்.மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். நான்கு எதி­ரி­க­ளுக்கு எதி­ரான 47 குற்­றச்­சாட்­டுக்கள் சட்­டமா அதி­பரால் யாழ். மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் 40 சாட்­சி­க­ளுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க அழைப்­பாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள ந…

  16. அரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று சனிக்கிழமை (19) காலை 9 மணிக்குக் கூடியது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழான ஆறு குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186399/அரச-யலம-ப-ப-த-ர-த-தம-க-ழ-க-கள-ன-அற-க-க-சமர-ப-ப-ப-ப-#sthash.dj6YG2DB.dpuf

  17. சிறுநீரக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஜனாதிபதியின் இணைப்பு அலுவலகம் தனிச்சிங்களத்தில் வவுனியாவில் திறப்பு சிறுநீரகப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டான ஜனாதிபதியின் வன்னி இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணை ந்து திறந்து வைத்தனர். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது. வன்னியில் தமிழ் மொழி பேசும் மக்களே அதிகமாகவுள்ள நிலையில் இவ் இணைப்பு அலுவலகத்தின் பெயர்ப் பலகை தனிச் சிங்க ளத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…

  18. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விவரம் அழகன் கனகராஜ் 2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில், அரசாங்கம் நேற்றுச் சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு அவ்வமைச்சின் அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தக் காலப்பகுதியில் 13 ஊடகவியாலர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேவேள…

  19. தமிழரும்,முஸ்லிம்களும் கள்ளத் தோணிகளாம்-ஞானசாரதேரர் கண்டுபிடிப்பு சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாட்டில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞானாசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு இன்று கண்டியில் கண்டனப் பேரணியொன்றை நடத்திய ஞானாசார தேரர் தமிழர்களும், முஸ்லி ம்களும் இந்தியாவிலிருந்து கள்ளத்தோணிகளில் வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சிங்கள பௌத்த மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் பௌத்த பிக்குகளை ஒடுக்க அரசாங்கம் சதித்திட்டமொன்றை முன்…

  20. அத்துமீறி பிரவேசித்த 11 இந்திய மீனவர்கள் கைது.! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும், அவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். குற…

  21. 'மஹிந்தவை சந்தித்தப் பின்னரே பிரச்சினை வந்தது' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில், மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு சென்று விகாரதிபதி சுமனரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களராமய விகாதிரபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறினார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தன் பேஸ்புக் பக்க பத்தியில், “மட்டக்களப்பு சுமனரத்தின தேரர்-மஹிந்த-புலிகள்-மைத்திரி-நான்-தமிழ் மக…

  22. அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி -தினேஷ் குணவர்தன எச்சரிக்கை எதிர்க்கட்சி மீதான அடக்குமுறை தொடர்ந்தால் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எச்ச ரித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே, இராணுவ சதிப்புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற …

  23. வடக்கில் வெற்றியீட்டிய சாதனையாளர்கள் கௌரவிப்பு வடக்கு மாகாணத் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்று காலை காலை 9 மணிக்கு, வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உத யகுமார் தலைமையில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள குறித்த நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வின் பிரதம விரு ந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,…

  24. அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு…

  25. மறைந்து வரும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் 'ஆயுசு 100' விற்பனை நிலையத்தின் செயற்பாடு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலாம் குறுக்குத்தெரு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளர் கே.றுசாங்கன், நேற்றுப் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து கூறுகையில், 'ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டு இந்த நிலையம் கொண்டு நடத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு, சுற்றுலா துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குதல், அது சார்ந்த தொழில் கல்வியை அவர்களு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.