Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடைபெற்ற பகுதிகளில் குடியேறியுள்ள குடும்பம் ஒன்றின் காணியில் கிணறு வெட்டும் போது சில இராணுவ தளபாடங்கள் வெளிக்கிளம்பியுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவ அடையாளங்களுடன் கணப்படும் மேற்படி தளபாடங்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டவையா? அல்லது விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டவையா? என்பது தெரியாதுள்ளது. இந்த இராணுவ தளபாடங்கள் ஆபத்தை விளைவிக்காதவை என்றாலும்; சுமார் 10 அடி ஆளத்தில் இருந்துள்ளமையானது, இங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய…

  2. ”1948 முதல் இலங்கையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும்” என மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் 21-6-2016 அன்று உரையாற்றினார். உரையின் தமிழாக்கம்: ----------------------------------------------- வணக்கம். நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ.நா வின் சிறப்பு அதிகாரியான மோனிகா பிண்டோ இலங்கைக்கு சென்று வந்திருக்கும் சூழலில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைத் தாக்குதல் பற்றி நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். ஜூன் 13 இரவு அன்று, 100 க்கும் மேற்பட்ட சிங்கள சிறைச்சாலை காவலர்களும் , பயி…

    • 0 replies
    • 381 views
  3. மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம் - சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/175260/ம-ணவ-கள-ஐவர-த-ஷ-ப-ரய-கம-ப-டச-ல-ய-ல-பதற-றம-#sthash.vQuUn0Hh.…

  4. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். ”உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி தீர்வு ஒன்றின் மூலமே, தமிழர்களின் இனப்பிரச்சின…

  5. வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று (22) மதியமளவில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் எஸ். எஸ். ஆர் என்ற பெயரில் வர்த்தக நிலையம் மற்றும் அரிசி ஆலை என்பவற்றை நடத்திவரும் இவர் நேற்று இரவு 7 மணியளவில் தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடுநோக்கி சென்றபோது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமான மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மதியமளவில் வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்த முச்சக்கரவண்டியொன்றில் வவுனியாவை வந்தடைந்ததாக தெரியவருகின்றது. இந்த நிலையில் குறித்த வர்த்தகரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வவுனியா வர்த்தகர்…

    • 0 replies
    • 550 views
  6. ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்கு தலையிடியாக மாறியுள்ள இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்களை குழுவின் சிறப்புக் கூட்டம் ஜெனீவா இடம்பெறுகின்றது. இலங்கை தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் முக்கியத்துவம் உள்ளதாக ஜெனீவாவில் மாறியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதியில் இலங்கை உண்மையுடன் இருக்கிறதா? (Is Sri Lanka living up to its commitment to the UN Human Rights Council? ) என தலைப்பில் இன்று மதியம் 1மணிக்கு IV இலக்க அறையில…

    • 0 replies
    • 448 views
  7. கிளிநொச்சி – சுண்டிக்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இரகசிய பொலிஸாரிடம் இருந்து நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து 10 இராணுவச் சிப்பாய்கள், 40 பொலிஸார் உட்பட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இன்றுகாலை அங்கு குவிக்கப்பட்டனர். மக்கள் பயன்பாடு அற்ற அந்தக் காணியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை வேளையில் குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் இயந்திரம் மூலம் தோண…

    • 2 replies
    • 459 views
  8. திறைசேரியின் ஊடாக மாகாண சபைகளுக்கு நேரடியான நிதியை வழங்கும் வழங்கும் வகையில் 2015 இலக்கம் 16 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் எதிர்நோக்கும் மேலும் பல பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண நேற்று கூடிய அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/01/108587

    • 0 replies
    • 362 views
  9. இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம் இந்தோனேஷிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழ் அகதிகள் 44 பேர் பயணித்த அகதிகள் படகொன்று கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தின் கரையைத் தட்டியது. கடந்த பத்து நாட்களாக ஆச்சே பிராந்தியத்தின் வடபகுதியிலுள்ள கரையில் ஒதுங்கியுள்ள படகிலிருந…

  10. யாழ்.மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களை கவருவதற்கும் யாழ்.மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய விடயங்களை ஆராய்வதற்காக அமெரிக்க நாட்டின் குழு ஒன்று இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்திருப்பதுடன் காங்கேசன்துறை- நடேஷ்வரா கல்லூரிக்கும் விஐயம் செய்துள்ளது. மிலேனியம் சலஞ்சஸ் தொடர்பா ன மதிப்பீடு செய்வதற்கான குழுவே இன்றைய தினம் யாழ்.வந்திருந்தது. வடக்கிற்கு சென்ற அமெரிக்க பிரதிநிதிகள் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்வு இதன்போது மேற்படி குழு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபர் என்.வேதநாயகனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதுடன், காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரிக்கும் விஜய ம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளது. இதன்போது யாழ்.மாவ…

    • 0 replies
    • 434 views
  11. பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! : யாழ்.அரச அதிபர் பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக, யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் பிள்ளைகள் தெரி…

    • 4 replies
    • 371 views
  12. 'வெரிகுட்' சொன்னார் சம்பந்தன்; திகைத்தனர் எம்.பி.க்கள் அழகன் கனகராஜ் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (21) 'வெரிகுட்', 'வெரிகுட்' (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர். நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

  13. நால்வருக்கு மரணதண்டனை -எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் நபரொருவரின் தலையில் பொல்லால் தாக்கிக் கொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பேரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து, இன்று புதன்கிழமை (22) தீர்ப்பளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/175309/ந-ல-வர-க-க-மரணதண-டன-#sthash.og6N20Ss.dpuf

  14. புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் ம…

  15. 4600 இராணுவ சிப்பாய்கள் சட்டபூர்வமாக நீக்கம்.! இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 4 ஆயிரத்து 600 இராணுவ சிப்பாய்கள் பொது மன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 4229 இராணுவ சிப்பாய்களும் 206 கடற்படையினரும் 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலமானது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7752

  16. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது. நேற்றுமுன்தினமும், நேற்றும், அம்பாந்தோட்டைக்குச் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர், மத்தல விமான நிலையம், துறைமுகம், மாகம்ருகுணுபுர அனைத்துலக மாநாட்டு மண்டபம், ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அத்துடன், அம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளன. அம்பாந்தோட்டை முறை…

  17. “எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் ” சம்பிக்க அச்சுறுத்தியதாக தேரர் தெரிவிப்பு எமக்கெதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிக்கு ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக பௌத்தர்களின் குரல் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாலக தேரர், ஜாதிக ஹெல உறுமயவில் சம்பிக்க ரணவக்க, அத்துருலிய ரத்தன தேரர் என இரண்டு பிரதான பேய்கள் உள்ளன. அமைச்சர் சம்பிக்க அச்சுறுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன். அவருக்கு எதிரான ஆதாரங்களையும் வழங்கி சட்டநடவடிக்கை எடுப்பேன். இதனை ஒரு தேரர் என்ற வகையில் சமூக பொறுப்புடன் கூறுகின்றேன் என…

  18. வன்னியில் நடந்த போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரித்தானிய கார்டியன் பத்திரிகை உறுதி செய்து செய்திவெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வன்னி மண்ணில் வீசிய நாசகாரம் சாதாரணமானதன்று. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டிய இலங்கை அரசாங்கம் தமிழர்களின் தலையில் கொத்துக் குண்டுகளைக் கொட்டிக் கொலைப் பாவம் செய்தது எனில், வன்னியில் நடந்த போரின்தாக்கம் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லி யாரும் தெரிய வேண்டிய அவசியம் இருக்கமாட்டாது. இலங்கை பெளத்த நாடு என்று சொல்லிக்கொள்பவர்கள் தம்நாட்டு மக்களைக் கொல்வதற்குக் கொத்துக் குண்டுகளை வீசினர் எனில், தமிழ் இன அழிப்பின் வக்கிரம் எத்துணை தூரம் இருந்திருக்கும் என்ப…

    • 0 replies
    • 944 views
  19. இலங்கையில் போர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இராணுவ முகாம்கள் விலக்கிக்கொள்ளப்பட்ட இடங்களில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாது இராணுவம் இழுத்தடிப்புச் செய்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாந்துறை, மாவடிவேம்பு, ஈரளக்குளம் ஆகிய இடங்களிலேயே இந்நிலைதோன்றியுள்ளது. இந்த இடங்களிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டாலும் அங்கே மிதிவெடி எச்சரிக்கை அறிவிப்புக்கள் காணப்படுவதால் அக்காணிகளுக்கு போகமுடியாத நிலை உருவாகியுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகளை அகற்றி தம்மை விரைவாக மீளக் குடியமர்த்தவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணியில் இ…

    • 0 replies
    • 233 views
  20. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியில் இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழ் மக்களின் கொலைக்களங்களாகவே இருந்தன என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆட்களைப் பதிவுசெய்தல் திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதுவும் அறியாத மக்கள் இராணுவத்தினரின் பொறிக் கிடங்குக்குள் சிக்கவைக்கப்பட்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டார்கள் எனத் தெரிவித்த அவர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்த அரசாங்கம் அம்மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்…

    • 0 replies
    • 370 views
  21. வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி இனந் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு அச்ச நிலை:- வவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் செவ்வாய்க்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். முறைப்பாட்டையடுத்து, வெளிக்குளம் இராணி மில் ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டிற்கச் சென்ற பொலிசார் கடத்தப்பட்டவருடைய மோட்டார் சைக்கிள், அவர…

  22.  'தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்தவும்' “வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி கடற்றொழிலாளர்களினாலும் பாரிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்…

  23. பிரதியமைச்சருக்கும் எம்.பி.க்கும் இடையில் கும்மாங்குத்து துசணங்கள் பறந்தன தளபாடங்கள் நடுங்கின தடுத்தது சிவப்பு அழகன் கனகராஜ் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவகாரம், அவையில் நேற்றுச் சூடுபிடித்து அணைந்திருந்த நிலையில், பிரதியமைச்சருக்கும் அவ்வணியின் உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் நாடாளுமன்றுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கைகலப்பு விவகாரம் நாடாளுமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்ட இவ்விரு உறுப்பினர்களும் தூசணத்தை அள்ளிக் கொட்டி, அந்த இடத்தையே அதிரச்செய்து, அசிங்கப்படுத்தி விட்டனர…

  24. அவையில் 'ஹோ' கோஷம்; பிரதமருக்கு இருமல் அழகன் கனகராஜ் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள விவகாரம் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் அவ்வணியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று 'ஹோ, ஹோ' என்று கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைடைந்ததன் பின்னர், பிரச்சினையொன்றை முன்வைப்பதற்கு மட்டும், தினேஷ் குணவர்தன எம்.பி.க்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை எழுப்ப முடியுமே தவிர, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதனால் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு இடமளிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் திட்டவட்டமாக அறிவித்த…

  25. தமிழ் மொழியினால் சபையில் தடுமாற்றம் அழகன் கனகராஜ் சபையின் நேற்றையதின பிரதான நடவடிக்கைகள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சபையில் பல தடுமாற்றங்கள் நிலவியதை அவதானிக்க முடிந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர் பலரும் தடுமாறிப் பேசினர். அவைக்குத் தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபாநாயர் அறிவிப்பு முதல் அக்கிராசனத்திலிருந்து தான் எழுந்து செல்லும் வரையிலான சகல நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளையும் தமிழ் மொழியிலேயே வழங்கினார். இடையிடையே ஆங்கிலம், சிங்களம் கலந்த அறிவிப்புகளை விடுத்தார். இதன்போது உறுப்பினர்கள் சிலர் திகைத்து போயிருந்தனர். அவையில் நேற்று இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள், '…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.