Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டாவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்க நாளை இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரம சிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோரா, இந்தோனேசிய நிதியமைச்சர் முல்யானி இந்திரவதி, உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிரதமருடன் அவரது பாரியார் பேராசிரியர் மைதிரி விக்ரமசிங்க, அமைச்சர் கபிர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக…

  2. உயர்தர பரீட்சை ஆரம்பிப்பதால் போதைப்பொருள் வழக்குகளில் பிணை வழங்க மறுப்பு! நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில்போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சை க்குத் தோற்றும் மாணவர்களின்அமைதியைக் கெடுத்து விடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழி யன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை 2ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்க ப்படக் கூடாது என்பதற்காக அவர் இதனைக் கூறியுள்ளார். பிணை வழங்க மறுத்தது குறித்து அவர் மேலும் தெரிவித்த…

  3. அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000 அவுஸ்திரேலிய டொலர் வரை வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா அரச அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் Refugee Action Coalition அமைப்பின் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதற்கு முன் $10,000 டொலர் தருவதாக கூறிவந்த அதிகாரிகள் இப்போது தொகையை இருமடங்கு உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நாடு திரும்ப முன்வருவோருக்கு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அவுஸ்திரேலியாவின் Department of Immigration and Bor…

  4. ஜி.ஞானவேல்முருகன் COMMENT · PRINT · T+ வ.சுந்தரராஜூ உலகம் முழுவதும் 13 நாடுகளில் உள்ள காடுகளில் புலிகள் வாழ்கி ன்றன. இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்கு புலி. 19-ம் நூற்றாண்டில் இவ்வுலகில் லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அவற்றில் 97 சதவீதம் அழிந்து, தற்போது வெறும் 3,200 என்ற எண்ணிக்கையில் புலிகள் குறைந்துவிட்டன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா வில் 2 ஆயிரம் என இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2006-ம் ஆண்டில் 1,411 ஆகக் குறைந்தது. இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்ப…

    • 0 replies
    • 572 views
  5. வீதி வலம் வருவதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் : ஜனாதிபதி மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்பலங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம்செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்துவைக்…

  6. பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் நாளை திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பு ஹட்பார்க் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது (மாலை 4 மணி) பாதயாத்திரை, யக்கல நகரத்தை கடந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். - See more at: http://www.tamilmirror.lk/178321/ப-தய-த-த-ர-ய-ன-ந-ற-வ-ப-ப-ரண-க-ல-ம-கத-த-டல-ல-#sthash.y7LPa4V9.dpuf

  7. போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் கைப்பற்றிய 2 ஆயிரத்து 221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் திரும்ப கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் காணிகளை வைத்திருந்தாலும் பொது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக விசேட வீடமைப்பு வேலைத்திட்டம் ஒன்றையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 47 ஏக்கர் நிலத்தில் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் படையிருடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும்…

  8. பிரபல சிங்கள பாடகி சமிதா எராந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த, விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கும் தங்குமிடத்தை வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரிலேயே சமிதா, புலிகளின் உறுப்பினர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்படலாம் என்ற அடிப்படையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அவரது அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அப்போது பர…

  9. காணாமல்போனோர் உயிருடன் உள்ளனர் எனும் உணர்விலேயே உறவுகள் : அரசுக்கு கடப்பாடு உள்ளது என்கிறார் பிரதமர் யுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் காணாமல் போன­வர்கள் இன்னும் உயி­ருடன் இருக்­கின்­றனர் என்ற உணர்­வி­லேயே அவர்­க­ளது உற­வி­னர்கள் இருந்து வரு­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்­பிலும் அது குறித்து கண்­ட­றிய வேண்­டி­யதன் கடப்பாடு தொடர்­பிலும் நல்­லாட்சி அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விகி­தா­சார தேர்தல் முறை­மையில் விளை­வாக வடக்கில் அதி­க­மான தமிழர் பிர­தி­நி­தித்­து­வங்­களும் தெற்கில் அதி­க­மான சிங்­கள பிர­தி­நி­தித்­து­வங்­களும் உரு­வா­கின எனவே சுமுக­­மான அர­…

    • 12 replies
    • 804 views
  10. சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார். இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கி…

    • 1 reply
    • 297 views
  11. மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல் மட்டக்களப்பில் சிறுவன் கடத்தல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) வெள்ளை வானில் வந்தவர்களால் சிறுவனொருவன் கடத்தப்ப ட்டான்.இவ்வாறு கடத்தப்பட்ட 11 வயதுச் சிறுவன் மட்டக்களப்பு பதுளை வீதி ப்பிரதேசம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காட்டோரத்திலிருந்து மீட்க ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கற்கும் மாவடிவேம்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் விதுஷன் (வயது 11) என்ற மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வகுப்பு முடிந்ததும் கொழும்பு – மட்டக்களப்ப…

  12. வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்துவரும் நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்ப டவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகி லேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள மாவட்டங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதன் நிமிர்த்தம் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோய்ககான சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக நி…

  13. அடுத்த வருடம் டிசம்பர் மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு எடுத்திருந்த தீர்மானத்தை ரத்துச் செய்து அடுத்த 5 வருடங்களுக்கும் தேசிய அரசாங்கத்தை ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தை அசைப்பதற்கு எவராலும் முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை உரிய முறையில் நிறைவேற்றுவதற்…

  14. ஹொரகொல்ல சமாதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சந்திரிகா கோரிக்கை கூட்டு எதிரணியின் பாதயாத்திரை, இன்று ஹொரகொல்ல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கவுள்ளது. அதன்போது, பண்டாரநாயக்கவின் சமாதி அமைந்துள்ள பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த பாதயாத்திரையில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஏற்பாட்டாளர்கள் இருவர், குறித்த சமாதிக்கு சேதம் ஏற்படுத்த முனைந்ததையடுத்து, இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178282/ஹ-ரக-ல-ல-சம-த-க-க-ப-த-க-ப-ப-வழங-க-ம-ற-சந-த-ர-க-க-ர-க-க-#sthash.rx7Z0ViE.dpuf

  15. சமாதியை கடக்கும் போது சத்தமில்லை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/178299/சம-த-ய-கடக-க-ம-ப-த-சத-தம-ல-ல-#sthash.W3TSzYFE.dpuf

  16. மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் சட்டங்களின் படி, இது சாத்தியமற்றது என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். வர்த்தக விதிமுறைகளுக்கு அமைய, முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியே இதுபற்றி தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்திலேயே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தூதுவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் சீனத் தூதுவரும் பங்க…

  17. கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/9609

  18. வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரை திசை திருப்ப மாகாண அமைச்சர்கள் இருவர் முயற்சி எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என இழுபறி நீடித்து வரும் நிலையில் வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவரும் கலந்துரையாடி இப் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக பிரித்து கடல் உணவு மையம் ஒன்றினை மாங்குளத்திலும், மரக்கறி வகைகளுக…

  19. ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போது அந்த சபையின் மேலாளர் அலி பாதரலி இதனை தெரிவித்துள்ளார் சர்வதேச சந்தையில் ஹலால் சான்றிதழ் உணவு வர்த்தகத்தின் வருமானம் 1.2 ரில்லியன் டொலர்களை வரை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இதன் பொருளாதார நன்மைகளை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றன. எனவே இதன் நன்மைகளை இலங்கையாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஏற்கனவே ஹலால் சான்றிதழுக்கு பொதுபல சேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் தமது …

    • 0 replies
    • 285 views
  20. நல்லிணக்க காலம் என கூறிக்கொண்டு சிங்கள, பௌத்த மயமாக்கல்களை தான் புதிய அரசாங்கமும் செய்கின்றது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியிடம் தெரிவித்துள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது. இதன் போதே யுத்தத்தினாலும், காணாமல்போதல்கள் உட்பட பல விடயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது எனவும், இனிமேல் யுத்தத்திற்கு இடமில்லை எனவும், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ் கின்றனர் என கூறிவரும் தற்போதைய அரசாங்கம், தம்மை நல்லிணக்க…

    • 0 replies
    • 231 views
  21. ஈரானின் முக்கிய மோசடிக்காரராக கருதப்படும் ஒருவர் போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தப்பிச்செல்ல உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட இந்த மோசடிக்காரர் தற்போது தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், சில ஆயிரம் டொலர்களுக்காக உலகின் கதவுகளை திறக்கும் வகையில் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் மற்றும் குடிபெயர்வாளர்களுக்கு விநியோகித்துள்ளதாக ஏபி செய்திசேவை தெரிவித்துள்ளது. பேங்கொக்கில் உள்ள அமைதியான வீடு ஒன்றில் இருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 48 வயதான Hamid Reza Jafary என்ற இவர், கடந்த பல வருடங்களாக அவதானிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த வா…

  22. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! இப்படிக் கூறுகின்றார் மைத்திரி "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசியுள்ளார்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, 34 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "பொதுமக்களின் நலன்கருதி…

    • 0 replies
    • 269 views
  23. இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரை நீக்குமாறு கோரிக்கை! இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்குமாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்ட, சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, அடையாள அணிவகுப்பில் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்தே இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. பிரிகேடியர் சுரேஸ் சாலியுடன், சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, மிக நெருக்கமாகப் பணியாற்றியிருந்தார். …

  24. தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர் வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூனமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பம்பலபிட்டி ஹோட்டலில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம …

    • 8 replies
    • 900 views
  25. குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 1996 ஆம் ஆண்டு மூதூர் – குமாரபுரத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை – குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.