ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் சபையின் ’31 வழக்குகளுக்கு ரூ.36 மில். செலவு’ - அழகன் கனகராஜ் இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புடையதான, கடந்த 3 ஆண்டுகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபாய் (36,313,023) செலவிடப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புடையதாக 2013ஆம் ஆண்டு 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றுக்கு 21 மில்லியன் ரூபா…
-
- 0 replies
- 208 views
-
-
நிவாரணங்களுடன் இரு இந்திய கப்பல்கள் வந்தன: விமானமும் வரும் இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றின் மூலம், நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஐ.என்.எஸ் சுட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனைய்னா ஆகிய இரு கப்பல்களும் தற்போது, இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த சி - 17 என்ற விமானம், இன்று மாலை, இலங்கை வந்தடையும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. - See more at: http://www.tamilmirror.lk/172676/%E0%AE%A8-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99-…
-
- 4 replies
- 516 views
-
-
மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம் மருதமுனை மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் பிழையான வதந்திகளைப் பரப்பி ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற் கும் இடையில் பிளவை எற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் அடிப்படையில் மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்ததாக ஆதாரமற்ற செய்திகள் சில பேஸ்புக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மட்டுப்படுத்த…
-
- 30 replies
- 1.5k views
-
-
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம், இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதுடன் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் அந்நபரையும் கைதுசெய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/172690/%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.mMqy1piG.dpuf
-
- 0 replies
- 371 views
-
-
குளங்களின் நீர் பற்றாக் குறை தொடர்பாக ஆராயப்படுகின்றது 'குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள் புனரமைப்புச் செய்யப்படும். அப்போது நீங்களும் இரணைமடுக்குளத்தின் கீழ் விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு ஒப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஸ்கந்த…
-
- 0 replies
- 322 views
-
-
மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார். இந்நிலையில், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, …
-
- 1 reply
- 371 views
-
-
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் 20 நாட்களாகியும் வீடு சேரவில்லை திருகோணமலை மாவட்டம் திருக்கடலூர் மற்றும் பள்ளத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் இன்றுடன் 20 நாட்களாகியும் தமது வீடுகளுக்கு வந்து சேரவில்லை. இவர்கள் கடலுக்குச் சென்ற படகினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்களின் தகவல் தெரியாத நிலையில் பெற்றோர் தேடி வருகின்றனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் மோகனதாஸ் சஜந்தன் (வயது- 24) திருக்கடலூர் பத்திரகாளி அம்பாள் மீனவர் சங்க அங்கத்தவர், மற்றையவர் உலகநாதன் குமரேஸ் (வயது- 23) பள்ளத்தோட்டம் பாலமுருகன் மீனவர் சங்க அங்கத்தவர். சம்பவம் தொடர்பாக காணாமல் போன மோகனதாஸ் சஜந்தனுடை…
-
- 1 reply
- 276 views
-
-
அரநாயக்க, புளத்கொஹுபிட்டியில் 28 பேரின் சடலங்கள் மீட்பு 150 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை - அனர்த்தங்களில் 4 இலட்சம் பேர் பாதிப்பு (ரொபட் அன்டனி எம்.எம். மின்ஹாஜ்) கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற் றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேசங்க ளில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களில் 28 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன 150 க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுவருகின்றன. அரநாயக்க பகுதியில் 17 பேரின் சடலங்களும் புளத்கொஹுபிட்டிய கிராமத்தில் 14 பேரின் சட …
-
- 2 replies
- 286 views
-
-
'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?' அழகன் கனகராஜ் பொலிஸாரின் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடாநாட்டின் குற்றச்செயல்கள் அதிகரித்து இருப்பதன் பின்னணி என்ன என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். இவ்வாறு, குடாநாட்டைப் பதற்றமான நிலையில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வினவினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே…
-
- 4 replies
- 699 views
-
-
நீடிக்கும் இயற்கைப் பேரவலம் : பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், 132 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1 இலட்சத்து 3 ஆயிரத்து 776 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 25 ஆயிரத்து 601 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மண்சரிவு , வெள்ளபெருக்கு மற்றும் காற்றினால் 354 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 326 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6643
-
- 0 replies
- 267 views
-
-
இளைஞர்களை காதல் வலையில் சிக்கவைத்து மோசடி செய்த யுவதி - காதலனால் அழைத்துச் செல்லப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் 2016-05-20 10:24:05 (பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் பலரையும் ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் தேடப்பட்ட யுவதி சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இவர் சொந்த முகவரியற்ற நிலையில் இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி பல இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை மோசடி செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதனால் குறித்த பெண்ணினால் பாதி…
-
- 0 replies
- 318 views
-
-
வெள்ள நீர் வடிந்தோட சில நாட்களாகும் களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிந்தோட, சில நாட்களெடுக்கும் என்று தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்பில் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. களனி ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகவே தான், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ, மலைநாட்டில் பெய்யும் மழைவீழ்ச்சியே காரணமாக அமையும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளப் பிரிவின் பணிப்பாளர் பிரேமா ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இதேவேளை, களனி கங்கையின் நீர்மட்டம், மேலும் 1 அடியேனும் அதிகரிக்கப்படுமாயின…
-
- 0 replies
- 406 views
-
-
யாழில் மூன்று சந்தேகநபர்கள் கைது பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை யாழ். சிறுகுற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்தியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரைனட் 01 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் 2 உட்பட பல பொருட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. அரியாலையில் வெற்றுக் காணி ஒன்றினுள் மோட்டார் சைக்கிள் இருப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட …
-
- 0 replies
- 345 views
-
-
'சண்டியர்களை போல சத்தம் போட முடியாது' அழகன் கனகராஜ் 55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது' என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது. இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, 'இந்த யோசனை தவறா…
-
- 0 replies
- 358 views
-
-
வெலிக்கடையில் கூட்டு எதிரணி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நேற்று முன்தினம் 18ஆம் திகதியுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இராணுவ வெற்றியைக் கொண்டாடும் நோக்கிலும், இராணுவத்தினரைக் கௌரவிக்கும் நோக்கிலும், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்று வியாழக்கிழமை (19), வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரைப் பார்வையிட்டனர். இதில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 'யுத்தத்தை முடித்துக்கொடுத்த இராணுவத்தினரை, தற்போதை…
-
- 0 replies
- 257 views
-
-
பேரழிவு பேரழிவு 20-05-2016 09:29 AM Comments - 0 Views - 21 இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதே…
-
- 0 replies
- 240 views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக வடக்கு மாகாணசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக்…
-
- 4 replies
- 727 views
-
-
ஈழத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரும் ,கவிஞரும் ,எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமா நிஜத்தடன் நிலவன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அவலத்தின் சாட்சியங்களுள் ஒருவன். ஈழத்தவர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாளை இன்றைய தருணத்தில் மீட்டிப் பார்ப்பதில் ஒவ்வொரு ஆத்மாவும் சொல்லும் கதைகள் அதிகம். அந்தவகையில் போரின் சாட்சியமாக இறுதி யுத்த சாட்சியமாக இந்த நேர்காணலை பதிவு செய்கின்றோம். நேர் கண்டவர் யோகா பத்மன் வலி நிறைந்த இரத்தம் தோய்ந்த செல்லப்படாத சாட்சியங்களும் வெளிவராத அவலங்களும் இன்னும் அதிகம் உண்டு ஈழக்கலைஞன் நிஜத்தடன் நிலவன் (நிக்சன் சர்மா) 1) உங்கள் ஈழத்து வாழ்வு பற்றி சொல்லுங்கள் ? பதில் :- எனது வாழ்வும் வளர்வும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம் . ஈழத்தில் இடம் பெ…
-
- 0 replies
- 898 views
-
-
பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அவரது பிணை மனுவை நிராகரித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 30.6.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடப்பாக கைது செய்யப்பட்டு சந்தேசகத…
-
- 2 replies
- 518 views
-
-
நான் ஆசையுடன் பேசும் என் தமிழில் குற்றமா? கவலைபடமாட்டேன் என்கிறார் ஆளுநர் -சொர்ணகுமார் சொரூபன் 'நான் கொழும்பில் பிறந்து வளந்தவன். அந்தவகையில் எனது தமிழ் உச்சரிப்பு என்பது வடக்கு மக்களின் தமிழ் உச்சரிப்புக்கு நிகரானதாக காணப்படுவதில்லை. இருந்தும் நான் தமிழில் பேசுகிறேன். எனது தமிழ் உச்சரிப்பு தொடர்பில் ஊடகங்கள் குற்றம் கண்டுபிடிக்கின்றார்கள்' என வடமாகாண ஆளுனர் ரெஜினல்ட் கூரே தெரிவித்தார். நீர்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின் வடக்கு மாகாண அலுவலகம் யாழ். பிரதான வீதியில் வியாழக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், தொடர்ந்து தமிழில் உரையாற்றும்…
-
- 0 replies
- 456 views
-
-
LIVE BLOG 2016-05-19 14:22:38 புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 10 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 2016-05-19 12:08:57 புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 5 சடலங்களே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அரநாயக்கவில் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2016-05-19 11:53:46 அரநாயக்க பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக…
-
- 3 replies
- 668 views
-
-
லண்டனுக்கு அனுப்புவதாக பணமோசடி செய்தவருக்கு விளக்கமறியல் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனிலுள்ள தனது சகோதரருடைய சுப்பர் மாக்கெட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 20 பேரிடம் தலா 2 இலட்சம் ரூபாயை மோசடி செய்த கிண்ணிய, ஆலங்கேணியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 பேரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி தலா 2 இலட்சம் ரூபாய் வாங்கிய மேற்படி நபர், 20 பேரையும் வவுனியா அழைத்துச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக…
-
- 1 reply
- 359 views
-
-
எச்சரிக்கை..! வருகிறது 'ரோனு' யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை பெய்யும் பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக கடலில் பிரயாணம் செய்வோர், மீன்பிடிக்காக கடலுக்கு செல்வோர் மற்…
-
- 0 replies
- 623 views
-
-
தமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து ( மயூரன் ) தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்ற…
-
- 0 replies
- 421 views
-
-
களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்தமையால் மல்வானை, கல்கமுவ முற்றாக நீரில் மூழ்கியன களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக உயர்வடைந்துள்ளதையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. http://www.virakesari.lk/article/6625
-
- 0 replies
- 355 views
-