ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
தேசிய சோக தினத்தன்று கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடை இல்லை! அத்ததஸ்ஸி தேரரின் மறைவையொட்டி நாளைய தினம் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை தடுக்கும் சட்ட அதிகாரமும் இல்லையென அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், குறித்த போட்டியினை வேறொரு தினத்தில் நடாத்துமாறு இதன் ஏற்பாட்டாளர்களை கோருவதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை அஸ்கிரிய பீடத்தின் வணக்கத்துக்குரிய அத்ததஸ்ஸி தே…
-
- 0 replies
- 167 views
-
-
அறிவிப்பாளர் போட்டியில் நாடளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்! நாடளாவிய ரீதியிலே இலங்கை முழுவதுமாக ஊடகத்துறையினரால் நாடாளுமன்ற அனுசரணையுடன் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறப்பான அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து கொழும்பு இளைஞர் நாடாளுமன்றத்திற்கு குரல் பதிவினை பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அதனையடுத்து 1ம் 2ம் 3ம் போன…
-
- 0 replies
- 340 views
-
-
பசிலின் கட்சி உறுப்புரிமை ரத்து முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளரான ரவி கிருசாந்த கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பஸில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் பதவியேற்றார். எனினும், பசில் ராஜபக்ச எந்த சந்தர்ப்…
-
- 0 replies
- 246 views
-
-
உண்ணாவிரதத்தைக் கைவிடத் தீர்மானித்தனர் அரசியல் கைதிகள் : சட்டமா அதிபரின் உறுதி மொழியால்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழிக்கு அமைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் தங்களது போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக வழக்கு விசாரணை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நவாவி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்ப வகையில் போதியளவு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 272 views
-
-
புலிகளிடமிருந்து மீட்ட தங்கம்: பொன்சேகாவின் கருத்துக்கு பசில் மறுப்பு மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக பசில் ராஜபக்ஷ இருந்தார் இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தில் ஒருபகுதி கையாடல் நடந்துள்ளது என்ற அர்த்தத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக, தமிழர்களை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வைப்பதற்காக …
-
- 1 reply
- 543 views
-
-
யாழில் உயர்தர மாணவர் குழு சாதாரண தர மாணவர்களிடம் கப்பம் கோரி தாக்குதல் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மாணவர் குழு ஒன்று சாதாரண தரத்தில் கற்கும் மாணவர்களிடம் கப்பம் கோரி தாக்குதல் மேற்கொண்டதில் மாணவர் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த புதன் கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அன்றைய தினம் பாடசாலையில் நான்காம் பாட வேளை க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் வகுப்பறைக்குள் ஆசிரியர் இல்லாத போது புகுந்த உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் குழு ஒன்று அங்குள்ள மாணவர்களிடம் கப்பமாக பணம் கோரியுள்ளனர். அவர்கள் கோரிய பணத்தினை கொடுக்க மற…
-
- 1 reply
- 442 views
-
-
மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழ் அரசியல் சரித்திரத்தில் ஒரு அத்தியாயத்தின் முடிவு! மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளரும் தமிழ் அரசியலில் மங்கையரின் பங்கை மாண்புறச் செய்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் என வடமாகாண் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1954ம் ஆண்டு இளம் அரசியல்வாதியாக இருந்த அட்வகேட் அமிர்தல…
-
- 2 replies
- 369 views
-
-
இலங்கை: வேனுக்குள் எரிந்த நிலையில் 5 சடலங்கள், புலனாய்வுத்துறை விசாரணை எரிந்த வேனிலிருந்து கூரிய கத்தி போன்ற ஆயுதம் ஒன்றும் மூன்று கைத்தொலைபேசிகளும் கிடைத்துள்ளதாக அந்த இடத்திற்கு சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர் தெரிவித்தார் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல பிரதேசத்தில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வேன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து சடலங்கள் தொடர்பில் காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். புஜ்ஜம்பொல-இரமெதகம வீதியில் கொஸ்ஹேன வத்த என்ற ஒதுக்குப்புறமான இடம் ஒன்றிலேயே எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து எரிந்துபோன இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காணமுடியாதவாறு இந்த சடலங்கள…
-
- 0 replies
- 500 views
-
-
தேர்தல்களை நடத்த முடியாது: பிரதமர், சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பறிக்க இடமளிக்க முடியாது. எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என சபையில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதால் அரச தரப்பிற்கும்- எதிர்தரப்பினருக்குமிடையான கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.முன்னணி எம்.பி.தினேஷ் குணவர்த்தன உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்வைத்த 23இன் கீழ் இரண்டில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இன்று வெள்ளிக்கிழை சபையில் பதில் வழங்கியதையட…
-
- 0 replies
- 439 views
-
-
மூன்று மாதங்களில் தயாராகுங்கள் : பிரதமர் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) மூன்று மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தபடுவார்கள். சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்தி வழக்குகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் பிரதி சபா நாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. வாய்மூல வினாக்களுக்களுக்கான கேள்வி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு அணியின் எம்.பி.யான உதயபிரபாத் கம்மன் பில அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமரவிக்கிரமவிடத்தில் ஜோர்ஜ் சொரோஸ் ஐக்கிய இராச்…
-
- 0 replies
- 423 views
-
-
யாழில் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் பாசையூர் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் உறுப்பினர் இ.ஆனோல்ட் அவர்களது பரிந்துரைக்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு, இவ் பற்றிக் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என்பன வழங்கப்பட்டு. இன்றைய தினம் உத்தியோகப்பூர்வ…
-
- 0 replies
- 335 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்தார். நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், போர் முடிவ…
-
- 5 replies
- 898 views
-
-
வாழும் கலை அமைப்பு புதுடெல்லியில் ஏற்பாடு செய்துள்ள உலக கலாச்சார விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புது டில்லி செல்லவிருந்த பயணம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. வாழும் கலை அமைப்பினரால் மைத்திரிபால சிறிசேன, நேபாள ஜனாதிபதி பிஜந்தியா தேவி பண்டாரி, சிம்பாப்வே ஜனாதிபதி ரோபேர்ட் முகாபே, ஆப்கானிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் இவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்வுக்காக மரங்கள் அழிக்கப்பட்டதாக தொ…
-
- 0 replies
- 342 views
-
-
‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40வது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்புப்பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் “வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. சத்தியத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது சுயநல இன்பங்களைத் துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் தியா…
-
- 0 replies
- 389 views
-
-
மன்னார் - துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு அருகில் உள்ள ஐஸ் மற்றும் கோழித்தீன் தொழிற்சாலைகளை அகற்றுமாற முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தொழில்சாலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் அதனை அகற்றி தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கிளியன் குடியிருப்பு பங்குத்தந்தை டெரன்ஸ் அடிகளார் தலைமையில் பங்கு மேய்ப்புச்சபை பிரதி நிதிகள் நேற்றுக் காலை வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இதன்போது வட மாகாணசபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகள், மன்னார் மாவட…
-
- 0 replies
- 336 views
-
-
உக்கிர பைரவபுரம். இந்தப் பெயரே கொஞ்சம் திகிலைக் கொடுக்கிறதல்லவா? யாழ்ப்பாணத்தில் படமாக்கப்படும் முதலாவது முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர் மெகா சீரியலின் பெயர்தான், உக்கிர பைரவபுரம். சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரியலின் கதை என்ன? மூன்று வெவ்வேறு ட்ராக்ககளில் ஆரம்பிக்கிறது கதை. முதலாவது ட்ராக், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் யாருக்கும் புரியாமல் மர்மமாக நடைபெறும் சில விஷயங்கள். இரண்டாவது ட்ராக், முன்பு யுத்தம் நடந்து தற்போது ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில், 22 வயதுப் பெண்ணுக்கு ஞாபகத்தில் வரும், 23 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்பிறவி நினைவுகள். மூன்றாவது ட்ராக், வெளிநாட்டு உளவுத்துறைகள், யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடந்த காலத்தில் இருந்து வைத்திருக்கும் உளவு …
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு! ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறையில் நோக்கி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்துள்ளது. புகையிரதம் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது, குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் குறித்த இளைஞர் படுத்திருந்துள்ளார். …
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்! [ வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2016, 12:31.40 AM GMT ] இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முதல் நிலையான இரண்டு அமெரிக்க நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ளன. எக்சொன் மொபில் மற்றும் லெம்பர்ட் ஒயில் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு குறித்த ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே பிரான்ஸ் நிறுவனமொன்று கனிய எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. கன…
-
- 3 replies
- 464 views
-
-
நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் அலுவலகத்திலிருந்த 12 ஆவணங்கள், 4 கணினிகள் எப்.சி.ஐ.டி தடுப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5 இல் உள்ள நாமல் ராஜபக் ஷவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் …
-
- 0 replies
- 270 views
-
-
மஹிந்த சிங்களத்தில் ஆடிய ஆட்டத்தை ரணில் ஆங்கிலத்தில் அரங்கேற்றுகிறார் இத்தனை காலமாக அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து வேலைத்திட்டங்களினாலும் எமது மக்கள் 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா கடனாளியாகி யுள்ளனர். இந்த கடன்தொகைக்கு வருடத்துக்கு வட்டி யுடன் செலுத்த வேண்டிய வருட தவணை கட்டணம் 1209 பில்லியன் ரூபா. அப்படியாயின் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 900 கோடி ரூபாவை ஒரு வருடத்திற்கு செலுத்தவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. தற்போது நாட்டில் வாழும் பொதுமக்கள் முதல் நாளை பிறக்கவிருக்கும் குழந்தை வரையில் ஒரு நபர் 5 இலட்சம் ரூபா என்ற கடன்தொகை செலு த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். எந்த விதத்திலும் மக்கள் தொ…
-
- 0 replies
- 504 views
-
-
குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார். அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார். அவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, 'தனது கட்சிக்காரரான துமிந்த சில்வா, குற்றங்களை ஒப்புக்கொண்டு, இந்த வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளார்' என, நீதவான் கிஹான் பி…
-
- 0 replies
- 348 views
-
-
மகிந்த தோற்கடிக்கப்பட்டமை நல்லதுக்கே! மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை நல்லதொரு திருப்புமுனை என முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் தமிழ் நாட்டில் வைத்து கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பம் தற்பொழுது உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://onlineuthayan.com/news/10509
-
- 0 replies
- 276 views
-
-
சிறைவாழ்வு தான் தமிழருக்கு தலைவிதியா? தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர். நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, சிறை வாழ்வுதான் தமிழருக்கு தலைவிதியா?, பதவிக்கு வரும்வரை வாக்குறுதி வந்த பின் மௌனம் ஏன்?, அரசியல் கைதிகளுக்கு மரணம் தான் தீர்வா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கிய…
-
- 0 replies
- 285 views
-
-
தங்கொட்டுவயில் வேன் ஒன்றில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு [ Friday,11 March 2016, 03:52:58 ] சிலாபம் தங்கொட்டுவ புதகம்பல பகுதியில் வேன் ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1 1 9 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தீக்கிரையான வேனிலிருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸ் குழுவொன…
-
- 0 replies
- 413 views
-
-
மஹிந்தவிற்கு எதிரான வழக்கு! ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு [ வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2016, 01:22.57 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த மனு கொழும்பு வர்த்தக நீதிமன்றில் நேற்று…
-
- 0 replies
- 367 views
-