Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  'கோவில்களை இடித்து விகாரைகளை கட்டுகின்றனர்' நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள், மன்னாரிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்றன. இதன்போது, மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. மன்னாரில் முசலியிலும் முல்லைத்தீவில் மரிதம்பற்றிலும் இந்த அமர்வுகள் இடம்பெற்றன. நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் வேலணையில் இடம்பெற்ற அமர்வில், வெறுமனே 6 பேர் மாத்திரமே தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருந்த நிலையில், நேற்றைய அமர்வுகளில், அதிகமான ஆர்வம் காணப்பட்டது. இந்த அமர்வில் கலந்துகொண்டவர்கள், உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல், காணாமற்போனமை, இழப…

  2. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு நோட்டீஸ் யாழ்ப்பாணம் பலகலைக்கழத்தில் கடந்த இரு வராங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் மாணவர்கள் 7 பேருக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறித்த மாணவர்கள் 7 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177979/ய-ழ-பல-கல-க-கழக-ம-ணவர-கள-ப-ர-க-க-ந-ட-ட-ஸ-#sthash.8i5YQlrm.dpuf

    • 2 replies
    • 371 views
  3. காணிகளையும் ,இறங்குதுறையையும் அபகரிக்கும் கடற்படை அன்புபுரம் மக்கள் குற்றச்சாட்டு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி: கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அன்புபுரம் பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கறிற்கும் மேற்ப்பட்ட காணிகளை படையினா்அபகரித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் எழுபது வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் கடற்றொழிலையே நம்பியுள்ளனர். இக்குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு இவ் இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால் கடற்படையினர் இ…

  4. கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் நாளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.13 வருடங்களின் பின்னர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தசாப்த காலத…

  5. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் வடமாகாணத்திற்குள் குடியேற்றப்படலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார். மகாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜெய்கா நிறுவனம், மாவலி அதிகார சபை, நீர் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்போது மகாவலி அதிகார சபை கடந்த காலங்களில் வெளி மாவட்ட மக்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றியமை தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில் இரு மாகாணங்களுக்கு இடையிலான நீர் பாசன திட்டமாக இது காணப்ப…

  6. சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே 'கறுப்பு ஜூலை' வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் உயிர், உடமைகள் பொருளாதார வாழ்வு என தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை குறிவைத்து நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வாகவே 1983 'கறுப்பு ஜூலை' இனப்படுகொலை அரங்கேறியது. இலங்கை தீவின் திசையெங்கும் எதிரொலித்த தமிழர்களின் அவலக்குரல்கள் சிங்கள காடையர்களின் கொக்கரிப்புக்களுக்குள் அமுங்கிப்போயிருந்தது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொலைவெறியாட்டத்தின் உச்சமாக வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்க…

  7. தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து இராணுவம் எச்சரிக்கை: தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்பில் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீ…

    • 1 reply
    • 393 views
  8. திட்டமிட்டபடி பாதயாத்திரை நடைபெறும் : 10 இலட்சம் பேர் கலந்துகொள்வர் பொது எதிரணி ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை திட்டமிட்டபடி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. அதில் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் கலந்தகொள்ளவுள்ளனர். அதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என சகலரினதும் ஆதரவுடன் நடைபெறவுள்ள பாதை யாத்திரையில் 10 இலட்சம் பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இப்பாதையாத்திரை இலங்கையின் சரித்திரத்தில் தடம் பதிக்கவுள்ள நிகழ்வாக அமையவுள்ளதாக பொது எதிரணி தெரிவித்துள்ளது. பொது எதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள…

    • 1 reply
    • 414 views
  9. முஸ்லிம்களின் குரலை நசுக்க சதி இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலை நசுக்குவதற்காக இப்பொழுது பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் எழுச்சி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஐக்கிய இராச்சிய முஸ்லிம் தர்ம கொடை நிதி” அமைப்பினால் மட்டக்களப்பு ஏறாவூரில் 500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய முதலமைச்சர், தற்போது ஒற்றுமைப்பட்டுள்ள இலங்கை மு…

    • 1 reply
    • 369 views
  10. கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில், காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக இலங்கையர்கள் அல்லது வேறு நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கு இந்தியா எதிர்ப்புகள் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறிலங்காவை இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவது குறித்தே, சிறிலங்கா அதிகாரிகளிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற இராஜதந்திர நெறிமுறைகளுக்கு மாறான செயற்பாடுகள் விரும்பத்தகாத போக்கு ஒன்றை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித…

    • 5 replies
    • 396 views
  11. Started by நவீனன்,

    மனிதம்..! சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்த கைப்பையை, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து, ஒப்படைத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணினுடைய 46, 500 ரூபாய் பணம் இருந்த கைப்பை, நேற்று முற்பகல்11. 00 மணியளவில் சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயிருந்தது. இதனைக் சேருநுவர பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த, கே.டீ.கே.ரம்யலதா என்ற பெண் கண்டெடுத்துள்ளார். திருகோணமலை, சேருநுவர பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போன, பண…

  12. அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது : இளஞ்செழியன் எச்சரிக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின் போது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ள நீதிபதி இளஞ்செழியன், அரசியல்வாதிகள் மத்தியில் இனிமேல் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என எச்சரிக்கை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரான அப்போதைய வேட்பாளராகிய குமார் சவர்வானந்தன் என்பவர் கடத்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இவ…

  13. கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு இவ்வருடத்திற்குள் தீர்வு கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு, இவ்வருடத்திற்குள் வீடுளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி–புளியம்பொக்கணை பெரியகுளத்தில் யு.என்.கபிடட் நிறுவனத்தி னால் அமைக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை, நேற்று (திங்கட்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் காணப்படும் நிலையில், குறித்த பொதுநோக்கு மண்டபத்தை அமைப்பதற்கு காணியை வழங்கியவர…

  14. ஸ்ரீலங்கா அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முழுமையான அனுசரணைக்கு அமைய 1983 ஆம் ஆண்டுஜுலை 23 ஆம் திகதி முதல் ஜூலை இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. 1983ஆம் ஆண்டு ஜூ…

  15. வடக்கு-கிழக்கில் தொழில்சார் பயிற்சிநெறிஉட்பட நான்கு திட்டங்களுக்கு ஜேர்மன் நிதியுதவி வடக்கு-கிழக்கில் தொழில்சார் பயிற்சிநெறி, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல், சமூக மாற்றீட்டு மேம்பாடு,வில்பத்து தேசிய பூங்காவிற்கான பாதுகாப்பு எல்லைகளுக்கான முகாமைத்துவம், போன்ற நான்கு திட்டங்களுக்காக 13 மில்லியன் யூரோக்களை ஜேர்மன் நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ஜென் மோஹார்ட், நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கைச்சாத்திட்டனர். கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜ…

  16. மகிந்தவின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படார்-சுமந்திரன் நல்லாட்சி அரசைக் கவிழ்த்து தான் மீளவும் பதவிக்கு வரலாமென கனவு காணும் மஹிந்த ராஜபக்ச, எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது. அவரின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்தார்…

  17. தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகம் ஜா-எல வரை விரிவாக்கப்படும் என்றும், இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய துறைமுகம் என்ற நிலையை கொழும்புத் துறைமுகம் பெற்றுக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்புத் துறைமுகத்தை விரிவாக்குவதற்கு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியை சிறிலங்கா கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2016/07/26/news/17658

  18. பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோரி நிற்கும் இவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள். இவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=162282&category=TamilNews&language=tamil

  19. மேற்கத்திய நாடுகளின் தேவைக்கு ஏற்ப கலாச்சாரத்தை சீரழிக்க முடியாது அஸ்கிரி பீடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன அவர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு சம்போதி விகாரையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றும் போது, "இன்று முன்னரை விட மேற்கத்திய நாடுகளின் குறிப்புகள் இந்த நாட்டிற்குள் எளிதில் தடம்பதிக்கும் காலத்தில், எமது நாட்டின் மத நாகரீகம் கனவாக மாற ஆரம்பித்திருக்கும் காலத்தில், மதத்தை அரசியல் யாப்புப்படி அகற்றுவது, ஒதுக்குவது சரியானதல்ல என்று நான் முதலில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதன்படி இந்த நாட்டில் பௌத்த மதத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தை நாங்கள் வழங்க வ…

  20.  தொண்டைமானாறு ஆய்வு நிலையம் ஓகஸ்டில் திறப்பு - எஸ்.கர்ணன் தொண்டைமானாறு செல்வச்சந்தி ஆலயத்துக்கு தெற்கு பக்கத்தில் 30 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள விஞ்ஞான ஆய்வு நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதென ஆய்வு நிலை பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. வடபகுதியிலுள்ள கல்விமான்களின் முயற்சியால் தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில், 1967ஆம் ஆண்டு தொண்டைமானாறு வெளிக்கள விஞ்ஞான ஆய்வு நிலையம் உருவாக்கப்பட்டு, இயங்கி வந்தது. 1987ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆய்வு நிலையத்தின் கட்டடம் முழுமையாக சேதமடைந்தது. இதனையடுத…

  21. 43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றமும் 22 இந்திய மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றமும் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/9423

  22. சிங்கள மாணவர்கள் அச்சமின்றி கல்வியைத் தொடரலாம் -பொலிஸ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை அச்சமின்றித் தொடரமுடியும்.அவர்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்த ப்பட்டு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். …

  23. ஜனாதிபதியின் மௌனனம் கூட்டு எதிரணிக்கு ஏமாற்றம். அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தக் கருத்தையும் வெளியிடாதது, மகிந்த ஆதரவு அணியினரை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 5 நாள் பாதயாத்திரையை மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளனர். இந்த நிலையில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். …

  24. காணாமற் போனோர் அலுவலகம் ஆபத்தானது தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் குற்றச்சாட்டு காணாமற் போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள புதிய அலுவலகத்திற்கு ஏனைய திணைக்களங்களை விடவும் பல அச்சுறுத்தும் அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் எனவே இது ஆபத்தான ஒன்றெனவும் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே இதனை அமைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரும்,சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார். இதே…

  25. கையளிப்பு... இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம், அன்பளிப்பாக வழங்கியுள்ள 16 திருவள்ளுவர் சிலைகளும், தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடாக திங்கட்கிழமை (25) கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டன. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், வீ.சீ.சந்தோசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(டி.ஷங்கீதன்) - See more at: http://www.tamilmirror.lk/177922/க-யள-ப-ப-#sthash.a6HZJFo6.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.