ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
இலங்கை 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்றவேளையில் பல்லக்கிற்கும், வெண்சாமரைக்கும், குதிரைக்கும் தமிழ்மக்களை தாரை வார்த்து கொடுத்தவர்களே சேர்பொன் இராமநாதன், அருணாசலம் போன்றோர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். எருவில் உதயநிலா கலைக்கழகத்தின் கலை, கலாசார நிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு மட்டு. எருவில் கண்ணகி மகாவித்தியாலய மைதானத்தில் உதயநிலா கலைக்கழகத் தலைவர் இ.வேணுராஜ் தலைமையில் நடைபெற்றது. இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். இன்று நல்லாட்சி அரசாங்கத்திலே மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பற்றி கூறியிருக்கும் கருத்தானது அனைத்து தமிழ் மக்களையும் மனம்நோக …
-
- 1 reply
- 318 views
-
-
வடக்கு, கிழக்கு, மலையகத்தில் மேதினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மலையக மக்கள் மற்றும் தென் இலங்கை மக்களுடைய இருப்பு அடையாளம் அரசியல் தீர்வு என்ற தொனிப் பொருளுக்கு அமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணியும் கூட்டமும் தலவாகலையில் இன்று கோலாகலமாக இடம்பெற்றது. இதன்போது தலவாகலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கொத்மலை வீதி வழியாக சென்ற பேரணி தலவாகலை நகரசபை மைதானத்தை வந்தடைந்தது. இந் நிகழ்விற்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், கூட்டணியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க …
-
- 0 replies
- 421 views
-
-
த.மு.கூ.வின் மேதின கூட்டம் தலவாக்கலை:மு.இராமசந்திரன், பா.திருஞானம்,எஸ்.சதீஸ் - See more at: http://www.tamilmirror.lk/171119/%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-#sthash.Pf5XuBIk.dpuf
-
- 0 replies
- 220 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக 'நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது தாண்டியடி சேவிஸ் சென்றர் வீதியில் வசிப்பவருமான அன்வர் முகம்மட் சிபான் என்பவரும், பிறைந்துரைச்சேனை மஜீத் மெளலவி வீதியைச் சேர்ந்த முஹம்மது சாபி முஹம்மது ரியாஸ் (படத்தில் காணப்படுபவர்) என்ற இருவருமே கைது செய்யப்பட்டவர்களாகும். கைது செய்யப்பட்ட இருவரையும் 2016.04.30ஆந்திகதி (சனிக்கிழமை ) வாழைச்சேனை நீதவா…
-
- 1 reply
- 419 views
-
-
பாறைகளை பதம் பார்க்கும் குழாய் கிணறுகள்
-
- 0 replies
- 291 views
-
-
யாழ் பல்கலையில் மே தின பேரணி இன்று யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இலங்கை ஆசிரியர் சங்கமும் பல்கலைகழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் தினம் யாழ் பல்கலைகழகத்தின் முன் ஆரம்பமாகியது. இந்த பேரணியானது குமாரசாமி வீதியூடாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன் வீதியூடாக சென்று மீண்டும் பல்கலைக்கழக பிரதான வளாகத்திற்கு சென்று அங்கு விஷேட மேதின கூட்டம் இடம்பெற்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=79388
-
- 1 reply
- 380 views
-
-
ஐ.தே.க. மேதின பேரணியில் விபத்து : முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வைத்தியசாலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின பேரணியின் போது கொழும்பு பொரளை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் முன்னாள் மாநகர சபையின் உறுப்பினர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/5818
-
- 0 replies
- 357 views
-
-
நினைவுதினம்... இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினத்தையொட்டி, அவருடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர். கடந்த 1993ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, கொழும்பில் நடைப்பெற்ற மே தின ஊர்வலமொன்றின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக அவருடைய 69ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/171104/%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%…
-
- 0 replies
- 321 views
-
-
காலி கூட்டத்தில் மஹிந்த வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு ச…
-
- 0 replies
- 423 views
-
-
தீவிரம்பெறும் சமஷ்டி எதிர்ப்பு அரசியல் வெறும் வாயை மென்று கொண்டிருந்த, தெற்கிலுள்ள எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளுக்கும், இப்போது வட மாகாணசபை தான் அவலாக வாய்த்திருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வு யோசனை ஒன்றை முன்மொழிந்திருப்பது தான், வட மாகாணசபை மீது எல்லாத் தரப்பினருக்கும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையினால், முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைக்கு கிட்டத்தட்ட இணையானதொரு தீர்வு யோசனையைத் தான் வட மாகாணசபையும் முன்மொழிந்திருக்கிறது. ஒரு சில விடயங்களில் தான் வட மாகாணசபையின் முன்மொழிவு, சற்று …
-
- 0 replies
- 350 views
-
-
சி.வி உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் வன்னி ரொமேஸ் மதுசங்க வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை, ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 17ஆம் ஆகிய தினங்களிலேயே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஏனைய நால்வர்களில் வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அந்த மாகாண சபையின் செயலாளர் எஸ் பத்மநாதன் ஆகியோரும் அடங்குவர். வடமாகாண சபையில் சமஷ்டி யோசனையை முன்வைத்து நாட்டை பிரிப்பதற்கும் பயங்கர…
-
- 0 replies
- 253 views
-
-
பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி ********************************************************************************************** இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழ…
-
- 9 replies
- 1.5k views
-
-
தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு! தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் சிலைக்கு தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி – எஸ். ஜெபநேசன்இ கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ .ஜே .சந்திரகாந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களால் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். குறித்த நிகழ்வில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
பொன்னாலையில் மினி சூறாவளி ஐ.நேசமணி பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது. வலி.மேற்கின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது. இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது. இந்த சூறாவளியால் பொன்னாலை தெற்கில் உள்ள வீட்டுக் கூரை சுழல் காற்றினால் முற்றாக தூக்கி வீசப்பட்டது. அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீடே இந்த அனர்த்தத்தில் கடும் சேதமாகியது. இவ் வீட்டுக்கு அண்ம…
-
- 2 replies
- 620 views
-
-
372 மாணவர்கள் 43 ஆசிரியர்கள் ஒரு மலசலகூடம் இல்லை - சமாளிக்க முடியவில்லை- அதிபர் அம்பிகைபாகன் 30 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் 627 மாணவர்களுள் 372 ஆண் மாணவர்களும் 43 ஆசிரியர்களும் உள்ளனர் ஆனால் அங்கு ஆண் மாணவா்களுக்கு ஒரு மலசலகூடம்; கூட இல்லை அத்தோடு ஆசிரியர்களுக்கு என ஒரு மலசல கூடம் இல்லை சமாளிக்க முடியவில்லை உடனடியாக தீர்வு காணுங்கள் என பரந்தன் இந்து மகா வித்தியாலய அதிபா சோ. அப்பிகைபாகன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி கல்வித்திணைக்களத்தில் கிளிநொச்சி வலய அதிபர்களுக்கான கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…
-
- 0 replies
- 499 views
-
-
பொலிஸ் மா அதிபர் யாழ் நல்லூர் கோயிலுக்கு விஜயம் இலங்கையின் புதிய பொஸிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனை இலங்கை மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் நிர்வாக பணிப்பாளரும் பேராசிரியருமான ஆர்.சாந்தன் தலைமையில் இந்த பூஷை வழிபாடுகள் இடம்பெற்றன. இப்பூஜை வழிபாட்டுக்கு யாழ் மாவட்ட பிரதிப் பொஸிஸ் மா அதிபர் ஜி.கே. பெரேரா மற்றும் யாழ் பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டீ.விரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.adaderana.lk/news.php?nid=79372
-
- 0 replies
- 353 views
-
-
சம்பந்தன் கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை என்கிறார் ரணில் இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன், இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்…
-
- 0 replies
- 267 views
-
-
புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன். காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும் இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- புதுக்குடியிருப்பு நகரத்தில் இராணுவ முகாம் இருப்பது சமுதாயச் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கின்றது. எமது கலாசாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. …
-
- 0 replies
- 467 views
-
-
யாழில் 27 இளைஞர்கள் கைது யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அ…
-
- 14 replies
- 1.1k views
-
-
துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி அநுராதபுரம், திரப்பனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிதோகம வீதியில் குருவில பிரதேத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த சம்பவம், இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் மூன்றும், அவ்விடத்தில் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சி.ஏ.கே0692 என்ற இலக்கத்தகட்டைகொண்ட வாகனத்திலேயே இருந்துள்ளது என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/171070/%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AF-…
-
- 0 replies
- 298 views
-
-
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை மறுப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, இரணைமடுச்சந்தி பகுதியில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீடித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். கிளிநொச்சிப் பொலிஸாரால் கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த குற்றச்சாட்டின் இரண்டாவது சந்தேக நபர் பிணை வ…
-
- 0 replies
- 248 views
-
-
Jaffna culture issue (Part 1)- Thisaigal Documentary
-
- 2 replies
- 738 views
-
-
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் மேதினச் செய்தி உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே தினத்தில், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியினை யதார்த்த மாக்குவதற்கு அர்ப்பணிப்பதனை, எமது மே தினத்தின் குறிக்கோளாகக் கொள்வோம்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
-
- 0 replies
- 313 views
-
-
ஸ்ரீலங்காவுடனான கடற்படை உறவுகள் வலுப்படும் ; பிரான்ஸ் கடற்படை [ Saturday,30 April 2016, 03:52:03 ] ஸ்ரீலங்கா மற்றும் பிரான்ஸிற்கிடையில் கடற்படை உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “எகோநிட் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளது. இதன்போதே குறித்த கடற்படை கப்பலின் மாலுமி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இது நல்ல நேரம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்தக் கப்பல் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான பிரான்ஸ் துாதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மே மாதம்…
-
- 0 replies
- 457 views
-
-
சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கப்பட்டுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும். பல வருடங்களாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாடு பிளவடைந்துவிடும் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் நீங்களும் அவ்வாறு நம்புகிறீர்கள். அந்த கூற்று உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. பத்திரிகை, புத்தகங்களை எடுத்து பாருங்கள். சமஷ்டிமுறை என்றால் என்னவென்பது உங்களுக்கு புரியும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவிலும் இந்த சமஷ்டி முறை நடைமுறையில் இருக்கின்றது. கனடாவிலும், சுவிட்ஸர்லாந்திலும் இந்த சமஷ்டி முறைமை நடைமுறையிலுள்ளது. சமஷ்டி முறையினூடாக ஒரு நாளும் நாடு பிரிவடைந்து ச…
-
- 0 replies
- 398 views
-