ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143497 topics in this forum
-
வடக்கு முதல்வரை நீக்குமாறு கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது: செல்வம் எம்.பி. காட்டம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் அல்ல என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மறுதலித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 20 replies
- 1.2k views
-
-
புனர்வாழ்வுத் திட்டத்துக்கு அரசியல் கைதிகள் இணக்கம்! - தற்காலிகமாக உண்ணாவிரதம் இடைநிறுத்தம் [Tuesday 2015-11-17 10:00] அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். எனினும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரையில் தமது விடுதலைக்காக முன…
-
- 0 replies
- 589 views
-
-
மஹந்த குடும்பத்தின் தொலைக்காட்சி நிறுவனத்தில் திடீர் சோதனை! [Tuesday 2015-11-17 10:00] ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் சிஎஸ்என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் சிஎஸ்என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது பல கணணிகள், மடிக்கணணி ஒன்று என்பன விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கை க…
-
- 0 replies
- 558 views
-
-
வடக்கின் தற்தைய நிலை ஒரே பார்வையில்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் திங்கள் கிழமை மதியம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர். இதில் 2ஆயிரத்து 57 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 486 பேர் இடம்பெயர்ந்து 42 நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. மழை காரணமாக 15 பிரதேச செயலக பிரிவு…
-
- 5 replies
- 876 views
-
-
'புனர்வாழ்வு திட்டத்தில் சேர விண்ணப்பித்த கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கும்' bbc தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனை இலங்கை அரசு, தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது. இலங்கை அரசு, தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இன்று இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கைதிகள் உண்…
-
- 0 replies
- 589 views
-
-
வெலிக்கடைச் சிறையில் அரசியல் கைதிகளைச் சந்தித்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்! [Monday 2015-11-16 20:00] உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று அவர்களைப் பார்வையிட்டார். தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடிய பின்னர், கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருப்பது குறித்து தாம் அரசியல் கைதிகளிடம் கூறியதாக தெரிவித்தார். அத்துடன் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போராட்டத்தை தொடரலாம் என அறிவுறுத…
-
- 0 replies
- 424 views
-
-
ஆனந்தசங்கரி தலைமையில் கோட்டையில் ஆர்ப்பாட்டம்! [Monday 2015-11-16 19:00] தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கருத்து வெளியிட்ட ஆனந்தசங்கரி, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தற்காலிகமாக புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். http:/…
-
- 0 replies
- 637 views
-
-
தென்மராட்சியில் வெள்ளத்துடன் வீட்டுக்குள் நுழைந்த முதலை! [Monday 2015-11-16 19:00] கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று நேற்று தென்மராட்சி இராமவில் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அந்த முதலையை விரட்டிய போது அது அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்துள்ளது. இதனையடுத்து, முதலையை பிடிக்க பொலிஸாரும் வனஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?news…
-
- 0 replies
- 583 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்! [Monday 2015-11-16 19:00] தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சிறைக்குள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொ…
-
- 0 replies
- 656 views
-
-
இனி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை! - 90 பேருக்கு புனர்வாழ்வு [Monday 2015-11-16 19:00] சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று மாலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுவரை 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எஞ்சியுள்ள கைதிகளில் 90 பேர் தமக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்படி, இன்று ம…
-
- 0 replies
- 689 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்: உறுப்பினர்களாக- பேராசிரியர் ரட்னஜீவன்கூல்.. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சுயாதீன முறையில் தேர்தல்களை நடாத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய இரண்டு உறுப்பினர்களாக சட்ட வல்லுனர் நலீன் அபேசேகர மற்றும் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125982/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான தீர்க்கமான முடிவுகளை எதிர்வரும் நாளை கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளது. இந்த முடிவுகளுக்கு ஜனாதிபதியும், இந்த அரசுமே முழுப்பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குகான கூட்டம் வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் …
-
- 0 replies
- 934 views
-
-
இடைவிடாமல் பெய்துவரும் அடைமழையால் வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கு மாகாணத்தில் 22 ஆயிரத்து 541 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 597 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 765 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 29 வீடுகள் முழுமையாகவும், 592வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மேலாக பெருமழை பெய்துவருகிறது. எனினும், தாழமுக்கம் இன்று மாலையுடன் குறையும் சாத்தியம் காணப்படுகிறது என்றும், இதனால் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வ…
-
- 0 replies
- 472 views
-
-
கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சநிலை காரணமாக வடக்கு முதல்வருடன் இணைந்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் ஆராய்ந்தனர். அரசியல் கைதிகளின் உடல்நிலை குறித்த நிலையினை அரசிற்கு தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கை தொடர்பில் முடிவினை அறிவிக்க வேண்டிய அவசரத்தினையும் வலியுறுத்தும் நோக்கோடு அலரி மாளிகைய…
-
- 0 replies
- 524 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. இவர்கள் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/16/8-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
-
- 0 replies
- 236 views
-
-
அரசியல் கைதிகள் மூவரின் உயிர் ஊசலாட்டம் :ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது உண்ணாவிரதப் போராட்டம் பொதுமன்னிப்பு வழங்கித் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்கின்றது. போராட்டத்தில் குதித்துள்ளவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கவலைக்குரியதாக இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். உடல்நிலை மோசமடைந்துள்ள கைதிகளுள் மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். எனவே, அவர்களுக்கு சி…
-
- 1 reply
- 623 views
-
-
கோப்புப் படம் மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: * நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம். * தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாத…
-
- 0 replies
- 462 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் இன்று வெளி யிடப்படவுள்ள ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மர ணம் ஒன்றே எமது தோழர்களது முடிவு என சில தினங்களுக்கு முன் னர் பிணையில் விடுதலையாகிய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை யினை வலியுறுத்தி அரசியல் கட்சி கள் செய்யும் தந்திரோபாயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கைதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கைதிகள் சார்பில் கருத்து தெரிவித்த வீரசிங்கம் சுலக் சன் என்பவர் மேலும் கூறுகையில்;, 67 வருட இலங்கை அரசியலில் ஆட்சிப் பீடமேறும் அனைத்து சிங்கள பேரினவாதிகளும், தமிழ் இனத்தினை போலி வாக்குறுதிகளின் மூலம் ஏமாற்றும் அரசியல் தந்திரங்களையே கையாள்கின்றார்கள். இருந்த…
-
- 0 replies
- 382 views
-
-
வடக்கு, கிழக்கு மக்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கும் போராட்டங்களை மக்களின் குரலாகவே பார்க்க வேண்டும் என தூய்மைக்கான நாளை அமைப்பின் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” நாம் கடந்த காலங்களில் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருந்தோம். கடந்த முப்பது ஆண்டுகாலமாக இந்த நாடு தவறான பாதையில் பயணித்து வந்தது. ஆயுத மோதல்களிலும் கொள்ளை, கொலை என பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ளோம். எனினும் இப்போது அவ்வாறான நிலைமைகள் எதுவம் நாட்டில் இல்லை. கடந்த காலங்களில் இலங்கையின் குழப்பங்கள…
-
- 0 replies
- 571 views
-
-
பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆக…
-
- 0 replies
- 658 views
-
-
ஊழல் மோசடி குறித்த விசாரணைக்கு சுங்கத் திணைக்களம் இடையூறு இலஞ்ச ஊழல் மோசடி குறித்த விசாரணைக்கு சுங்கத் திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 3 சுங்க அதிகாரிகள் அண்மையில் பன்னிரண்டரை கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய இலஞ்ச ஊழல் மோசடியாக இது பதியப்பட்டுள்ள நிலையில், இதற்கு சுங்கத் திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அண்மையில் நீதிமன்றில் தெரிவித்தது. இதனையடுத்து, குறித்த சம்பவம் குறித்து இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலமொன்றை அளிக்குமாறு சுங்கத் திணைக்கள அதி…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் வரும் 17 ஆம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமானய மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். வவுனியாவில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். வவுனியா சுவர்க்கா விடுதியில் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்ற…
-
- 2 replies
- 633 views
-
-
வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி [ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015, 05:29.16 AM GMT ] எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும…
-
- 0 replies
- 529 views
-
-
பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்: ரியாஸ் சாலி [ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2015, 03:03.54 AM GMT ] பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த அதேவேளை, எமது எமது ஆட்களே, ஜனாதிபதி மாளிகையை கட்டும் எண்ணத்துடன் அதனை அழித்து விட்டனர். கா…
-
- 0 replies
- 518 views
-
-
அலரி மாளிகையில் இன்று விசேட கூட்டம்! - அரசியல் கைதிகள் விடுதலை குறித்து முக்கிய முடிவு [Monday 2015-11-16 08:00] பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்…
-
- 0 replies
- 413 views
-