Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரமும், சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டுமென ஸ்பெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரி போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்ஸ் லோபெஸ் டேனா தெரிவித்துள்ளார். கடந்த 23ம் திகதி மார்ச் மாதம் பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது. பிரித்தானிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரித்தானியாவின் பல தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்ப்பாட்டாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். …

  2. இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளை விடுவிக்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்ட தயாபரராஜா என்பவர், முன்னதாக படைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போது உயிருடன் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் போன்றே காணாமல் போனதாக கூறப்பட்ட பலர் உயிருடன் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கோடிட்டு ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலை…

  3. பலாலி பாதுகாப்பு படைத்தளத்திற்குள் சென்ற வடகிழக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இடையில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த விசேட கலந்துரையாடலின் போது தென்னிலங்கையின் தமிழ் சிங்கள ஊடக பிரதானிகளுடன் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பிரதி ஊடகத்துறை அமைச்சர் பரணவிதாரன மற்றும் முப்படை பிரதானிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதில் வடக்கு ஊடகவியலாளர்கள் சார்பாக யாழ் ஊடக அமையத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் அவர்களும் கிழக்கு ஊடகவியலாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் அதிரன் அடங்கலாக 22பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் …

  4. புதிய அரசியலமைப்புக்கு நாட்குறிப்பு புதிய அரசியலமைப்பு யோசனை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற, அரசியலமைப்பு தொடர்பான மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது தொடர்பான நோக்கம் தொடர்பில், இதன்போது பிரதமர் விளக்கமளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/169103/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.7n…

  5. கடந்த அரசாங்கத்தின் வேலைகளில் மைத்திரிக்கும் பங்குண்டு! அன்றைய அரசாங்கம் செய்த வேலைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது எனவும் தான் அந்த வேலைகளை தனித்து செய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அன்றைய அமைச்சரவையுடன் இணைந்து அவற்றை செய்ததால், தற்போதைய ஜனாதிபதியும் அதற்கு பொறுப்பாளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. இதனால், எதிர்க்கட்சியை திட்டிக்கொண்டிருக…

  6. இலங்கையின் வடபகுதியில் 65,000 வீடுகளை நிர்மானிப்பது தொடர்பிலான சர்ச்சை முடிவுக்கு வந்தது எதிர்த்தவர்களின் முடிவு என்ன? தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:- இலங்கையின் வடபகுதியில் 65,000 வீடுகளை நிர்மானிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை கட்டுமான தொழில் துறையினரிற்கும் இடையில் காணப்பட்ட மோதலிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடபகுதியில் சர்ச்சைக்குரிய வீடுகளை அமைத்த நிறுவனத்திற்கு தொடர்ந்தும் அப்பகுதியில் வீடுகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த வகையில் இந்திய நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய வீடமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வடமாகாண முதலம…

  7. சிகிரியாவுக்கு கூகுள் பலூன் சிகிரியாவில் நாளை 31ஆம் திகதியன்று, 5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்தமுறை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும் கூகுள் பலூன், உண்மையில் உடைந்து விழுந்ததா அல்லது தரையிறக்கப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/169070/%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E…

  8. கரும்புலித் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று, மறுப்பு தெரிவித்தது. 16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நட்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்களைக் கொலை செய்ததாக, மேற்படி இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தர…

  9. மின்சாரக்கதிரையை அகராதியிலிருந்தே தூக்கிவிட்டோம்! மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெர…

  10. நாசகார கும்பலின் இலக்கு! மீண்டும் மின்மாற்றியில் தீ! பம்பலபிட்டிய லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் இரண்டு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் மின் பிறப்பாக்கியில் விபத்து இடம்பெற்ற மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். மின்பிறப்பாக்கிகளை இலக்கு வைத்து, நாசகார கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் …

  11. புலம்பெயர்ந்த மக்கள் மீதான 'புலுடா' புராணம் தெய்வீகன் பிரித்தானிய தமிழர் பேரவை, கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த 'தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்' நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் 'இலங்கையில் தொடரும் வன்முறைகளும் மீறப்பட்ட வாக்குறுதிகளும்' என்ற தலைப்பில், அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது தரப்பு ஆதங்கத்தை பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்திருந்தது. நிகழ்வில் பேசிய நா…

    • 1 reply
    • 1.3k views
  12. முதல் உலகிலுள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள Street View Map இனை கூகுள் ஏர்த் (Google Earth) மென்பொருளின் மூலமாக மிகத்துல்லியமான முறையில் பார்வையிடலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 65க்கும் அதிகமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குகிறது. பொதுவாகவே சமகால உலகில் தொழிநுட்பவளர்ச்சியின் அவசியமானது சகலருக்குமே மிகவும் இன்றியமையாததாக காணப்படுவதை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights அதேபோன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு பாரிய தொழிநுட்ப பரப்பினுள்ளே நமது இலங்கை நாடு உள்வாங்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். இருந்த போதிலும் அவ்வப்போது அளவுக்கதிகமான வரம்புமீறிய …

  13. நயினாதீவில் 12 கோடி ரூபாய் செலவில் 75அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும் படி யாழ் அரசாங்க அதிபரால் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகித்தி தேரருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு,தெற்கு மக்களுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படுத்தும் முக்கிய இடமான நாகதீப விகாரையை அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தேரர் குற்றஞ்சுமத்தியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்கள் உட்பட்ட அனைத்து பொதுமக்களும் இந்த புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பை நல்கியுள்ள வேளை குறித்த அரசாங்க அதிகாரி உள்ளிட்ட குழுவினர் தனக்கு இவ்வாறானதொரு கடிதம் அனுப்பியுள்ளமை ம…

  14. கோத்தாவும் பசிலுமே மகிந்தவைத் தோற்கடித்தனர்- தயான் ஜெயதிலக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், தம்மை முதன்மைப்படுத்தினர். இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டியேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவருமான, தயான் ஜெயதிலக இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “போர்க்காலத்தில் மகிந்தவுக்கு பெரும் உதவியாக இருந்த சகோதரர்கள் போருக்குப் பின்னர் பலம் படைத்தவர்களாக மாறினார்கள். கோத்தாபய ராஜபக்ச திறமையானவர். ஆனால் அவர் தனது வரையறையை மீறி செயற்பட்டார், அதனை மகிந்த கட்டுப்படுத்தவில்ல…

  15. தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/11867

  16. கிணறு வெட்டும்போது மண்ணிற்குள் புதைந்திருந்த மர்மப்பொருட்கள் வெளிவந்தன! நல்லூர்ப் பகுதியில் நேற்று மாலை இரண்டு மர்மப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது, என்றும் மேலுமொரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன் விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த மர்மப்பொருட்களை பாரப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். …

  17. காணாமல்போன மகனின் நினைவால் விரக்தியடைந்த தந்தை தற்கொலை! தனித்து துயரில் தவிப்பதாக தாயார் சாட்சியம்! கடைக்குச் சென்ற மகன் வீடு திரும்பாத நிலையில் விரக்தியடைந்த தந்தை ஒரு வாரம் கழிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காணாமல்போன பாடசாலை மாணவனான யோகநாதன் குருசேத்மன் என்பவரது தாயார் யோகநாதன் தவசிமணி நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவினுடைய விசாரணைகளின் போது சாட்சியமளித்தார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இடம்பெற்றது. …

  18. வித்தியா படுகொலை வழக்கு! பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்களையும் விசாரிக்க உத்தரவு! புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப்பிரதேசத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா கடந்த வருடம் பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகி…

  19. நாட்டுக்கும் மக்களுக்கு அழிவை கொண்டு வரும் சகல சந்தர்ப்பங்களிலும் பௌத்த மத தலைவர்கள் முன்னுக்கு வந்து அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பேசுவதை இந்த காலத்தில் இனவாதம் என வர்ணிக்கின்றனர் எனவும் இவ்வாறு நாட்டுக்காக பேசிய 48 பிக்குமாரை அரசாங்கம் கைது செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற துறவிகளின் குரல் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கம் அழித்து வருகிறது. ஜா-எல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நடை பயிற்சி செய்யும் பாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் இரவு நேரங்களில…

    • 2 replies
    • 629 views
  20. வடக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கிய போதும், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனையளிக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலகவுக்கு தெரிவித்துள்ளார். தெற்கு ஊடக சகோதரத்துவத்தையும் வடக்கு ஊடக சகோதரத்துவத்தையும் ஒன்றாக இணைக்கும் நல்லிணக்க பயணம் எனும் தொனிப்பொருளில் ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் ஆகியோர் நேற்று மாலை முதலமைச்சரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விட…

    • 1 reply
    • 258 views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதியதொரு கூட்டணியினை அமைக்கும் நோக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் உட்பட வேறு சிலரும் பங்குபற்றியுள்ளனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியைச் சேர்ந்தவருமான வரதராஜப் பெருமாள் பங்கேற்பதாக இருந்தபோதிலும் இறுதிநேரத்தில் இவர் சமூகமளிக்க…

    • 1 reply
    • 439 views
  22. வடமாகாணத்தில் வெசாக் தினத்தில், தமிழில் பிரித் ஓதவுள்ளோம்' என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வெசாக் கொண்டாட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'வெசாக் தினத்தில் நாகவிகாரை, துரையப்பா விளையாட்டு மைதானம், கிளிநொச்சி, பூநகரி ஆகிய இடங்களில் வெசாக் கூடுகள் அமைக்கவுள்ளோம். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வெசாக் தினத்தை கொண்டாடவுள்ளோம். வடக்கில் அமைக்கப்படும் வெசாக் கூடுகளைப் பார்வையிட தெற்கிலிருந்து பொதுமக்களை அழைத்து வரவுள்ளோம். வெசாக் கூடுகளின் அருகில் தானங்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிகளாக பசுமாடுகள் வழங்கல் என்பவற்றையும் மேற்கொள்ளவுள்ளோம்…

  23. கொக்கிளாய் விகாரை பற்றி எனக்கு தெரியாது! முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோமான முறையில் அபகரித்து அமைக்கப்பட்டு வரும் விகாரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மேற்படி சட்டவிரோத விகாரை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது. அது தொடர்பில் விசாரித்து ஆராய்ந்த பின்னரே பதில் கூறம…

  24. பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை தொடர்பில் தம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். தமது இரண்டு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் அபோட் கட்டுரையொன்று அப்போட் வெளியிட்டிருந்தார். அதில், இலங்கையில் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் தாம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தவே முயற்சித்ததாகவும், தேசிய நலனைக் கருத்திற் கொண்டு இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்பது தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்…

  25. தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியும் என மொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தனிநாடு உருவாகாமல் ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழவேண்டும்இதமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று காலை மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் சமாதான சகவாழ்விற்கான அணுகுமுறைகள் பற்றிய தேசிய கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.