Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்த குழப்புகின்றார் குழப்புகின்றார் மஹிந்த சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போதும் முன்னெ­டுத்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவுப­டுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட கூட்­டத்­திற்கு நாம் அஞ்­ச­மாட் டோம். அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை என முன்னாள் ஜனா­தி­ப­தி­ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் மஹிந்த ராஜ­பக் ஷவின் நீண்ட நாள் கனவு ஒர…

  2. 23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் '2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார். இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது. பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/168461/-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%…

  3. நல்லாட்சி அரசைக் கவிழ்க்க பொது எதிரணி சதித்திட்டம்! அதற்கே மின்தடை ஏற்படுத்துவதாக யாழ்.வந்த கல்வி அமைச்சர் தெரிவிப்பு! நல்லாட்சி அரசை ஜனநாயக முறையிலும், மக்களுக்கு உண்மைகளைத் தெரிவித்தும், அவர்களின் போராட்டங்கள் மூலமாகவும் தான் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்று பொது எதிரணியினர் தேங்காய் உடைத்தும், மின்சாரத்தைத் துண்டித்தும் அரசைத் திசை திருப்புவதற்கும், கவிழ்ப்பதற்கும் சதிகளைச் செய்கின்றனர். இவ்வாறு நேற்று யாழ்.வந்த கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் நாங்கள் அதற்கு அஞ்சப்போவதில்லை. மக்கள் ஆதரவோடு எதிர்வரும் ஐந்து- பத்து வருடங்களுக்கு நாட்டை அபிவிருத்திப் பாதை நோக்கி முன்னெடுத்துச் செல்லத் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். …

  4. படிப்படியாக இராணுவப்பிரசன்னத்தை குறைப்பதுதான் முறை! ஆஸி.தூதுவரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு! போர் முடிவடைந்து 6வருடங்களாகி விட்டன. இராணுவப்பிரசன்னத்தை படிப்படியாக குறைப்பது தான் முறை. அதுமட்டுமல்ல இராணுவப்பிரசன்னம் தொடர்வது எமது மக்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது எனவும் வடமாகாண முதலமைச்சர் அவுஸ்திரேலிய தூதுவரிடம் எடுத்துரைத்தார். அவுஸ்திரேலிய தூதுவர் பீறின் கஸ்சன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடையில் சந்திப்பு ஒன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஆஸி. தூதுவரிடம் கலந்தாலோசித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே வடக்கு முதல்வர் சி.வி மேற்கண்டவா…

    • 2 replies
    • 293 views
  5. 'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்" நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தனது இன…

    • 4 replies
    • 458 views
  6. http://www.thaaitamil.com/2016/03/blog-post_998.html கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியதையும் குறிப்பிட்டிருந்தோம். இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களில் சிலரும் வந்திருந்தனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகளோடு அழைத்துவந்திருந்தோம். சிவகுமாரும் வந்திருந்தார். அவர்களே செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு …

  7. கொழும்பு: ஆர்ப்பாட்டத்தால் ஏற்படும் அசௌகர்யங்களைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும் போது மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை தடுக்கக்கூடிய வேலை திட்டமொன்றை தயார்படுத்துமாறு காவல்துறையினருக்கு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். பேரணிகள், ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் அல் ஹுசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பில் அமைந்துள்ள ஐ.நாவின் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. வீதிகளை வழிமறைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு பெரும் அசவுகரியம் ஏற்பட்டதாக குற்ற…

  8. யாழ்ப்பாணம் வந்தார் கல்வியமைச்சர்: கோட்டையில் மத்திய கலாசார நிலையம் திறப்பு! கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று யாழ். மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்று காலை பலாலி விமானப்படைத்தளத்தை வந்தடைந்த கல்வியமைச்சர், யாழ். ஒல்லாந்தர் கோட்டையினுள் அமைக்கப்பட்ட நகலுரு மற்றும் நூல் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார். அத்துடன், மத்திய கலாசார நிலையமும் கல்வியமைச்சின் அனுசரணையுடன் திறந்து வைக்கப்பட்டது. குறித்த மத்திய கலாசார நிலையத்தில், பௌத்த மதச்சின்னங்களே அதிகளவில் காணப்பட்ட போது, அதனை அவதானித்த கல்வியமைச்சர், குறித்த நிலையத்தில் அனைத்து மதங்களைச் சார்ந்த சின்னங்களையும் சரிசமமாக பகி…

  9. நல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தன் - கேஷப் கலந்துரையாடல் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் ஆகியோர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அதுல் கேஷப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/4340

  10. தாதியத்தை கொலை செய்யாதே! யாழில் போராட்டம்! யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இவர்கள் இன்று முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து சென்று கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் அனைத்து ஊழியர் சங்கத்தினரும் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை கைத…

  11. இலங்கையில் தொடரும் அனர்த்தம் : மற்றுமொரு மின்மாற்றி வெடித்துத் தீப்பிடிப்பு நீர்கொழும்பு – கொடுகொட ஓபாத்த பிரதேசத்திலுள்ள உப மின்நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் தீப்பற்றலினால் குறித்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பிரதான மற்றும் உப மின்நிலையங்களில் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இந்த தீப்பற்றுதல் எவ்வாறு ஏற்பட்டது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://onlineuthaya…

  12. கொல்லவே நினைத்தேன் அழகன் கனகராஜ் மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்' என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 'எந்தவொரு ஜனாதிபதியும் யுத்தம் செய்யவேண்டாம் என்று கூறவில்லை' என்றார். 'இந்த யுத்தத்தில், இடங்களைப் பிடிப்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, பயங்கரவாத அமைப்பில் இருந்தவர்களைக் கொல்லவேண்டும். அவ்வாறு செய்தால் யுத்தம் நிறைவடையும் என்ற சிந்தனையிலேயே யுத்தத்தை முன்னெடுத்தேன்' என்றும் அவர் கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊட…

    • 1 reply
    • 559 views
  13. மக்களது காணிகள் ஒருபோதும் அபகரிக்கப்படாது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் தொடர்பில் எழுகின்ற குற்றச்சாட்டை நிராகரித்த இந்திய துணைத்தூதுவர் நடராஜ், இந்த நடவடிக்கைகளுக்கு மக்களது காணிகள் ஒருபோதும் அபகரிக்கப்படாது என உறுதியளித்தார். அதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான நிலையத்திற்கு சொந்தமாகவுள்ள 500 மீற்றர் தொடக்கம் 800 மீற்றர் அளவிலான நிலம் பயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்திய விமான ஆணையகத்தின் சென்னையை சேர்ந்த ஐவர் அடங்கிய அதிகாரிகள் குழு நேற்று வியாழக்கிழமை பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இதனைத் தெரிவித்தார். பலாலி…

    • 1 reply
    • 335 views
  14. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி யாழ்ப்பாணத்தை அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இடம்சார் அமைவிட ரீதியில் சமநிலையான பொருளாதார வாய்ப்புக்களை பரவலடையச் செய்வதற்கும், முழுமையான பொருளாதார வசதியை விரைவுபடுத்துவதற்கும், வட பகுதியிலுள்ள வறுமையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக …

  15. பிள்ளையானுக்கு மேல் நீதிமன்றம் பிணை மறுப்பு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=78139

  16. மகிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அறிவுறுத்தல்கள் தடைகளை மீறி நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் வாரத்தில் இந்த உறுப்பினர்கள் அழைக்கப்…

  17. அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய கைதிகளுக்கு மாத்திரமே விடுதலை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் விடுதலை செய்யப்படுவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் குற்றம்சாட்டினார். தன்னை கொலை செய்ய வந்த குற்றவாளியை விடுதலை செய்யுமாறு நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஜனாதிபதிக்கு அமைச்சர் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தவிடயம் குறித்து கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல த…

  18. நாமலின் கார் பந்தையம் ரத்து! மகிந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரத்திட்டத்தில் நாமல் ராஜபக்சவுக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த கார் ஓட்டப்பந்தய ஓடுபாதை திட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தினால் நீக்கப்படவுள்ளது. சீன முதலீட்டுடனான துறைமுக நகரத் திட்டமானது, அதிலுள்ள தேவையற்ற அம்சங்கள் நீக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரச தொழில் முயற்சி மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சீனாவுக்கு இலவசமாக காணி ஒதுக்…

  19. வித்தியா படுகொலை: நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு! புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர் குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இன்னமும் மரபணு பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. மேலும் வித்தியா வன்புணர்வுக்கு உட்ப…

  20. வித்தியா கொலை வழக்கு விரைவில் மேல் நீதிமன்றுக்கு! புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இன்றைய வழக்கு விசாரணையின் போதும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் டி.என்.ஏ அறிக்கை உட்பட அறிக்க…

  21. அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்! முன்னைய அரசு வடக்கு மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கோடிக்கணக்கான பொருள்களை வாரி வழங்கியபோதும் அன்று அம்மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித பொருட்களையும் பகிர்ந்தளிக்காத நான் இன்று வடக்கிற்கு செல்லும்போது மிக மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அவர்கள் வரவேற்கின்றார்கள். இதற்கு காரணம் யாதெனில் இதயத் துடிப்பை இனங்கண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று க…

    • 1 reply
    • 304 views
  22. 'கீழாடையுடன் மட்டுமே 90 நாள் வைத்திருந்தனர்' '2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சரத் பொன்சேகாவுக்கான நான் வேலை செய்தேன். அதற்காக, என்னை கைதுசெய்து 90 நாட்கள், கீழாடையுடன் மட்டுமே அடைத்துவைத்திருந்தனர்' என்று பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் சேனக்க டி சில்வா தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், '2010 பெப்ரவரி 08ஆம் திகதியன்று, சரத் பொன்சேகாவுடன் சேர்த்து என்னையும், அன்றிரவே கைதுசெய்தனர். பின்னர், நான்காம் மாடிக்குக் கொண்டு சென்றனர். அதிகாலை 2 மணியளவிலே…

    • 1 reply
    • 566 views
  23. ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது. இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதற்கே எதிர்ப்ப…

  24. விடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்! மட்­டக்­க­ளப்பு தர­வையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழி­னத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய எமது உற­வு­களின் சமா­திகள் அழிக்­கப்­பட்டு அந்த பகு­தி­களில் பெரும்­பான்மை இனத்­தவர் குடி­யேற்­றப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்தார். வாகரை, இறா­லோடை வள்­ளுவர் வித்­தி­யா­லய வரு­டாந்த இல்ல விளை­யாட்டுப் போட்­டியில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த பிர­தே­ச மக்­களைப் பொறுத்­த­வ…

  25. ஹைட் மைதானத்தில் சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார் கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர். சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, …

    • 3 replies
    • 540 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.