Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிளை மோதியது இராணுவத்தினரின் பஸ்! - இளைஞர் படுகாயம். [Thursday 2015-05-28 18:00] சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு இராணுவ பஸ் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை பின்னால் சென்ற இராணுவ பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். இதேவேளை. மல்லாகம் பங்களா வீதிக்கு அருகாமையால் நேற்று இரவு துவிச்சக்கரவண்டியில் சென்ற…

  2. புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக் கூடிய கௌரவத்தையும் ஒரேநாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் தி…

    • 12 replies
    • 1.2k views
  3. தென்னாபிரிக்க அரசும் - புலம்பெயர் அமைப்புக்களும் சந்திப்பு! [Wednesday 2015-05-27 18:00] தென்னாபிரிக்க அரசும் - புலம்பெயர் அமைப்புக்களும் சந்திப்பு! உலக வெளியில் தமிழீழ மக்களின் அரசியல் கதவூகள் திறக்கப்படுகிறது! தமிழ் மக்களின் வரலாற்றில் மே மாதம் தாங்கொணாத வலி சுமந்த காலமாகும். ஆயுதப் போராட்ட ‘மௌனிப்பின்‘ பின் தாயக மக்களின் துயர் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அனைத்துலகிலும் தமிழ் மக்களுக்கான அமைப்புக்கள் பல தோன்றி பல தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான உதவி முன்னெடுப்புக்களை செயல்படுத்தி வருகின்றன. அரசியல் ராஜ தந்திர பணிகளில் பல முனைகளிலும் இயங்கி வரும் அமைப்புகள் புலத்து வாழ் தமிழீழமக்களின் மன வெளிப்பாடுகளை அந்தந்த நாட்டு அ…

  4. வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றமாட்டோம்! - அமைச்சர் ராஜித சேனாரத்ன [Thursday 2015-05-28 09:00] யார் என்ன சொன்னாலும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் இந்த நாட்டின் ஓர் அங்கமாகும். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறான ஓர் நிலையில் வடக்கிலிருந்து மட்டும் இராணுவத்தை அகற்றிக் கொள்வது எந்த வகையிலும் செய்யக் கூடியதல்ல. வடக்கில் படையினர் கடமைகளை தொடர்ந்தம் ஆற்றுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். http://w…

  5. பிரித்தானியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்! [Thursday 2015-05-28 09:00] இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக, நட்பு ரீதியான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.…

  6. வித்தியா படுகொலையை அரசியல் ஆக்காதீர்கள்! - அமைச்சர் ரோஸி சேனநாயக்கா [Thursday 2015-05-28 09:00] நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஷ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்: சிறுவயது திருமணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. 15-18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமண சதவீதம் 12ஆக காணப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணம், நாடளாவிய ரீதியில் 2 சதவீதமாக காணப்படுகிறது. இதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வடக்கிலேயே இருக்கின்றனர். கடந்தகால யுத்த சூழ்நிலையில் தம் பிள்ள…

  7. மகிந்த நியமித்த வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் நீக்கம்! [Thursday 2015-05-28 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களில் இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகரைத் தவிர்ந்த ஏனையோர் ஜூன் மாதம் இறுதியளவில் பதவியிலிருந்து நீக்கப்படுவரென வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மஹீஷினி கொலன்னே தெரிவித்தார். புதிய அரசாங்கத்தினால் இந்தியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகரொருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதும் பதவியேற்கும் வரையில் இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருப்பாரென்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹீஷினி கொலன்ன நேற்று தனது முதலாவது ஊடகவியலாளர் சந்…

  8. நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை! [Thursday 2015-05-28 09:00] நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற பொலிஸ்காரர் கொல்லப்பட்டார்.வாகன சாரதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இந்தநிலையில் கருணாதாஸவை விடுவிக்க ஆயுததாரிகள் பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியிருந்தனர்.எனினும் அவரின் விடுவிப்புக்காக பணம் செலுத்தப்பட்டதா? என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை. h…

  9. சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் யாழில் அனுஸ்டிப்பு சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் எதிர்வரும் 31ஆம் திகதி கடைப்பிடிக்கப்படும் நிலையில் அது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வினை யாழ்.சுகாதார பணிமனை, மாவட்ட புகைத்தலுக்கு எதிரான அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் புகைத்தல் பொருள்களை விற்பனை செய்யாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாராட்டப்பட்டு,சான்றிதழ்களையும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வழங்கி வைத்தார். நிகழ்வில் புகைத்தலால் எழும் பிரச…

  10. முன்னாள் அமைச்சருக்கு பிணை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இன்றையதினம் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலுமே அவரை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுதலை செய்துள்ளார். சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னாள் அமைச்சருடன் கைதுசெய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ. பெர்ணான்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட் சாக…

  11. 100 நாள் திட்டத்தின் ஊடாக யாழில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு விரைவில் காசோலை ; ரவீந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக யாழ். மாவட்டத்தில் 3 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 941 பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என மாவட்ட முகாமையாளர் ரவீந்திரன் உதயன் இணையத்தள செய்திச் சேவைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ். மாவட்டத்திற்கு 3ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. …

  12. வடக்கிற்கான இந்திய வீட்டுத்திட்டம் இவ்வருடத்திற்குள் பூர்த்தியாகும்; இந்திய துணைத்தூதுவர் இந்திய அரசினால் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 42 ஆயிரம் வீடுகளில் இதுவரை 27 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் நடராஜ் உதயன் இணையத்தள செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன என இந்திய துணைத்தூதுரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்ததாவது, யுத்தம் , இயற்கை அனர்த்தம், வறுமை போன்றனவற்றை கருத்திற்கொண்டு இலங்கையின் வடக்கு , கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு இந்திய அரசினால் 50 ஆயிரம் வீடுகள் கட…

  13. நாட்டில் வேகமாக பரவுகிறது எயிட்ஸ் 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 58 புதிய 'எயிட்ஸ்' நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் வைத்தியர் சிசிர லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தப் புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டு முதல் எயிட்ஸ் நோயாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து இதுவரை 2 ஆயிரத்த 138 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 340 பேர் இறந்து விட்டனர். ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் மூவாயிரத்து 600 எயிட்ஸ் நோயளிகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 2015…

  14. பரந்தன் சிறுமி வன்புணர்வு; கண்டித்து இன்று போராட்டம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். புங்குடுதீவு சிறுமி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்னர் பரந்தன் - சிவபுரத்தில் மற்றுமொரு சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் கூட்டு வன்புணர்வு இல்லை என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறு…

  15. ஞானசார தேரருக்கு சாதகமாக நடந்த பொலிஸ்! - நீதிவான் கண்டிப்பு. [Wednesday 2015-05-27 07:00] நீதிமன்றங்களுக்கு முக்கிய பிரபுக்கள், சாதாரண மக்கள் என யாருமில்லை என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நீதிமன்றின் முன்னிலையில் வீ.ஐ.பீ நபர்கள் எவரும் கிடையாது, சட்ட விதிகளுக்கு அமைய பொலிஸார் கடமையாற்ற வேண்டும். ஞானசார தேரர் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஞானசார தேரர் ஏன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை.சட்டத்தின்…

    • 1 reply
    • 475 views
  16. அவசர ஆட்சி மாற்றம் அவசியம்! - என்கிறார் மகிந்த [Wednesday 2015-05-27 07:00] பழி வாங்கல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு புதிய அரசு செயற்படுவதால் நாட்டில் அவசர ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். மகளிர் அமைப்பு பிரதிநிதிகளுடன் அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு கூறினார். அச்சமும், பீதியும் நிலைகொண்டிருந்த யுகத்தை மாற்றியமைத்தோம். சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காகத் தீவிரவாதிகளுக்கு எதிராகவே நாம் போர் தொடுத்தோம். தமிழர்களுக…

    • 1 reply
    • 404 views
  17. இலங்கையில் வைரஸ் தொற்று அபாயம்! - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை [Wednesday 2015-05-27 06:00] இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரியுள்ளார். மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் செல்வதனை தவிர்க்குமாறும், வெளியில் சென்று வந்தால் உடனடியாக சவர்க்காரம் ப…

  18. "இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மீதான தேசிய விசாரணை நல்லிணக்கத்துக்கான முதற்படி" - என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசாரணை செப்டெம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் நடந்த யுத்தக்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நமது நாட்டுக்குள் நடந்த யுத்தம் சம்பந்தமான விசாரணை தேசிய ரீதியில் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதேசமயம், யுத்த விசாரணை சர்வதேச மட்டத்தில் நடைபெறுவதை முன்னைய அரசு விரும்பவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட…

    • 1 reply
    • 336 views
  19. பெண்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்! - மகிந்தவுக்கு செக் வைக்கிறார் ரணில் [Tuesday 2015-05-26 08:00] புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு இந்நாட்டு சகல பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இந்தசம்பவத்தை வைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களின் செயற்பாட்டாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு கருத்து தெரிவிக்கும்…

    • 3 replies
    • 768 views
  20. யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாறாக இத்திட்டத்தின் காரணமாக மீன் இனம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரை எடுத்து மருதங்கேணியில் அதனைக் குடிநீராக்குவதற்கான ஆலையை அமைப்பதன் மூலம் அங்கு மீன்வளம் பாதிக்கப்படும் என்று கவலைகள் வெளியாயின. கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குக் குடிநீர் வழ…

    • 0 replies
    • 416 views
  21. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/05/27/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

    • 0 replies
    • 409 views
  22. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் MAY 28, 2015 | 0:11 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவரது பயணத்துக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு ம…

    • 0 replies
    • 562 views
  23. இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் அனுமதிக்காக காத்திருப்பு MAY 28, 2015 | 0:59by கார்வண்ணன்in செய்திகள் இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து விபரித்த அவர், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களாகப் பணியாற்றியவர்கள் திருப்பி அழைக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனவரி 8ம் நாளுக்கு முன்னர், நியமிக்கப்பட்ட துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத வெளிநாட…

    • 0 replies
    • 507 views
  24. போதை பொருள் வியாபாரிகள் மற்றும் போதை பொருள் விற்பனை முகவர்களின் புகைப்படங்கள், பெயர் விபரம் அடங்கலான தகவல்களை தாம் திரட்டி வைத்துள்ளதாகவும் அதனை விரைவில் ஊடகங்களுக்கு கையளிக்க உள்ளதாகவும் சமூக அமைப்பு ஒன்று தகவல் அளித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், யாழில் தற்போது போதை பொருள் விற்பனை திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனை திட்டமிட்டு மேற்கொள்பவர்கள் பாடசாலை மாணவர்களையே பிரதான இலக்காக கொண்டுள்ளனர். யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளை இலக்கு வைத்து தமது வியாபரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக உயர்தர மாணவர்கள் மத்தியிலையே தமது போதை பொருள் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம், பாடசாலை முடிவடையும் நே…

    • 2 replies
    • 594 views
  25. போர்க்குற்ற விசாரணையை வரவேற்கிறார் சரத் பொன்சேகா! - தான் அப்பாவி என்று நிரூபிப்பாராம். [Wednesday 2015-05-27 19:00] தான் அப்பாவி என்பதை நிரூபிப்பதற்காக யுத்தக்குற்றங்கள் குறித்த விசாரணையை வரவேற்பதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் உள்ளன என கார்டியனிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நாங்கள் நிரூபிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இறுதி யுத்தத்தின் போது சில குற்றங்கள் இடம் பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை இந்த குற்றச்செயல்கல் படையினர் மத்தியில் உள்ள சில தனிநபர்களால் மேற் கொள்ளப்பட்டவை, திட்டமிட்டப்பட்ட வகையில் இடம்பெறவில்லை. இறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.