Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனிக்கிழமை இந்தியா செல்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் சனிக்கிழமை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். சீனா தலைமையிலான இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, பிரேஸில், தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்முறை இம்மாநாடு இந்தியா தலைமையில் கோவா நகரில் இடம்பெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்கிறார். ஐந்து நாடுகள் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை,மாலை தீவு,தாய்லாந்து, நேபாளம், பூட்டா…

  2. அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்து வேட்டை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெற ள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் காலை 11 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களை அரசியல் கைதிகளை விடுதலை …

  3. ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’ சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. http://w…

  4. கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஸ்வமடு அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது . நேற்று 12.10.2016 அதிகாலை அம்பாள்குளம் காட்டுப்பதியில் திருடப்பட்ட பசு மாடோன்றினை அக்கிராமத்தில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில் இறைச்சியாக்குவதற்கு முற்பட்ட திருட்டுக்கும்பல் ஒன்று மக்கள் நடமாடியதனை அடுத்து குறித்த மாட்டினை கொலை பண்ணியநிலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை போடப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிளிநொச்சிப்…

  5. விசாரணைகள் வழமைபோல்-பிரதமர் ரணில் தெரிவிப்பு இதுவரை நடத்தி வந்த விசாரணை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில், “நீங்கள் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகள், பரிசோதனைகளை அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்லுங்கள்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளளார். …

    • 2 replies
    • 306 views
  6. இலங்­கைக்கும் கன­டா­விற்­கு­மி­டையில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து தொடர்­பாக புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்ள தீர்­மானம் எட்­டப்­பட்­ட­தா­கவும் அதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நிறை­வு­பெற்­றுள்­ள­தா­கவும் இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் அஹமட் ஏ. ஜவாட் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச சிவில் விமானப் போக்­கு­வ­ரத்தின் 39 ஆவது மாநாட்டு அமர்வு கன­டாவின் மொன்­றியல் நகரில் நடை­பெற்று வரு­கின்­றது. குறித்த மாநாட்­டி­லேயே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடு­களின் சிறப்பு முக­வ­ராண்மை நிறு­வ­ன­மாக செயற்­படும் சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து தாபனம் 1944 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. 191 உறுப்பு நாடு­களைக் கொண்ட இவ…

  7. கொடுப்பதை வாங்கிக்கொள்ள நான் பொம்மை அல்ல - மனோ கணேசன் சும்மா சொல்வதை கேட்டு, கொடுப்பதை வாங்கி வாழும், பொம்மையாக நான் இருக்க மாட்டேன். என அரச கரும மொழி இராஜாங்க அமைச்சர் மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார். இந் நாட்டில் உருவாகும் இன நல்லிணக்கம், சகவாழ்வு, சமத்துவம் அனைத்தும் எமக்கும் ஏற்புடையதாக எமது கருத்துகளையும் உள்வாங்கி உருவாக வேண்டும். இந் நாட்டில் வாழும் மலையக, ஈழத்தமிழ், முஸ்லிம் என்ற மூன்று தரப்பு மக்களின் மனக் குறைகளையும் ஒருசேர என்னைவிட அறிந்தவன் கிடையாது. சும்மா சொல்வதை கேட்டு, கொடுப்பதை வாங்கி வாழும், பொம்மையாக நான் இருக்க மாட்டேன். அதற்கு வேறு ஆளை பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும…

  8. முதுமை என்பது எல்லோருக்கும் உரியது. முதுமையைக் கண்டு துவண்டு விடக் கூடாது. முதுமையில் கூட ஒரு அழகிருக்கிறது எனத் தெரிவித்த பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு. பாலசண்முகன் முதுமையிலும் மனதாலும், செயலாலும் எத்தனையோ விடயங்களைச் சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவும் முதியோர் விழாவும் இன்று ஆச்சிரம மண்டபத்தில் சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் மேலும் உரையாற்…

  9. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கைய…

  10. புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியின் 8 ஆம் நாள் பயணம் கராப்பிட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியின் 8 ஆம் நாள் பயணம் இன்று வவுனியா- புளியங்குளத்தில் ஆரம்பமானது. புளியங்குளம் மைதானத்தில் ஆரம்பமான நடைபயணத்தை வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆரம்பித்து வைத்தார். வடக்கின் பருத்தித்துறையில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தேவேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது. இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்த நடைபவனியில் கலந்துகொண்டிருந்தனர். Share This http:…

  11. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க ஏற்பாடு வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள், இலங்கையில் வாக்ககளிக்க தகுதியானவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டில் வாக்குப் பதிவுசெய்வதற்கான சட்டங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைகளம் கூறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் பார…

  12. புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25வருட சிறைத்தண்ட னை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்ட னையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்க…

  13. பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை பிரபாகரன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது. ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்…

  14. மேல்மாகாண பொலிஸாரை இன்று இரவு எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் : நடப்பது என்ன? மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஏதாவது விரீதங்கள் நடக்க கூடும் என்ற காரணத்தினாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலைநேரத்தில் பணிபுரிந்தவர்கள் கட்டாயம் இன்று இரவு சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12360

  15. ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த (ஜவ்பர்கான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை தொடர்ந்து இவர் இன்று முதன்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த இவர் விகாரையில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கரும் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ண தேரரரின் தலைமையில் இடம் பெற்றது. முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர் கட்சிய…

  16. புதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1978ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல் யாப்பில் இரண்டாவது அத்தியாயம் பௌத்த மதம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு கூறுகிறது. இலங்…

  17. மானிப்பாய் வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு – மேன் முறையீடு தள்ளுபடி மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 6 எதிரிகளுக்கு எதிராக சுன்னாகம் பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓராண்டு கடூழியச…

  18. யாழில் அதிகரித்துச் செல்லும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை பெற்றோர்களின் அக்கறையீனம் காரணமாக யாழ். மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் 8 சதவீதத்தினால் வன்முறைச் சம்பவ ங்கள் யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்டச் சிறுவர் நன்னத்தைப் பராமரிப்புப் பிரிவின் புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது எனவும் தெரிவித்தார். யாழ். மாவட்டச் சிறுவர், நன்னடத்தைப் பாராமரிப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள் நலன்களின் எதிர்காலச் செயற்றிட்டம் எனும் கருப்பொரு…

  19. மறைந்து வாழவில்லை-மகிந்தவிற்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன்-உதயங்க வீரதுங்க தான் மறைந்து வாழவில்லை என ரஷ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக் யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, அவர் தலைமறை வாகியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க, இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தான் தலைமறைவாக வாழவில்லை என்று குறிப்பிட்டு ள்ளதுடன், உக்ரேய்னிலேயே வா…

  20. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதி வசம்? இலங்கை மன்றக் கல்லுாரியில் நேற்றைய தினம் போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கான வீடு மற்றும் காணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும்போது ஜனாதிபதியால் கூறப்பட்ட விடயங்களின் மூலம் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான அமைச்சை ஜனாதிபதி தனது நிர்வாகத்திற்கு கொண்டுவரவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நேற்றைய தினம் ஜனாதிபதி கதிர்காமத்திற்கு சென்றிருந்ததாகவும் அங்கே கம்உதாவ மணிக்கூட்டு கோபுரம் அருகே இருக்கும் பிரபல சோதிடரை சந்தித்ததாகவும் அவர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் அரசில் சில மாற்றத்தை …

  21. இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மன்னன் இராவணன் ஒரு தீவிரவாதி என்ற வகையில் இந்திய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக பல்வேறு ஊடகங்களில் ஊடக பேசப்பட்டு வருகிறது. இந்தியா, லக்னோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் துஷேரா நிகழ்வு என்பது, இராவணனுக்கு எதிராக போர் செய்த ராமரின் வெற்றியை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் நிகழ்வாகும். அதனை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது “தீவிரவாதி எனப்படும் இராவணனின் புதிய யுகம்” என நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார். …

  22. காணாமற்போனோர் பலர் அநுராதபுரம் சித்திரவதைமுகாமில்? கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாமொன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இன்று கொழும்பில் தெரிவித்தார். காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று கொ…

  23. ‘என்னைவிடக் கள்ளர்’ பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக, மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தன்னைக் கைது செய்யவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், தன்னைவிடக் கள்ளர் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை, மைத்திரீகம பிரதேசத்தில், நேற்றுப் புதன்கிழமை (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இந்நாட்டு நீதித்துறை தொடர்பில், தான் கொண்டுள்ள நம்பிக்கை, இன்னமும் நீடித்திருக்கிறது” என்றார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து, தன்னைக் க…

    • 2 replies
    • 409 views
  24. அமைச்சர்களான அர்ஜூன,தயாசிறி மோதல் உச்சம் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை வர்த்தக மாபியா என அர்ஜூன விமர்சனம் செய்திருந்தார். வர்த்தக மாபியாவுடன் திலங்க சுமதிபால தொடர்புபட்டுள்ளார் என அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து அதே ரணதுங்க 1990களில் வர்த்தக மாபியாவின் தலைவராக இருந்துள்ளார் என விளையாட்டுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அர்ஜூன ரணதுங்கவின் சகோதர்கள் இணைந்த போதே மாபியா என்ற ஒன்று உருவாகியுள்ளது. அ…

  25. திருமலை நீதிமன்றவளாகத்தில் துப்பாக்கி சூடு திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வான் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயமடை ந்துள்ளனர்.நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நீதிமன்ற வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச்சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்து ள்ளது.எனினும் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.