Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேற்குலகில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அகதிகள் பிரச்சினை-ஜனாதிபதி புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பிரச்சினைகள் தற்போது மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து ள்ளார். இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் அந்த மோசமான நிலையை தவிர்ப்பதற்காக புதிய திட் ங்களுடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் ஆகியவற்றை கொழும்பின் புறநகரான பத்தரமுல்லையில் அமைந்துள்ள “சுகுறுபாய” புதிய கட்டடத்தில் நிறுவும் நிகழ்வில் இன்று பங்கேற்று உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பி…

  2. சரணடைந்த புலிப்போராளிகளின் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இராணுவம் முரண்பட்ட கருத்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரி…

  3. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அனந்தி சசிதரன் (கோப்புப்படம்) விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை …

  4. இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் இந்தக்குற்றச்சாட்டை ஊடகங்களிடம் முன்வைத்துள்ளார் நாட்டில் இரண்டு விதமான பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொலிஸ் பயங்கரவாதம். இரண்டாவது நீதிமன்றமயப்படுத்திய பயங்கரவாதமாகும் என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பயங்கரவாத செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகள் தண்டனைக்கு உட்படு…

  5. மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலத்தடி நீர் வேகமாக மாசடைந்து வருவதால் இன்னும் 25 ஆண்டுகளில் மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் குடிநீரைப் பயன்படுத்தமுடியாத நிலை உருவாக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கேஸ்வர மகா வித்தியாலயத்தில் நேற்று(புதன்கிழமை) குழாய் மூலமான குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் வித்தியாலத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குடிநீர்ப்பிரச்சனையை மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தகர்கள் மூன்றுபேர் இணைந்து நிவர்த்த…

  6. யாழில் பெருமளவு தனியார் நிறுவனங்கள் சேமலாபநிதியை கட்டுவதில்லை-ஆய்வில் தகவல் யாழ்ப்பாணத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவ ர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சேமலாப நிதியத்திற்கோ, தொழிலாளிகள் நம்பிக்கை நிதியத்திற்கோ எந்தப் பணமும் செலுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 85 வீதமானவர்களுக்கு யாழ் பிராந்தியத்தில் ஆகக்குறைந்த ஊதியமாக 10,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதுகூட தெரியாமல் இருக்கின்றது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. வட பிராந்தியத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக பின்தள்ளப்பட்டு மோசமான சூழலில் தமது தொழிலகங்க…

  7. ஓய்வு விடுதியில் உல்லாசம் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயலால் விசனம். யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் பெண்களுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது யாழ்ப்பாணத்தின் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஒருவரும் அப் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் விடுமுறையில் கதிர்காமம் சென்றுள்ளனர். கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் இவர்கள் தங்கிருந்தனர். பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் பொலிஸார், மற்றும…

  8. யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார். உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது. சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அரசியல் மாற்றங்களை கேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்திய அஸ்வின் இலங்கை ஊடக அமைச்சினால் விருதினை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கேலிச்சித்திரங்களினால் ஊடகப்பரப்பில் அண்மை காலங்களில் பிரபல்யம் பெற்றிருந்த அஸ்வின் முன்னதாக சுடரொளி மற்றும் வீரகேசரியில் பணியாற்றியிருந்ததுடன் இறுதி காலங்களினில் தினக்குரல் பத்திரிகையில் கேலிச்சித்திரவியளாலராக பணியாற்றிய…

  9. கடற்படை தளபதியை சந்திக்கிறார் நீஷா பிஷ்வால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11815

    • 3 replies
    • 450 views
  10. பலாலி விமானநிலையத்தை புனரமைப்பது அவசியம்-விமானப்படைத்தளபதி யுத்தம் முடிவடைந்த நிலையில் விமானப் படையினரின் விமானங்களை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்தி ற்கும் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதுடன் வடக்கில் உள்ள பலாலி விமானதளத்தையும் அதன்ஓடுதளத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை விமானப்படைத் தளபதி வைஸ் எயார் சீப் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள விமானப்படையின் புதிய தளபதி, யுத்தமொன்று ஏற்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்காக விமானப் படை எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருப்பதாக வும் கூறியுள்ளார். …

  11. முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணிக்கு தலைமை தாங்­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் மீது தென்­ப­கு­தியில் வசை­மாரி பொழி­யப்­பட்­டு ­வ­ரு­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்­களும், இன­வாத அமைப்­புக்­களின் தலை­வர்­களும் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள், பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை வெளிக்­கொண்­டு­வரும் வகை­யி­லேயே முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் எழுக தமிழ் பேரணி நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதற்கு பல கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தன.…

  12. நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம் (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று குட்டி ஈனுவதற்காக நிலத்தில் குழி தோண்டியுள்ளது. இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைய…

  13.  நீர்வேலி இரட்டைக் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/182845/ந-ர-வ-ல-இரட-ட-க-க-ல-க-க-ற-றவ-ள-க-க-மரணதண-டன-#sthash.lv42UTlj.dpuf

  14. யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி கடந்த 22 ம் திகதி இரவு 11.45 மணியளவில் அளவெட்டி கும்பிளாவளையடி பகுதியில் நீதீமன்ற வழக்குகளுக்கு சமூகமளிக்காத காரனத்துக்காக தெல்லிப்பழை பொலிசாரினால் ஓருவரை கைது செய்ய சென்ற வேளை அவரின் வீட்டிற்குள் அடாவடியாக நுலைந்து தகாத வார்தைகளை பிரயோகித்து வீட்டின் உறிமையாளரை அவரின் ஆடையை பற்றி இழுத்து எந்த கேள்வியும் இன்றி தகாத வார்த்தையில் பேசி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் தேடிய நபர் வேரு அவரை வந்த பொலிசாருக்கு நன்கு தெரியும் அப்படி இருந்தும் இரவில் பெண்கள் இருக்கும் வீட்டில் தமது அடாவடித்தனத்தை காட்டியுள்ளார்கள் யாழ் தெல்லிப்பழை பொலிசார் அது மட்டுமன்றி அந்த பொலிஸ் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த இரண்டு நட்சதிர பதவியுடையவர் உட்பட சாஜன்…

  15. “புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும்” என, முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (28) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல…

  16.  எழுக தமிழும் இனவாதக் கூச்சல்களும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வீதிகளில் தேனும் பாலும் ஓடப் போவதாக ஒரு தரப்பினர் தெரிவித்து வர, மறு தரப்பினரோ, இனவாதச் சந்திப்பொன்று இடம்பெற்று வந்துள்ளதாகவும் நாட்டின் அமைதி பாதிக்கப்படக்கூடும் என்றவாறும் கருத்துகளை எழுப்பி வருகின்றனர். முதல்வகையான கருத்துகளைத் தெரிவிக்கும் தமிழர்களில் ஒரு தரப்பினரின் எண்ணம் நிறைவேற வேண்டுமாயின், தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளினதும் மக்களினதும் மனங்களில், இந்தப் பேரணி தொடர்பாக நல்லெண்ணம் ஏற்பட வேண்டும். அதற்காக, இந்தப் பேரணி, இனவாதப் ப…

  17. முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்றத்திற்கு இன்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது 1957ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற…

  18. முல்லை மாந்தை கிழக்கில் 2032 குடும்பங்கள் மீள்குடியமர்வு முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர் மீளவும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கிழக்கிலுள்ள பிராந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. 1,570 புது வீடுகள் கட்டப்பட்டதோடு, மேலும் 914 வீடுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன.இதைவிட, 455 வீடுகள் பகுதிப் புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 2334 வீடுகளுக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. http://onlineuthayan.com/news/18269

  19. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 24ஆம் திகதி நடந்த எழுக தமிழ் எழுச்சிப்பேரணி சிலருக்கு தாங்கொணா அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு தியாகி திலீபனின் நினைவுதினம் சற்று ஆற்றுப்படுத்தியிருக்கும் என நம்பலாம். கடந்த ஆண்டும் தியாகி திலீபனின் நினைவு தினம் நடந்தபோது, அதனை அனுஷ்டிப்பதில் ஆர்வம் காட்டாத சில தமிழ் அரசியல்வாதிகள் இந்த வருடம் முண்டியடித்து நின்றதைக் காணமுடிந்தது. எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்காத தோசம் நீங்க தியாகி திலீபனை விட்டால் வேறு யாருளர் என்றவகையில் அவர்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டிருக்கலாம். தன் உயிரை தமிழ் மக்களுக்காக ஈகை செய்த ஒரு உத்தம தியாகியின் புனித நாளில் …

  20. பிரான்சு தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழத்துடன் சேர்ந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர். 2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி. பரமேஸ்வரன் சுசானி ,எழுத்துப் பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார். இதேவேளை 2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி தட்சாயணி தங்கதுரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்ட…

  21. புலி சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது ஆபத்து விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென யாழ்ப்பாண பாதுகா ப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வர…

  22. பாடசாலை செல்லும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு அக்கரைப் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனை மதுபானம் அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணை பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (28) அனுமதியளித்தார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணையில் செய்ய அனுமதியளித்த நீதிவான், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேசத்துக்கு உரித்தான கிராமஅலுவலரின் அத்தாட்சிபடுத்திய விண்ணபத்தினை 1 வாரத்துக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்ககூடாது. அப்படி அச…

  23. ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தெரிவுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமென கருத்துக்கணிப்பொன்றை நடாத்தியிருந்தது. இக்கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போத…

  24. ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யார் உத்தரவிட்டிருக்க…

  25. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வளங்கள் யாவும் சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையிலேயே பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள், மணல், கிரவல் என அபிவிருத்திக்கு தேவையான வளங்கள் தமது பகுதியில் இருந்து வகை தொகையின்றி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றதாகவும். குறிப்பாக வீட்டுத்தேவைக்கு மணல் பெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.