ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
காலஞ்சென்ற கோட்டை மாதுலுவாவே சோபித தேரரின் மரணச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் மரண பரிசோதனையை நடத்தாமை தொடர்பில், நிபுணர்கள் கொண்ட வைத்தியக் குழுவினால் விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவுக்கு பிரதான நீதவான், நேற்று மேற்கண்டவாறு உத்தரவிட்டார். மாதுலுவாவே சோபித்த தேரருக்கு சிங்கபூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட வைத்திய சிகிச்சை, அந்த வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ், அதற்கு முன்னர் தேரர் பயன்படுத்திய மருத்துகள், அவருக்கு இருந்த நோய்கள் தொடர்பில் ஒப்…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர் இலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டாலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட ஹெராயின் பொதிகள் இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஹெராயின் கடத்திவ…
-
- 4 replies
- 563 views
-
-
பறிபோனது மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு இராணுவக் குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் இதுவரைகாலமும் ஈடுபட்டிருந்த இராணுவக் குழுவை நீக்கி விட்டு அதற்காக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருந்த 50 இராணுவத்தினரும் கடந்த வௌ்ளிக்கிழமை இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/4871
-
- 0 replies
- 295 views
-
-
யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஹெரோயின் கடத்த முயற்சி! வல்லையில் வைத்து முறியடிப்பு! வடமராட்சி கரணவாய் மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 185 கிராம் ஹெரோயின் பருத்தித்துறை மதுவரித் திணைக் களத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறையில் உள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினால் நேற்று காலை 11.15 மணியளவில் இக் ஹெரோயினைக் கைப்பற்றினர். கருவாட்டுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்ட பருத்தித்துறையிலிருந்து மண்டான் பகுதியூடாக இக் ஹெரோயின் எடுத்துச் செல்லப்பட்ட போதே அப்பகு…
-
- 0 replies
- 281 views
-
-
சாவகச்சேரி வெடிபொருள் மீட்பின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர்! சிங்களப் பத்திரிகை கூறுகிறது! யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தற்கொலை அங்கி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி வலையமைப்பு, வங்கிக் கணக்குகளை மையப்படுத்திய விசேட விசாரணைகளிலேயே இத்தகைய சந்தேகிக்கத்தக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஜேர…
-
- 1 reply
- 317 views
-
-
வடக்கு - கிழக்கில் கடந்த மாதத்தில் 10,000 வெடிபொருட்கள் மீட்பு வடக்கு கிழக்கில் கடந்த மாதம் மாத்திரம் போருடன் தொடர்புடைய 10,000 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரமேஷ் எனப்படும் எட்வேட் ஜூலியன் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/12425
-
- 1 reply
- 395 views
-
-
'வெடிபொருட்களை பகுப்பாய்வு செய்யவும்' யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை, அரச பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு கட்டளையிட்டார். யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான புலனாய்வுப்பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர் தர்மசேனவின், முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் இந்துநில், வெடிபொருட்கள் தொடர்பிலான அறிக்கையை நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்தார். அறிக்கையின் பிரகாரம், அவ்வீட்டிலிருந்து எஸ்.பீ.ஆர் 024ஃஏ தற்கொலை அங்கி, சீஓ 303, சீஓ 299, சீஓ 290, சீஓ 399 இலக்கங்களை கொண்ட 4 கிளைமோர் குண்டுகள், எஸ்எம்.001, எஸ்எம் …
-
- 0 replies
- 390 views
-
-
மகனுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்?குமார் குணரட்னத்தின் தாய் கேள்வி எனது மகனுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் குமார் குணரட்னத்தின் தாய் ராஜமணி குணரட்னம் கேள்வி எழுப்பியுள்ளார். கேகாலை சிறையிலிருந்து அனுராதபுரம் சிறைக்கு தனது மகனை மாற்றியது குறித்து அச்சமடைந்துள்ளதாகவும்,அதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேகாலையில் பிறந்து அங்கு கல்விகற்று பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விகற்ற தனது மகனிற்கு …
-
- 0 replies
- 328 views
-
-
நான்கு இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு விசைப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். http://onlineuthayan.com/news/12402
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கை அரசின் நல்லிணக்கச் செயற்பாடு நத்தை வேகத்தில்! இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடு மிகவும் நத்தை வேகத்தில் செல்கிறது. அத்துடன் அரசியல் அமைப்பு மாற்றமானது ஒரு கேள்விக்குறியான விடயமாகவே இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொதே இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நல்லிணக்கச் செயற்பாடுகளில் பல விடயங்களில் பெரினவாதிகள் மிகக் கவனமாகச் சிந்திக்கிறார்கள். போர் நிறைவடைந்து ப…
-
- 2 replies
- 568 views
-
-
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தார்மீக பொறுப்பும் கடமையும் இலங்கைக்கு உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்படை பயிற்சியை முடித்துக் கொண்ட உத்தியோகத்தர்கள் வெளியேறும் நிகழ்வு, நேற்று திருகோணமலை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. கடற்படை உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய போதே பிரதமர் ரணில், மேற்குறித்தவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்- கடல் மார்க்கமாகவே சர்வதேச வர்த்தக தொடர்புகளை ஏற்டுத்திக்கொள்ள முடியும். உலகின் முக்கியமான கடல் போக்குவரத்து மார்க்கங்கள் இந்து சமுத்திரத்திலேயே அமைந்துள்ளன. இந்து சமுத்திர பரப்பில் பல்வேறு கடத்தல் சம்பவங்களும் கொள்ளைச் சம்பவங்களும…
-
- 4 replies
- 386 views
-
-
தமிழ் மக்கள் மீ்ண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை : சுமந்திரன் எம்.பி "ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்ப…
-
- 4 replies
- 623 views
- 1 follower
-
-
வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும் அனைத்து படகுகளையும் திடீர் சோதனை நடத்தி போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்து நிறுத்துமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். அதேநேரம் கொழும்பில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரின் பிரிவொன்றை வடகடலில் கடலோரக் காவல் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி பரிந்துரை செய்திருக்கின்றார். போதைப் பொருள் கடத்தல் வழக்கொன்றில் பிணை வழங்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் மீதான விசாரணையின் போதே, கடற்படையினருக்கான இந்தப் பணிப்புரையும் போதைப்பொருள் தடுப்புப் பொலிசாருக்கான பரிந்துரையும் கடந்த புதன்கிழமை விடுக்கப…
-
- 0 replies
- 366 views
-
-
ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நான்கு நாள் உத்தியோகப்பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ளளார். பன்னாடுகளின் தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது. http://www.virakesari.lk/article/4824
-
- 0 replies
- 222 views
-
-
அதிக வெப்பத்தால் பூநகரி பெண் மரணம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை (02) அனுமதிக்;கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 0 replies
- 506 views
-
-
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமம் உவராபத்தை எதிர்நோக்குவதாகவும் அதிலிருந்து தப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னேரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அனைத்து குடும்பங்களும் விவசாயத்தை முதன்மையான தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் தற்போது உவர்பரம்பல் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. வன்னேரிக்குளத்தின் ஒருபகுதியான குஞ்சுக்குளம் கிராமத்தில் 450 ஏக்கர் வயல்நிலம் உவரடைந்ததன் காரணமாக அங்கு வசித்த 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வன்னேரிக்குளத்தில் சில வயல் நிலங்களும் உவர் நிலங்க…
-
- 0 replies
- 330 views
-
-
பிரபாகரனின் நாமம் மீண்டும் தென்னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, அது எதனால்? அவர் பற்றி தென்னிலங்கையில் கூறப்படுவது என்ன? புலிகளின் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமா? இந்திய ரோ அதிகாரிகள் புடவை வியாபாரிகள் வடிவத்தில் வடக்கு கிழக்கில் எதற்காக? நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா? புலிகள் வருகிறார்கள் எனக் கூறுவது நிஜமா? மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா? இலங்கையுடன் சீனாவின் உறவு ஏன் அதிகரிக்கப்பட்டுள்ளது? எனும் வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன். http://www.tamilwin.com/show-RUmuyETYSXlu6I.html
-
- 0 replies
- 706 views
-
-
குமரன் பத்மநாதன் பற்றி ஏன் பேசப்படுவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… மஹிந்த ராஜபக்ச, குமரன் பத்மநாதனை பாதுகாப்பதாக கூறிய இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 15 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் ஏன் குமரன் பத்மநாதனுக்கு கைகூட இந்த அரசாங்கம் வைக்கவில்லை? குமரன் பத்மநாதனை தேர்தல் பிரச்சார கோசமாக பயன்படுத்திக் கொண்ட ஜே.வி.பி. மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் இது குறித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் யார் மீது…
-
- 0 replies
- 547 views
-
-
வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையினரும் மட்டுமே இன்று வடக்கின் பாதுகாப்பை தீர்மானிக்கின்றனர்.என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டை மிகவும் மோசமான பாதையில் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மோசமான நிலையில் உள்ளது. பொருட்களின் வரி இருமடங்கு அதிகரித்து சென்றுள்ளது. இன்றைய நிலையில் விலை குறைக்கவேண்டிய பொருட்கள் அனைத்திற்கும் இருமடங்கு வரி அதிகரித்து மக்களின் வயிற்றில் நெருப்பை கொட்டியுள்ளனர். மக…
-
- 0 replies
- 524 views
-
-
வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று தொடக்கம் கைதடியில் உள்ள பேரவைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ளது. வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் அமைச்சிற்குரிய அலுவலகம் என்பன இன்று முதல் கைதடிக்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களிற்காக மாதாந்தம் பெருந்தொகைப் பணம் வாடகையாக செலவு செய்யப்படுகின்றது என எதிர்க்கட்சியினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் வட மாகாண சபை உருவாக்கத்தின் மூன்றாண்டு கால இடைவெளிக்குள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கீழ் வரும் அமைச்சுக்கென சொந்தக்கட்டிடம் அமைக…
-
- 0 replies
- 446 views
-
-
ஜனாதிபதிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு! அதியுச்ச மூன்றடுக்கு பாதுகாப்பின் மத்தியில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார். வடக்கில் தேசிய பாதுகாப்பு பற்றிய பல்வேறு விமர்சனங்கள் கடந்த சில நாட்களாக பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.நகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றை திறந்து வைப்பதற்காக நேற்றைய தினம் யாழிற்கு வருகை தந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் மீட்க ப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கோணத்…
-
- 1 reply
- 530 views
-
-
மிருசுவில் உசன் பகுதியில் 95 கிலோகிராம் கஞ்சா மீட்பு! மிருசுவில், உசன் பகுதியில் வீடொன்றிலிருந்து 95 கிலோகிராம் கஞ்சா, நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் தப்பியோடிவிட்டார். கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 23.75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது எனப் பொலிஸார் தெரிவித்தனர். உசன் பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதனை முறியடிக்கத் திட்டம் தீட்டிய பொலிஸார், கஞ்சா வாங்குவர் போல பேரம்பேசியுள்ளனர். பேரம் முற்றுப்பெற்றதையடுத்து பொலிஸார் ஒருவர் சிவில் உடையில் கஞ்சா வாங்குபவர் போல குறித்து வீட்டுக்குச் சென்ற போது…
-
- 1 reply
- 507 views
-
-
110 கிலோகிராம் ஹெரோய்ன்: பிரதான சந்தேக நபர் கைது கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை, கைது செய்யப்பட்டார் . - See more at: http://www.tamilmirror.lk/169403/-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.xuUTIy8m.dpuf
-
- 0 replies
- 287 views
-
-
புலிகளின் விமானம் வெசாக் பார்க்க கொழும்பு வந்ததா? நாமல் கூறும் கதை! போர் நடைபெற்ற காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் என விளக்கமளித்துள்ளார் நாமல் ராஜபக்ச எம்.பி. சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பழைய பொருட்கள் எனக்கூறி விடயத்தை தட்டிக்கழிக்கின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்த அரசும், தற்போதிருக்கும் பாதுகாப்புச் செயலாளரும் இருந்திருந்தால், புலிகளின் விமானத்தை விளையாட்டு விமானம் என்றும், கொழும்புக்கு தாக்குதலுக்கு வந்த விமானம் வெசாக் பார்க்க வந்தது என்றும் கூறியிருப்பவர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசுக்கு அக்கறையில்லை. அதைப்பற்றி பேசினால் அதற்கு …
-
- 0 replies
- 567 views
-
-
காணாமல்போனோர் தொடர்பில் 3,000 இரட்டை முறைப்பாடுகள்! காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து 3 ஆயிரம் இரட்டை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், காணாமல்போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும், நிர்வாக மட்டத்திலான சிக்கல்கள் இருப்பதால் அவற்றை விசாரிப்பதற்கு நீண்டநாட்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் எந்தமட்டத்தில் இருக்கின்றன என்பது பற்றி விவரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 296 views
-