Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் வெற்றிக்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா விசாரணை நடத்தப்பட வேண்டும் - UNP:- 30 நவம்பர் 2015 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக:கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 2005ம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்களின் ஆணையை மாற்றியமைப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொ…

  2. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்! - சரத் பொன்சேகா [Monday 2015-11-30 08:00] தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல்கள் ஏற்படும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல்கள் ஏற்படும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய…

  3. வடக்கில் 10 பேரில் ஒருவருக்கு முள்ளந்தண்டு பாதிப்பு! - போர் தந்த பரிசு [Monday 2015-11-30 08:00] போரின் காரணமாக வடக்கில் 10 பேருக்கு ஒருவர் முள்ளந்தண்டு பாதிப்பினால் விசேட தேவை கொண்டவராக வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. போரின் பின்னர் பலர் முள்ளந்தண்டு காயங்கள் உட்பட்ட அதற்கு சமமான இயலாமைகளை கொண்டுள்ளனர் என்று ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. போரின் காரணமாக வடக்கில் 10 பேருக்கு ஒருவர் முள்ளந்தண்டு பாதிப்பினால் விசேட தேவை கொண்டவராக வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. போரின் பின்னர் பலர் முள்ளந்தண்டு காயங்கள் உட்பட்ட அதற்கு சமமான இயலாமைகளை கொண்டுள்ளனர் என்று ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்மையில் 50 சக்கர நாற்காலி…

  4. மஹிந்த ஆதரவு பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம்:- 30 நவம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர் எனவும் ஏனைய இருவரும் கொழும்பு, மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் இண…

  5. அடுத்த வருடம் இலங்கை வருகிறார் டேவிட் கெமரூன்! - போர்க்குற்ற விசாரணையில் கவனம். [Monday 2015-11-30 09:00] பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரச…

  6. பாரிய குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் கூறினாலும், ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், பாரிய குற்றங்களை புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர் மேலும் தெரிவிக்கையில், ’85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் 3 பேருக்கு உடனடியாக புனர்வாழ்வு அ…

  7. புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை – ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாத்தை பிரதிபலிக்கவில்லை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் பிரதிநிதி;த்துவம் செய்யவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பெரும்பான்மை தமிழ் மக்களின் அபிலாஸைகளையும் எதிர்ப்பார்ப்பிற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் குரல் கொடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார். மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் அடிப்படைவாதம் போன்றன பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எ…

  8. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்…

  9. "புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப் படுவதனால் குண்டு துளைக்காத வாகனம் வேண்டும்" மஹிந்த: தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதனால் தமக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்று தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்து வருவதனால், தமக்கு ஓர் குண்டு துளைக்காத வாகனம் அவசியம் என அவர் கோரியுள்ளார். தமது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://glo…

  10. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், மேலும் கூறுகையில், "நாட்டில் புதிய அரசொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய அரசில் அங்கம் வகிப்பதில் நான் பெருமையடைகின்றேன். இந்த அரசினூடாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இனவாதம் பேசியதால்தான் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் நாம் தோல்வியடைந்தோம். எனவே, இனவாதம் போதும்; வேண்டாம் என எமது தரப்பினருக்கும், தமிழ்த் தேச…

  11. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின் 10,000 புத்தகங்கள் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இணைந்து யாழ் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்றனர் கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் போயின. இதனையடுத்து, இந்த நூலகம் படிப்ப…

  12. அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்றும் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக சில அரசியல் கைதிகளை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என்றும் வடக்கு முதல்வர் …

  13. இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …

  14. இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான முறையில் சந்தித்தமையானது பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் அவமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்…

  15. எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர் சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல தடவை உண்ணாவிரதங்களை மேற்கொண்டனர். அரசியல் தலைவர்களாலும் நல்லாட்சி ஜனாதிபதியினாலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தது .சில கைதிகள் கடும் நிபந்தனை பிணையுடன் விடுவிக்கப்பட்டனர் சிலருக்கு புனர்வா…

  16. தற்போது சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீட்டியாகொட கஹாவ வெரகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தர்மசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் குறித்து மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, வரவும் இல்லை செலவும் இல்லை என தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145919&category=TamilNews&language=tamil

  17. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரான்ஸ் சென்றார். ஐ.நா.வின் காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி பிரான்ஸ் சென்றுள்ளார். 21 ஆவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்று மற்றும் 147 நாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின் போது பாரீஸில், பிரான்ஸ் வாழ் இலங்கையர்களை சந்திக்கவிருந்தார். பிரான்ஸ் அதிகாரிகளின் ஆலோ…

  18. என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். அகிலம் அறிந்த மூத்த குடி தமிழ் குடிக்கு என்று, தனி நாடு கோரி தமிழீழ விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை மெய், ஆன்மா ஒன்று சேர மனதில் நிலை நிறுத்தும் வருடத்தின் அந்த ஒரு புனித நாள். …

  19. 29 மில்லியன் செலவில் புணர் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்ட குளத்தில் கசிவு - குளோபல் தமிழச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் வாண்கட்டிற்கு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளது, குறித்த கசிவு தொடர்பில் பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், அவரது ஆலோசணையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குளம் 2010ம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புணரமைப்பு செய்யப்பட்டது. சுமார் 29 மில்லியன் செலவில் புணர் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 2013ம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வாண்கட்டின் கீழ் பகுதியில் கசிவு ஏற்பட்டதனை தொடர்ந்து விவசாயிக…

  20. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பெற்றது,186,000 என்ற சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலே எ…

  21. மஹிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகிய இருவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அலகபெருமவுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு உறுப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ராஜபக்ச ஆட்சியில் இருந்து 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டு மீண்டும் ராஜபக்ச தரப்பில் இணைந்து கொண்ட பவித்ரா வன்னியாராச்சி இந்த நாட்களில் மிகவும் அமைதியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச தரப…

  22. இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கா விட்டால், 'சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்து மடிவேன்' என்று செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்துக்குள் 2012ம் ஆண்டு ஆவேசத்துடன் உரையாற்றியிருந்தமையும், 2013ம் ஆண்டு முடிந்து, 2014ம் ஆண்டும் முடிவடைந்து, தற்போது 2015ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே இருப்பதும், தற்போது அவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் எனும் அரச உயர் பதவியை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 'தமிழரசுக்கட்சி வந்தாலென்ன வராவிட்டாலென்ன, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளுடன் இணைந்து ரெலோ கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தமிழ் கூட்டமைப்பை பதிவு செய்ய…

  23. மஹிந்த ஆட்சியில் 12,000 புலிகள் விடுதலை செய்யப்பட்டபோது எதிர்க்காதவர்கள் - வாய் திறக்காதவர்கள் 39 சந்தேக நபர்களை தற்போதைய அரசு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி முன்னெடுக்கப்படவேண்டும். குறைபாடுகளை பேசித் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லும்போது…

  24. (கொழும்புமிரருக்காக சுரேன் கார்த்திகேசு) புகலிடத் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு உதவிசெய்வதை ஆட்கடத்தல்களுக்கு உதவியதாக குற்றஞ்சாட்ட முடியாது என கனேடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி 76 அகதிகளுடன் கனடாவை வந்தடைந்த ஓசோன் கப்பல் தொடர்பிலான வழக்கிற்கு, நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணம் செய்த அகதிகளுக்கு உணவு சமைத்து கொடுத்தமை, துப்பரவு பணி செய்தமை, ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் கடலில் வழிகாட்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வரும் நால்வர் தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, குறித்த நால்வரும் அகதிகளுக்க…

  25. கடலில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்; குளத்தில் நீராடிய இளைஞன் பலி; கிணற்றில் வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம் இப்படியான துன்பம் மிகு செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இழப்புகள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். நீச்சல் தெரிந்திருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்க்க முடியும் என்பது நிறுதிட்டமான உண்மை. எனினும் பொதுவில் நீச்சல் பயிற்சி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் மேலை நாட்டவர்கள் பிள்ளை பிறந்து ஒரு வருடத்தை நெருங்குகின்ற போதே பிள்ளைக்கு நீச்சல் பயிற்சி கொடு க்க ஆரம்பித்து விடுவர். மேலை நாட்டில் நீச்சல் பயிற்சி என்பது கட்டாயமானது. ஒவ்வொரு பிள்ளையும் நீச்சல் பயிற்சியை கட்டாயம் கற்றிருக்க வேண்டும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.