Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “சிறிசேனவின் அப்பக்கடை” கூச்சலால் அதிர்ந்ந டார்லி வீதி நடைபவனியில் ஈடுபட்ட கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியா லயத்தின் முன்னால் செல்லும் போது கூச்சலிட்டதாக தெரிவிக்கப்ப டுகின்றது. ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்திற்கு முன்னால் கூச்சலிடும்போது கட்சியின் போஷகர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்ப டுகின்றது. இவ்வாறு கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சென்றவர்கள், “இது சிறிசேனவின் அப்பக்கடை”, “டார்லி பாதையிலுள்ள அப்பக் கடை” எனக் கூறிக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது http:/…

  2. சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பாதயாத்திரை (Pilgrims March) ஒன்றை ஆரம்பித்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே ‘பாதயாத்திரை அரசியல்’ ஆட்சியாளருக்கு எதிராக பிரயோகிப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். இதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெற்கின் அரசியல் சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதமாக பாதயாத்திரையை பயன்படுத்தியிருக்கின்றனர். 1990இல் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ராஜப…

    • 0 replies
    • 206 views
  3. மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­ட ­சம்பூர் மக்­க­ளின் ­அ­வ­ல­நி­லையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வேண்­டி­ய­ அ­டிப்­ப­டை­த்தே­வை­களும் மீளக்­கு­டி­ய­ம­ர்த்­தப்­பட்ட சம்பூர் மக்­களின் தேவைகளை உடன் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்கு கடி­த­மொன்றை இங்­குள்ள கிரா­மிய அமைப்­புக்கள் பல ஒப்­ப­மிட்டு அனுப்­பி­வைத்­துள்­ளன. மழை­காலம் தொடர்­வ­தனால் பல அடிப்­ப­டைத்­தே­வைகள் இன்னும் நிறை­வேற்­றப்­ப­டா­மை­யினால் தமது மக்கள் பெரும்­சி­ர­மப்­ப­டு­வ­தாக தமது கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர். இதன் முழு விபரம் வரு­மாறு, திரு­கோ­ண­மலை­ மா­வட்­டத்தில் உள்­ள­ சம்பூர் பிர­தே­சத்தில் பூர்­வீ­க­மா­க­ வாழ்ந்து வந்­த ­மக்கள் கடந்த 2006.04.26 …

  4. கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங்குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் கப்பல் நங்கூரமிடுதல் மற்றும் மீன்பிடி இறங்குதுறை அமை க்கப்பட்டு வருகிறது. மேற்படி இறங்குதுறை அமைக்கப்பட்டு தொழிற்படுமாயின் கீரிமலை கடற்கரையில் இடம்பெறுகின்ற அனைத்து புண்ணிய காரியங்களும் மாசுபடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். அதாவது கண்டகி தீர்த்த கரையில் இடம் பெறும் மகாசிவராத்திரி தீர்த்தம், ஆடி அமாவ…

    • 0 replies
    • 378 views
  5. எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய எயி;ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் அதிகரிக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் 79 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த ஏழு மாத காலப் பகுதியில் எச்.ஐ.வீ. நோய்த் தொற்று பரவிய 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 4200 பேர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 25 வீதமானவர்களே சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கின்றார…

    • 0 replies
    • 228 views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள 90மில்லியன் ரூபா பணத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மோசடி செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் அமைப்பாளர் மாசிலாமணி குற்றஞ்சுமத்தியுள்ளார். குறித்த பணமானது தேர்தல் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதெனவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், ரூபவதி கேதீஸ்வரனை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்யவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்குக் மாசிலாமணி கருத்துத் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மட்டக்களப்பில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது புனர்வாழ்வு அமைச்சினால் 90 மில்லியன் ரூபா பணம் கச்சேரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. …

    • 0 replies
    • 300 views
  7. இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதி? இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உள வுத்துறையை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நகரான திருப்பூரில் வைத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மஜ்னு என்ற பெயரைக் கொண்ட குறித்த நபருக்கும் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விசாரணைகள் பூர்த்தி அடைய முன்பதாகவே குறித்த நபரை ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் என குறிப்பிட்டு கொழும…

  8. கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல் முகம்மது தம்பி மரைக்கார் 'மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பதில் சொல்கின்றவர்கள் எல்லோரும், கேள்வியினை விளங்கிக் கொள்ளாதவர்கள் என்று அர்த்தமாகி விடாது. உரிய விடையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களும் தொடர்பற்ற பதில்களைச் சொல்வதுண்டு. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் உள்ளன. அண்மையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம், அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் 'மட்டக்களப்புக்…

  9. மூதூர் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்தும் நியாயம் கிட்டவில்லை – HRW: மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நியாயம் கிடைக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மூதூர்ரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கூட்டுமனித படுகொலைக்கு இலக்காகியிருந்தனர். பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எக்ஸென் எகேய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் யுத…

  10. மர்மக் கிணற்றைத் தோண்டிய போது இரண்டு எலும்பு துண்டுகள் மீட்பு -எஸ். றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனிதப் புதைகுழிக்குச் சற்றுத் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் கிணற்றிலிருந்து, நேற்றுத் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்ட சிறு எலும்புத் துண்டுகள் இரண்;டும், பகுப்பாய்வுக்;கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மர்மக் கிணறு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுக் காலை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், ரனித்தா ஞானராஜா ஆகியோர் மன்றுக்குப் பிரசன்னமாகியிருந்தனர். …

  11. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சு.கவின் தாய்வீட்டுக்கு ஹூ... ஹூ... பேராதனை கெட்டம்பே விஹாரைக்கு முன்பாக, கடந்த 28ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை நேற்றுத் திங்கட்கிழமை (01), கொழும்பை வந்தடைந்தது. பாதயாத்திரை பயணித்த வீதிகளில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், கொழும்பில், நேற்று மாலைவேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. பாதயாத்திரை ஆரம்ப நாட்களில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றாலும், இறுதிநாளான நேற்று, பெருந்திரளான மக்கள், பாதயாத்திரையுடன் கரங்கோர்த்துக்கொண்டனர். பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தவர்கள், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராகக் …

  12. இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள நல்லிணக்க அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சென்ற கனடிய வெளிநாட்டமைச்சர் தலைமையிலான குழுவில் கனடியத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் தவிர்க்கப்பட்டது தொடர்பான கேள்விகளே தமிழ்மக்களின் இன்றைய பேச்சுப் பொருளாகவுள்ளது. குறிப்பாக லிபரல் கட்சியானது தமிழர்களிற்கு மிகவும் நெருக்கமானதொரு கட்சியாக கடந்த 33 வருடங்களாக இருந்தாலும் 2015ம் ஆண்டுவரை அது தமிழர் ஒருவரை எந்த மட்டத்திலும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ராதிகா சிற்சபைஈசன் புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தலில் வென்றதன் பிற்பாடு ஏற்பட்ட நெருக்குதல் காரணமாகவே ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சமூகத் தலைவர்களில் ஒருவராக,…

    • 3 replies
    • 510 views
  13. மீண்டும் வருவோம் : விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் : கொழும்பில் மஹிந்த நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால் மீண்டும் நாம் வருவதற்கு தயாராக உள்ளோம். நீங்கள் கேட்பது எதுவோ அதை பெற்றுகொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசுக்கு எதிராக பேராதனையில் கடந்த வியாழக்கிழமை (28)…

  14. பிரான்ஸ் தூதுவர் - கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் மஹ ஷூக்குமிடையிலான சந்திப்பு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (01) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/178435/ப-ர-ன-ஸ-த-த-வர-க-ழக-க-ம-தலம-ச-சர-சந-த-ப-ப-#sthash.dqc30Ljr.dpuf

  15. முஸ்லிம்களுக்கு தனியான மாகாணமொன்று அவசியம் - முஸ்லிம் காங்கிரஸ்: முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் மாகாணமொன்று அவசியமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அரசியல் சாசனப் பேரவையில் இது குறித்து வலியுறுத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு ஒன்று அவசியமாகின்றது என்ற நிலைப்பாட்டை கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் அம்பாறையில் முஸ்லிம் சிவில் சமூகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளங்களை உறுதி செய்து கொள்ள அனைத்து தரப்பினர…

    • 3 replies
    • 569 views
  16. மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பங்குதாரர்கள் தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த விமான நிலையத்தின் எதிர்கால நடவடிக்கைகள் அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதால், பங்குதாரர்கள் தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பசுபிக் பிராந்திய விமான சேவை பணிப்பாளர்களின் 53வது மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், எந்தவொரு விமான சேவை நிறுவனமும் வரையறை இல்லாமல் இதனை பயன்படுத்த அனுமதியளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php…

  17. நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர். இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து வருகின்றார்கள். பல போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவித முடிவுகளும் கிடைக்காத நிலையில், வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், நல்லூர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, துணுக்காய், தீவகம் உள்ளிட்ட 12 வலயத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். இதேவேளை, வடமாகாண ஆளுநர் அல…

  18. மாவீரர் நாள் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கொண்டாடாது வேறொரு தினத்தில் கொண்டாடப்படவேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ரெலோ கட்சியின் 33ஆவது அஞ்சலிக்கூட்டம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27இனை இல்லாமல் செய்து அதற்குப் பதிலாக, பிறிதொரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற அமைப்புக்களில் மரணித்த உறுப்பினர்களையும் நினைவுகூரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மாவை சேனாதிர…

  19. திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் இலங்கையின் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்ட மனிதப் புதைகுழியை அண்மித்த பாழடைந்த கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து, இன்று (திங்கள் கிழமை) அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய அகழ்வுப் பணிகள் மருத்துவ சட்டவியல் பிரிவினர், புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த அகழ்வு பணியை மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆரம்பித்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருக்கேதீஸ்வரம…

  20. இன, மத ரீதியாக பதிவான அரசியல் கட்சிகளின் தடைக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் மறுப்பு இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாதென்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞர் பிரசன்னா லால் டி அல்விஸ் தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இந்த மனுவில் பிரதிவாதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ,பொதுபல சேனா அமைப்பு உட்பட இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள 27 அரசியல் கட்சிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இன மற்றும் மத ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி காரணமாக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா…

  21.  'என்னிடம் இனவாதம் இல்லை' 'நான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்' என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெகிராவ பகுதி விஹாரையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178320/-என-ன-டம-இனவ-தம-இல-ல-#sthash.7LCCeOTR.dpuf

  22. பாதயாத்திரை... முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பங்குபற்றலுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையினைப் படங்களில் காணலாம். கடந்த 28ஆம் திகதி, பேராதனையில் ஆரம்பமான இந்த பாதயாத்திரை, இன்று திங்கட்கிழமை (01) காலிமுகத்திடலில் நிறைவுபெறவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/178350/ப-தய-த-த-ர-#sthash.zu1cg6yc.dpuf

    • 1 reply
    • 495 views
  23. காணாமல்போன உறவினரை மீட்டுத்தருவதாக கூறி பணமோசடி : சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படடைப்பு யாழ்ப்பாணத்தில் காணமல்போன ஒருவரை மீட்டுத்தருவதாக கூறி அவரது உறவினர்களிடமிருந்து 2 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டும் நபருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதுடன் கண்டியை சொந்த இடமாக கொண்டவரும் தற்போது யாழ்.சாவகச்சேரி பகுதியில் வசித்து வருகின்ற நபரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/9669

  24. புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 103பேர் ஒரே விதமான புற்றுநோய் அல்லது மர்மநோயின் காரணமாக இறப்பதனால் இது புனர்வாழ்வு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்காலத்தில் நிகழ்ந்த வைத்தியத்தில் ஏதாவது திட்டமிட்ட மோசடி இருக்குமா என அஞ்சப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் படையி…

    • 10 replies
    • 1.8k views
  25. முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச ரீதியிலான மருத்துவப் பரிசோதனை நடாத்தவேண்டுமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் வசிக்கும் போராளியொருவர் தமக்கு வலுக்கட்டாயமாக ஊசி ஏற்றியதாகவும், தன்னால் முன்புபோல் தற்போது இயங்கமுடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த போராளியின் கருத்தை கவனத்திலெடுத்து சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், த…

    • 0 replies
    • 225 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.