ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் 10 Dec, 2024 | 12:51 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை…
-
- 1 reply
- 554 views
- 1 follower
-
-
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு December 10, 2024 09:24 am 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, “பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்க…
-
- 0 replies
- 433 views
-
-
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்! December 10, 2024 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் முடிவடைந்தது. https://eelanadu.lk/நீதி-கோரி-தீச்சட்டியை-ஏந/
-
- 1 reply
- 253 views
-
-
சபாநாயகர் அசோக ரன்வலவின் ‘கலாநிதி’ தூக்கப்பட்டது! adminDecember 10, 2024 சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து.’கலாநிதி’ என்ற சொல்லை நீக்கியுள்ளது. முன்பு ‘கலாநிதி’அசோக ரன்வல என்று குறிப்பிடப்பட்டிருந்தது., இப்போது அவரது பெயர் ‘அசோக ரன்வாலா எம்.பி’ என்று தோன்றுகிறது, இது அவர் ‘கலாநிதி’ பட்டம் பெற்றதாகக் கூறப்படுவது சட்டபூர்வமானதா என்பது குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. சபாநாயகரின் சுயவிவரத்திலிருந்து.’ கலாநிதி ‘ என்ற தலைப்பை நீக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இணையதளம் புதுப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், காப்பகப்பட…
-
- 1 reply
- 208 views
-
-
நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு; மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் - நளின் பண்டார சாடல் 10 Dec, 2024 | 02:07 AM (எம்.மனோசித்ரா) நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். திங்கட்கிழமை (9) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெ…
-
- 0 replies
- 154 views
-
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர் 10 Dec, 2024 | 02:11 AM தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் தேசிய ஷுரா சபை பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை (6) சந்தித்த தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள்,…
-
- 5 replies
- 472 views
-
-
பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல் 10 Dec, 2024 | 02:14 AM (நா.தனுஜா) சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு க…
-
- 1 reply
- 197 views
-
-
உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 10 Dec, 2024 | 05:47 AM ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.
-
- 1 reply
- 213 views
-
-
உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை - ரணில் 10 Dec, 2024 | 02:33 AM மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பா…
-
- 0 replies
- 157 views
-
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு எலிக்காய்ச்சலா என சந்தேகம் திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார…
-
-
- 9 replies
- 734 views
- 1 follower
-
-
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது! பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் 16 பேரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செ…
-
- 0 replies
- 135 views
-
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்! December 9, 2024 07:01 pm முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்க்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (08) வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …
-
-
- 6 replies
- 368 views
-
-
அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி December 9, 2024 08:15 pm எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற "2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர…
-
- 0 replies
- 125 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்! நடந்தது என்ன? - ஜே.வி.பி நியூஸ்
-
-
- 17 replies
- 929 views
- 1 follower
-
-
இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313390
-
- 0 replies
- 141 views
-
-
யாழில் நாளை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவையும் இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். https://thinakkural.l…
-
- 0 replies
- 332 views
-
-
பார் பேமிட் ஏன் வழங்கினேன்?; ரணில் விளக்கம். கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கப்பட்ட உரிமங்கள் ஊடாக, குறித்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு, 2022 வரை கலால் உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் பணம் வசூலிக்கவில்லை. அப்போது, நாட்டில் நேரடி வரியை இழக்கு…
-
- 5 replies
- 487 views
-
-
விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 5 replies
- 551 views
-
-
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச உதவிகளை வழங்கும் ஜப்பான் ஜப்பானின் தூதுவர் அகியோ இசொமதா, AKIO ISOMATA, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார். நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்காக இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09) மாலை இடம்பெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (J…
-
- 0 replies
- 154 views
-
-
நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர் கைது ! நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து குறித்த கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவர் இன்று திங்கட்கிழமை (09) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 419 views
-
-
வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் கைது! வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் , பாமன்கட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து BMW மற்றும் KDH ஆகிய இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் கொட்டாவை பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனம் ஒன்றிலிருந்து வாடகைக்கு பெற்ற KDH ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை மீரிகம பிரதேசத்…
-
-
- 1 reply
- 260 views
-
-
10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல் வருகிறது இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அடங்கிய கப்பல் அரிசி கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியைத் தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அரிசி இறக்குமதிக்கான வரையறைகளையும் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதற்கமைய சிறிய துறைமுகங்களிலிருந்து பல இறக்குமதியாளர்களால் கொள்வனவு செய்யப்பட்ட செய்யப்பட்ட 20, 000 மெட்ரிக் தொன் அரிசி எதிர்வரும் வியாழக…
-
- 0 replies
- 431 views
-
-
யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து திருடிய நபர் பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து300 தங்கப்பவனுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 லட்சம் ரூபா பணத்தினையும் திருடிய நபரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும்…
-
- 0 replies
- 189 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி! யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று இன்று திங்கட்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி!
-
- 0 replies
- 165 views
-
-
ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ளார். திட்டமிடப்பட்ட தேர்தலை இரத்து செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் முடிவின் விளைவாக ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 10% அநாவசிய செலவினம் எற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின…
-
- 0 replies
- 142 views
-