ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
தனி ராஜ்ஜியத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அரசிடம் இல்லை (க.கமலநாதன்) தனி ராஜ்ஜியம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படாதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரவித்தார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். குறிப்பாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் மட்டும் வாழவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை அரசாங்கம் சரிவர செய்யும். அதற்கான நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நல்லிணக்கம் என்ற பேரில் தனி ராஜ்ஜியம் ஒன்றை கொடுத்து நாட்டை பிளவுப…
-
- 1 reply
- 272 views
-
-
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார். கல்வி பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 496 views
-
-
திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் : எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் : காரின் மீது ஏறிய அமைச்சர்.! (படங்கள்) உள்துறை வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தை திறப்பதற்கு சென்றிருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, அமைச்சர் பல்கலைக்கழக நுளைவாயிலிலேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பின்னர், அவர் சுமார் 2 மணிநேரம் காரின் மீது ஏறி மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார். இதன்போது, கலாசார நிலையத்தை திறப்பதைவிட தமக்கு பல பிரச்சினைகள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சகலர…
-
- 0 replies
- 325 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில், நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு அதற்கான உரிய தீர்வும் எட்டப்பட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பான பேச்சுக்கள் முடிந்த பின்னர், நிகழ்ச்சி நிரலில் காணப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திடீரென குரல் கொடுத்த மஸ்தான் எம்.பி, 'காணிப் பிரச்சினைக்கு என்ன நடந்தது?' என வினவினா…
-
- 3 replies
- 492 views
-
-
தேசிய மட்டத்தில் விருது வென்றுள்ள மலையக மாணவனின் பக்கம் தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இலங்கையின் மலையகத்தின், நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் என்ற மாணவனே தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் விருது வென்றுள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலயமட்டம், மாகாண மட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாட ஆசிரியர…
-
- 4 replies
- 462 views
-
-
மக்களின் மனம் அறியாது உறுப்பினர்கள் செயற்படுகின்றார்கள். - சி.வி.குற்றச்சாட்டு வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் புது வசந்தம் தையல் நிலைய திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை கால…
-
- 0 replies
- 378 views
-
-
இன்று முற்பகல்பதினோரு மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் சிவில்உடையில் வந்த இனந்தெரியாதவர்கள் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் உள்ள தையலகம் ஒன்றில் நுழைந்துள்ளனர். உள்நுழைந்தவர்கள் தாம் பொலிசார் என கூறியவாறு கடையை சல்லடைபோட்டதாகவும் கடை உரிமையாளரின் கைத்தொலைபேசி ஆள் அடையாள அட்டை என்பவற்றைஅவர்கள் பறித்து வைத்தவாறு தம்முடன் வந்த ஒருவரை கடையில்பாதுகாப்பிற்காக விட்டு சென்றுள்ளனர். மீண்டும் மூன்று மணியளவில்குறித்த கடைக்கு வந்த அவர்கள் விசாரணைக்காக நீங்கள் வர வேண்டுமெனஅழைத்துள்ளபோது, அவரது மனைவி மற்றும் கடை ஊழியர்கள் நீங்கள் யார்? உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உங்கள் தொழில் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் அவ்வாறு காட்…
-
- 1 reply
- 441 views
-
-
ஏற்கனவே பல பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து கடன்பெற்ற சிறிலங்கா கடந்த மாதம் அனைத்துலக நாணய நிதியத்திடம் 1.5 பில்லியன் டொலர் நிதி தருமாறு உதவி கோரியது. சிறிலங்காவின் இந்த நிலைப்பாடானது கடந்த ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைப்பார் என நம்புபவர்களுக்கான ஒரு உண்மையான சோதனைக் களமாகக் காணப்படுகிறது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது தற்போது 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் 577 மில்லியன் டொலர் கடன் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மற்றும் அந்நியச்செலாவணி போன்றன வீழ்ச்சியடைந்த அதேவ…
-
- 0 replies
- 311 views
-
-
தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பலவழிகளிலும் முயற்சித்துவரும் நிலையில், அதைக் குழப்பியடிப்பதற்கு சிலர் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். "சிறப்பானதொரு வெளிவிவகாரக் கொள்கையை பேணுவதே அரசின் நோக்கமாகும். ஆனால், தமிழ் நாட்டு முதல்வர் இறுக்கமான போக்கையே கடைபிடிக்கின்றார். இலங்கைத் தமிழர்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பது அவருக்குத் தெரியாது. இன்னும் இனவாத அரசியல்தான் செய்கின்றனர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் தலைவர் இருக்கையில், அதன் உறுப்பினரான வடக்கு மாகாண முதலமைச்சரை தமிழக முதல்வர் ஏன் ச…
-
- 1 reply
- 464 views
-
-
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 11 மாத காலத்தில் பிரத்தியேக தேவைகளுக்காக 14.5 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கடனட்டையை பயன்படுத்தி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை அவர் இவ்வாறு செலவிட்டுள்ளதாக முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு இவ்வாறான ஒருவரை நியமிப்பீர்களா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த 11 மாதகாலப்பகுதியில் பொழுதுபோக்கிற்காக அர்ஜுன மகேந்திரன் செலவிட்டதாக கூறப்படும் ஹோட்டல் பற்றுச்சீட்டுக்களை அவர் காண்பித்துள்ளார். நாளொன்றுக்கு உணவிற்காக 10 ஆயிரம் ரூபாவையும…
-
- 0 replies
- 182 views
-
-
புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகவும் இதனால் தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.2015ம் ஆண்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு செயற்பட்டு வருவதாகவும் இதனால் தடையை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழாகளைப் பயன்படுத்தி வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்ட நி…
-
- 1 reply
- 338 views
-
-
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்க…
-
- 0 replies
- 398 views
-
-
நடேஸ்வரா கல்லூரியின் மூன்று கட்டடங்கள் இல்லை -சொர்ணகுமார் சொரூபன் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி தற்போது கற்றல் செயற்பாட்டுக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில், கல்லூரியின் மூன்று கட்டங்கள் முற்றாக இடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் கனிஸ்ட வித்தியாலயம் 26 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் வியாழக்கிழமை (02) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியினை தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான மாவை.சேனாதிராசா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். குறித்த இரு பாடசாலைகளும் எதிரெதிரே அமையப்பெற்றுள்ளது. இதில் நடேஸ்வரா…
-
- 3 replies
- 535 views
-
-
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இரு பாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் இந்தக் குற்றத்திற்கு பொலிஸார் தண்டப்பணம் அறவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, இவ்வாறான குற்றங்கள் நீதிமன்றத்திற்கே அனுப்பப்படும் எனவும் பொலிஸார் அறிவித…
-
- 3 replies
- 612 views
-
-
ஐ.நா மனித உரிமைகளை் ஆணையாளரை சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் [ Friday,3 June 2016, 02:52:33 ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 29 ஆவது அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக .நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் எதிர்வரும் 29 ஆம் திகதி வாய் மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார் இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா தொடர்பான வாய் மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சமர்ப்…
-
- 1 reply
- 491 views
-
-
கடற்படைமுகாமில் விருந்து ; உணவு பிரமாதமென பாராட்டிய கிழக்கு முதலமைச்சர் முப்படை முகாம்களுக்கு செல்ல விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதன் முறையாக திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கடற்படையினர் வழங்கிய உணவை பிரமாதமென பாராட்டியுள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய பொருளாதார வளங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டமொன்றின் போதே கிழக்கு முதலமைச்சர் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றுள்ளார். அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்…
-
- 1 reply
- 252 views
-
-
கிளிநொச்சியில் நடமாடும் கசிப்பு வியாபாரிகள் அதிகரிப்பு கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நடமாடும் கசிப்பு வியாபாரிகள் அதிகரித்துள்ளதாக பரவலாக பொது மக்களால் கவலை தெரிவித்துவந்த நிலையில் அது உண்மை என்பது எமது ஊடகவியலாளரின் கமராவில் பதிவான காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. 02-06-2016 வியாழக்கிழமை மாலை ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி பொதுசந்தைக்கு அருகில் உள்ள வீதியில் சந்தேகத்தற்கு இடமான முறையில் துவிச்கக்கர வண்டியில் சிறிய காட்போட் பெட்டி ஒன்றை கட்டியவாறு அங்கும் இங்கும் பயணித்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட அவரை தொடர்ந்தும் ஊடகவியலாளர் அவதானிக்க தொடங்கியுள்ளார். இதன் போது குறித்த வீதியால் நடந்து வந்த இருவர் குறித்…
-
- 1 reply
- 409 views
-
-
சிங்கள மக்களின் மனதை வென்றெடுக்காமல் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு இல்லை - இலங்கை அமைச்சரின் சிறப்பு பேட்டி இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மனதில் போரின் சுவடு இருக்கும். வெள்ளை வேன், மோசமானப் படுகொலைகள், காணாமல் போகச் செய்தல் என பல இன்னல்களை, கடந்த ராஜபக்சே ஆட்சியில் தமிழ் மக்கள் சந்தித்துவிட்டனர். அங்கு மைத்ரிபால சிறீசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஓராண்டாக ஆகிவிட்டது. இப்போது எப்படி இருக்கிறது தமிழ் மக்களின் நிலைமை...? இலங்கையின் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை கொழும்பில் நேரில் சந்தித்து உரையாடினோம்... போருக்கு பிந்தைய சூழல் எப்படி இருக்கிறது...? நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கடந்த காலத்துடன் ஒப்பி…
-
- 1 reply
- 318 views
-
-
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம் -சொர்ணகுமார் சொரூபன் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது, யாழ். மாவட்டத்தினை இராணுவத்தினர் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி இடம்பெயர்ந்தனர். இதன் பின்னர், கடந்த 26 வருடங்களாக குறித்த பாடசலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தெல்லிப்பழை ஸ்ரீ சாயிதுர்க்கை அம்மன் ஆலயத்த…
-
- 8 replies
- 762 views
-
-
'எந்தவித தலையீட்டிற்கும் கீழ்படிய வேண்டாம்' மேல் மாகணத்தில் எந்தவொரு இடத்திலும் காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லையென அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிரான எந்தவித தலையீட்டிற்கும் கீழ்படிய வேண்டாமென உத்தியோகத்தர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இது தொடர்பாக நேரடித் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்கள் சார்பில் தான் தெரிபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஏதேனும் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தயக்கமின்றித் தனக்கு அறியத்தருமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு முன்னர் மாகாணத்தில் காணிகளை நிரப்பு…
-
- 0 replies
- 279 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்புக்கிருந்த ஏனைய படையினரும் நீக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் 50பேரையும், இரண்டு கட்டங்களாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை (03) 25பேரும் நாளை சனிக்கிழமையன்று (04) 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர். ஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு …
-
- 0 replies
- 306 views
-
-
படை முகாம்களுக்குள் பிரவேசிக்க முடியாது என தடை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு: படை முகாம்களுக்குள் பிரவேசிக்க முடியாது என தடை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் அனுமதியின்றி வேறும் எந்தவொரு நபருக்கும் இவ்வாறான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சம்பூர் மஹா வித்தியாலத்தில் வைத்து உயர் கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் அமைச்சர்கள் சிலர் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இதன் போதே பிரதமர் இந்தக் கருத்…
-
- 0 replies
- 160 views
-
-
2017ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் 24 நாட்கள் சிவப்பு 2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதன்கிழமை (01) வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர். ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில…
-
- 0 replies
- 446 views
-
-
சுவிஸ்குமாரின் தாயாருக்கு விளக்கமறியல் புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டியவர்களுக்களான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மாறுமொரு உறவினர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவு இட்டுள்ளார். கடந்த மாதம் 4 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதிவான் அறிவுறுத்தி இருந்தார…
-
- 0 replies
- 236 views
-
-
அனுமதி வழங்கப்பட்டும் வீதிமறியல் அகற்றப்படவில்லை - 39 -சொர்ணகுமார் சொரூபன் சுதந்திரமான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாத நிலையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி கல்வி செயற்பாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்று 26 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் கல்வி செயற்பாட்டை தொடர்வதற்கு ஜனாதிபதியால் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி கல்லூரி அதிபர்களிடம் ஒப்படைக்கபட்டன. இந்நிலையில், யுத்தத்தால் பாதிப்படைந்த கட்டடத்தொகுதியில் எஞ்சியதை விட மீதி கட்டடம் திருத்தப்பட்டு இன்றைய தினம் இப்பாடசாலைகள் தனது கல்விச்செயற்பாட்டை 150 மாணவர்க…
-
- 0 replies
- 231 views
-