ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143438 topics in this forum
-
விளையாட்டுக்கள் மூலம் உடல், உள ஆரோக்கியத்துடன் எமது இளைய சமுதாயம் வழிதவறிச் செல்வதைத் தடுத்து ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி-உருத்திரபுரம் உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று 3.00 மணிக்கு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்ட வடமாகாண அமைச்சர் குருகுலராசா உரையாற்றும் போதே மேற்படிகருத்துக்களைத் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், இங்கு உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய வீரர்கள் மிகவும் சிறப்பான முறையி…
-
- 0 replies
- 319 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைக்கு அமைய, போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொம் மெலினோவிஸ்கி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு ஆலோசனைகள் அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய யோசனைகளை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் அவர் …
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கை அரசாங்க படைகளுக்கும்- தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற 2009ம்ஆண்டு இறுதிக்கட்ட போரில் மோசமான மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை தொடர்பாக உடனடி விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இதனைநாம் சுட்டிக்காட்டுவது எவரும் கோபப்படுவதற்காக அல்ல. இவ்வாறான சம்பவங்கள்எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கே ஆகும். மேற்கண்டவாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான,அனுரகுமார திஸநாயக்க கூறியுள்ளார். நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயம்ஒன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் 2009ம் ஆண்டு போரின்இறுதிக்கட்டத்தில் கொத்து குண்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்பட…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் உலக நாடுகளின் சுற்றுலா அபிவிருத்தி அமையத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மைக்கல் நிவாஸ் தலைமையிலான 50 நாட்டு சுற்றுலாப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை(14-07-2016) யாழ். மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வமான விஐயமொன்றை மேற்கொண்டு வருகை தந்தனர். இரண்டு உலங்கு வானுர்திகளில் யாழ்ப்பாணம் சுப்பிரமணிய விளையாட்டு அரங்கில் வந்திறங்கிய இவர்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். குறித்த பிரஜைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசாமி ஆலயத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற விசேட சமய நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து யாழ். நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்…
-
- 1 reply
- 352 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த சார்பு அணி, மைத்திரி சார்பு அணி என இரண்டு அணிகள் காணப்படுவதால் சு.கவின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை அரசியல் விமர்சகர்களால் முன்வைக்க முடியாதுள்ளது. சு.கவில் அங்கம் வகிக்கும் மைத்திரி தலைமையிலான அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ஆதரவு அணியினருக்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனத் தீர்மானித்துள்ளது. மஹிந்தவின் ஆதரவாளர்கள் மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராச் …
-
- 0 replies
- 308 views
-
-
கதிர்காம உற்சவம் கதிர்காம தேவாலயத்தின் 10 நாள் உற்சவம் நேற்று இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/177162/கத-ர-க-ம-உற-சவம-#sthash.3bJnf8nK.dpuf
-
- 0 replies
- 337 views
-
-
'கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பம் கல்முனை மாநகர தமிழர்களின் எதிர்காலம் ??? கல்முனை புதியநகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்க கடந்தவருடம் தொடங்கியபோது தமிழ்மக்களின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டு நேற்று மீண்டும் தூசு தட்டப்பட்டு கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் உயர்மட்டக் கூட்டம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதியில் ேநற்று (15) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முக்கீம் தலைமையில் இவ் உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது. கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் உடன் ஆரம்ப…
-
- 0 replies
- 219 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய எல்லையிலுள்ள படைமுகாம்களைப் பலப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளிலமைந்துள்ள தற்காலிக எல்லைவேலிகளை நிரந்தர வேலிகளாக அமைக்கும் முயற்சியிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மக்கள் புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படைமுகாங்களுக்கு முன்னால் உள்ள வீதிகளில் நெருக்கமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருவதால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அச்சத்துடனுள்ளதாகத் தெரிவித்துள்ளர். உயர் பாதுகாப்பு எல்லைகளில் அமைந்துள்ள மக்களின் காண…
-
- 0 replies
- 233 views
-
-
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு இரண்டு மாதங்கள் இஸ்லாமிய போதனைகளை பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட தம்பதி குறித்து இந்திய புலனாய்வு பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளன. பாத்திமா (நிமிஷா), ஈஷா (பேசோன் வின்சன்ட்) ஆகிய இவர்கள் இலங்கையில் உள்ள சலாபி என்ற இஸ்லாமிய போதனை வகுப்புகளில் கலந்து கொண்ட பின்னர், காணாமல் போயுள்ளதாகவும் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சன்னி முஸ்லிம் பிரிவின் வஹாப் பிரிவுக்குரிய சலாபி என்ற இஸ்லாமிய போதனைகள் நீர்கொழும்பு பிரதேசத்தில் சிறிய வீடொன்றை மையமாக கொண்டு நடத்தப்படுவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் கூறியுள்ளதாக நியூ இந்திய எ…
-
- 0 replies
- 214 views
-
-
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான இராணுவ உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டன. சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை மீளவும் வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ள அதேவேளை, சிறிலங்காவும், இந்த விடயத்தில் ஆர்வம்காட்டி வருகிறது. இந்தநிலையில், சிறிலங்காவுடன் மீண்டும் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா சில நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாக…
-
- 0 replies
- 293 views
-
-
பிரான்ஸ் நீஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை பெண்ணொருவர் தனது திகில் அனுபவத்தை வெளியிட்டுள்ளார். நீஸ் நகரில் வசிக்கும் இலங்கை பெண்ணான சஜீவனி பிரியந்தி கதனாராச்சி என்பவர் ஊடகம் ஒன்றுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து தனது அனுபவத்தை தெரிவிக்கையில், “சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தான் பணிபுரிவதாகவும், பணியை நிறைவு செய்த பின்னர் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நானும் என் பிள்ளையும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால் எங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. சுகயீனமாக இருந்தமையினால் நான் அங்கு செல…
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயதுங்க, அமெரிக்காவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்றார். இந்த மாநாடு கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்றது. அமரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதியின் அழைப்பின்பேரிலேயே கடற்படை தளபதி கலிபோர்னியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றார் இந்த மாநாட்டில் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளல், ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. இலங்கைக்கும் அமரிக்காவுக்கும் இடையில் கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=161605&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 300 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சிங்கப்பூர் செல்கின்றார். இந்த விஜயத்தின்போது, அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இந்தப் பயணத்தின்போது பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=161591&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 253 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த சார்பு அணி, மைத்திரி சார்பு அணி என இரண்டு அணிகள் காணப்படுவதால் சு.கவின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை அரசியல் விமர்சகர்களால் முன்வைக்க முடியாதுள்ளது. சு.கவில் அங்கம் வகிக்கும் மைத்திரி தலைமையிலான அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ஆதரவு அணியினருக்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனத் தீர்மானித்துள்ளது. மஹிந்தவின் ஆதரவாளர்கள் மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராச் செயற்படுவதன் காரணம…
-
- 0 replies
- 187 views
-
-
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான 9 ஆவது கூட்டு ஆணைக்குழு மாநாடு கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் தீர்மானம் மேற்கொண்டனர். இதற்கமைய மீன்பித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். மீனவர்களின் இரு …
-
- 0 replies
- 161 views
-
-
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள முகாம்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்க…
-
- 0 replies
- 301 views
-
-
தமிழ் மக்கள் மீது யார் கொத்துக்குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அழித்தார்களோ அவர்களேதான் இப்போது அதனை விசாரித்து தமிழர்களுக்கு நீதி வழங்குகின்ற நீதிபதிகள் இப்படியென்றால் அந்த நீதி எப்படி இருக்கும்? தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றியத்தின் விளையாட்டுக் கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (15) மாலை 3.00 மணியளவில் உருத்திரபுரத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உரையின் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 202 views
-
-
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- றைஸ் பல்கலைக்கழகத்தில் இளையவரான எனது மகன் யோவன் புதிதாக வரும் மாணவர்களுக்கான மாணவ ஆலோசகராக இருக்கின்றார். இலங்கையைப் போல் அல்லாது,அவர்களுடைய வெள்ளையினவாதமானது எப்படியெனில்,வெள்ளையினவாதிகள் தாம் சட்டம் மற்றும் வாடிக்கையின் மூலம் மறைக்கப்பட வேண்டிய கடப்பாட்டை உணர்ந்தார்கள்.இருந்த போதும், டொனால்ட் ரிறம்ட் என்பவரது வருகை எனின், அமெரிக்க இனவெறியர்கள் அப்படி ஒரு மறைக்க வேண்டிய தேவையை உணரமாட்டார்கள். பல நகரங்களில் அமெரிக்க காவல்துறையானது கறுப்பினத்தவர்களை பக்கத்திலிருப்போர் வெக்கங்கெட்ட வகையில் அதனை படம்பிடிக்க கொன்று வருகின்றனர். ஆகவே "கறுப்பர்களின் வாழ்வு விடையம்" என்ற சுலோகத்தை உயர்த்துமாறு பல்கலைகழகம் மாணவ ஆலோசகர…
-
- 1 reply
- 407 views
-
-
சமஷ்டி ஆட்சி முறையில் ஆர்வம் காட்டவில்லை வடக்கு மக்கள்-லால் விஜேநாயக்க வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி ஆட்சிமுறையில் ஆர்வம் காட்டவில்லை என்று அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். விசும்பாயவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக எமது குழு வடக்கில் மேற்கொண்ட ஆய்வின் போது, வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மட்டும் தான், சமஷ்டித் தீர்வில் ஆர்வம்காட்டினர். வடக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒற்றையாட்சிக்குத் தான் ஆதரவளித்தனர். தேச வழமைச் சட்டத்தினால் வடக்கில் உ…
-
- 1 reply
- 267 views
-
-
கச்சதீவில் புதிய தேவாலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அரசு மற்றும் யாழ். மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கடற்படையின் உதவியுடன் மூலப்பொருட்கள் யாழ். குடாநாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் துரிதகதியில் ஆலயம் அமைக்கும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். 70 அடி நீளத்தில் அமைக்கப்படும் புதிய ஆலயமானது அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் திருவிழாவிற்கு முன்னதாக, கட்டுமானப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு யாழ். மறை மாவட்டத்திடம் ஒப்படைக்கப்படும் என நெடுந்தீவுப் பங்குத்தந்தை அருட்தந்தை ஏ…
-
- 2 replies
- 410 views
-
-
13 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், வ…
-
- 0 replies
- 150 views
-
-
வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு -க.அகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது. இவற்றை கருத்திற்க…
-
- 1 reply
- 503 views
-
-
புலம்பெயர்ந்தோரின் அழுத்தங்களை சரியாக கையாளவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு புலம்பெயர் மக்களின் அபிலாசைகள் எவற்றில் தங்கியுள்ளது என்பது அறியப்படாமலுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது என்று வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச. டி. சில்வா தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குறித்த மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் என்பன அதிகளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தகுந்த முறையில் கையாள வேண்டியதொரு கடப்பாடு தற்போதய அரசாங்கத்துக்கு உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடல் கடந்த இலங்கையர்களை ஊக்குவிப்பதற்கான பாதை எனும் நூல…
-
- 1 reply
- 256 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார் என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை. இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று சிறிலங்கா அதிபரு…
-
- 3 replies
- 285 views
-
-
அயல் வீட்டுப் பெண்ணின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளா…
-
- 4 replies
- 390 views
-