ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை காணியை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவு பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று (14) பிறப்பித்துள்ளார். இதேவேளை குறித்த ஏலத்தில் கிடைக்கப்பெறும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நீதிமன்ற விசாரணையின் போது பசில் ராஜபக்ஷ மல்வானை காணி தன்னுடையது அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12368
-
- 0 replies
- 211 views
-
-
இராணுவ வீரர்களின் விளக்கமறியல் தொடர்பில் சந்தேகம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் சிலர், விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றுமொரு இனவாத செயல் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இனவாத கருத்துகள் ஊடாக அரசியல் நடத்துவது மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படுவதாக வண. போகமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக தமிழ் நீதிபதிகளை நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நபர்கள் காணாமல் போன இரண்டு சம்பவங்கள் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/183905/இர…
-
- 0 replies
- 184 views
-
-
வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு -ஜனாதிபதி கடந்த ஆட்சியாளர்கள் வடக்கிற்கு செய்த அசாதாரண செயற்பாடுகளே அவர்களை ஆயுதமேந்த செய்து போரிற்கு வழிவகுத்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளின் போது, அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் அச்சேவைகள் சமமாக உரிய முறையில் செ…
-
- 0 replies
- 175 views
-
-
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பில் திருப்தியில்லா விட்டால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் தொடர்பில் திருப்தியில்லாவிட்டால் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பிரிவின் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மறைமுகமாக இதனைத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் கருத்து குறித்து நேரடியாக தாம் எதனையும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். தாம் ஓர் அரசாங்க ஊழியர் என்ற க…
-
- 0 replies
- 179 views
-
-
நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்துமாறு கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ப்பட்டுள்ளது. வைத்தியர் பற்றாக்குறையினால் 18 வயதுடைய பாடசாலை மாணவி ர. டிலாஜினி திடீர் மரணமடைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 4 ஆயிரத்து 500 குடும்பங்களைக்கொண்ட நெடுந்தீவில் ஒரு வைத்தியர் மாத்திரமே சேவையாற்றி வருவதாக அவர்கள் தெரி வித்தனர். இதனால் திடீர் சுகயீனமடையும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குரிய வசதிகள் நெடுந்தீவு வைத்தியசாலையில் இல்லையெனவும் அதனை தரமுயர்த்துமாறும் அவர்…
-
- 0 replies
- 144 views
-
-
ஆறுமுகம் தொண்டைமானின், அநாகரிகச் செயலை பாருங்கள்.
-
- 0 replies
- 266 views
-
-
சனிக்கிழமை இந்தியா செல்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் சனிக்கிழமை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். சீனா தலைமையிலான இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, பிரேஸில், தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்முறை இம்மாநாடு இந்தியா தலைமையில் கோவா நகரில் இடம்பெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்கிறார். ஐந்து நாடுகள் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை,மாலை தீவு,தாய்லாந்து, நேபாளம், பூட்டா…
-
- 0 replies
- 221 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்து வேட்டை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெற ள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் காலை 11 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களை அரசியல் கைதிகளை விடுதலை …
-
- 0 replies
- 178 views
-
-
ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’ சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. http://w…
-
- 4 replies
- 617 views
-
-
கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஸ்வமடு அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது . நேற்று 12.10.2016 அதிகாலை அம்பாள்குளம் காட்டுப்பதியில் திருடப்பட்ட பசு மாடோன்றினை அக்கிராமத்தில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில் இறைச்சியாக்குவதற்கு முற்பட்ட திருட்டுக்கும்பல் ஒன்று மக்கள் நடமாடியதனை அடுத்து குறித்த மாட்டினை கொலை பண்ணியநிலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் . குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை போடப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிளிநொச்சிப்…
-
- 0 replies
- 255 views
-
-
விசாரணைகள் வழமைபோல்-பிரதமர் ரணில் தெரிவிப்பு இதுவரை நடத்தி வந்த விசாரணை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில், “நீங்கள் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகள், பரிசோதனைகளை அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்லுங்கள்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளளார். …
-
- 2 replies
- 307 views
-
-
இலங்கைக்கும் கனடாவிற்குமிடையில் விமானப்போக்குவரத்து தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அஹமட் ஏ. ஜவாட் தெரிவித்துள்ளார். சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்தின் 39 ஆவது மாநாட்டு அமர்வு கனடாவின் மொன்றியல் நகரில் நடைபெற்று வருகின்றது. குறித்த மாநாட்டிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவராண்மை நிறுவனமாக செயற்படும் சர்வதேச விமான போக்குவரத்து தாபனம் 1944 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 191 உறுப்பு நாடுகளைக் கொண்ட இவ…
-
- 1 reply
- 305 views
-
-
கொடுப்பதை வாங்கிக்கொள்ள நான் பொம்மை அல்ல - மனோ கணேசன் சும்மா சொல்வதை கேட்டு, கொடுப்பதை வாங்கி வாழும், பொம்மையாக நான் இருக்க மாட்டேன். என அரச கரும மொழி இராஜாங்க அமைச்சர் மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார். இந் நாட்டில் உருவாகும் இன நல்லிணக்கம், சகவாழ்வு, சமத்துவம் அனைத்தும் எமக்கும் ஏற்புடையதாக எமது கருத்துகளையும் உள்வாங்கி உருவாக வேண்டும். இந் நாட்டில் வாழும் மலையக, ஈழத்தமிழ், முஸ்லிம் என்ற மூன்று தரப்பு மக்களின் மனக் குறைகளையும் ஒருசேர என்னைவிட அறிந்தவன் கிடையாது. சும்மா சொல்வதை கேட்டு, கொடுப்பதை வாங்கி வாழும், பொம்மையாக நான் இருக்க மாட்டேன். அதற்கு வேறு ஆளை பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும…
-
- 4 replies
- 425 views
-
-
முதுமை என்பது எல்லோருக்கும் உரியது. முதுமையைக் கண்டு துவண்டு விடக் கூடாது. முதுமையில் கூட ஒரு அழகிருக்கிறது எனத் தெரிவித்த பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு. பாலசண்முகன் முதுமையிலும் மனதாலும், செயலாலும் எத்தனையோ விடயங்களைச் சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவும் முதியோர் விழாவும் இன்று ஆச்சிரம மண்டபத்தில் சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் மேலும் உரையாற்…
-
- 0 replies
- 268 views
-
-
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கைய…
-
- 3 replies
- 373 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியின் 8 ஆம் நாள் பயணம் கராப்பிட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியின் 8 ஆம் நாள் பயணம் இன்று வவுனியா- புளியங்குளத்தில் ஆரம்பமானது. புளியங்குளம் மைதானத்தில் ஆரம்பமான நடைபயணத்தை வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆரம்பித்து வைத்தார். வடக்கின் பருத்தித்துறையில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தேவேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது. இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்த நடைபவனியில் கலந்துகொண்டிருந்தனர். Share This http:…
-
- 0 replies
- 204 views
-
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க ஏற்பாடு வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள், இலங்கையில் வாக்ககளிக்க தகுதியானவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டில் வாக்குப் பதிவுசெய்வதற்கான சட்டங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைகளம் கூறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் பார…
-
- 0 replies
- 400 views
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25வருட சிறைத்தண்ட னை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்ட னையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்க…
-
- 2 replies
- 549 views
-
-
பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை பிரபாகரன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது. ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்…
-
- 2 replies
- 697 views
-
-
மேல்மாகாண பொலிஸாரை இன்று இரவு எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் : நடப்பது என்ன? மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஏதாவது விரீதங்கள் நடக்க கூடும் என்ற காரணத்தினாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலைநேரத்தில் பணிபுரிந்தவர்கள் கட்டாயம் இன்று இரவு சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12360
-
- 0 replies
- 341 views
-
-
ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த (ஜவ்பர்கான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை தொடர்ந்து இவர் இன்று முதன்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த இவர் விகாரையில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கரும் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ண தேரரரின் தலைமையில் இடம் பெற்றது. முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர் கட்சிய…
-
- 7 replies
- 862 views
-
-
புதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1978ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல் யாப்பில் இரண்டாவது அத்தியாயம் பௌத்த மதம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு கூறுகிறது. இலங்…
-
- 0 replies
- 236 views
-
-
மானிப்பாய் வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு – மேன் முறையீடு தள்ளுபடி மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 6 எதிரிகளுக்கு எதிராக சுன்னாகம் பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓராண்டு கடூழியச…
-
- 0 replies
- 259 views
-
-
யாழில் அதிகரித்துச் செல்லும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை பெற்றோர்களின் அக்கறையீனம் காரணமாக யாழ். மாவட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் 8 சதவீதத்தினால் வன்முறைச் சம்பவ ங்கள் யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்டச் சிறுவர் நன்னத்தைப் பராமரிப்புப் பிரிவின் புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது எனவும் தெரிவித்தார். யாழ். மாவட்டச் சிறுவர், நன்னடத்தைப் பாராமரிப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள் நலன்களின் எதிர்காலச் செயற்றிட்டம் எனும் கருப்பொரு…
-
- 0 replies
- 164 views
-
-
மறைந்து வாழவில்லை-மகிந்தவிற்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன்-உதயங்க வீரதுங்க தான் மறைந்து வாழவில்லை என ரஷ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக் யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, அவர் தலைமறை வாகியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்க, இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தான் தலைமறைவாக வாழவில்லை என்று குறிப்பிட்டு ள்ளதுடன், உக்ரேய்னிலேயே வா…
-
- 0 replies
- 158 views
-