Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எந்த நேரத்திலும், எதற்கும் தயாராக இருக்கின்றனராம் படையினர்! - இராணுவத் தளபதி கூறுகிறார்[Saturday 2015-10-10 20:00] படையினர் எந்த நேரத்திலும், எதற்கும் தயாரான நிலையில் ஆயத்தமாகவே இருப்பதாக இராணுவத் தளபதி கிரிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் தமது 66ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை இராணுவத்தினரின் ஒழுக்கம், மனிதாபிமானம் மற்றும் நேர்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், யுத்தத்தினை நிறைவு செய்தமைக் குறித்து சர்வதேசத்தின் நன்மதிப்பையும், அங்கிகாரத்தையும் பெற்றதாகவும் கூறினார். இதனால், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினர் அதிகளவில் சேவையில் ஈடுபட்டு வருவதா…

  2. பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர் பெருமிதம் கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சமூகமும், எதிர்கால தமிழ்ச் சமூகமும் பண்ப…

  3. வலி.வடக்கில் மூன்று கிராம அலுவலர் செயலகங்கள் நாளை திறந்து வைப்பு வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் நாளை மூன்று கிராம அலுவலர் செயலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் கிராமத்துக்குப் 10லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம செயலகங்களை யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் திறந்து வைக்கவுள்ளார். அளவெட்டி வடக்கு ஜே/216, வீமன்காமம், ஜே/236 மற்றும் வறுத்தலைவிளான் ஜே/241 கிராம அலுவலர் பிரிவுகளில் இந்த கிராம செயலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. மேலும் இந்நிகழ்வுகளில் வலி.வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முர…

  4. மகிந்த ஆட்சியில் இருந்த ஊடக அச்சுறுத்தலை நீக்கியுள்ளோம் : ஜனாதிபதி கடந்த காலத்தில் காணப்பட்ட ஊடக அச்சுறுத்தலை நீக்கி ஊடகச் சுதந்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தி விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் போ…

  5. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை இரு ஆண்டுகளில் நடைமுறைக்கு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீவிரமாக முயன்று வந்த போதிலும் அதற்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப்…

  6. ஈழத் தமிழருக்கான நீதியை வென்றெடுக்கவும், ஒன்றுபட்டு தொடர்ந்து போராட தமிழினம் உறுதியேற்க வேண்டும்: - தொல்.திருமாவளவன்[Friday 2015-10-09 21:00] ராஜபக்ச மட்டுமல்ல இன்றைக்கு ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியுள்ள, சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் ஜெர்மனியில் 10 அக்டோபர் 2015 அன்று ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டுக்கு வாழ்த்துக் தெரிவிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவ…

  7. நான்கு எம்.பிக்களின் கொலைகள் குறித்து ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம்! [Saturday 2015-10-10 08:00] நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விபரங்களை ஜெனிவாவில் வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அனைத்து நாடாளுமன்ற சங்கத்தின் மாநாட்டில் இதனைச் சமர்ப்பிக்குமாறு இலங்கையிடம் கோரப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் மற்றும் டி.ம். தசநாயக்க ஆகியோரின் கொலைகள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளில் ஏ…

  8. போர்க்குற்றம் புரிந்த புலிகளுக்கு 7 நாடுகள் தஞ்சமளித்துள்ளதாம்! - சிங்கள ஊடகம் கூறுகிறது[Saturday 2015-10-10 08:00] போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏழு நாடுகள் தஞ்சமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 200 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சில நாடுகள் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளன. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என செய்துள்ள பரிந்துரையை அமுல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்க…

  9. இந்திய, தென்பகுதி மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்! - நாடாளுமன்றில் சுமந்திரன்[Saturday 2015-10-10 08:00] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீன்பிடிக்கும் தென்பகுதி மீனவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக ஜே. வி. பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் அடிவலை இழுவைப் படகு மீன்பிடி முறை ஆகிய இரண்டிலும் பா…

  10. இந்திய மீனவர் அத்துமீறலை சர்வதேச விவகாரமாக்க வேண்டும்! - வாசுதேவ யோசனை[Saturday 2015-10-10 08:00] இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேச சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளாக இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமாக காணப்பட்ட ஓர் விடயத்தின் உரிமையையே நாம் கோருகின்றோம்.இந்திய மீனவர்களின் படகுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கூறுகின்றார். ஒரே நேரத்தில் 300 – 400 மீன்…

  11. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்! - சீன அமைச்சர் நம்பிக்கை[Saturday 2015-10-10 08:00] கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் அதற்கான சமிக்ஞை இலங்கை அரசிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன குடியரசின் விசேட தூதுவரும், உப வெளிவிவகார அமைச்சருமான லியூசிங்மின் தெரிவித்தார். இலங்கைக்கு கடந்த 8ஆம் திகதி வந்த சீனக் குடியரசின் விசேட தூதுவரும், உப வெளிவிவகார அமைச்சருமான லியூசிங்மின் கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் தனது விஜயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டை நேற்று நடத்தினார். இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்…

  12. ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சட்டத் திருத்தம்! - ராஜித சேனாரத்ன[Saturday 2015-10-10 08:00] ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழுக்க முழுக்க உள்ளகப் பொறிமுறைமையின் அடிப்படையிலேயே அமுல்படுத்தப்படும். இந்த தீர்மானங்களை நிறைவேற்ற உள்நாட்டு சட்டங்கள் போதுமானதாக அமையும் என்றே கருதுகின்றேன். அவ்வாறு சட்டங்கள் போதுமானதாக அமையாவிட்டால் சட்டத் திருத்தங்களைச் செய்வதில் தவறில்லை. தீர்மானங்களை அமுல்படுத்துவது ஒன்றிரண்டு நாட்களில் செய்ய முடியாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படலாம். இலங்கைக…

  13. வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்? - விஜித ஹேரத் கேள்வி[Saturday 2015-10-10 08:00] வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என வடக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று 'இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினை' தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். "இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கு, கிழக்கு மீனவர்கள் பாரிய பாதிப்புக்கு உளளாகியுள…

  14. இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் 20ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! [Saturday 2015-10-10 08:00] உடலகம மற்றும் பரணகம ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளும் சமர்பிக்கப்பட்ட பின்னர் ஏற்கனவே உறுதி மொழி வழங்கியபடி ஐ.நா. மனித உரிமை பிரேரணை தொடர்பில் விவாதத்தை நடத்த முடியும் என்றும் அவர் கூறினார். இதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களை இது குறித்த விவாதத்துக்கு ஒதுக்க முடியும். அரசாங்கம் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டு வரும் என்றும் அவர் …

  15. இலங்கைக்கு 6ஆவது இடம் ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4ஆவது இடத்தில் இருந்தது. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற இம்முறை அந்த அறிக்கையின் படி முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் ஈராக்கும் உள்ளன. மற்றும் சிரியா மூன்றாவது இடத்திலும் பிலிபைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இலங்கையைவிட முன்னிலையில் இருக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தை விட புதிய அரசாங்கத்தினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இலங்கை இந…

  16. அத்துமீறிய 19 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பருத்தித்துறை கட்டைக்காட்டை அண்மித்த கடற்பரப்பில் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்டதுடன், அவர்களது இரு படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். http://onlineuthayan.com/news/1078

  17. பொதுமன்னிப்புக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போர் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் எந்தவித விசாரணையும் இன்றி 10 தொடக்கம் 20 வருடங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை அரசு கடந்த வாரம் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. எனவே திட்டமிட்டபடி தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லாட்சி அரசிலும் தாம் ஏமாற்றப்படுவ தாகவும், தொடர்ந்து ஏமாற்ற…

  18. இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ம…

  19. மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளியேன் : ஜனாதிபதி திட்டவட்டம் நாட்டில் வாழும் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் 2700 பேர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். மக்களுக்காக அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்கு …

    • 2 replies
    • 631 views
  20. விரைவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் அரசியல் கைதிகளை காலத்தை இழுத்தடிக்காது விரைவில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பேசப்பட்டு வருகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனமும் இந்த விடயம் குறித்து திரும்பியிருக்கும் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விவகாரத்தில் அரசாங்கம் ஏன் காலதாமதம் செய்கிறது? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வ…

    • 9 replies
    • 1.1k views
  21. [ வெள்ளிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2015, 05:51.14 AM GMT ] மது போதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வேறு இடத்து பொலிசார் கொடுத்த தர்ம அடியில் அவர்கள் ஓடித்தப்பியுள்ளார்கள். ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி சண்டையிட்டுக் கொண்டு நின்றார்கள். இதனால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதுடன் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள். இந்த நேரத்தில் வேறு இடத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் கடமைக்கு செல்வதற்காக அந்த இடத்திற்கு வந்த போது நிலமையை உணர்ந்துள்ளார். பொது மக்…

    • 0 replies
    • 428 views
  22. ஊடக நிறுவனங்கள் சில என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன : ஜனாதிபதி ஊடகவியலாளர் காணாமல் போவதை தடுத்து நிறுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திய போதிலும் சில ஊடக நிறுவனங்கள் என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை கலை சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது சம்பந்தமாக ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. நாட்டை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி செ…

  23. விசுவமடு வழக்குத் தீர்ப்புக்கு வரவேற்பு விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முன்னுதாரணமானது என வரவேற்றுள்ள பெண்களின் செயற்பாட்டுக்கான வலையமைப்பு பாலியல் குற்ற வழக்குகளை உரிய முறையில் விசாரிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என கோரியிருக்கின்றது. அத்துடன் ஏற்கனவே பாலியல் வல்லுறவு துஸ்பிரயோகம் என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஏனைய வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. அந்த பெண்கள் அமைப்பு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விசுவமடு இராணுவப் பாலியல் வல்லுறவு வழக்கில் வழங்கப்பட்ட முன்னுதாரணமி…

  24. போதையில் சாரத்தியம்: ரூ. 112,500 அபராதம் மது போதையில் வாகனம் செலுத்திய 9 பேருக்கு 112,500 ரூபா அபராதம் விதித்துள்ளது சாவகச்சேரி நீதிமன்றம்.கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக் கப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.மதுபோதையில், வாகனப் பதிவுப் புத்த கம், வாகன வரி, சாரதிய அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் தலைக் கவசம் என்பன இன்றி மோட்டார் சைக் கிள் செலுத்தியவருக்கு 24 ஆயிரம் ரூபாவும், வாகனப் பதிவுப் புத்தகம், சாரதிய அனுமதிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப் புத்தகம் என் பன இன்றி வாகனம் செலுத்திய சார திக்கு 21 ஆயிரம் ரூபாவும், மது போதை யில், சாரதிய அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஐந்த…

    • 3 replies
    • 750 views
  25. தமிழ் மக்கள் தனித்து வாழவே விரும்புவதாக வடக்கு மாகாண முதல மைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் வைத்துக் கூறியுள்ளார். அவரதுஅந்தக் கருத்து தமிழ் மக் களின் ஒட்டுமொத்த உணர்வைப் பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியும். ஏனென்றால் இந்த நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் மிகக் கொடுமையானவை. அன்னியர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் வரை தமிழர்களுக்கென தனி அரசுகள் இருந்தன. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற வல்லமையையும் கொண்டிருந்தனர். எவருக்கும் கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை. தமது மதத்தைப் போற்றி வழிபடுகின்ற சுதந்திரத்தையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் அந்நியரின் வருகை தமிழர்க…

    • 0 replies
    • 725 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.