ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை யார் வேண்டினாலும், நான் பதவிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் பறிப்பேன் என மகிந்த சூளுரைத்துள்ளார். மத்தல மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்களை கையகப்படுத்த இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டிபோடுகின்றன. இது பற்றி பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எனது ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான, மத்தல, அம்பாந்தோட்டைத் துறைமுக நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களையும் கொள்வனவு செய்வதற்கு சீன, இந்தியா முதலீட்டாளர்கள் முயற்சித்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், எமது ஆட்சியில் அவையனைத்தையும் மீண்டும் எமது அரசாங்க…
-
- 10 replies
- 738 views
-
-
அவன்ட் கார்ட் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் 233 கோடி வருமானம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் சுமார் 233 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து, கடற்படையினர் பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளில் அவன்ட் கார்ட் நிறுவனம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈட்டப்பட்ட வருமானம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/6993
-
- 0 replies
- 226 views
-
-
ஹாவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஹாவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஹாவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாடடின் பேரில் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இந்தக் கைதுகள் சட்டவிரோதமானவை என கைதானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்தே இந்த இளைஞர்கள் கைது ச…
-
- 0 replies
- 346 views
-
-
கொழும்பு கோட்டை ஸ்ரீசம்புத்தாலோக விகாரைக்கு முன்பாகவிருந்த புத்தர் சிலையும் கூடமும் சேதம்! 2016-11-14 20:57:53 கொழும்பு கோட்டை ஸ்ரீசம்புத்தாலோக விகாரைக்கு முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலை இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ஸ்ரீசம்புத்தாலோக விகாரையின் ரயில் மார்க்கத்தை நோக்கியவாறு காணப்படும் இந்த புத்தர் சிலையுடன் அச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த கூடமொன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளது. இப்புத்தர்சிலை இனந்தெரியாத நபர்களினால் அக்கூடத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு சேதமாக்கப்பட்டு…
-
- 0 replies
- 323 views
-
-
பிரித்தானிய வர்த்தகர் இலங்கையில் கைது 2.1 மில்லியன் ரூபா மோசடி காரணமாக பிரித்தானிய பிரஜை ஒருவர் களுத்துறை புலனாய்வுப் பிரிவின ரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முக்கியம் வாய்ந்த ஓர் இரத்தினக்கல் வியாபாரி அளித்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைதானார். முறைப்பாடு செய்தவர் இந்த பிரித்தானிய பிரஜையுடன் நீண்ட காலமாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இவரிடமிருந்து இரத்தினக் கற்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வந்ததாகவும் அறியப்படுகின்றது. அப்படியிருந்தும் நிலுவைப் பணமான 2.1மில். ரூபா தொகை நீண்ட காலமாக கொடுப டாமல் இழுபட்டு வந்துள்ளது. பொலிஸார் இவரை கைதுசெய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். http://www.onl…
-
- 0 replies
- 379 views
-
-
வடக்கு அமைச்சர்களுக்கெதிரான விசாரணைக்குழு தீர்மானத்தை அனுப்ப கோருகிறார் ஆளுனர் வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அச் சபையில் நிறைவேற்றிய தீர்மா னத்தினை அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழு விற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கி ன்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்…
-
- 1 reply
- 273 views
-
-
விடுதலைப்போராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அது மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள தலைவர் எமக்கு இல்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதங்கம் வெளியிட்டார். வவுனியா கூட்டுறவு தினம் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆந்தன் எம்.பி, நெடுங்கேணி பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் பல வேலைத்திட்டங்கள் திரைமறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வருவ…
-
- 4 replies
- 398 views
-
-
படையினரின் பாதுகாப்பிலிருந்த ஆலய விக்கிரகங்கள் எவ்வாறு காணாமல்போயின ? (காணொளி இணைப்பு) அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள், மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து காணமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு தையிட்டி -கணையவில் பிள்ளையார் ஆலயத்தை பார்வையிடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அவ்வூர் மக்களுக்கு படையினர் அனுமதியளித்தனர். அப்போது ஆலயத்தில் சாமிவிக்கிரகங்கள், வாகனங்கள் பெறுமதிவாய்ந்த கற்கள் உ…
-
- 0 replies
- 335 views
-
-
இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்…
-
- 16 replies
- 1.2k views
-
-
இரகசிய சித்திரவதை கூடங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – சூகா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பிரதிநிதியும், சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பின் தலைவருமான யஸ்மீன் சூகா கோரியுள்ளார். வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் சித்திரவதைகள் தொடர்பில் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகக…
-
- 0 replies
- 168 views
-
-
ஆவா குழு உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் ஆவா குழுவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரியில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சிய ஆவாக்குழு உறுப்பினர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சாவகச்சேரியின் மட்டுவில் வடக்குப் பகுதியில் நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பயங்கரவாதத் தடுப்பினருக்கு அஞ்சி நேற்றைய தினம் சாவகச்சேரி பொஸிஸ் நிலையத்தில் …
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கு,கிழக்கில் பௌத்தத்தை பாதுகாக்கவேண்டும்-மகிந்த கோரிக்கை வடக்கு கிழக்கிலுள்ள பௌத்தர்களையும், பௌத்த அடையாள சின்னங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அளுத்கமபகுதியிலுள்ள விகாரையொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அனேகமான இடங்களில் விகாரைகள் மூடப்பட்டு வருகின்றன. வடக்கில் அது வேகமாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிரிந்திருந்த வடக்கு – கிழக்கை தாமே ஐக்கியப்படுத்தியதாக குறிப்பிட்ட மகிந்த ஆனால் அங்கு விகாரை களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு…
-
- 0 replies
- 161 views
-
-
பாக்கு நீரிணையில் கூட்டு ரோந்து -இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா பாக்கு நீரிணையில் இந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த இலங்கையின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இணங்கியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொ ள்வது குறித்த யோசனையை இலங்கை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. எனினும் இந்தியா அதற்கு இணங்கவில்லை. அண்மையில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, மீன்பிடி கூட்டுச் செயலணி ஒன்றை அமைக்க இரண்டு நாடுகளும் இணங்கியிருந்தன. …
-
- 0 replies
- 250 views
-
-
வலிகாமம் வடக்கில் பலப்படுத்தப்படும் வேலிகள் மீளவும் அகற்றப்படுமா? (காணெளி இணைப்பு) (ஆர்.கே.வி.) யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கின்ற வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களுடைய சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும் அங்கு பெருமளவிலான பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயப் போர்வைக்குள்ளேயே இருந்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் முழுமையாக இராணுவம் விலகிக் கொள்ளாத நிலையே காணப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு …
-
- 0 replies
- 299 views
-
-
மக்கள் தொழில்சார் அரசியல்வாதிகளை வெறுக்கின்றனர் – கோதபாய ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மக்கள் தொழில்சார் அரசியல்வாதிகளை வெறுக்கின்றார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வர்த்தகரான டொனால்ட் ட்ராம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமை, மக்களின் விரக்தி நிலையையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் வெறும் பேச்சு மட்டுமே தீர்வுகள் எதனையும் வழங்குவதில்லை என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே ட்ராம்ப் வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் தெர…
-
- 1 reply
- 333 views
-
-
‘பீரிஸ்’சை பலிக்கடாவாக்கிய மஹிந்த மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற போர்வையில் தீவிர அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையிலேயே, புதிய கட்சி ஒன்றின் ஊடாக ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கவுள்ளதாகத் தெரிகிறது. அதற்கான முதல் ஏற்பாடாகவே, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாகும். இது ஒன்றும் புதிய கட்சி அல்ல. ஏற்கனவே, விமல் கீனககே தலைமையில் உ…
-
- 0 replies
- 447 views
-
-
அநுராதபுரம் கொண்டு சென்ற கஞ்சா பரந்தனில் சிக்கியது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 2050 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி விமானப்படையினரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் நபர் ஒருவர் அனுராதபுரம் நோக்கி எடுத்துச் சென்ற பொதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட தையடுத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக கிளிநொச்சி விமானப்படையினர் தெரி…
-
- 2 replies
- 359 views
-
-
70 நீதிபதிகளுக்கு இடமாற்றம் இலங்கையில் உள்ள 70 நீதிபதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் இன்று (13) அறிவித்துள்ளது. குறித்த 70 நீதிபதிகளில் மாவட்ட நீதிபதிகள்,மேலதிக மாவட்ட நீதிபதிகள், பிரதான நீதவான்கள் மற்றும் நீதவான்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் குறிப்பிட்டுள்ளது.அவர்களின் விபரம் வருமாறு http://www.onlineuthayan.com/news/20118
-
- 0 replies
- 315 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் ஒன்றை கொண்டுவருவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த அரசியல் அமைப்பில் பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு உள்வாங்கப்படவுள்ளது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் இலங்கை தரப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அச்சுறுத்தல் மாற்றுக் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் அபிவிருத்தியானது உலகளாவிய ரீதியில் கருத்துக்களை வேகமாக செயல்படுத்துவதற்கும் பயங…
-
- 0 replies
- 240 views
-
-
“வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது” : சஜித் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பயணத்தை அடைந்துகொள்வது கடினமாகும். எனவே வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது. ஆகையால் ஒரே நாடு என்ற அடிப்படையில் வாழ்ந்தால் மாத்திரமே வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பௌத்த மக்களுக்கு வடக்கில் விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உரிமையுள்ளது. அதேபோன்று இந்துக்களுக்கு தெற்கில் கோயில்கள் நிர்மாணிப்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து மதத்தவர்களுக்கும் தமது மத அடிப்படையில் சுதந்திரமாக வாழ்வதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் …
-
- 0 replies
- 430 views
-
-
நீரழிவு விழிப்புணர்வு பேரணி தேசிய நீரழிவு தினத்தையொட்டியும், நீரிழிவு நோய் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை (13) பேரணியொன்று ஆரம்பமானது. <SCRIPT language='JavaScript1.1' SRC="https://ad.doubleclick.net/ddm/adj/N7534.931094.TAMILMIRROR/B9566553.129883770;abr=!ie;sz=600x70;ord=[timestamp];dc_lat=;dc_rdid=;tag_for_child_directed_treatment=?"> </SCRIPT> <NOSCRIPT> <A HREF="https://ad.doubleclick.net/ddm/jump/N7534.931094.TAMILMIRROR/B9566553.129883770;abr=!ie4;abr=!ie5;sz=6…
-
- 0 replies
- 200 views
-
-
யாழில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி-ஆஸிபிரதிநிதிகள் அரச அதிபர் பேச்சு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் மாகாண மட்டத்தில் விளையாட்டுத்துறை யை அபிவிருத்தி செய்யும் நீண்டநாள் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் பொருட்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் ஜே.ரெய்லர் தலைமையி லான அவுஸ்ரேலிய பிரதிநிகள் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர். விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்;கட்டத்தின் கீழ் மேல்மாகாணம் வடமேல் மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாகாணங்களில்…
-
- 0 replies
- 244 views
-
-
அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது-தூதுவர் அதுல் கேஷாப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படாது என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் , வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறியதும், இலங்கை தொடர்பில் தற்போது ஒபாமா தலைமையிலான அரசு கடைப்பிடித்துவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றமடையுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே தூதுவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசிய வெள…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடுவதை தவிர்க்க நடவடிக்கை எம்.சி.நஜிமுதீன் பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. ஆகவே விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பிறப்புச்சான்றிதழ் இலத்திரனியல் அட்டையில் இனம் குறிப்பிடப்படமாட்டாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். "நம்பிக்கையின் சிறகசைப்பு" கலை விழா கொழும்பு அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளவத்தையிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் க…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ். பொம்மைவெளி படுகொலை நான்கு பேருக்கு மரண தண்டனை நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார் நமது நிருபர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் பல ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற ஜூரி சபை விசாரணையின் முடிவில் நான்கு எதிரிகளுக்கு கொலை குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என ஏகமனதாக ஜூரி சபையால் தீர்ப்பளித்ததையடுத்து, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன் குறித்த நான்கு எதிரிகளுக் கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொம்மைவெளி ஒஸ்மான்யா கல்லூரி வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் அசிட் வீசப்பட்டும் வாளினால் தலை, கை வெட்டப்பட்டும் கொலை செய்…
-
- 0 replies
- 320 views
-