Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சி.வி. எனக்கு மாணவன்..! வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் எனக்கு மாணவர். அவருக்கு நான் குரு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://onlineuthayan.com/news/8833

    • 2 replies
    • 484 views
  2. யாழ் நீதிபதிகளினால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்துத் தீர்ப்புக்களில் யாழ்மேல் நீதிமன்றம் தலையீடாது – நீதிபதி இளஞ்செழியன் தெரிவிப்பு யாழ் குடாநாட்டில் உள்ள நீதிபதிகளினால் பிறப்பிக்கப்படுகின்ற போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிட மாட்டாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு மீதான விசாரணையின்போது, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்…

  3. பிக்குகள் நால்வரும் விளக்கமறியலில் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இன்று சரணடைந்த நான்கு பிக்குகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராவணா பலய அமைப்பைச் சேர்ந்த இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, சிஹல ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன உள்ளிட்ட நான்கு தேரர்களே இவ்வாறு இன்று சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக க…

  4. சம்பந்தனும் சுமந்திரனும் ஈழம் குறித்து தைரியமாக பேசுவதற்கு என்ன காரணம்? புதிய விளக்கமளிக்கிறது தேசிய சுதந்திர முன்னணி தேசிய பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் விரிசலும் வடக்கில் தலைத்தூக்கியுள்ள பிரிவினைவாதமுமே இன்று சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்போர் பாராளுமன்றத்தில் தமிழீழ கோரிக்கைகளை தைரியமாக கோருவதற்கு வித்திட்டுள்ளன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார். அன்று தோற்கடிக்கப்பட்ட தமிழீழ கொள்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செயித் அல் {ஹசைன் மூலம் அடையும் முயற்சி பலமாக முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் தல…

  5. மீண்டும் இனவாதத்தை தூண்டுகின்றனர் மகிந்த தரப்பினர்! நாட்டில் அனைத்து மக்களும் வாழ வேண்டும். அனைவருக்கும் சமவுரிமை காணப்படவேண்டும். சகல தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்படுகின்ற அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்பு ஒன்றினை தயாரிக்குமாறே தங்களால் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை இல்லாமல் செய்வதற்காக நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் செயற்பாடுகளை மகிந்த தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை சிங்கள மக்கள் நம்பக்கூடாது என்று சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். http://onlineuthayan.com/news/8829

  6. வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்பு வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/166004/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%…

  7. சுமார் 400 வருடங்களிற்கும் மேலாக செழிப்புடன் விளங்கிய யாழ்ப்பாண ராசதானியின் வாரிசு ராஜா ரெமீஜியஸ் கனகராஜா. நல்லூரை இராசதானியாக ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்களின் பரிபாலனம் போர்த்துக்கேயரின் வருகையுடன் முடிவிற்கு வந்தது.யாழில் அரசபரம்பரைக்குரிய சங்கிலியன்தோப்பு அரண்மனைக்கு உரித்துள்ள குடும்பத்தின் வாரிசு இவர்.தற்பொழுது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். தற்போதும் அரச சம்பிரதாயங்களை கைவிடாமல் வாழ்ந்து வருகிறார். 2005ம் ஆண்டு அரசகுடும்ப உறுப்பினர்களின் ஏகோபித்த சம்மதத்துடன் அரசகுடும்பத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் சம்பிரதாய ராஜாவுடனான நேர்காணல் இது. 1. யுத்த சமயத்தில் இராணுவம் புலிகள் இருதரப்பையும் யாழ்ப்பாணத…

  8. எல்லையற்ற அநீதிகளுக்கு எதிராக வடகிழக்கில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர்- ஜனாதிபதி மைத்திரி வடகிழக்கு இஇளைஞர்கள் எல்லையற்ற அநீதிகளுக்கு முகம் கொடுக்க முடியாமலே அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கான காரணத்தை அறிந்து அந்த மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கவேண்டியது அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். பொலனறுவை வெலிகந்தைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபேதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் முப்பது வருடங்களாக கொடிய யுத்தம் நடைபெற்றது என்றும் 26 வருடங்களுக்கு முன்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோதிருந…

    • 8 replies
    • 647 views
  9. அரசமைப்புக்கு கருத்துக்கூற வடக்கில் இது இறுதிச் சந்தர்ப்பம்! யாழில் கருத்தறியும் அமர்வு ஆரம்பம்! புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு, யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று ஆரம்பமாகியது. கருத்தறியும் நிகழ்வு மக்கள் கருத்தறியும் குழுவின் சட்டத்தரணி லால் விஜயதுங்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் தமிழ் மக்கள் அனைவரும் இந்த கருத்தறியும் அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. இதேவேளை குறித்த அமர்வு யாழ்.மாவட்டத்தில் ந…

  10. அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் விரைவில் பேச்சு (வீடியோ) February 14, 2016 05:47 pm புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கொட்லாந்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் மேற்கொண்ட விஜயம் குறித்தும் சுமந்திரன் இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, மங்கள ச…

  11. இங்கிலாந்து எம்.பி.க்களால் இலங்கை எம்.பி.களுக்கு கருத்தரங்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்படும் விசேட கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பமாகிறது. நாடாளுமன்றத்தின் 1ஆவது செயற்குழு அறையில், மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில், கண்காணிப்புச் செயற்குழுப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. சட்டமூலங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும், இதன்போது விளக்கமளிக்கப்படும் என்றும் இந்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -…

  12. யானைக்குட்டி வளர்த்த தேரருக்கு பிடியாணை பொல்ஹென்கொடயிலுள்ள ஆலன் மத்தினியராமய விஹாரையில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, வண.உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவரிரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளதா, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸூக்கு அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/166071/%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE…

  13.  யோஷிதவுக்கு ஆதரவு: நான்கு வீரர்கள் இடைநிறுத்தம் டயலொக் றக்பி லீக் போட்டியின் போது, 'Y007' என எழுதப்பட்டிருந்த பட்டியை கைகளில் அணிந்திருந்த, கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நால்வரை இடைநிறுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தியகமயில், ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற போட்டியின் போதே, கடற்படை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் யோஷித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த வீரர்கள் பட்டிகளை அணிந்திருந்தனர். இதற்கமையவே, குறித்த வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். …

  14. 65 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­படும். முதற்­கட்­ட­மாக இவ்­வ­ருடம் 11ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­படும். இத்­திட்­டத்தின் மாதிரி வீடொன்று மார்ச் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்­பாணம் தெல்­லிப்­ப­ழையில் காட்­சிக்கு வைக்­கப்­படும். இந்த வீடு­களை மக்கள் சென்று பார்­வை­யிட முடியும். இந்த வீடு­க­ளுக்கு சோலார் மின்­சாரம், தள­பா­டங்கள், தொலைக்­காட்­சிப்­பெட்டி மற்றும் காஸ் அடுப்­பு­களும் வழங்­கப்­படும். பய­னா­ளி­க­ளுக்கு இவ்­வீ­டுகள் முற்­றிலும் இல­வ­ச­மா­கவே வழங்­கப்­ப­ட­வுள்­ளன. 2017 ஆம் ஆண்டு 18ஆயிரம் வீடுகள் என்ற ரீதியில் தொடர்ந்து மூன்று வரு­டங்­களில் 54ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிக்­கவும் நாங்கள் திட்­ட­மிட்­டுள்ளோம் என்று புனர் வா…

  15. 'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை' இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார் தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட-மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் கடந்த காலங்களில் அபிவிரு…

  16. 23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா லியோ நிரோஷ தர்ஷன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். http://www.virakesari.lk/article/3203

  17. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடுவேன்! வடக்கின் புதிய ஆளுநர் தெரிவிப்பு! போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று வடமாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவதே தனது இலக்காகும் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்பின்னர், தான் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்தும், தனது வேலைத்திட்டங்கள் பற…

  18. மக்கள் ஒப்புதல் வழங்கினாலே கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு! மக்களின் அனுமதி இருந்தால் மாத்திரமே மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நன்னீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்றது. சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ள…

  19. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்! : ரணில் வாக்குறுதி! போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக பங்களிப்புக்கு தமது அரசு தயங்கவில்லை என்றும், ஆனாலும், இறுதித் தீர்ப்பு உள்நாட்டு நீதிமுறைமைகளுக்கு ஏற்பவே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரில் நேற்று வழிபாடு மேற்கொள்ள சென்றிருந்த பிரதமர் ரணில்,அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே மேற்படி விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்…

  20. யோஷித ராஜபக்ஷ இருக்கும் சிறைப்பகுதி விஷேட வலயமானது சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம் பெற்ற பண மோசடி சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விஷேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷ உட்பட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் இருந்த பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். குறித்த சிறைப்பகுதியின் அருகில் கையடக்க தொலைபேசி ஒன்று கிடைக்கப்பெற்றதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். http://www.virakesari.lk/article/3180

  21. நாங்கள் அதி­கா­ரங்­களை கையாள தெரி­யா­த­வர்­களா? நாம் ஆட்சி அதி­கா­ரங்­களை கையா­ளத்­தெ­ரி­யா­த­வர்கள் என்ற குற்­றச்­சாட்டு தற்­போது எழுந்­துள்­ளது. இக்­குற்­றச்­சாட்டு தென்­னி­லங்­கை­யா­ளர்­க­ளாலும் வெளி­நாட்­ட­வர்­க­ளாலும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்.முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் மேலும் தெரி­விக்­கையில், மத்­திய அரசின் ஆட்சி அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­க­ப­ட­வேண்டும் என்­பது எமது போராட்­ட­ம…

  22. ஜேர்மன் சென்றார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஜேர்மனுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியுடன் தொழிற்றிறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் சென்றனர். ஜேர்மன் அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயம் செய்தஜனாதிபதி, ஜேர்மன் நாட்டின் நிதி பெற்று இலங்கையில் எரிசக்தி மற்றும் மின்சக்தியினை புத்துயிரூட்டும் தொழிற்பாடுகள் தொடர்பிலும் வர்த்தக பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் கவனம் செலுத்தவுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவரை வரவேற்பதற்காக ஜ…

  23. உலகில் பெண்களின் தற்கொலை வீதம் ; இலங்கைக்கு மூன்றாம் இடம் Published by Gnanaprabu on 2016-02-15 11:08:06 உலகில் பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்து செல்வதாகவும் அதில் இலங்கைக்கு மூன்றாம் இடத்தில் உள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து காதலர் தினத்தை அடுத்து இந்த சதவீதம் மிகதுரிதமாக அதிகரிப்பதாக தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நாளொன்றுக்கு பெண்களில் தற்கொலை வீதம் 4 தொடக்கம் 5 ஆகவும்,உலக அளவில் பெண்களின் தற்கொலை வீதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெறுகின்றது. குறிப்பாக இலங்கையில் கொழும்பு, களுத்துறை, நீர்கொழும்பு, கண்டி ஆக…

  24. சோதிட நம்பிக்கையில் பின்புறம் திரும்பி அலுவலகத்தை திறந்து வைத்தார் மகிந்த! முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு சோதிட நம்பிக்கை அதிகமாக உள்ளதன் காரணமாக தனது புதிய அலுவலகத்தை பின்புறம் திரும்பிக்கொண்டு திறந்து வைத்துள்ள சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் அலுவலகம் நேற்று முன்தினம் பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான சுபநேரத்தை அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச உள்ளிட்டோர் குறித்துக் கொடுத்திருந்தனர். எனினும் சோதிடர்கள் குறித்துக் கொடுத்த சுபநேரத்திற்கு உகந்த திசையானது அலுவலக நுழைவாயிலின் எதிர்த்திசையில் அமைந்திருந்தது. இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச தனது அலுவலக நுழைவாயிலின் அருகில் வந்து எதிர்ப்புறமாக திரும்பி…

  25. மைத்திரி வைத்த வெடிகுண்டு! சிதறி போன மஹிந்தவின் கனவு [ திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2016, 04:07.08 AM GMT ] இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்ஷர்களின் பூரண ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளளார். இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், மஹிந்த அணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கத்திலிருந்து விடுவிட்டு, அதற்கு மாற்றீடாக வேறொரு அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.