ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
இலங்கை ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக 2017 ஆம் ஆண்டு பெயரிடல் ; ஜனாதிபதி Published by Gnanaprabu on 2016-09-22 02:42:40 Tweet இலங்கை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் 71 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாடுகையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஐக்கிய நாடுகளின் 71 ஆவது கூட்டத்தொடரில் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட…
-
- 2 replies
- 371 views
-
-
ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றும் உரை
-
- 0 replies
- 214 views
-
-
யாழ் வர்த்தகர் சங்க தலைவர் ஜெயசேகரம் வீட்டில நடந்த கூட்டத்தில – பேரணிக்குத் தாம் வரவும் மாட்டோம் தமது ஆதரவும் இல்லை என்று தமிழரசுக் கட்சியினர் சொல்லிய பின்னர் கூட்டம் முடிந்து கடைசியாக விடைபெறும் போது, மருத்துவர் லக்ஸ்மன் கூட்டத்திற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா சிறிதரன் சுமந்திரன் ஆகியோரிடம் ஓரு கோரிக்கையை முன்வைத்தார். “சரி, நீங்க ஆதரவு தராதுவிட்டாலும் பரவாயில்ல. மக்களுக்காக நாங்க செய்யுற இந்த பேரணிக்குத் தயவுசெய்து முட்டுக்கட்டைகள் ஏதும் போடாமலாவது விடுங்கள்” என்று கேட்டார் லக்ஸ்மன். “நான் முட்டுக்கட்டை போடுவன். நாங்கள் வரமாட்டோம், எமது ஆதரவும் இல்லை என்றால், நாங்கள் இதை விரும்பேல்லை என்று தானே அர்த்தம். அதனால – நான் எல்லா முட்டுக்கட்டைகளும் போடுவன்!” சுமந்தி…
-
- 4 replies
- 651 views
-
-
-
- 0 replies
- 319 views
-
-
வெளிவிவகார அமைச்சருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையளாளருக்கும் இடையில் சந்திப்பு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த இருவரும் நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போதைய நிலைமைகள் அபிவிருத்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சர், சயிட் அல் ஹூசெய்னுக்கு விளக்கமளித்துள்ளார். குறிப்பாக நல்லிணக்க முனைப்புக்களின் முன்னேற்றம் குறித்து சந்திப்பில் கூடுதல் கவன…
-
- 3 replies
- 489 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 96 சந்தேக நபர்களில் 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சந்கேத நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆறு மாத கால புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள…
-
- 1 reply
- 295 views
-
-
வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துங்கள் சபையில் வலியுறுத்தினார் டக்ளஸ் தேவானந்தா வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள் நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு அபிவிருத்திக்கு பங்காற்றும் வழிகள் அவை சூழலுக்கு பாதிப்பினை உருவாக்கும் தன்மைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விரிவாக விளக்கமளிக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 23இன் கீழ் இரண்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்…
-
- 2 replies
- 411 views
-
-
சுன்னாகம் பொலிஸ்நிலைய உயிரிழப்பு வழக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ள்ளது. 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 3 பேரினதும் வெளிநாட்டு பயணங்க ளுக்கும் தடைவிதித்து நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தை…
-
- 1 reply
- 303 views
-
-
மூன்றாம் வருட முடிவின் வடமாகாண முதல்வருரை - 21.09.2016 வடமாகாண மக்கள் எமது வடமாகாணசபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் வருட முடிவு இன்றாகும். இன்னும் இரு வருடங்களில் எமது பதவிக்காலத்தை முடிவுறுத்த இருக்கும் இந்நேரத்தில் இது வரையில் நாம் சாதித்தவை என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. சுருக்கமாக இதுவரையான எமது பயணத்தை விளக்குகின்றேன். முதலாவதாகத் தமிழர் பெரும்பான்மையான ஒரே பிரதேசம் ஃ மாகாணம் எமது வடமாகாணமே என்ற கருத்தை வலியுறுத்தி எமது தனித்துவத்தைப் பேணி அதே நேரம் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வந்துள்ளோம். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்ற கருத்தை வலியுறுத்தி வந்துள்ளோம். அதே நேரம் எமது இனப்பரம்பலை இல…
-
- 0 replies
- 498 views
-
-
எழுக தமிழுக்கு முதலமைச்சர் அழைப்பு எழுக தமிழ்! என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன. நாட்டில் எங்கும் புத்தர் சிலை எழுப்ப முடியும், அது எமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூறித் திரிகின்றார்கள். நடைமுறையிலும் சிலைகளையும் விகாரைகளையும் எழுப்பி வருகின்றார்கள். நாடு பூராகவும் பரந்து வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்களைத் தமது வாழ்விடங்களில் இருந்து 1958…
-
- 0 replies
- 385 views
-
-
புலிகள் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை-அநுரகுமார தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்து ள்ளார். வடக்கிலுள்ள தமிழ் மக்கள் 3 தசாப்தகாலமாக நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தினால் பேரழிவை சந்தித்த வடபகுதிமக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு எந்தவிதத்தி லும் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையில் கைத்தொழில் தொழில்நுட்ப புரிந்துணர்வு உட ன்படிக்கையான எட்கா உடன்படிக்கை மற்றும் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக மக்களை தெளிவுப…
-
- 1 reply
- 329 views
-
-
எதிர்க் கட்சித்தலைவர் ஏன் கிளிநொச்சி சந்தைக்கு வரவில்லை : பத்தரமுல்லை சீலரத்தின தேரர் கேள்வி (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட எதிர்க் கட்சித்தலைவர் ஏன் சந்தை தொகுதிக்கு வரவில்லை என பத்தரமுல்லை சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். இன்று கிளிநொச்சி சந்தைத்தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நான், இனவாதம் பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசு…
-
- 8 replies
- 551 views
-
-
உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு தமிழ்த் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்-கிழக்கு விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தமிழ்த் தலைவர்கள் உணர்ச்சிகளை எல்லாம் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, நிதானமாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் கேட்டு க்கொண்டுள்ளார். எம்மை கவிழ்த்து விடுவதற்காக யாரும் எதனையும் பேசலாம் எனக் குறிப்பிட்ட அவர், அத னைப் பொருட்படுத்தாது, ஒன்றிணைந்த நாட்டிற்குள் ஒன்றாகச் செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களை பிரிவினைவாதிகள் என சிங்கள மக்கள் கூறி வருவதாகவும் அந்தக் கருத்தை முற்றாக எடுத்து எறியக்கூடிய …
-
- 0 replies
- 265 views
-
-
யாழ் பல்கலையில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் அட்டகாசம் யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது தொடச்சியாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் பொலிசாரும் உரியகவனம் செலு த்துமாறு பொதுமக்கள் உட்பட பலர் கேட்டுக்கொண்டனர். …
-
- 3 replies
- 631 views
-
-
கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு (எஸ்.என். நிபோஜன்) கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட தடகவியல் பொலிசாரால் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகைதந்த பகுப்பாய்வு குழுவினர், தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 125 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்போது 100 கடைகள் முற்றாக எரிந்ததோடு, ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 429 views
-
-
யாழில் பொலிஸாருக்கு விளையாட்டு போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் .யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பொலிஸாருக்கும் யாழ்.விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே விளையாட்டு போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யாழ் மாவட்ட பொலிசாருக்கும் தேர்வு செய்யப்பட்ட கழகங்களுக்குமிடையிலேயே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட், காற்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக D.I.G சஞ்சீவ தர்மதாச கலந்துகொள்ளவுள்ளார். http://onlineut…
-
- 1 reply
- 286 views
-
-
மௌனம் களைத்தார் பஷில் கூட்டு எதிர் கட்சியின் புதிய அரசியல் கட்சி மிக விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பெற்றுக்கொள்ளாது கட்சி குறித்து அறிவித்து பலன் இல்லை. ஆகவே அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கட்சியின் தலைவர் யார் ? சின்னம் என்ன ? என்பது பிரச்சினை இல்லை. ஆனால் புதிய மாற்று அரசியல் சக்தியின் தேவை தற்போது அதிகமாக காணப்படுகின்றது. இதனை ஈடு செய்வதற்கான அடிப்படை காரணிகள் பூர்த்தியாகியுள்ளது. தேர்தலை அறிவிக்கும் பட்சத்தில் அனைத்தும் வெளியில் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 394 views
-
-
இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் : ஜனாதிபதி இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியூயோர்க் Loews Regency ஹோட்டலில் நேற்று மாலை இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரேசில் ஜனாதிபதி இன்று பொதுச்சபையில் உரையாற்றும்போது தெரிவித்ததைப்போன்று, சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்த…
-
- 2 replies
- 330 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி நெருக்கடி நிலைமை தொடர்பாக தவராசா அவசர பிரேரணை உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது, ´உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாக அக் கல்லூரி மாணவிகளினால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின் போது சில கல்லூரி ஆசிரியர்களும், மதகுரு ஒருவரும், வேறு வெளியாட்களும் மாணவ…
-
- 0 replies
- 442 views
-
-
சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதுசெய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள 25 ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். http://www.virakesari.lk/article/11580
-
- 0 replies
- 404 views
-
-
வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (20.09.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. ரூபாய் 5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்…
-
- 0 replies
- 379 views
-
-
உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன் உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, எமது உரிமைகளை நிலைநாட…
-
- 2 replies
- 406 views
-
-
'நீர்க்காகம்' -பதுர்தீன் சியானா இலங்கை இராணுவத்தினரால் 7ஆவது தடவையாக நடத்தப்பட்டு வருகின்ற 'நீர்க்காகம்' என்ற விசேட தாக்குதல் பயிற்சி நேற்றுச் செவ்வாய்க்கிழமை புல்மோட்டை, அரிசி மலைப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுடன் நிறைவடைந்தது. கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய இப்பயிற்சி கொக்கிளாய் பிரதேசத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் 2,500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப் படையினரும் கலந்துகொண்டனர். அத்துடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 765 views
-
-
அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதியை மைத்திரியை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். இதேவேளை, இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா…
-
- 0 replies
- 348 views
-
-
அரசாங்கத்தின் சூழ்ச்சியை தடுத்துநிறுத்த தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை! வவுனியா வடக்குப் பிரதேச சபையினை முழுமையாக சிங்கள மயமாக்கும் சூழ்ச்சியினை தடுத்து நிறுத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையினர் அனைவரும் உடன் ஆவன செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் ஓர் அவசர கோரிக்கையினை கிராம அபிவிருத்திச் சங்கங்கள் விடுக்கின்றனர். இது குறித்து பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில் , வவுனியா வடக்கு பிரதேச சபைப் பிரிவில் தற்போது சுமார் 4500 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சிங்கள மக்களும் கிடையாது. இதேபோல் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தற்போதுவரை 14 உறுப்பினர்கள் தேர்வாகின்றனர். இதன் பிரகாரம் இறுதியாக 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி…
-
- 2 replies
- 395 views
-