Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன்; இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி, அங்கஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அகிலதாஸ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, …

  2. அரசியல் கைதிகளின் விடுதலையும், நகர்வும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் பாரிய இடர்பாடுகளைத் தாண்டி சாதகமான சில பக்கங்களை நோக்கி நகர்வதாக கொள்ள முடியும். தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகள் அதனையே பிரதிபலிக்கின்றன. கைதுக்கான காரணங்கள் தெரியாமல் முடிவின்றிய சிறை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டவர்களை மீட்டெடுப்பது தொடர்பில், இருப்பதில் இலகுவான- சாத்தியமான வழிகளை பரிசீலிப்பது அவசியம். அதற்கான முனைப்புக்களில் தமிழ்த் தரப்பு தொடர்ச்சியான அக்கறையோடு இருக்க வேண்டிய தருணம் இது. பொதுமன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்…

  3. போரின் பெயரில் ஆயுத வியாபாரம் நடைபெற்றதா? தற்போதைய நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இருப்பையே சந்தேகத்துக்கிடமாக்கும் வகையில், சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஊழல், மோசடிக்கு எதிரான அரசாங்கத்தின் அசமந்தப் போக்கும் அரசாங்கத்துக்குள்ளேயே பாரிய அளவில் ஊழல் இடம்பெற்று இருக்கிறதா என்று சிந்திக்கக்கூடிய வகையில் அவன்ட் காட் விவகாரம் காணப்படுவதும் அதற்கு உதாரணங்களாகும். எந்தவொரு அரசாங்கமும் நிலையானதும் சதாகாலமானதும் அல்ல தான். ஆனால், இந்த அரசாங்கம் விரைவில் கவிழ்ந்தால் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினால் கட்டுப்படுத்தக் கூடிய ஓர் அரசாங்கம் விரைவில் உருவாகுமானால் அது பாரதூரமான விடயமாகும். இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள்…

  4. கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவன்ட்கார்ட்! 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம் [ புதன்கிழமை, 18 நவம்பர் 2015, 03:16.09 AM GMT ] அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக …

  5. இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி நீதிமன்றம் தீர்ப்பு [ புதன்கிழமை, 18 நவம்பர் 2015, 04:36.02 AM GMT ] விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்க தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த பெண்ணுக்கு…

  6. இலங்கை அகதி ஒருவரை தமிழகத்தில் காணவில்லை: 18 நவம்பர் 2015 இலங்கை அகதி ஒருவரை தமிழகத்தில் காணவில்லை எனவும், தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் பாம்பன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட போது 40 வயதான சிவபரன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 24ம் திகதி குறித்த நபர் மீன்பிடிப்பதற்காக நண்பர்களுடன் சென்றிருந்ததாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்த முறைப்பாட்டை பாம்பன் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகாமையில் காணாமல் போனவரை இறுதியாகக் கண்டதாகவும், ரயில் நிலைய காவல்துறையினர…

  7. பாரிஸ் தாக்குதலுடன் புலிகளுக்குத் தொடர்பாம்! -முடிச்சுப் போகிறது சிங்கள ஊடகம் [Wednesday 2015-11-18 08:00] பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. பாரிஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு இணையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று இன்டர்போல் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் விடுதலைப் புலிகளின்…

  8. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜெனீவா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி:- 18 நவம்பர் 2015 நாட்டில் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற சர்வகட்சிப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறிதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நட்டஈடு வழங்குதல் , …

  9. தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாள்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவ…

  10. கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை! - கல்கிஸை நீதவான் தீர்ப்பு [Tuesday 2015-11-17 19:00] நீதீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது பெரிய சத்தத்துடன் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரத்மலானை இமேஷா வசந்த என்பருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாத சிறைத்தண்டனை விதித்தார். அவர், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேகநபராவார். நீதீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது பெரிய சத்தத்துடன் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் க…

  11. பெண்களை ஏமாற்றியவர் கைது .ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய கோரிக்கை யாழில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் மற்றும் நகை என்பவற்றை பெற்று மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை பொது மக்கள் பிடித்து யாழ்.பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரினால் ஏமாற்றத்திற்கு உள்ளாகியவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்தோ 021 222 2222 எனும் தொலைபேசி இலக்த்தின் ஊடாகவோ முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு யாழ்.பொலிசார் கோரியுள்ளனர். மூதூர் பகுதியினைச் சேர்ந்த அப்துல் கரிம் (வயது 38) எனும் சந்தேக நபரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் ஆவார், அவரிடம் இருந்து போலி நகைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் …

  12. வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது; கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இன்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வருடம் நிறைவு பெற இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டநிதியை முழுமையாக வடமாகாண சபை பயன்படுத்தவில்லை. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2 வர…

  13. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு:- 17 நவம்பர் 2015 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் தடுப்புக் காவல், மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொல…

  14. மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:- 17 நவம்பர் 2015 மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:- மழை வெள்ளத்தினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் பொது மக்களை அவ்வாற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு யாழ்.பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரி வைத்தியர் சு.சிவகணேஸ் அறிவுறுத்தி உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மழை வெள்ளத்தினால் பரவும் கிருமிகளால் யாழில் வயிற்றோட்டம், வயிற்றுளைவு, செங்கமமாரி, நெருப்புக்காய்ச்சல் போன்ற தெற்று நோய் அதிகளவில் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக 15 வயதிற்கு கீழ் உள்ள…

  15. பத்தி எழுத்தாளர் ப.தெய்வீகனின் முகநூலில் இருந்து இச் செய்தி பெறப்பட்டது. தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் - ஒரு இலகுநிலையில் (Comfort Zone) இருந்துகொண்டு மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ள சுமந்திரன் அவர்களுக்கு எதிராக சி…

  16. கனமழையால் வட மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள னர். வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகிப் பொது இடங்களில் தஞ்சமடைந்த மக்களுக்கான உதவிகள் உடனடியாகக் கிடைக்கவில்லை என்று பாதிப்படைந்த மக்களும் பொது நலன் கருத்துவோரும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தவிர, வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளவர்களை அரசியல்வாதிகள் பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து. பெய்த கனமழை தேர்தல் காலத்தில் வந்திருக்குமாயின்; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளப் பாதி…

  17. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த முறைமை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். http://www.tamilmirror.lk/159287/%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95-%E0%Auf

  18. அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் இருந்து இதுவரைக்கும் எந்தப் பதிலும் வரவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதியே தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்திற்குத் தீர்க்கமான முடிவை நேற்று அறிவிப்பேன் என்று ஜனாதிபதியை நான் கடந்த வியாழக்கிழமை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரைக்கும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில், உங்களின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து உங்க…

  19. அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். எனினும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரையில் தமது விடுதலைக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படாது போனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அறிவித்தலை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்கக்கோரி 263 அரசியல் கைதிகள் 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்…

  20. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ கேணல் ஒருவருக்கு, சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மல் கொலையுடனும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி கடத்திச் செல்லப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் லக்மல் சம்பத். இந்தக் கொலையுடன் இராணுவ கேணல் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். லக்பிம, சத்தின, அரட்டுவ மற்றும் டி.என்.எல் ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு சுதந்திர ஊடகவயிலாளர் என்ற அடிப்படையில் லக்மல் சேவையாற்றி வந்தார். குற்றச் செயல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான செய்தி சேகரிப்பாளராக கடமைய…

  21. மது விற்பனையைத் தடை செய்ய முடியும், எனினும் மதுபானம் உபயோகிப்போர் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைத் தடுக்க முடியாது போகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போதை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைத் தடுப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயற்பாட்டு நிகழ்வு நேற்று கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நாட்டின் தலைவர் என்ற வகையில் மது மற்றும் சிகரட் விற்பினைக்கான அனுமதியை இரத்துச் செய்யத் தயார். எனது இரு கரங்களையும் உயர்த்தி முழுமையான ஆதரவை என்னால் வழங்க முடியும். எனினும் அது நடைபெறக்கூடிய காரியமல்ல. விற்பனையைத் தடை செய்ய முடியும். எனினும் குடிப்பதை நிறுத்த முடியாது. அவர்கள் ஒன்றிணைந்து அரசையே கவிழ்ப்ப…

  22. ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெறும் நோக்கில் விசேட சர்வகட்சிக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார். இதற்கமைய முதலாவது கூட்டம் கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, ஐ.நா. தீர்மானம் பற்றி விரிவாகப் பேசப்பட்டதுடன், இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டதாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால உ…

  23. வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை இன்று வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது. “ வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் ” என்ற தொனிப்பொருளில் இவ்வாறு 2000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இதுவரையில் 40 000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம…

  24. வீட்டுத்திட்டம் தந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது : கிராம மக்கள் சரவணபவன் எம்.பியிடம் கதறல் போர் முடிவடைந்து 6வருடங்களில் நிரந்தர வீடுகள் அமைத்துத் தந்திருந்தால் இப்போது நாங்கள் இப்படி மழை வெள்ளத்துக்கு இடம்பெயர வேண்டி வந்திருக்காது என்று தமது சோகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் கொட்டித் தீர்த்தனர் கிளிநொச்சி, உழவனூர் மற்றும் விசுவமடு, நாதன் திட்டக் கிராமங்களின் மக்கள். கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையை அடுத்து உழவனூர் மற்றும் நாதன் திட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலை மற்றும் தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் என்பவற்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர். உழவனூரைச் …

  25. அரசின் செயற்பாடுகள் டிசம்பர் 15க்கிடையில் திருப்தியளிக்காவிட்டால், தொடரும் சாத்வீகப் போராட்டம் : தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழியை ஏற்று இன்று காலை முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருப்பதாக கைதிகள் அறிவித்திருக்கின்றனர். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் செயற்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிந்தால் தாங்கள் ஏதாவது ஒரு வழியில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.