ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலைக்கு அஞ்சலி -எம்.றொசாந்த் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை (14), நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவு தூபி முன்பாக சுடரேற்றப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி இலங்கை விமான படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின. அதில் 147 …
-
- 0 replies
- 316 views
-
-
கடலுக்குச் செல்லவேண்டாம் -நடராசா கிருஸ்ணகுமார் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர்முகாமைத்துவப் பிரிவு சனிக்கிழமை (14) மாலை அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா ஊடாக சகல கடற்றொழிலாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தீவின் கடற்பரப்பில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்று வளிமண்டலத் திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கமையவே, முல்லைத்தீவு மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இவ் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. - See more…
-
- 0 replies
- 236 views
-
-
மோடியுடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி இந்திய மத்திய பிரதேச மாநிலத்தின் உஜைன் பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற இந்து மத நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டார். சிம்மாஷ கும்பமேளா என்ற இந்த இந்து சமய நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்த புனித நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ள அனைத்து புனிதர்களையும் சிரம் தாழ்த்தி வரவேற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, …
-
- 2 replies
- 309 views
-
-
அடை மழை... நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பிரதேசங்களில், நேற்று சனிக்கிழமை (14) இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வரை தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. நாட்டில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும் தற்போது கடுமையான மழைக் காலத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடுமையான மழைக்கு மத்தியிலும் மக்கள் மற்றும் பணியாளர் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/172249/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B4-#sthash.lifqN2lL.dpuf
-
- 0 replies
- 357 views
-
-
பனிமூட்டம்... தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல இடங்கள்; பனிமூட்டத்தால் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால், அப்பகுதிகளில் வாகனங்களை செலுத்துவோர் அவதானத்துடன் செலுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (படங்கள்: மு. இராமசந்திரன், எஸ்.கணேசன்) - See more at: http://www.tamilmirror.lk/172253/%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.DQR8U2xn.dpuf
-
- 0 replies
- 495 views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. தந்தை செல்வா என்றழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ். வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமே வட்டுக்கோட்டை தீர்மானம் என அழைக்கப்பட்டது. 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும் என இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 02. ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்கள…
-
- 1 reply
- 226 views
-
-
மே 19 ஆம் திகதி பொது மக்களின் அஞ்சலிக்கு தடையில்லை.! உயிரிழந்த விடுதலைப் புலி போராளிகளை நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் அளிக்க இயலாது . ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 7 வருடங்கள் பூர்த்தியாகின்றன. வடக்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலையில் தெற்கிலும் போர் வெற்றியை நினைவு கூர்ந்து ஆளும் மற்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி உள் நாட்டுப் போர…
-
- 0 replies
- 200 views
-
-
ரயில் பாதைகளில் நடப்பவர்களுக்கு அபராதம்.! ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களினால் ஏற்படும் உயிராபத்து கடந்த காலங்களில் அதிரித்து வருகின்றன. இதேவேளை, ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு நாளை முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது, 1500 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 3000 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வத…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடித்து விடுவிப்பு.! இலங்கை கடற்படையால் தமிழகத்தின் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 50 இற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் 8 பேர் குட்டி ரோந்துக்கப்பல்களில் வந்தாக தமிழக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்கள் நாட்டுப்படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர் எனவும் இதையடுத்து மீனவர்கள் அவசர, அவசரமாக குறித்த பகுதியை விட்டு செல்ல முயன்றபோது மீனவர்கள் இன்னாச…
-
- 0 replies
- 198 views
-
-
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட மாட்டாது: யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான வெற்றி களிப்பு நிகழ்வுகள் எதனையும் நடாத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபா பணம் செலவிட்டு பாரியளவில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும், இந்த அரசாங்கம் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளது. யுத்த வெற்றியை பறைசாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்த இராணுவ அணி வகுப்பு நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாத…
-
- 0 replies
- 268 views
-
-
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனையும் தலை குனியச் செய்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாள் வெட்டுச் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் கைதுகள், குழுச் சண்டைகள், சாதிச் சண்டைகள், என யாழ்ப்பாணம் மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தின் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தண்டனைகளையும் அறிவிப்பபுக்களை நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என்றும், மரண தண்டனையே வழங்கப்படுமென்றும் கூறிய போதும் பாலியல் சம்பவங்கள் குறையவில்லை. அண்மையில் செம்மணிப் பகுதிய…
-
- 2 replies
- 513 views
-
-
சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு ம…
-
- 10 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில் (எஸ்.கணேசன்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். http://www.virakesari.lk/article/6373
-
- 0 replies
- 244 views
-
-
மாகாணசபை முறை தீர்வாகாது நீரூபித்துள்ளது வடக்கு நேர்காணல் : ரொபட் அன்டனி கேள்வி : மக்கள் விடுதலை முன்னணிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக செய்திகள் வருகின்றனவே? பதில் : அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எமது கட்சி மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டுவருகின்றது. கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சியை அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியே வீட்டுக்கு அனுப்பியது. எனவே அதனை சகித்துக்கொள்ள முடியாத தோல்வியுற்றவர்கள் தற்போது எமது கட்சியை விமர்சித்துவருகின்றனர். வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். கேள்வி : தோல்வியடைந்த சக்திகள் இவ்வாறு செ…
-
- 0 replies
- 296 views
-
-
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்! வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன் என் நண்பர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்திலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இன்னாள் அரச அதிகாரி. அவரது கருத்துகள் தேவையற்ற பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் அவை நியா…
-
- 0 replies
- 290 views
-
-
பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வருவார்கள் என்பதுபோலவும், உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்து. பிரபாகரன் போன்ற ஒருவர் இனிமேல் தலைதூக்கவே முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். ஊடகங்களில் கூறுவதைப்போல வடக்கில் குற்றசெயல்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கலந்துகொண்டிருந்த போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத…
-
- 4 replies
- 863 views
-
-
தமிழினியின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியீடு! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு வெளியிட்ட நூலில் “தமிழினி” என்று மட்டுமே முகப்பில் இருந்தது. ஆனால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்…
-
- 2 replies
- 603 views
-
-
மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ள மஹிந்த கூட்டு எதிரணியினர், கிருலப்பனையில் நடத்திய மே தினப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துவதற்கு, தாம் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறி, சுமார் பத்து நாட்களாக நீடித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமைச்சர் டிலான் பெரேரா. மே தினப் பேரணி இடம்பெற்று பத்து நாட்களின் பின்னர் தான், அவர் இதனைக் கூறியிருந்தார். இடைப்பட்ட இந்தப் பத்து நாட்களிலும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா என்ற தெளிவற்ற நிலை …
-
- 1 reply
- 382 views
-
-
நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக மோடி உறுதி நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இந்தியாவுக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) மாலை ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஹைதராபாத் இல்லத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இந்திய பிரதமர் உற்சாகமாக வரவேற்றதோடு, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலும்…
-
- 0 replies
- 252 views
-
-
Views - 7 -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (13) மதியம் சிலாபத்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயக…
-
- 0 replies
- 574 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்ற செய்தியின் ஊடாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் முயற்சிசெய்து வருகின்றார். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் அங்கு பொளத்தவிகரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகள் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளின் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் அதனை நேரடியாக சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபரே அங்கு அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளமை அவர் குறித்த சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தை அங்கிகரிக்கின்றார் என்ற சந்தேகத்தை மட்டு மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சென்ற கிழக்கு மாகாண…
-
- 0 replies
- 495 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் இன்று சனிக்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று கும்பமேளாவில் நடைபெறும் நிகழ்வுக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியா புறப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள சிறீலங்கா அதிபருக்கும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமையானது இருதர…
-
- 0 replies
- 306 views
-
-
பரவிபாஞ்சான் மக்களும் இலவு காத்த கிளிகளா? கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருபகுதிதான் பரவிபாஞ்சான் ஆகும். கிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் கிளிநகர்,பரவிபாஞ்சான், கண்ணன்கோவிலடி, பழைய கச்சேரியடி ,கரடிபோக்கு என்பன உள்ளடங்குகிறது. இதில் பரவிபாஞ்சான் கிளிநொச்சி நகரின் மைய பகுதியில்அமைந்துள்ள அதிக பொருளாதார பெறுமதிமிக்க தனியார் காணிகளை பெருமளவு கொண்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. பரவிபாஞ்சானுக்கு ஊடாக இரனைமடுவிலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு வரும் நீர்ப்பாசனவாய்க்கால் ஏ9 வீதியை கடந்து உருத்திரபுரம் நோக்கிச் செல்கிறது. இது எப்போதும் பசுமை நிறைந்த நிலப்பரப்பாக …
-
- 0 replies
- 346 views
-
-
சாய்ந்தமருதில் குண்டு தாக்குதல் -அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.எஸ்.எம். ஹனீபா,கனகராசா சரவணன் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னாலுள்ள குவாட்டஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள 870-ஆம் இலக்க வீட்டின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வீட்டின் முன் அறை சிறிதளவில் சேதமடைந்துள்ளதுடன் இருவ…
-
- 0 replies
- 302 views
-
-
உள்ளக விசாரணையை முடித்த பின்னர் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தை உருவாக்குங்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டது போல அல்லாமல் உள்ளக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்து விட்டு உள்ளக விசாரணையினை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், அரசியல் அமைப்பினை மாற்றுவதற்கு அரசாங்கம் ப…
-
- 0 replies
- 233 views
-