ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
விசேட தேவையுடையோரும் வாக்களிக்கலாம் வடக்கு, கிழக்கில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடையோரின் நலன் கருதியும்,அவர்களின் வாக்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் எதிர்வரும் தேர்தலில் புதிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தொரிவிக்கையில், எதிர்வரும் தேர்தலில், விசேட தேவையுடையோருக்கான புதிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின்படி கண்பார்வையற்றோரின் நலன் கருதி, பிரெயில் எழுத்து முறையிலான வாக்குச் சீட்டை அ…
-
- 0 replies
- 384 views
-
-
கச்சேரியினால் அடையாளப்படுத்தப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் குறித்து எனக்கு தெரியாது ; லலித் ஏ ஜயசிங்க யாழ். மாவட்ட செயலகத்தினால் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இனங்காணப்பட்டிருந்தால் குறித்த தகவல்களை எமக்கு அரச அதிபர் வழங்கினால் நாம் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதன்போது மாவட்ட செயலகத்தினால் போதைப்பொருட்களை விற்கும் இடங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்ததுடன் அவற்றை பொலிஸாரிடம் கையளித்து விட்டதாகவும் தெரிவித்தார். அது தொடர…
-
- 0 replies
- 517 views
-
-
எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி MAY 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்விலேயே புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ஜனநாயக ஆட்சிக்கான இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராகவும், ஹேமல் குணசேகர, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாராச்சி, பிரதி காணி அமைச்சராகவும் ந…
-
- 0 replies
- 507 views
-
-
சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது MAY 29, 2015 | 11:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka’ என்ற தலைப்பில் வொசிங்டனில் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்- புதிய அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்கள் மீதான ஓடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற சிறிய நம்பி…
-
- 0 replies
- 414 views
-
-
ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 7 வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் பகுதியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடம் ஒன்றுக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், சிறுமியின் வாய்க்குள் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாருக்கு கூறிய நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை ; பிரித்தானிய தூதரிடம் நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரித்தானியவின் உயர்ஸ்தானிகராக புதிதாக பதவியேற்ற ஜேம்ஸ் டறுஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் யாழ். மாவட்டத்திலுள்ள நிலமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என நல்லை ஆதின குருமுதல்வர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்…
-
- 0 replies
- 378 views
-
-
தமிழர் உட்பட சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசாங்கம் மீறுவதாக சுயாதீன ஆய்வு அறிக்கையில் இலங்கை மீது குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே .இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. -இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000றகும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது, குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்கு பின்னர் தமிழர்…
-
- 0 replies
- 303 views
-
-
யாழ்.,திருமலை மீள்குடியமர்வுக்கு 160 மில்லியன் ரூபா ஒதுக்கீடு! - அமைச்சரவை அங்கீகாரம் [Friday 2015-05-29 08:00] திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்களுள் சுமார் 2 ஆயிரத்து 175 பேரை மீள்குடியமர்த்துவதற்காக 160 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் தமது ஆரம்ப இருப்பிடங்களில் மீள் குடியமர்த்துவதே அரசின் கொள்கையாகும். இந்த நோக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட இடம்பெயர்ந்த 2,175 குடும் பங்களை மீள்குடியமர்த்துவதற்காக வேண்டி தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கும் நோக்கில் 160 மில…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்திய கனடிய அரசின் மத்திய அமைச்சர்கள். [Thursday 2015-05-28 21:00] இலங்கை மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்திய கனடிய அரசின் மத்திய அமைச்சர்கள். கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் கனடிய மத்திய அமைச்சர்கள் மதிப்பிற்குரியவர்களான Julian Fantino (Associate Minister of National Defense) மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) அவர்களுடன் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை 23 -05-2015 அன்று மேற்கொண்டார்கள். அகவணக்கத்துடனும் தேசிய-தமிழ் கீதங்களுடனும் ஆரம்பித்த இச்சந்திப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான கனடிய …
-
- 0 replies
- 271 views
-
-
காசு,பணம் வேண்டாம், தங்கையைக் கொன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்! - வித்தியாவின் சகோதரி உருக்கம். [Friday 2015-05-29 08:00] எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரியான நிஷாந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தங்கையின் படுகொலை தொடர்பில் எமக்கு நீதி வேண்டும். நாம் நிதி உதவியோ அல்லது வேறு உதவிகளோ கோரவில்லை. எமக்கு தங்கையின் உயிரே பெரியது. அதனைவிட வேறு ஒன்றும் எமக்குத் தேவை இல்லை. தங்கையைப் படுகொலை செய்த பத்துப்பேருக்கும் மரண தண்டனை வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி MAY 29, 2015 | 2:35by கார்வண்ணன்in செய்திகள் வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை மாலை நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பான, சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு குறித்து, இந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் …
-
- 6 replies
- 711 views
-
-
இலங்கையின் வடக்கே உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவ வெற்றியின் சின்னம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த சுயாதீன அறிக்கை, ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது. 26 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த சிவில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் முதற் தடவை…
-
- 3 replies
- 917 views
-
-
வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர் வடக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதிமன்றம் எதுவும் தேவையில்லை. இதனை ஏற்கவும் முடியாது" என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இரத்தினபுரியின் கொட்டகதவில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அப்போது விசே…
-
- 9 replies
- 2.6k views
-
-
கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் கனடிய மத்திய அமைச்சர்கள் மதிப்பிற்குரியவர்களான Julian Fantino (Associate Minister of National Defense) மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) அவர்களுடன் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை 23 -05-2015 அன்று மேற்கொண்டார்கள். அகவணக்கத்துடனும் தேசிய-தமிழ் கீதங்களுடனும் ஆரம்பித்த இச்சந்திப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டையும் கடந்தகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான கருத்துக்களை வழங்கினார்கள். அத்துடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெறவேண்டுமெனவும் அதற்கான அரசியல் அழுத்தத்தை கனேடிய அரசு கொடுக்கவேண்டுமென…
-
- 0 replies
- 298 views
-
-
சிறிலங்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல் MAY 29, 2015 | 3:29by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும். இவ்வாறு the diplomat ஊடகத்தில் Peshan Gunaratne மற்றும் J. Berkshire Miller ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நி்த்தியபாரதி. சிறிலங்காவின் கேந்திர மூலோபாய அமைவிடமானது இந்திய மாக்கடல் பிராந்தியம் மீதான போட்டியாளர்களான சீனா, இந்தியா மற…
-
- 0 replies
- 372 views
-
-
கட்சிகளுக்குப் பணியாற்றாதீர்கள், மக்களுக்கு சேவையாற்றுங்கள்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் [Thursday 2015-05-28 18:00] கடந்த காலங்களில் உரிய பதவிகளுக்கான தகுதிகளை கொண்டிராத பலர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்களை பெற்றுக்கொண்டார்கள். பல பதவிகளில் உரிய கல்வித்தகைமைகளை கொண்டிராத பலர் கடமையாற்றுகின்றார்கள் என்பதை நாம் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை ஆட்சிக்க வந்த பின்னர் அறியக் கூடியதாகவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய 200 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 388 views
-
-
சரவணபவனிடம் சென்றபோது காணியை தனது பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டார்: காணிக்குச் சொந்தக்காரர்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள தனது வீட்டில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரின் அலுவலகம் அமைத்துள்ளதாகவும் அந்த வீட்டை மீளத்தருமாறு கேட்டால் துப்பாக்கி கொண்டு தன்னை அவர்கள் மிரட்டுவதாகவும் காணிக்குச் சொந்தக்காரான முதியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது காணி ஒன்பது வருடங்களாக ஈபிடியால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டை மீள வழங்குமாறு முன்னாள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிடம் கோரியபோதும் அவர் அதற்கு செவிசாய்க்கவி…
-
- 0 replies
- 718 views
-
-
கொக்கிளாயில் தமிழரின் காணியில் விகாரை கட்டும் படையினர்! [Thursday 2015-05-28 19:00] முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பொது மக்களின் தகவலையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற நேரில் ஆராய்ந்தேன். முல்லைத்தீவு, கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்படுகின்றது. விகாரை அம…
-
- 1 reply
- 718 views
-
-
இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்பது, அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு. இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,'' என, இலங்கையின், தேசிய மீனவர் மகா சம்மேளன அமைப்பாளர் சதாசிவம் கூறினார். பாக்., நீரிணை பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்களுக்கிடையே, 30 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று கட்ட பேச்சு நடந்தது.மூன்றாம் கட்ட பேச்சு, மார்ச், 24ல் நடந்தது. இதில், தமிழக மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து, 'இலங்கை வடக்கு மாகாண மீனவர் மாநாட்டில் பேசி, முடிவை அறிவிப்போம்' என, இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 'தமிழக மீனவர்களுக்கு ஆண்டுக்கு,…
-
- 4 replies
- 428 views
-
-
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கலாசாரத்தை கடந்த அரசாங்கமே திட்டமிட்டு முன்னெடுத்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் வித்தியா படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்குமான நிகழ்வொன்று இன்று (28) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை புலிகள் வந்துவிட்டதாக சித்தரிப்பவர்கள் மனவியாதிக்காரர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.tamil.srilankamirror.com/news/item/2822-2015…
-
- 0 replies
- 612 views
-
-
என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன்! - கூட்டமைப்பை விட்டு ஓடிய பியசேன எம்.பி புலம்பல். [Thursday 2015-05-28 19:00] மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு கடந்த காலத்தில் பிழையான வழியில் சென்று விட்டேன். அதனால் நான் துடித்துக் கொண்டிருக்கின்றேன். என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. எச்.பியசேன தெரிவித்தார். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ உள்ளிட்ட திறமை சித்திகளை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், தேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! [Thursday 2015-05-28 19:00] அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரும் மக்களின் விண்ணப்பக் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அகதிகள் சட்டம் தொடர்பாக கடமை புரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்தியில் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒருமுறை தான் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். விண்ணப்பப்படிவம் கு…
-
- 0 replies
- 575 views
-
-
மகிந்தவுக்கு மூளையில் நோயிருக்கும் என்று எண்ணவில்லை! -ராஜித சேனாரத்ன [Thursday 2015-05-28 19:00] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவிற்கு அவரது மூளையில் நோயிருக்கும் என்று தான் எண்ணவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், கேள்வி : மகிந்த ராஜபக்ச தவறியேனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால். அது சம்பந்தமாக என்ன கூறுகிறீர்கள். பதில் : தவறுதலாக யாரும் போட்டியிடுவதில்லை. முடிந…
-
- 0 replies
- 641 views
-
-
மண்டூர் படுகொலைக்கு அரியநேத்திரன் கண்டனம்! [Thursday 2015-05-28 18:00] பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை மண்டூரில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் பாதுகாப்பு நிறைந்த பிரதேசத்துக்குள் ஆயுததாரிகள் வந்து அவரை சுட்டுபடுகொலை செய்துவிட்டு சுதந்திரமாக செல்வது என்பது ஏற்றுக…
-
- 0 replies
- 524 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக ஜூன் 9ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை! [Thursday 2015-05-28 19:00] அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்தானந்த, 'புதிய அரசாங்கத்துக்கு 100 நாட்களுக்கு மேலதிகமாக 50 நாட்கள் கொடுத்தாகிவிட்டது. அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் 9ஆம் திகதி சமர்ப்பிக்…
-
- 0 replies
- 368 views
-