Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இணையம் மூலம் பகிடிவதை முறைபாடுகளை தெரிவிக்கலாம் என உயர்கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இந்த ஏற்பாடானது மாணவர்களை ஒடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை என இலங்கை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பகிடிவதையானது முற்றாக நாட்டிலிருந்து அகற்றுவதற்காக இணையம் மூலமாக மாத்திரமின்றி விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் மிக நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் மாணவர் ஒடுக்குமுறையின் புதிய ஒரு ஆயுதமாக இப்பகிடிவதையை பயன்படுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கமானது தற்போது இந்…

    • 0 replies
    • 344 views
  2. மன்னார் மடு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பகுதி அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களே இவ்வாறு குடியமர்த்தப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு 80 பேர்ச்சஸ் வீதம் 300 குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்படவுள்ளன. மீளக்குடியமர்த்துவதற்காக தாம் வேறு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் பலவந்தமாக தம்மை குறித்த பிரதேசத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த மக்களுக்கு வழங்க வேறிடங்களில் காணி இல்ல…

    • 0 replies
    • 270 views
  3. அரச படையினராலும் கடந்த கால ஆட்சியாளர்களினாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை நல்லாட்சி அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது இனத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். எனினும், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம் தனது கடமைகளை புறந்தள்ளிவிட்டு, குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. …

    • 0 replies
    • 241 views
  4. தமிழ் மொழியினால் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேற்றைய தினம் தடுமாறிப் போயிருந்த நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தடுமாறிப் போயிருந்தனர். நேற்றைய தினம் சபைக்குத் தலைமை தாங்கியிருந்த பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தனது பெரும்பாலான அறிவிப்பு மற்றும் கட்டளைகளை தமிழ் மொழியிலேயே பிறப்பித்திருந்தார். அத்துடன், இடைக்கிடையே ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த அறிவிப்புகளையும் விடுத்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திகைத்து போயிருந்தனர். இந்நிலையில், சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல வினா விடைக்கான நேரம் ஆரம்பமானது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவை கேள்…

    • 0 replies
    • 424 views
  5. l அண்மைக்காலங்களில் கொழும்புடன் நட்புறவாக இருப்பதாக நோக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கத்தை அதிகளவுக்கு விமர்சித்து வருகின்றது. இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவுக்குப் பின்னர் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனத்தை எழுப்பியிருக்கிறார். கடந்த வார முற்பகுதியில் அமெரிக்காவில் இருந்த அவர் இலங்கையின் இன, மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் உள்ளூர் அரசியல் குழு மத்தியில் உரையாற்றுகையில், தமிழர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்த நன்நிலை உணர்வு இப்போது ஏமாற்றமாக திரும்பிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் படைகளிடமிருந்து தனியார் காணிகளை…

  6. திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். "மெகா பொலிஸ் " அபிவிருத்தி திட்டம் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை திட்டமிட்டு திருகோணமலைக்கு இடமாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்ப்பதாகும். அமெரிக்காவின் 7 ஆவது கடற்படையின் முகாமொன்று திருகோணமலை துறைமுகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகம் பூர…

  7. த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை சென்றுள்ளார். குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி நேரில் சென்றுள்ளார். முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திரு…

    • 21 replies
    • 2.7k views
  8. தமிழ் மக்களுக்கு எதிராக அல்லது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத எவ்வித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கேட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்நிலைத் தலைவர் போல் கொட்றி தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியிலுள்ள அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் நீண்ட நேரம் இரு தரப்பினரும் பேசியிருந்தனர். சந்திப்பின் முடிவில் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்ட…

    • 0 replies
    • 325 views
  9. விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியின் நடவடிக்கைக்கு சர்வதேச ஊடகவியலாளர் பேரவை எதிர்ப்பு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேராவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஊடகவயிலாளர் பேரவை கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்கள் விசேட அதிரடிப்படையினரின் சேவைகளை உதாசீனம் செய்வதாகவும் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் பிரதிக் காவல்துறை மா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார். சில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். http://globaltamilnew…

  10. கிளிநொச்சி சுண்டிக் குளத்தில் இடம்பெற்ற ஆயுத மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சியில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சுண்டிக் குளம் பகுதியில் ஆயுத மீட்பு பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டது . மக்கள் பயன்பாடு அற்ற குறித்த காணியில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய தர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அந்த இடத்தைத் தோண்டுவதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெற்று இன்று மாலை ஆறு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தோண்டும் பணி ஆயுதங்கள் எதுவும் கிடைக்காம…

  11. வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது: வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் காணிகள் கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் தற்போது நாட்டில் சட்டம் காணப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் வர்த்தக நோக்கங்களுக்காக கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், 300,000 அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் எந்தவொரு வெ…

  12. இலங்கை: போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பின்னரும் கண்ணிவெடி பீதியில் தமிழர்கள் இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகள், கண்னி வெடிகளை அகற்றி விரைவாக தங்களிடம் அதனை கையளிக்க வேண்டும் என அவர்கள் கோருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறை, மாவடிவேம்பு மற்றும் ஈரளக்குளம் உ…

  13. புதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறிதிகளில் இருந்து பின்வாங்க முடியாது பின்வாங்க விடவும் மாட்டோம்: எ.ஏ சுமந்திரன்:- புதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறிதிகளில் இருந்து பின்வாங்க முடியாது. பின்வாங்க விடவும் மாட்டோம் என, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தருமான எ.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். வானொலியின் வாராந்த விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தனது ஜெனிவா பயனமம், மற்றும் அமெரிக்க பயனம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133335/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 278 views
  14. அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தேவைக்கே பிவித்துர ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உதய கம்மன்பிலவை இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சம்பிக்க ரணவக்க என்று ஒரு அமைச்சர் இருக்கின்றார், அவர் உதய கம்மன்பில மீது குரோதமாக செயற்பாடுகளின்றார். 1997ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஓர் விடயத்தை கட்டியெழுப்பி மீளவும் சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பிக்க ரணவக்கவின் தேவைக்காகவேயாகும் என்று நாம் அறிகின்றோம். சம்பிக்க ரணவக்க இதற்கு நேரடிய…

    • 3 replies
    • 435 views
  15. வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஆவேசமாக பதிலளித்துள்ளார். கபினட் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார். இதன்போது வவுனியா பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்கப்படாமையால் திட்டத்தை மதவாச்சிக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையிடம் கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், இத்திட்டத்திற்கு பொருத்தமான காணிகள் எம்மால் வழங்கப்பட்டன. ஆனால் அக் காணிகள் தொடர்பில் ஏதோதோ காரணங்களைக் கூறி தட்…

    • 0 replies
    • 195 views
  16.  இறுதிப்போரில் கொத்தணி குண்டுகள்: பாதுகாப்பு அமைச்சு மறுப்பு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. வடக்கில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இங்கிலாந்தின் த கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும் கொத்தணி குண்டுகளை இலங்கை படையின் பயன்படுத்தவில்லை எனவும் குறித்த ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். - See more a…

    • 3 replies
    • 555 views
  17. 20-06-2016 - 15:36 கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வருடம் பெப்ரவரி மாதம், குறித்த பதினைந்து வயது சிறுமியை, இரவு முழுவதும் தன்னுடன் வைத்திருந்ததாக, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இதனை அடுத்து, இந்தப் பாலியல் பலாத்காரத்தில் (சிறுவர்கள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, வயத…

  18. மீண்டுமொருமுறை துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்டள்ளது. இது எத்தனையாவது முறையென்று நினைவில்லை, ஆனால் அரசியல் முக்கியம் கருதி மீளமீள, மினுமினுக்கித் திறக்கப்பட்ட ஏ9 சாலைக்கு அடுத்த நிலையில் இருப்பது இந்தத் துரையப்பா விளையாட்டரங்குதான். வடபுலத்தின் அறிவுசார் – பொருளியல்சார் – பண்பாடுசார் மையம் எதுவெனில், அது யாழ்ப்பாணம் என்றே அனைவரும் குறிப்பிடுவர். எனவே யாழ்ப்பாணத்தில் நடக்கும் மாற்றங்கள் வடக்கிற்குரியது. வடக்கில் நடக்கும் மாற்றங்கள் மொத்த ஈழத்தமிழர்களுக்குமுரியது என்ற பொதுப்புத்தி பலமாகவே உண்டென்பதையும் இவ்விடத்தில் நினைவிற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஈழத்தமிழரின் அடையாளமாகவிட்ட யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க மையங்களுக்கு குறுதி கொப்பளிக்கும், வரலாறு உண்டு…

    • 4 replies
    • 917 views
  19. பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து முழுமை யாக விலகிக்கொள்வதுடன் உயிர்பிரியும் வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவராக இருப்பேன் என்று அக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமுதாய ஈடேற்றம் பற்றி சிந்திக்காது பதவிகளையும், சலுகைகளையும் சௌகரியங்களையும் குறிவைத்து அரசியலில் ஈடுபடுகின்றனர். இதனால் எனது தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை காத்துக்கொள்ளும் வகையில் பிரதிநிதித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லையென்ற கடினமான முடிவுக்க வந்துள்ளேன். நாடாளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இன…

  20. எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, போர்க்குற்ற விசாரணைகளின் தாமதம் குறித்தும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், எதிர்வரும் 29ம் திகதி மனித உரிமைக…

  21. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காகச் சமர்ப்பித்த நுழைவிசைவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஏற்கனவே கடந்த ஆண்டு தனது புதல்விகளைப் பார்க்கச் செல்வதற்காக அமெரிக்க நுழைவிசைவு கோரியிருந்த போது, அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் நுழைவிசைவு வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. எனினும், சரத் பொன்சேகாவின் ஊடகச் செயலர் மகிந்த குமார, …

  22. செங்கோலுடன் ஓட்டம்... மத்திய மாகாண சபை அமர்வின்போது ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக மாகாணசபையின் உறுப்பினர் திரக் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் செங்கோலுடன் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து சபை அமர்வு 20 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/175237/ச-ங-க-ல-டன-ஓட-டம-#sthash.whMRLiSt.dpuf

  23. வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் இன்று வடக்கு மாகாண சபையை நடத்துவது ஐங்கரநேசனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் என்றால் அது முழுதான உண்மையாகிவிடாது. இந்த இருவரின் பின்னணியிலும் விடுதலைப் புலிகளின் அழிவுடன் நேரடித் தொடர்புடைய அவுஸ்திரேலிய வாசியான தமிழர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் என்பவர் செயற்படுகிறார். வட மாகாண சபையின் வெற்றுத் தீர்மானங்கள், சுன்னாகம் நீலத்தடி நீரில்பிரச்சனையில் தொடர்புடைய அழிவுகள் உட்பட நிர்வாகிகளை நியமிப்பதிலும் நிமலன் கார்த்திகேயனை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் அழிவுகளின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான…

  24. தேசிய அடையாள அட்டையில் இன ரீதியாக பாரபட்சம் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) தேசிய அடையாள அட்டையில் இன ரீதியாக பாரபட்சம் காணப்படுகின்றதென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள “X” என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட அட்டைகளுக்குப் பதிலாக அனைவருக்கும் ஒரே வகையிலான தேசிய அடையாள அட்டைகளே வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்பதிவு திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் உள்ள அனைவரும்…

  25. இலங்கையில் 16 இடங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை தமிழக வி.ஜி.பி தமிழ் ஒன்றியத்தின் நிறுவனர் வி.ஜி. பி.சந்தோசம் வழங்கியுள்ளார். இந்த சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159880&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.