ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை அரசு எமது உரிமைகளைத் தந்தால், சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங் லியாங்கிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது. இரண்டு நாடுகளுக்கிடையில் சரித்திர ரீதியாக நல்லுறவு பேணப்பட்டு வந்துள்ளது. இந்த உறவு தனித்து சில இனங்களுக்குள் இருக்காமல், முழு இலங்கையில் உள்ள அனைத்து இனங்களுக…
-
- 1 reply
- 269 views
-
-
வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது மாணவி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவியே தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற போதிலும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு வரை சிறுமி வீடு வந்து சேராமையினால் தாம் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுங்கேணி பொலி…
-
- 1 reply
- 340 views
-
-
இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்: மூவர் படுகாயம் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பஸ்வண்டியில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தாளங்குடா பகுதியில் இடம் பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் மீதே தாளங்குடா பிரதான வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் சேதமடைந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடி பொலிசார் விசாரண…
-
- 1 reply
- 312 views
-
-
இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் குறித்து ”கியூ” பிரிவு பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள இலங்கை புகலிட கோரிக்கையாளர் முகாம்களில் உள்ளவர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாகக்கூறி புதிய முகவர்கள் முகாம்களில் வலம் வருகின்றனர். அத்துடன், நள்ளிரவில் நாட்டுப்படகுகளில் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்று கச்சத்தீவில் இறக்கி விட்டு செல்வது வழக்கம். இவ்வாறு செல்கின்ற புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் இருந்தார்களா? என்பது குறித்து கடலோர மாவட்டங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கை வழியாக எளிதில் அவுஸ்திரேலியா சென்ற…
-
- 0 replies
- 339 views
-
-
100 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்பு பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். மூன்று பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட இந்த கொக்கெய்ன் 100 கிலோகிராம் நிறை கொண்டது என்றும் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174649/-க-ல-க-ர-ம-க-க-க-ய-ன-ம-ட-ப-#sthash.dZr72i0W.dpuf
-
- 13 replies
- 834 views
- 1 follower
-
-
போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகளால் முன்னாள் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர, ஈராக்கில் சதாம் உசைனை தூக்கு மேடைக்கு அனுப்பியது அவரால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு நீதிபதிகள் தான் என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேற்குலக சதியாளர்களும், இந்தியாவும் அவர்களது அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து நாட்டை பிளவடையச் செய்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது. இதுவே பிரதான இலக்காகும்.நல்லிணக்கம், சமாதானம் என்ற போர்வைய…
-
- 2 replies
- 358 views
-
-
"போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " எனும் சொல்லுக்காக வடமாகாண சபையில் நீண்ட விவாதம்.. வடமாகாண சபையின் 53 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , முதலமைச்சர் நிதி நியதி சட்டம் சபையின் அங்கீகாரத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நியதி சட்டம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று திருத்தங்களுடன் சபையில் எதிர்ப்பின்றி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறித்த நியதி சட்ட விவாதத்தின் போது "போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " என்னும் சொல்லுக்கு நீண்ட விவாதம் நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே.சிவாஜிலிங்கதின் கருத்து . …
-
- 3 replies
- 254 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. 2015ம் ஆண்டில் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கா…
-
- 2 replies
- 232 views
-
-
கஞ்சாவுடன் கைதானவர்களின் பிணை விண்ணப்பம் யாழ்.மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு! யாழ்ப்பாணம் இளவாலையில் வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம்திகதி 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த காலித்தீன் மொகமட் சப்ராத் மற்றும் சுபைர் முகமட் ரியாஸ்ஆகிய இருவருமே பெருமளவு கஞ்சாவை உடைமையில் வைத்திருந்ததாக பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் மல்லாகம்நீதவான் விடுத்த உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைபிணையில் செல்ல அனுமதிக்க வே…
-
- 0 replies
- 229 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை உறுதியளித்திருந்த போதிலும் அதனை நீக்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. எனினும், இச்சட்டத்தின் ஊடக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வரையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கிய உறுத…
-
- 0 replies
- 379 views
-
-
வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார். மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய காணியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் தோன்றியது. ஓமந…
-
- 2 replies
- 335 views
-
-
ஜெனிவா செல்லமுன் பாதுகாப்பு தரப்பை சந்திக்கவுள்ள மங்கள சர்வதேச தரப்பினால் இலங்கை இராணுவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இறுதி யுத்த காலகட்டத்தில் கடமையாற்றிய இராணுவ உயரதிகாரிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்…
-
- 2 replies
- 792 views
-
-
ஜனாதிபதி எந்தப்பக்கம் ? 30 ஆம் திகதி புரிந்துகொள்ளலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவரரா ? அல்லது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரா ? என்பதை பொது மக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி தெரிந்துக்கொள்வார்கள். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவி நீடிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி 24 ஆம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச கடன் 2014 ஆம் ஆண்டை விட 1010 வீததத்தால் அதிகரித்துள்ளது. முறையற்ற நிதி நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளிய மத்திய வங்கி ஆளுநரின் பதவியை நீடிக்க கூடாது எனவும் அவர் குறிப்ப…
-
- 1 reply
- 351 views
-
-
தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை வடக்கில் மீன்பிடிப்பதற்கு “தடையுத்தரவை” மீறி தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் வடமாகாண ஆளுனர் மற்று…
-
- 1 reply
- 257 views
-
-
சீன தூதுவர் - யாழ்.மாவட்டச் செயலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர் கேட்டறிந்தார். அபிவிருத்தித் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு உத…
-
- 2 replies
- 487 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (12.06.2016) தினம் யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். இவருக்கும் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர்தான் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் யு…
-
- 2 replies
- 552 views
-
-
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர்நிதிய நியதிச்சட்டம் இன்று வடமாகாணசபையின் 54ம் அமர்வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு சபை அங்கீகாரத்துடன் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்திருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நியதிச்சட்டத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட வடமாகாணசபை கடந்த 53ம் அமர்வில் மேற்படி நியதிச்சட்டத்திற்கான 1ம் வாசிப்பை செய்திருந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம்நடைபெற்றிருந்த 54ம் அமர்வில் குறித்த நியதிச்சட்டத்திற்கா…
-
- 1 reply
- 392 views
-
-
காங்கேசன்துறை-கீரிமலை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கோரும் பிரேரணை வடமாகாணசபையில் இன்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மாகாணசபையின் 54ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி சொகுசுமாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு கோரும் பிரேரணையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்தார். குறித்த பிரேரணையினை சபையில்முன்மொழிந்து அவர் உரையாற்றுகையில் மாகாணசபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிடங்கள் இ ல்லை. இந்நி…
-
- 1 reply
- 206 views
-
-
தமிழ் பிரதிநிதிகளின் உரைகளை சிங்கள உறுப்பினர்கள் செவிமடுப்பதில்லை -அமைச்சர் மனோ ஆதங்கம் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்பதைவிடவும் இலங்கையர் எனக் கூறும்பொழுது பெருமையடையக்கூடிய நிலையை நாட்டில் உருவாக்க வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், தமிழர், சிங்களவர் அல்லது இஸ்லாமியர் என்றால் உடனே பெருமையடையும் நாம் இலங்கையர் எனக்கூறும்போது சிறிது தயக்கத்துடனேயே அது தொடர்பில் சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டார். கட்சி, மத, இன பேதங்களை மறந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில்…
-
- 0 replies
- 424 views
-
-
இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள். இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்தார். இவர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரே, நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. புனர்வாழ்வு அளி…
-
- 1 reply
- 987 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதியைத் திரட்டும் நோக்குடன் திட்டமிடப்பட்ட டோக்கியோ மாநாடும் கைவிடப்பட்டுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிக் கொ…
-
- 1 reply
- 263 views
-
-
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு தனது 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 11 பிரதிநிதிகளுடன் விசேட விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7555
-
- 1 reply
- 397 views
-
-
நாட்டை காட்டி கொடுக்கவில்லை (ப.பன்னீர்செல்வம்) நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டை காட்டிக் கொடுப்பதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். உலகில் எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் எம் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். " இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் " எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உ…
-
- 0 replies
- 283 views
-
-
பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலம் இன்னும் 1 மாதம் மட்டுமே இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜூலை மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல பரணகம தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு அரசாங்கம் புதிய வழிமுறையை உருவாக்க தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தவு…
-
- 0 replies
- 222 views
-
-
'பியர் குடிக்கும் காசு' : கன்சாட்சிலிருந்து நீக்கம் -எம்.றொசாந்த் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் சபையில் கூறப்பட்ட 'பியர் குடிக்கும் காசு' என்னும் விடயம் கன்சாட்டில் பதிவு செய்யப்படாமல் நீக்கப்பட்டது. வடமாகாண சபை இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் இடையில் விவாதம் நடைபெற்றது. “முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை என்ன தேவைக்கு தான் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி பெறப்படுகின்றதோ அந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும். வேற…
-
- 0 replies
- 328 views
-