ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143436 topics in this forum
-
பொருளாதார மத்தியநிலையம் அமைப்பு -ஓமந்தை காணியை பார்வையிடவுள்ள கூட்டமைப்பு எம்.பிக்கள் வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக சர்ச்சை நிலவிவரும் நிலையில் வவுனியா – ஓமந்தையில் உள்ள காணியை நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிடவுள்ளனர். காணியை பார்வையிட்ட பின்னர் வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்…
-
- 1 reply
- 244 views
-
-
பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4ஆம், 5ஆம் நாள்களில், இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் மூலோபாய அபிவிருத்தி, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் போது, இருதரப்பு பொருளாதார, வர்த்தக திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக சம்பூர் அனல் மின் திட்டத்தை செயற்படுத்துதல், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத…
-
- 0 replies
- 196 views
-
-
தாக்குதலில் ஒருவர் பலி; ஐவர் கைது -எம்.எம்.அஹமட் அனாம் மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா (வயது 51) என்பவர் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார். அத்துடன், இவரிடமிருந்து இரண்டரைப் பவுண் தங்கநகையையும் இனந்தெரியாதோர் பறிமுதல் செய்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர். பாசிக்குடா கடலில் சுற்றுலாப் படகை செலுத்துபவரான இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இவர்கள் மூவரும் நேற்றையதினம் இரவு சிகரெட் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர்…
-
- 3 replies
- 401 views
-
-
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல்போன 41 ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்க வேண்டும் என வடபகுதி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், திருகோணமலையில் கொல்லப்பட்ட நடேசன் மற்றும் கொழும்பில் கொல்லப்பட்ட தராக்கி சிவராம் ஆகியோருடைய விசாரணைகளையாவது முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். வடக்கு தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடபகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் குழுவொன்று தென்பகுதி வந்துள்ளது. இந்தக் குழுவினர் நேற்றையதினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிப…
-
- 0 replies
- 143 views
-
-
அடிப்படைக் கோட்பாடுகளை உயர்நீதிமன்றுக்கு மீறும் உரிமை கிடையாது: பிரதமர் இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளை மீறுவதற்கான அதிகாரம், உயர்நீதிமன்றத்துக்குக் கிடையாது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2006ஆம் ஆண்டு சிங்கராசா வழக்குத் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வியாக்கியானம் தொடர்பில், சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரினார். நாடாளுமன்றத்தில் வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உ…
-
- 1 reply
- 398 views
-
-
போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற வடக்கின் நால்வர் கைது.! போலி விசாவைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை குற்றப்புலனாய்புப் பிரிவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ். முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளாவார். மேலும், இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது. துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான டி.கே 731 இலக்க விமானத்திலே இவர்கள் செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றப்புலனாய்புப் பிரிவினர் குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
-
- 1 reply
- 366 views
-
-
பிக்கு வேடமிட்டு போலி மருந்துச் சீட்டினை காண்பித்து பண வசூலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பிக்கு போல் உடையணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் பிக்கு போல் ஆடையணிந்து கொழும்பு கண் வைத்தியசாலைக்கு அருகில் பண வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 6450 ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilwin.com/crime/01/110262
-
- 2 replies
- 362 views
-
-
வலி. வடக்குக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை -சொர்ணகுமார் சொரூபன் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த மக்கள் காணிகளின் சில பிரிவுகள், அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் எஞ்சியுள்ள மக்களின் வீடுகள், தளபாடங்கள் இடித்து அழிக்கப்பட்டு களவாடப்படுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த, மீள்குடியேற்ற பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (08), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்ட…
-
- 0 replies
- 237 views
-
-
கலப்பு நீதிமன்றுக்கு இணங்கிய கூட்டமைப்பிற்கு அரசு வழங்கிய வாக்குறுதி என்ன? உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் சர்வதேச நீதி விசாரணைகளை வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பிற்கு இணங்க வைக்க, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்ன என்பதை பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்காவில் வைத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை மையப்படுத்தியே அரசாங்கத்திற்கு எதிரான இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குண…
-
- 0 replies
- 182 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தனக்கு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குப் பயணம்மேற்கொண்ட சுகாதார அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் செயற்பட்ட பல்வேறு தமிழ் அமைப்புக்களுடனும் தான் தொடர்புகளைப் பேணிச் செயற்பட்டதாகவும், அந்த வகையில் ஈரோஸ் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் அரசியல் ரீதியான தொடர்பைப் பேணி வந்தநிலையில் பிரபாகரனின் இழப்பு தனக்குள் இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவ…
-
- 3 replies
- 513 views
-
-
விசாரணைக்கு அழைப்பு? யாழ். மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை நாளை வெள்ளிக்கிழமை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருள்கள் கொள்வனவுகளுக்குரிய விவரங்களுடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டமை, மற்றும் பொருட்கள் கொள்வனவின் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டினை அடுத்தே விசாரணை நடத்தப்படுவதாக ஆணைக்குழு வட்ட…
-
- 1 reply
- 268 views
-
-
கோப் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவாராயின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். உலகில் எந்தவொரு நாட்டிலும் ‘கோப்’ குழுவினால் குற்றவாளியென நிரூபிக்கப்படும் எவரும் இதுவரையில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது இல்லை. வழமையான நடைமுறைக்கும் மாறாக சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இச்செயன்முறையை மாற்றியமைப்பாராயின் அது பெரும் சாதனையாக அமையுமென்றும் அவர் கூறினார். “வரலாற்று ரீதியாக பாராளுமன்…
-
- 0 replies
- 451 views
-
-
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் இலகுவான போக்கு வரத்தை மேற்கொள்ளக்கூடியதும், அதிகமான மக்கள் பயனடையக்கூடியதுமான இடத்தில் அமைய வேண்டும் என்பதே வடக்கு மக்களில் எதிர்பார்ப்பகும். வட மாகாணத்தின் மத்திய பகுதி என நோக்கும்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் பகுதி காணப்படுகின்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் இலகுவான போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடிய ஐந்து மாவட்டங்களின் பிரதான போக்குவரத்து வீதிகள் சங்கமிக்கும் இடமாக (இரண்டாவது மையமாக) பரந்தன் சந்தி காணப்படுகின்றது. அத்துடன், சனத்தொகையில் அதிக மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையாகவும் காணப்படுகின்றது. வட மாகாணத்திற்கான…
-
- 3 replies
- 523 views
-
-
இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடிக்கும் உரிமையை ஒருபோதும் வழங்க மாட்டோம் – பிரதமர் inShare பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக ஒன்றரை மில்லியன் ரூபா முதல் 15 மில்லியன் ரூபா அபராதம் விதிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார…
-
- 1 reply
- 214 views
-
-
யாழில் பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம் வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், இம்மாதம் (21)ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்தை, பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்துமாறு சமாசத் தலைவர் என்.கணேசன் தெரிவித்தார். இந்த வாரத்தை முன்னிட்டு, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (21)ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்கு, கண்காட்சி மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படும். பனம் உற்பத்திப் பொருட்கள், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பிற்பகல் கலை நிகழ்வுகள் இடம்பெறும். வடமாகாணத்தில் பனம் பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பனை அபிவிர…
-
- 0 replies
- 273 views
-
-
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு முன்னைய காலப்பகுதியிலும் பின்னரும் தமிழ், சிங்கள மக்களுக்கு எதிராக அரச பாதுகாப்புத் தரப்பினரால் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சான்றுகள் வெளியாகியிருந்தன. இதில் சிங்கள மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் (நீதி கிடைக்காவிட்டாலும்) ஓரளவுக்காவது வெளி…
-
- 0 replies
- 252 views
-
-
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 103 முன்னாள் பெண்போராளிகள் இதுவரை மரணமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன் முன்னாள் போராளிகள் பலர் புற்றுநோயினால் தொடர்ச்சியாக இழப்பதற்கான காரணங்களை முழுமையாக நம்பகத் தன்மையுடன் விசாரணைசெய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுதல…
-
- 0 replies
- 227 views
-
-
"மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை" - தர்மலிங்கம் சித்தார்த்தன்: "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்" மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாகவும் அது இருப்பதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள் மீது அக்கறை கொள்வது போன்று நடிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது" என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசி…
-
- 4 replies
- 467 views
-
-
சிகிச்சை பெறும் சி.வியை சந்தித்தார் ராஜித -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வியாழக்கிழமை (07) சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அவசியம் என்ற வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் ராஜிதவுக்கு பாராட்டு விழா -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 127 பேருக்கும் சுகாதார ஊழியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சருக்கு, நியமனம் பெற்றவர்கள் நேற்று வியாழக்கிழமை (07) பாராட்டு; விழா நடத்தினர். யாழுக்கு விஜயம் செய்த சுகாதார, சுதேச மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது ஊழியர்களால் வழங்கப்பட்ட கௌரவத்தை ஏற்றுக்கொண்டார். இந்த 127 ஊழியர்களும் நீண்ட காலமாக சென்யோன்ஸ் அம்புல…
-
- 0 replies
- 306 views
-
-
நிழல் அமைச்சரவை குறித்து எதுவும் தெரியாது என்கிறார் மகிந்த கூட்டு எதிர்க்கட்சி நேற்று நிறுவிய “நிழல்” அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிழல் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சுக்களிலிருந்து தன்னை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நிழல் அமைச்சரவை ஒன்றை அமைக்காமல், அமைச்சரவையை மேற்பார்வை செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறே மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சிக்கு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 438 views
-
-
போ்க்குற்றத்தை விசாரணை செய்ய அடுத்த வருடம் சிறப்பு நீதிமன்றம். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமான ”தி ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சுமார் ஒரு லட…
-
- 0 replies
- 280 views
-
-
பருத்தித்துறையில் 45 கிலோகிராம் கஞ்சா மீட்பு -செல்வநாயகம் கபிலன் பருத்தித்துறை நாவலடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் 45 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (04) இரவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், குருநகர் - சவக்காட்டு சந்திப்பகுதியில் மேற்படி நபர் கஞ்சா பரிமாறுவதாக விசேட குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. சம்பவ இடத்துக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸார், தப்பியோட முயன்ற சந்தேகநபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருந்தனர். அத்துடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பரு…
-
- 9 replies
- 594 views
-
-
சீன வெளியுறவுஅமைச்சர் நாளை இலங்கை விஜயம்! சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திப்பதுடன், பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை இவரின் விஜயம் பெரும்பாலும் போட்சிட்டியின் மீள் ஆரம்பம் தொடர்பிலானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு இரண்டாவது முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்…
-
- 1 reply
- 217 views
-
-
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் ஆரம்பம் முதல் தொடர்பு பட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தாஜூடின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளில் பங்கேற்ற அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.படுகொலை சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம் முதலே இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தே…
-
- 3 replies
- 684 views
-