Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.பல்கலை சம்பவம் ஆராய அமைச்சர் மட்டகுழு யாழ் வருகை யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பிலிருந்து அமைச்சர்கள் அடங்கிய அரச உயர்மட்டக் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது. குறித்த குழுவில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண உள்ளிட்டோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றபோது, இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு,…

  2. தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார். நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது. பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவா…

  3. யாழ். பல்கலை மோதலுக்கு கண்டிய நடனம் மாத்திரமா காரணம் ? யாழ்.பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டதால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின. அதில் தனியே நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டது தான் மோதலுக்கு காரணமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது , ஏனெனில் மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் தனியே விஞ்ஞான பீட மாணவர்கள் மாத்திரமல்ல. முகாமைத்துவம் பீட மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். ஊடகங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் மாணவன் ஒருவன் கையில் கொட்டான் ஒன்றினை தூக்கி பிடித்து எதிரில் உள்ளவரை அச்சுறுத்து போன்று உள்ளான். அந்த மாணவன் முகாமைத்துவ பீட சிங்கள…

  4. யாழ் பல்கலை மோதல் சம்பவம் சிங்கள அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். “யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் உயர் பதவிவகிக்கும் சிங்கள அதிகாரி ஒருவர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். ஏனைய இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தைச…

  5. யாழ் பல்கலைக்கழக சம்வத்திற்கு தூண்டுதலே காரணம்! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலுக்கு தூண்டுதலே காரணமாகும். இது போன்ற சம்பவங்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலும் ஏற்படலாம் என்பதால், துணைவேந்தர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், “கலைப்பீட மாணவர்கள் தான் மோதலை ஆரம்பித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகம் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக க…

  6. காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. காங்கேசன்துறை பிரதான வீதியில் தல்செவன விடுதி வரை மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறினர். பொலிஸார் 59 ஏக்கரை விடுவிக்கவில்லை. பொலிஸாருக்கு மாற்றுக் காண…

  7. யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் போது மாணவர்களை கற்களை கொண்டு தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சட்டங்களை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது. பல வருடங்களாக புதிய மாணவர்கள் எவ்வாறு வரவேற்பார்களோ அவ்வாறே இம்முறையும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்துடன், வெளிநபர…

    • 3 replies
    • 1.2k views
  8. ஜேர்மன் நன்கொடையின் பயனாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகிய மூவரும் நேற்று ஆற்றிய உரையானது உண்மையிலேயே எமது நாட்டின் யதார்த்தங்களை எடுத்துக் காட்டியிருக்கின்றது. இம்மூவரது உரையிலும் சம்பிரதாயத்துக்கான போலித்தனங்களைக் காண முடியவில்லை. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வட பகுதிக்கு சென்றிருந்த வேளைகளிலெல்லாம் தமிழில் ஆற்றிய உரையைச் செவிமடுத்து சலித்துப் போன தமிழ் மக்கள், நேற்றைய உரையை வேறுபட்ட உணர்வுடனேயே நோக்கினர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது உரையை ஆங்கிலத்தில் நிதானமாகவும் ஆக்ரோஷமாகவும் ஆற்றினார். அவர் அங்கு தனது கருத…

  9. 'வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை வருந்தத்தக்கது' (க.கமலநாதன்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நடன நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் போராட்டமாக முற்றியமை தொடர்பில் நாம் வருந்துகின்றோம். எனினும் இந்த விவகாரத்துக்காக மாணவர்கள் இவ்வாறு மோதலில் ஈடுபடுவதை எம்மால் அனுமதிக்க முடியாதென இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழப்பாண பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் சிங்கள மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வந்த பிரச்சனைகளே பல உள்ளன. அவற்றுக்கே இன்னும் தீ…

  10. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச. யோஷித்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோரின் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் சம்பந்தமாக 58 விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இவற்றில் பாரதூரமாக குற்றச் செயல்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது நடந்த 496 நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. கொலை உட்பட 15 குற்றச் செயல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் 6 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தவிர ஜனாதிபதி ஆ…

  11. சுவிஸ்குமாரின் தாய் சிறையில் மரணம் - எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான வயோதிப் பெண்ணொருவர், யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில், 9ஆவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது தாயார் மகாலிங்கம் தவநிதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிர…

  12.  “மாணவர்களின் பிணக்கு அடுத்த நிமிடத்தில் தீரும்” எம்.றொசாந்த் 'ஒரு சிலரை உள்ளடக்கிய மாணவ குழுக்களுக்கிடையில் பல அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாகவே படித்து வருகின்றோம். ஆகவே, இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்' என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் சனிக்கிழமை (16) ஏறபட்ட மோதல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்துப் பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவா…

  13. யாழ் பல்கலை மீண்டும் புதன்கிழமை திறக்கப்படும் யாழ் பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து, இழுத்து மூடப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் புதன்கிழமை திறக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்னம் அறிவித்துள்ளார். இந்த மோதலைத் தூண்டியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவுவதையடுத்து, 20 ஆம் தேதி மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் செய்முறைப் பயிற்சிகளுக்காக பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார் வசந்த…

  14. யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஆறு மணிவரை ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்து பகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

    • 2 replies
    • 707 views
  15. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நோக்கில் கிழக்கில் ஆறுமுகநாவல் விழாவும், வடக்கில் விபுலானந்தர் விழாவும் நடைபெறுகின்றது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் நடாத்தும் சுவாமி விபுலானந்தர் விழா யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் விபுலானந்தர் விழா இதேவேளை இங்கு கலந்து கொண்டு கருத்துரைத்த, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், இந்து ஆராய்ச்சி நிலைய இயக்குநருமான சைவஞானபானு, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமு…

    • 0 replies
    • 565 views
  16. மக்களின் ஒற்றுமையால் உருவாகும் வீதி: கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்..! மாறிமாறி வரும் அரசாங்கங்கள் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால், கிராமப்புறங்கள் இன்றும் கவனிக்கப்படாமலேயே காணப்படுகின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கிலுள்ள கொடுக்குளாய் கிராமமும் ஒன்று. கடலும் கடல் சார்ந்த இடமுமாகக் காணப்படும் இந்தக் கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. மணற்பரப்பைக் கொண்ட அழகிய கடற்கரை சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் விதமாகக் காணப்படுகின்றது. மீன் பிடியை பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் தமது கிராம அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றனர். கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திகளை தாமாகவே மேற்கொ…

  17. அதை காண நீஷாவின் மூக்கு கண்ணாடி வேண்டும் (லியோ நிரோஷ தர்ஷன்) நீஷா பிஷ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் வந்தது உள்ளுரில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கையில் அவர் கண்ட பொருளாதார அபிவிருத்தியை நான் காண வேண்டுமாயின் நீஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உதவி செயலாளர் நீஷா பிஷ்வால் அண்மை…

  18. நாமல் எம்.பிக்குப் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், இன்று திங்கட்கிழமை (18), பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177317/ந-மல-எம-ப-க-க-ப-ப-ண-#sthash.PE80Xiq7.dpuf

    • 2 replies
    • 351 views
  19. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியியேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவலையடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் சமூகங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்தரமே நாட்டில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும். பல்கலைக்கலகத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் மீள ஏற்படுவதை அனுமதிக்க கூடாது. விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களை வரவழைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள…

  20.  'பல்கழைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்' “யுத்தம் முடிவடைந்தும் இன்னும் வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் எழவில்லை. இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற நிலையிலேயே உள்ளனர். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர், “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களைத் தாக்கியவர்களை …

  21. தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் சார்பில் 16/07/2016 சனி அன்று சென்னை தி.நகரில் நடத்தப்பட்டது. தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- தோழர் திருமுருகன் உரை

  22. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகிய மூவரும் இன்று நாட்டில் இல்லை. இந்நிலையில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு வேறு யோசணை தோன்றி விட்டால் என்ன செய்வது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். எமது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி இல்லை என்றால் பிரதமர் நாட்டில் இருப்பார். ஆனால் தற்போது யார் நாட்டில் இருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு நடைப்பெறாது. ஜனாதிபதி இல்லை என்றால் பிரதமர் நாட்டில் பொறுப்புக்களை ஏற்று செயற்படுவார். ஆனால் இலங்கையில் தற்போதுள்ள நல்லாட்சியில்…

  23. யுத்தம் முடிவடைந்த போதும், வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் இன்னும் எழவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நிலையிலேயே அவர்கள் இப்போதும் உள்ளனர். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர், “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையின மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைதுசெய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த நாட்டில் பல்கழைக்கழகம் ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல…

  24. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லை. குறித்த சட்டம் நீக்குமாறு கோருவதற்கு அமெரிக்காவிற்கு தகுதி கிடையாது. துருக்கியில் இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமெரிக்காவிற்கு இலங்கை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எவ்வாறு கேள்வியெழுப்ப முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுப்பதனை எங்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில் சர்வதேசத்திற்கு கொடுதத் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்க அழுத்தம் கொடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறி…

  25. இலங்கையில் அரசாங்கம் மாறினாலும் பழைய அரசின் கொள்கைகளே பின்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் சிறந்தவர்கள் என்பதனை உலகிற்கு காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது. எவ்வாறெனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் சிவிலியன்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் பெரும்பகுதி தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கீழும் படையினர் தொடர்ந்தும் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். படையினர் தொடர்ந்தும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.