Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கும் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதேபோன்று எட்கா ஒப்பந்தம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.இதன்போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை செவிமடுத்த பின்னரே எட்கா குறித்து இறுதி தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12308

  2.  ‘இராணுவத்தினரின் கௌரவத்தை காப்பேன்’ கடந்த அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கமே, இராணுவத்தினரின் நலனில் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எது எவ்வாறாயினும், இராணுவத்தினரின் கௌரவத்தைத் தான் தொடர்ந்து காப்பாற்றுவதாகவும் அதற்காக, தான் உள்ளிட்ட தனது அரசாங்கம், அயராது உழைக்கும் என்றும் உறுதியளித்தார். ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற இராணுவ மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 50 இராணுவ வீரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில், நேற…

  3. அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பழைய அரசியல் யாப்பில் உள்ளதைப்போல் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்…

    • 15 replies
    • 1.1k views
  4. யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது. இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு…

  5. நண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழில். அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசை நிகழ்ச்சிக்காக பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது. யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை , பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , மற்றும் திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் ஊடாக யாழ்.மாநகர சபைக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நு…

  6. நாட்டில் 02 மில்லியன் மனநோயாளர்கள்.! நாடு முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார். இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12292

  7.  12 கிலோகிராம் கஞ்சாவுடன் முன்னாள் போராளி கைது -செல்வநாயகம் கபிலன் மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது தான் ஒரு முன்னாள் போராளி என்றும், இவ்வாறு தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறியதாக கடற்படையினர் தெரிவித்து…

  8. முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=84370

  9. பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை சம்பந்தமாக மக்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் மக்களுடைய காணிகள் சூறையாடப்பட்டுள்ளதாக காணி கொள்ளைகளுக்காக செயற்படும் சுவிஸ் நாட்டு அமைப்பாளர் வூவி சுட்டிக்காட்டியுள்ளார். பாசிக்குடாவில் பாதுகாப்பு படையினர் அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையினால் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலாபலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாசிக்குடா நந்தவனம் சுற்றுலா விடுதியில் இன்று காணி உரிமை மற்றும் மனித உரிமை தொடர்பான செயல் அமர்வு இடம்பெற்றது. பாசிக்குடாவிலுள்ள மீனவர்கள் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அண்மையில் பல பிரச்சினைகள் உருவாக்கியதை அடுத்தே இந்த செயல் அம…

  10. மலையக மக்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியது. ' முதலாளிகளே! நல்லாட்சியே! மாடாக உழைத்து ஓடாகிப்போன தொழிலாளர்களை வதைக்காதே! 1000 ரூபாய் சம்பளம் வழங்கு!', ' தொழிலாளர்கள் கேட்பது 1000 ரூபாய் முதலாளிகள் முன்வைப்பது பிச்சைக் காசு', ' மலையக தலைவர்களுக்கு மந்திரிப் பதவி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மறுப்பு' , ' தோட்ட முதலாளிகளுக்கு நல்லாட்சி தோட்ட தொழிலாளர்களுக்கு ஏமாற்று ஆட்சி' போன்ற கோசங்களை மு…

  11. அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியாவின் பிரபல பெண் மருத்துவர் உட்பட மூவர் மரணம் அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறா மகளும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளனர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொ ன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்ப…

  12. எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது கிளிநொச்சியில் அமைச்சர் சுவாமிநாதன் : தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது இதன் போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகிறது. இருந்தும் அரசு ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடாது என மீள்குடியேற்ற,புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் வங்கி ஆவணங்களை தொலைத்த தமது வாடிக்கையாளர்கள் 54 பேருக்கு அதனை வழங்கி வைக்கும் நிகழைவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யோகர் சுவாமிகள் தன்னுடைய காலத்திலேயே கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் சிங்க…

    • 1 reply
    • 391 views
  13. யாழில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் யாழ். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என்பன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை குறித்த பஸ் நிலையத்தின் உள்ளே “தேசிய தலைவர்” என்று பிரபாகரனின் உருவப்படமும் “தேசிய அடையாளங்கள்” என புலி மற்றும் செண்பகம் வாகை மரத்தின் படங்கள் அடங்கியதுடன், விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. பஸ் தரிப்பிடத்திற்கு வந்த பொது மக்கள் குறித்த துண்டுப்பிரசுரத்தினை பார்த்துவிட்டு …

    • 1 reply
    • 742 views
  14.  ‘தமிழ்-முஸ்லிம்களை பிரிக்க முடியாது’ எம்.எல்.லாபீர் “இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள், தங்கள் தாய்மொழியாக, தமிழையே பேசுகின்றனர். சமயத்திலும் கலாசாரத்திலும் அவர்கள் வேறுபட்டிருந்ததாலும், மொழியினால் நீண்ட பாரம்பரியமாக ஒன்றுபட்டுள்ளார்கள். இவ்விரு இனங்களையும் எவராலும் பிரிக்க முடியாது” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட பிரஜைகள் குழுவினர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (10) சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில், பிரஜைகள் குழுவின் தலைவர் கிஷோர் அன்டன், செயலாளர் கலாநிதி நா.தனேந…

  15.  ‘தாஜுதீனின் எலும்புகள் அனுப்பப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை’ மனித எலும்புகளை வழங்கும் போது தமக்கு வழங்கப்பட்ட பட்டியலில், வசீம் தாஜுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து எலும்புகள் வழங்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகத்துக்கு (SAITM) எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள SAITM, வசீம் தாஜுதீனின் எலும்புகள் எவையும் SAITM-க்கு அனுப்பப்பட்டதற்கான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. தற்போது புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் …

  16. ‘சரணாகதி அரசியல் செய்யவில்லை’ -சண்முகம் தவசீலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை, அந்தக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தாங்கள், சரணாகதி அரசியல் செய்யவில்லை என அடித்துக்கூறும் செல்வம் அடைக்கலநாதன், தற்போதைய அரசாங்கத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சந்தர்ப்பங்கள் தான், எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாம், எமது மக்களுக்குத் துர…

  17. தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, சிறிலங்கா இராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். காரைநகரில் அவரது அனுபவங்கள் குறித்து அந்த நூலில் கூறப்பட்டுள்ள பகுதியை மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி. “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முட…

  18. உலகின் பலமிக்க இந்திய இராணுவத்துக்கும், தமிழீழத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்து இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகின்றன. பலமிக்க இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் படு தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் 1990ஆம் ஆண்டளவில் நாடு திரும்பியிருந்தனர்.. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து ஈழத்தில் கால் பதித்த இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை அழிக்கும் நோக்குடன் செயற்பட்டனர். எனினும், விடுதலைப் புலிகளின் தந்திரமிக்க போராட்ட நுட்பத்தினால் அது சாத்தியப்படாமல் போனது. விளைவு சுமார் 1250க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தியாவின் வஞ்சக நோக்கங்கள் வெள்ளிடையாகவே மக்களுக்கு தெ…

  19. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய காணியில் அத்துமீறி குடியிருந்து வருபவர்களால் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியாத நிலையில் அது திரும்பிச்செல்லும் நிலையில் இருப்பதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அயற்பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு சில அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, பாடசாலை காணியின் ஒரு பகுதியில் நான்கு குடும்பங்கள் அத்துமீறி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றமையினால் குறித்த பணிகளை முன்னெடுக்க முடியாது தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச்செல்…

  20. நீதிமன்றத்திற்கு சமமான ஒன்றே பாராளுமன்றம். நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் தண்டனை. ஆனால் பாராளுமன்றம் என்பதற்கு சட்டதிட்டங்கள் இல்லையா..? இப்போதோ கோமாளிகள் தங்களை அரங்கேற்றம் செய்து கொள்ளும் இடமாக மாறி வருகின்றது பாராளுமன்றம். ஒழுக்கமற்ற வார்த்தைகள், முறைகேடான நடத்தைகள் இவை மூலம் இவர்கள் எதிர்காலத்திற்கு கற்பிக்க முயல்வது எதனை..? “நாட்டின் எதிர்கால தலைவர்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் நீங்களும் நாளை ஒரு தலைவனாகி பாராளுமன்றம் செல்வீர்களாயின் முறைகேடாக நடந்து கொள்ளுங்கள், தலைவர்களை பின்பற்றுங்கள் ஒழுக்கம் ஏட்டில் மட்டுமே இருக்கவேண்டும், தவறியும் கூட அதனை நடத்தையில் செயற்படுத்தாதீர்கள். இதுவா? இதனைத்தான் எதிர்காலத் தலைவர்களுக்கு தற்போதைய தலைவர்…

  21. யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையம் ; கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன் ஒருவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே ஏனைய சந்தேக நபர்களான முன்னாள் சுன்னாகம் பொலிஸ் பொறுப்ப…

  22. பெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்! பாடசாலைகளில் எத்தனை மாணவர்கள் சித்திபெறுகிறார்கள்? சித்தி விகிதம் எப்படி உள்ளது என்று ஆராய்கிறோம். சித்திய எய்திய மாணவர்கள்மீதும் பாடசாலைகள்மீதும் கவனங்கள் குவிக்கின்றன. ஆனால் குடும்ப நிலமை, வறுமை, சமூகச் சிக்கல்கள் காரணமாக பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் உள்ள பாடசாலைகளும் கிராமங்களும் உள்ளன என்பதனையும் சற்று திரும்பிப் பார்ப்போம். அவைகளின் பிரச்சினைகளில் கவனத்தை குவிப்போம். கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகரில் அமைந்துள்ளது சிவபாதக் கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. 1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் …

  23. 'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் குமார் குணரட்ணம் மற்றும் அரசியல் கைதிகள் உடனடியாக உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுகின்ற அடக்கு முறைகள் உடன் இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறியும் இன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் பாரிய பாதயாத்திரையொன்றை முன்னெடுத்தனர். கொழும்பு மருதானை டெக்னீகள் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை கொழும்பு ஒல்கொட் மாவத்தை வரைக்கும் சென்றதோடு கொழும்பின் கோட்டை புகை…

  24. காணிப்பிணக்கில் ரெலோ கிளிநொச்சி அமைப்பாளருக்கு கத்திக்குத்து ரெலோ அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பொன்காந்தன் கத்திக்குத்து க்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அயல் வீட்டாருடன் நீண்டகாலமாக காணிப் பிணக்கு எற்பட்டுவந்துள்ளதோடு இன்றைய தினம் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கைகலப்பின்போது உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தலினால் கவிஞர் பொன்காந்தன் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலைய…

  25. நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல் ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வழங்கிய கிரிஸ் ஒப்பந்த முறைப்பாட்டின் அடிப்ப டையில் தான் ஒருவாரம் கைது செய்யப்பட்டிருந்ததாக குறித்த மனுவில் நாமல் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிதி மோசடி …

    • 1 reply
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.