Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சி தலைவராக ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த உதவக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கருத்து வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் 55 பேர் கையெழுத்திட்டு முன்னாள் அமைச்சர் குமார வெலகமையை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். எனினும் 16 ஆசனங்களை மாத்திரமே வென்ற, சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக்கப்பட்டுள்ளார். இதனைக் கொண்டு மஹிந்த ராஜபக்ச, அரசியலில் மீண்டும் முன்னுக்கு வர முயற்சிகளை மேற்கொள்ள முடியும். மஹிந்தவின் எண்ணப்படி குமார வெல்கமையை எதிர்க்கட்சி தலைவராக்கினால், அதன்மூலம் மஹிந்த ராஜபக்ச அரசியலில் எதிர்க்கட்சியாக முன்னேற்றம் கண்டு தமக்கு அச்சுறுத்தலாக வந்துவ…

  2. தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக நேற்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்…

  3. "வைபர் தொழில்நுட்பத்தை ஊடறுக்கும் தொழில்நுட்பம் மஹிந்தஅரசாங்கத்திடம் இருக்கவில்லை" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- வைபர் என்ற பிரபல்யமான கையடக்கத் தொலைபேசி அப்ளிகேசனைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான தரப்புக்கைள ஒன்றிணைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்திய ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். செய்மதித் தொலைபேசிகளை பயன்படுத்தி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வைபர் தொழில்நுட்பத்தை ஊடறுக்கும் தொழில்நுட்பம் மஹிந்தஅரசாங்கத்திடம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய அனைத்து தொடர்பாடல் வழிமுறைகளையும் ஊடறுத்து மஹிந்த தரப்பு ஒட்டுக் கேட்டதாக…

  4. சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றது. போரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன். விடுதலைப் புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தினையே அழித்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள். இந்த நாட்டில்…

  5. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அதில் அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிப்பதற்காகவே, ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்…

  6. அமெரிக்காவில் வசிக்கும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் எட்டுப் பேரின் சொத்து விபரங்களை ஒப்படைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிசி” சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, துமிந்த மேனோஷ் ராஜபக்ச, புஷ்பா ராஜபக்ச, தேஜானி ராஜபக்ச, பிசல்கா ராஜபக்ச, டட்லி ராஜபக்ச மற்றும் சசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=139969&category=TamilNews&language=tamil

  7. பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என போருக்கு பின்னர் கடந்துள்ள 6 வருடங்களில் தமிழ் பெண்கள் எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கை ஒன்றின் இணை ஆசிரியர் கூறியுள்ளார். சதாகாலமும் பாதிக்கப்பட்டவர்கள்? போருக்கு பின்னர் இலங்கையின் தமிழ் பெண்கள்(The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேட் க்ரோனினுடன் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் உலகமய தலைமைத்துவத்திற்காக கொலின் பவல் பீடத்தின் பேராசிரியர்…

  8. இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தே.மு.தி.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த மாதம் இலங்கையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டு> அதன் தலைவராக இலங்கை தமிழரான இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகேட்டு, தமிழக எதிர்க்கட்சித் தலைவரான நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இரா. சம்பந்தன் இலங்கையின் ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டு போரின…

    • 3 replies
    • 748 views
  9. இலங்கைப் பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் த…

  10. இலங்கையில் இடம்பெற்ற முக்கியமாக குற்றங்களுக்கு ஐ.நாவில் பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அடுத்த நிலைப்பாட்டுக்குச் செல்ல சர்வதேச விசாரணைக் குழுவில் யார் கொண்டு வருவார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்கிறார் கனடாவில் வசித்து வரும் சட்டத்தரணி ஹரி ஆனந்த சங்கரி. லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmtyJTZSVkxzH.html

  11. உள்ளூராட்சி தேர்தல், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மத்திய மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறைமையில் தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதிவாரி மற்றும் மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நவம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என பல்வேறு வகையிலான ஊகங்கள் வெளியாகியிருந்தன. ஒரே நாளில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான த…

  12. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தான் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு காரணமாக அவரை காப்பாற்றும் வகையில், பொய்யான சாட்சியங்களை முன்வைத்ததாக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் பாரிய ஊழல், முறைகேடுகள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரான போதே ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபத…

  13. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்துச் சென்றது. அதனை நிரப்பும் பொறுப்பு எம்மிடம் சாட்டப்பட்டுள்ளது இவ்வாறு நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சில் பொறுப்பை ஏற்ற அவர் இதன்போது தெரிவித்தவை வருமாறு: மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் காலியான கஜானாவையே எங்களிடம் ஒப்படைத்துச் சென்றது. அதனை நிரப்பும் பொறுப்பு எம்மிடம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான வாதப் பிரதிவாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டிய தருணம் இது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு பொருளாதார பலாபலன்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஊழல்களை ஒழித்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் ம…

  14. "கொள்கை தோற்கவில்லை உறுதியுடன் அடுத்த பணியில்...": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 04.09.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/qlbjr9xrjbj9

  15.  அமைச்சரவை பதவியேற்பில் சில சுவாரசியங்கள்... 05-09-2015 04:48 AM Comments - 0 Views - 594 தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்... வருகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 12.11க்கு வருகைதந்தார். 12.12க்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் 12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்துகொண்டனர். நீண்டநே…

  16. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்க்­கட்­சிக்­கான பணியை சரி­யாக செய்யும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் போது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சம்­பந்­தனை கைவி­ட­மாட்டோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வுமான அனு­ர­கு­மார திசா­ நா­யக்க தெரி­வித்தார். அவ­சி­ய­மான எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில் எதிர்க்­கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக்…

  17. தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வைத் தரவேண்டும் – சுமந்திரன்SEP 05, 2015 | 4:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ‘தேசிய அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். கடந்த காலத்தில் மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு அமைய இப்போதும் ஒரு கூட்டு அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது. அதில் நாட்டின் நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களின் தேவைகளையும், நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த புதிய அரசாங்கம் செயற…

  18. நாடாளுமன்றத்தில் பிரேரணையை ஆதரிக்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை இல்லையாம்SEP 05, 2015 | 4:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி0 கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி கோரும் பிரேரணை மீது நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 47 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 37 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக…

  19. உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்புSEP 05, 2015 | 3:21by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் தமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ள நிலையில், அதுபற்றி ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அறிந்து கொள்வதற்காக, இரண்டு அமெரிக்க செனட் உயர் அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் நேற்றுமுன்தினம் சந்திப்புகளை மேற்கொண்ட…

  20. தென்னாபிரிக்க அதிபர் சூமாவை கட்டுநாயக்கவில் சந்தித்துப் பேசினார் மங்கள சமரவீரSEP 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சீனா செல்லும் வழியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சீனாவில் நடைபெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா நேற்றுமுன்தினம் பீஜிங் சென்றார். பீஜிங் செல்லும் வழியில், தென்னாபிரிக்க அதிபர் பயணம் செய்த, அந்த நாட்டின் விமானப்படை விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரித்து நின்றது. அப்போது. தென்னாபிரிக்க அதிபரை வரவேற்ற சிறிலங்கா வெளிவவிகார அமைச்சர் மங்கள சமரவ…

  21. திணைக்கள அதிகாரிகளை அமைச்சர்கள் நியமிக்க முடியாது – மைத்திரி அதிரடி உத்தரவுSEP 04, 2015 | 11:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசாங்க நிறுவனங்களில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான முடிவுகள், குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்படும் என்றும், அமைச்சர்கள் தன்னிச்சையாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நண்பகல் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அதிகாரிகளை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்மொழிய முடியும். ஆனால், நியமனங்கள் தொடர்பாக…

  22. ப.தெய்வீகன் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மகிந்த ராஜபக்ச அரசின்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் - ஏற்படுத்தியிருக்கின்றன.நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் - அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து - தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும் எது ஜனரஞ்சகசுவை மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொ…

    • 6 replies
    • 1.2k views
  23. முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்SEP 03, 2015 | 11:41by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார். இதன்படி. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதிஅமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் கோரிய…

  24. எதிர்க்கட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குற்றம்சாட்டியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.