Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குண்டுத் துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கும் யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். உடலில் குண்டுத்துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்தோடு குண்டுதுகள்களுடன் வாழும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த பிரதமர் உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை தன்னிடத்தில் கையளிக்குமாறு கோரியதோடு உடன் மருத்துவ தேவைகள் காணப்படின் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்தாலோசித்து உதவிகளைப் …

  2. பாடசாலை சீருடையுடன் மாணவி ஒருவர் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த மாணவி கடலுக்குள் பாய்வதை அவதானித்த பிரதேவசாசிகள், திக்வெல்ல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து மாணவியை காப்பாற்றியுள்ளனர். குறித்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய தனது நண்பி ஒருவரின் தொலைபேசி ஊடாக இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் ஏறபட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபர் தன்னுடன் கதைக்காமையினால் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி கல்வி பயில்வத…

  3. நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு வாகனங்கள் : விலைப் பட்டியலை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தருணத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக 30 அமைச்சர்களுக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா கோரி, நேற்று பாராளுமன்றத்தில் குறை நிரப்பு மதிப்பீட்டு செலவு தொகை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம் 30 அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வெளியிடப்படுள்ளது. பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே - ரூபாய் 7 கோடி. உள்நாட்டு அலுவ…

  4. எதிர்பாராத விதமாக பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, வடக்கு மக்களுக்கு பாதுகாப்பதற்காகவே அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் உள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இராணுவ பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”முப்படையினர், அதிரடிப்படையினர், பொலிஸார் அனைவரும், ஜாதி, மதம், குலம், பேதம் என …

  5. முகாமை ஏன் சாலாவில் அமைத்தோம்? : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்: வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் : கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் களஞ்சியப்படுத்தும் பாதுகாப்பான இடமாக சாலாவ பகுதி காணப்பட்டது. யுத்த காலத்தில் இந்த இடத்தில் முகாமை அமைப்பதற்கு ஏதுவான சகல காரணிகளும் சிறப்பாக காணப்பட்டமையாலே இங்கு முகாமை அமைத்தோம். எனினும் இவ்வாறான ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு இராணுவத்தினரில் பக்கத்தில் சிறு தவறு காணப்படலாம். இதுதொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என என்று இராணுவ பேச்சாளர…

  6. காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளும் என தான் எதிர்பார்க்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கொழும்பில் இன்று நண்பல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோது இவ்வாறு கூறினார். கடும் யுத்தம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவில் தவறு இழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் இலங்கை பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்…

  7. கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிற்கு முன்னால் அப்பகுதி மக்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுத களஞ்சிசாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, தமது வீடுகளிலுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கு முன்னர் முகாமிற்கு முன்னால் உள்ள வீதியை திறந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியை திறந்தமையால் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக இவர்கள் தெரிவித்தனர். சுமார் 300 பேர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் வீதியில் எரிந்த மரங்கள், பொருட்களை இட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http…

  8. யாழ்.பல்கலை.வளாகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயச் சூழல் பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக வளந்து நீண்ட காலமாக ஒரு சோலையாக காட்சியளித்தது. வாழ்நாள் பேரசிரியர் சி.க.சிற்றம்பலம் இந்த மரங்களை எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையான செயற்பாட்டில் மின்சார வாளைப் பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. இச் செயற்பாடு கடந்த மூன்று நாட்களாக இடம்பெறுகிறது. இந்த வளம் அழிப்பை நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இயற்கை வளங்களை பேணாமல் அழிக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தராதரம்பார்க்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள்பாதுகாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாம…

  9. இயற்கையின் தீர்ப்புக்கு யார் அஞ்சுகிறானோ அவனே மனிதனாக வாழ முடியும். இதைவிடுத்து எல்லாம் என்னால் முடியும்; நான் நினைத்தால் அது நடக்கும் என்ற நினைப்பு மமதையின் பாற்பட்டதாகும். இது அழிவைத் தரும்.இயற்கை என்பதை இறைவன், கடவுள், தெய்வம் என்றெல்லாம் கூறிக் கொள்ளலாம். இயற்கையின் படைப்பு; அவற்றின் அமைப்புகள் மிகவும் அதிசயமானவை. கூடவே பிறப்பு இறப்பு என்ற ஒழுங்குமுறைகள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது எங்களையும் கடந்த-இந்த உலகுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நிச்சயம் அவசியமானதாகும். எனினும் இறைவன் என்பது பற்றிய சிந்தனைகள் இல்லாமல் அட்டூழியங்களும் அநியாயங்களும் தலைவிரித்தாடுகின்…

  10. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அனுமதியின்றி அழைத்துச் சென்ற பொலிஸார் 'யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஊழியர், வைத்தியசாலையின் அனுமதியுமின்றி பொலிஸாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என' யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் இயங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளரின் தாக்குதலுக்குள்ளான ஊழியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். தாக்குதலை மேற்கொண்ட உரிமையாளரை கைது செய்யும்படி செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்வதற்காக பொலிஸார் தாக்குதலுக்க…

  11. அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் வாகனங்கள் தேவையா ? ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மழுப்பல் பிரதியமைச்சருக்கு 2 கோடி ரூபா, அமைச்சருக்கு 3 கோடி ரூபா என 118 கோடி ரூபா செலவில் வாகனம் கொள்வனவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. நாட்டி கடன் சுமை அதிகரித்துள்ளது. வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம், வாகனமொன்றுக்கு பல கோடி ரூபாவை செலவழிக்க வேண்டுமா? என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் முறையான பதிலை முன்வைக்கவில்லை. எனினும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து வாகனம் கொள்வனவு தொடர்பில் பல கேள்விகளை எழுப்பினர். …

  12. காதலிக்க மறுத்த யுவதியின் வீட்டுக்குள் பெற்றோல் கலனுடன் அத்துமீறி நுழைந்து அவரை எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலிப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்தப் பரபரப்புச் சம்பவம் இடம்பெற்றது. அச்சுவேலியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை பலமுறை வெளிப்படுத்திய போதும் அதனை ஏற்க யுவதி மறுத்துவந்துள்ளார். இளைஞனின் தொந்தரவு தாங்கமுடியாத அந்த யுவதி அவர் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பலமுறை முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் பெற்றோல் கலன், மிளகாய்த் தூள் மற்றும் கையுறைகளுடன் யு…

    • 3 replies
    • 339 views
  13. ஒலிவாங்கி கட்டமைப்பில் கோளாறு : ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு.! சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு கூடிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் ஒலிவாங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த விவாதம் நாளை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று இடம்பெறுவதாக இருந்தது. http://www.virakesari.lk/article/7322

  14. 158 கிலோகிராம் கஞ்சா சிக்கியது -செல்வநாயகம் கபிலன் காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல் ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது பொதிகளுக்குள் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. இந்தியா…

  15. சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 சதவீதத்தால் அதிகரிப்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருட மே மாதத்தில் 113,529 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்த நிலையில், இவ்வருடம் 10 சதவீதம் அதிகரித்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125044 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கடந்த 5 மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 846,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 714,584 ஆக காணப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியு…

  16. மத்திய அரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பகிர்வில் தமிழ் - சிங்கள பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 16 வைத்தியசாலைகள் அபிவிருத்திக்காக 10 ஆயிரத்து 633 மில்லியன் நிதி மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந் நிதி மூலம் முஸ்லிம் பிரதேசம் -12 , தமிழ் பிரதேசம் - 02 .சிங்கள பிரதேசம் - 02 என வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 4 வைத்திய சாலைகள…

  17. பெக்கோ வாகனங்கள் கைப்பற்றப்பட்டன -செல்வநாயகம் கபிலன் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு, மற்றும் வளலாய் பகுதிகளில் சட்டத்துக்கு முரணான வகையில் கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பெக்கோ வாகனங்களை, இன்று புதன்கிழமை (08) கைபற்றிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார். கனிய வளங்கள், மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியைப் பெறாது சட்டத்துக்கு முரணான வகையிலும், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் மேற்படி வாகன உரிமையாளர்கள் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஐந்து பெக்கோ (ஜே.சி.…

  18. வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள் நாட்டப்பட்டு செயற்கை காடுகளையும் உருவாக்கினார்கள். அத்தோடு பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உருவாக்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டில் இருந்த போது காடுகள் அழிந்து விடாமல் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவு காட்டு மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் உருவாக்கிய தேக்கு மரக்…

    • 0 replies
    • 511 views
  19. கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டாலும் எஞ்சியுள்ளவை முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார். காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் சரியான ஒரு தீரவை வழங்கவேண்டுமெனவும் தெரிவித்த சம்பந்தன் ஆட்சி மாற்றத்தினால் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள…

  20. ‘மிதவாத நோக்குடன் செயற்பட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை வெற்றி கொள்ள முடிந்தது என்று சரித்திரமே இல்லை. பண்டாரநாயக்கா – செல்வா உடன்பாடு, டட்லி சேனாநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு போன்றவை இரு தரப்பு மிதவாதப் போக்குடன் தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் அவை ஈற்றில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டன. ஆனால் தீவிரவாதிகள் எனக் கருதப்படும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது பலதையுந் தருவதாகக் கூறினார்கள். இளைஞர்கள் ஏற்பதாகக் கூறியிருந்தால் அதைத் தந்துமிருப்பார்கள். ஆனால் ஆயுதங்கள் மௌனித்த நிலையில் அவற்றைத் தர மறுக்கின்றார்கள்.’ என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண செய்தியாளர் ஒருவருக்கு முதல்வர் அவர்கள் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேலும…

  21. கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக பதவி வகித்த நீல் ரொசய்ரோ திடீரென்று அங்கிருந்து இடமாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கடற்படை தளபதியாக கடற்படையிலிருந்து தானாகவே வெளியேறிய ரியட் அட்மிரல் சின்னய்யா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். குறித்த புதிய கடற்படை தளபதி 2011ம் ஆண்டு கடற்படையிலிருந்து விலகி அமெரிக்க தூதுவராலயத்தில் பாதுகாப்பு பிரிவில் 4 வருடங்களாக கடமையாற்றி வந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய அரசாங்கத்தினால் அவருக்கு ரியட் அட்மிரல் என்ற பதவி உயர்வுடன் 2015ம் ஆண்டின் கடற் படையில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதாக விமல் சுட்டிக்காட்டியுள்ளார். இதிலிருந்து புலப்படுவது அமெரிக்க கடற்படையினரின் உள்நோக்கமானது திர…

  22. முக்கொம்பன் கிராம வீதி திருத்தப்படுகின்றது -நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி, பூநகரி முக்கொம்பன் கிராம வீதியானது, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் 4.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. முக்கொம்பன் பாடசாலையிலிருந்து அக்கராயன் பக்கமாக 630 மீற்றர் நீளமான வீதி இவ்வாறு புனரமைக்கப்பட்டு வருகின்றது. முக்கொம்பன் பாடசாலையை முதன்மைப்படுத்தி இவ்வீதி புனரமைப்பு நடைபெறுகின்றது. 500 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் அக்கராயன் மருத்துவமனைக்கு குன்றும் குழியுமான வீதி வழியாக ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை இக்கிராம மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 630 மீற்றர் வீ…

  23. சாலாவ இராணுவ முகாமில் புகை : கொழும்பு- அவிசாவளை வீதி பூட்டு கொழும்பு - அவிசாவளை வீதி, சாலாவ பிரதேசத்துக்கு அருகில் இன்று காலை 10 மணிமுதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலாவ இராணுவ முகாமுக்கு உள்ளே புகை எழுந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த வீதி மூடப்பட்டுள்ளது. மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174207/ச-ல-வ-இர-ண-வ-ம-க-ம-ல-ப-க-க-ழ-ம-ப-அவ-ச-வள-வ-த-ப-ட-ட-#sthash.XJsi7hNQ.dpuf

  24.  சாலாவ முகாம் வெடிப்புகள் இன்னும் நீடிக்கும் அழகன் கனகராஜ் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் உள்ள களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தை இராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு அவ்வப்போது வெடிப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலைமையானது இன்னும சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ தொடர்பில், நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  25. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதிக்கப்பட உள்ளது. இன்றைய தினம் முற்பகல் 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நடத்தப்பட உள்ளது. பிழையான வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்தமை, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்பட உள்ளது. மாலை 6.30 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வோம் என்று பிரேரணையை சமர்ப்பித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை…

    • 0 replies
    • 315 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.