Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் மது போதையில் குழப்பம் விளைவிக்கும் சம்பவமும் அதிகரித்து காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். புங்குடுதீவில் இருந்து யாழ்.நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் அதே பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தை நெரித்தார் என குறித்த பெண்ணினால் ஊர்காவற் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். அந்நபரின் மனைவி குழந்தை ஒன்றினை பிரசவித்து உள்ள…

  2. அம்பாறை மாவட்டம், அட்டாளைச் சேனைப் பிரதேசத்திலுள்ள பொன்னம்வெளி அஷ்ரப் கிராம மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1940ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய உரிமைகளுடனும் அதற்கான அனுமதிப்பத்திரங்களுடனும் குறித்த காணிகளில் மக்கள் விவசாயம் செய்துவந்தனர். 1987இற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்தனர். 1987இல் வெளியேறிய மக்கள் மீண்டும் 2007ஆம் ஆண்டு மீண்டும் தமது பிரதேசத்தில் குறியேறினர்.இதையடுத்து 2010ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியேற்றப்பட்டனர். தற்போது அந்தக் காணிகளை சிங்கள மக்களும் இராணுவத்தினரும் பயன்படுத்தி வருவதாக அக்கிராமத்து…

    • 0 replies
    • 256 views
  3. இலங்கைக்கு வருகிறார்கள் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட அறிக்கையாளர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி விஜயம் செய்கின்றனர். மே மாதம் ஏழாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை …

  4. 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன…

  5. வித்தியா கொலை வழக்கு தொடர்பில் தவறான தகவல்களை வௌியிட வேண்டாம்; நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு inShar புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் ஊர்காவல்துறை நீதவான் எம்.றியால் இன்று கேள்வியெழுப்பியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பிலும் குறித்த அதிகாரியை நீதவான் மிக கடுமையாக எச்சரித்துள்ளார் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவ…

  6. வடமாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையின்கீழ் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுறவுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை ஆகியவற்றையே மீண்டும் இயக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாளை யாழ்ப்பாணக் கச்சேரியில் நடைபெறவுள்ளதுடன், இதில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் போன்றோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடக்கின் முக்கிய தொழிற்சாலை…

  7. மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி:- மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீளவும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறிய அவர், அதனை தடுக்க இந்தத் தீர்மானங்கள் அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரமான நாடு மற்றும் தூய்மையான அரசியலை நிலைந…

  8. உத்தமனுக்கு இருட்டிலை என்ன வேலை? யாழ்ப்பாணத் தம்பி பட்ட காலிலை படும் கெட்ட குடியே கெடும் எண்டுவினம். அட... கொளுப்புப் புடிச்ச பெடியன் வந்துட்டான் எண்டு நினைப்பியள். நானும் கொஞ்சநாள் வாய மூடிக்கொண்டுதான் இருந்தன். என்ன நடக்குதெண்டு பாப்பமெண்டு. ஆனால் உள்ளது போகாது இல்லது வராது எண்டுற மாதிரி நிறையக் கதையள் அரசல் புரசலாய் கேட்டுது. அண்டைக்கு எங்கடை தாயகப் பத்திரிகை ஒண்டை விரிச்சுப் பாத்துப்போட்டு தாத்தா கெக்குப் புக்கு கெக்குப் புக்கு எண்டு சிரிச்சார். எட, என்னடா கோதாரி உது? எண்டு, கிழவனிட்டை பேப்பரை வேண்டிப் பாத்தன். உவர் எங்கடை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தப…

  9. 87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தியவர் கைது 87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான ஞசு 656 விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். குறித்த நபர் பாகிஸ்தான் லாகூரில் இருந்து டோகா சென்று அங்கிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் தன்னுடைய பயணப்பையில் 4 பக்கற்றுகளில் ஹெரோயினை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். http://www.virakesari.lk/article/5563

  10. நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது (ஆர்.யசி) போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக எக்காரணத்தை கொண்டும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாது எமது இராணுவத்தை கைதுசெய்ய முடியாது. நாம் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டு உண்மைகளை கண்டறிந்து வருகின்றோம். அதற்கமையவே இராணுவத்தின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் வகையிலோ அல்லது நாட்டில் பிளவு ஏற்படுத்தும் வகையிலோ எவரது செயற்பாட்டிற்கும் அரசாங்கம் இடமளிக்காது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை பெற்றுத்தருவதே நல…

  11. இப்படியும் நடந்துள்ளது...! மஹிந்த ராஜபக்ஷ என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது அவருடைய தேர்தல் தோல்வி தான். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இவ்விடயம் இலங்கையர் மாத்திரமல்லாமல் உலக மக்களே அறிந்த ஒன்றாகும். இது இவ்வாறு இருக்க, தாய்லாந்தில் வேடிக்கையான விடயம் ஒன்று பதிவாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தில் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கடந்த 23 ஆம் திகதி தாய்லாந்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.…

  12. நாளை யாழ். செல்கிறார் சுவீடன் வெளி.அமைச்சர்.! இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளி விவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை காலை யாழ்ப்பாணம் செல்லும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்தின் இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடவுள்ளதுடன் கலந்துரையாடவுள்ளார். மேலும் …

  13. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் -சொர்ணகுமார் சொரூபன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு வடமாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று திங்கட்கிழமை (25) யாழில் வைத்து உறுதியளித்தார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவிலே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுண்ணக்கல் இங்கு …

  14. <p>Your browser does not support iframes.</p> பிரபாகரனால் முடியாது போனதை சம்பந்தன் செய்கிறார் - கம்மன்பில பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார். பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாகவும், இது தொடர்பில் பிரதமர் அல்லது ஜனாதிபதி எந்தவொரு கருத்தை…

  15. மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமிய பொருhதா அபிவிருத்தப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (24நடைபெற்றது. இந்நிலையில் இப்புதய பஸ் தப்பு நிலையம் நிமாணிக்கப்பட்டு; பிரதேசம் தமது கிராமத்தி;குச் சொந்தமானது எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் பட்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருது பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிதேச…

  16. வடமாகாணசபையில் நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும் வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள் இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது வியப்பளிக்கிறது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார். இராஜதந்திர அணுகுமுறையின்றி வட மாகாண சபை செய…

  17. தென்னிலங்கை மீனவர்கள் 39 பேர் கைது -செல்வநாயகம் கபிலன் 'வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்' என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். 'அத்துடன், அவர்கள் பயணம் செய்த 13 டிங்கி படகுகள், 2,264 கடலட்டைகள், 102 ஒக்சிசன் சிலிண்டர்;கள், 10 ஜீ.பி.ஸ் கருவிகள், நீரில் முழ்கி கடலட்டை பிடிக்க பயன்படுத்தும் ஆடைகள், …

  18. ஒமந்தையில் இராணுவ பஸ்சில் இருந்த போது என் கண்களால் கண்ட என் மகன் எங்கே? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- 2009-05 ஆம் மாதம் திகதி சரியாக ஞாபகம் இல்லை எனது மகனை ஓமந்தையில் பஸ் ஒன்றினுள் கண்டேன் ஆனால் அதன் பின்னர் இதுவரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே உயிருடன் இருக்கும் எனது மகனை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சியில் இன்று திங்கள் கிழமை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தாயார் ஒருவர் கண்ணீருடன் கோரியுள்ளார். கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த காணாமல் போன இராஜசட்னம் ஜெயராஜ் (காணமல் போகும் போது வயது 28) என்பவரின் தாயாரே இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். முள்ளிவாய்காலில் இருந்து எங்…

  19. பொலிஸ் மா அதிபருக்கு வடமாகாண முதலமைச்சர் அவசரக் கடிதம்.! வடமாகாண முதல்வர் வடமாகாணத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள குற்ற நடவடிக்கைகள் பற்றி புதிய பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அறியவருகின்றது. அதில் அங்கு களவுகள், கொள்ளைகள் நாளாந்தம் நடைபெறுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் வடமாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றி வந்த சுற்றுலாப் பேரூந்து தாக்கப்பட்டமை குறித்தும் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன, உள்நோக்கம் என்ன என்பது உடனே அறியப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நல்லுறவைப் பேண அரசாங்கம் முனைந்திருக்கையில் இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றை முடக்கும் தன்மையனவாக இருப்பதைச் ச…

  20. சி.விக்கு வைத்தியசாலையில் சிகிச்சை -செல்வநாயகம் கபிலன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இருதய நோய் சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை (25) சிகிச்சை பெற்றார். முதலமைச்சருக்கு இருதய நோய் இருப்பதன் காரணமாக அவர் கடந்த காலங்களிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இன்றும் சிகிச்சை பெறுகின்றார். அவர் விடுதியில் அனுமதிக்கப்படவில்லையெனவும், சிகிச்சை மாத்திரம் பெற்றார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உடல்நலக் குறைவால், ஜனாதிபதி மைத்திரிபால சிறி…

  21. திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறியுடன் தொடர்புடைய நான்கு நபர்களை, சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். பிரதான சந்தேகநபர், தொடர்ச்சியாக பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில், பண்ணை பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது திருடி விற்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குருநகர் பகுதியினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இத் திருட்டுக்களின் பிரதான சந்தே…

  22. கிளிநொச்சியில் அமர்வு ஆரம்பம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை ஆரம்பமாகியுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த அமர்வானது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து அமர்வுகளும் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. இன்றைய அமர்வில் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 360 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை (26) கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 362 பேரும் 27ஆம் திகதி புதன்கிழமை கண்டாவள…

  23. வடமாகாண சபையின் சமஷ்டி யோசனைக்கு எதிராக போர்க்கொடி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புத் திருத்தத்தில், வடமாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளை உள்ளீர்த்துக்கொள்ளும் வகையில், மேற்படி யோசனைத் திட்டத்தைத் தயாரித்துள்ள வடமாகாண சபை, அதனை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் தவிர ஏனையோரின் ஏகமனதான வரவேற்புடன், கடந்த வெள்ளிக்கிழமை நிறை…

  24. இழிவான செயலை மேற்கொண்ட சம்பந்தன் இராணுவத்திடம் மன்னிப்பு கோர வேண்டும்: 25 ஏப்ரல் 2016 இழிவான செயலை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இராணுவத்திடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் சம்பந்தன் அத்து மீறி பிரவேசித்து இராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் எனவும், நாட்டின் சட்டத்தை அவமரியாதை செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக சம்பந்தன் உடனடியாக இலங்கை இராணுவத்திடம் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இரா.சம்பந்தன் பிரிவினைவாத தமிழ் பயங்கரவாத பேண் ஒன்றைப் போன்று செயற்பட்டுள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். …

  25. ஸ்ரீலங்காவில் தொழிலாளர் பற்றாக்குறை ; வெளிநாட்டு முதலீடுகள் பாதிப்பு? [ Monday,25 April 2016, 02:44:36 ] ஸ்ரீலங்கா வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் கேந்திர நிலையமாக மாற முயற்சித்துவரும் நிலையில், கட்டுமானத்துறையானது அதிகரித்துவரும் தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக முதலீடுகளை உள்வாங்க சிரமப்படலாம் என முன்னணி நிறுவனங்களின் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் தொழிலானது முழுவேகத்தில் வளர்ச்சியடைய மிகவும் சிரமப்படக்கூடும் என்பதனை மேற்கோள்காட்டியுள்ள கட்டுமானத் தொழில்களின் சபையானது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் முழுஅளவில் முன்னெடுக்கப்படும் போது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரித்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.