Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கையொப்ப முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு யாழ்.பல்கலையின் விஞ்ஞான ஆசிரியர் சங்கம் விளக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமானது பல்கலைக்கழக கல்விசார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பெறப்பட்ட தங்கள் கையொப்பங்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. என்ற குற்றச்சாட்டு தொடர்பான விளக்கமொன்றிற்கான ஊடக சந்திப்பினை இன்று யாழ். பல்கலைககழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் நடாத்தியிருந்தது. இச் சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கணித புள்ளிவிபரவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சே.அறிவழகன் நிர்வாக உறுப்பினர் இரசாயனவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் நா.சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கலந்…

  2. மகிந்த அரசின் முக்கியஸ்தர் விரைவில் கைது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசின் முக்கியஸ்தர் ஒருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் புதன்கிழமைக்குள் இவ்வாறு ஒர் முக்கியஸ்தர் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த நபரிடம் பல தடவைகள் விசாரணை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட உள்ளவர் ஓர் அரசியல்வாதி கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட உள்ளவர், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவாக இருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விரை…

  3. நாடாளுமன்றை உடன் கலையுங்கள் : மகிந்தவின் பின்னால் மக்கள் படையெடுப்பாம் : அஸ்வர் எம்.பி. நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்தே புதிய அரசு மக்கள் ஆணையைப் பெற்றது. அந்தக் காலப் பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு முன்னாள் எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "மைத்திரி அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குரிய நாட்கள் முடிந்துள்ளன. எனினும், இக்காலப்பகுதியில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. 19 கூட பாதியாகவே உள்ளது. அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 100 நாட்களுக்கு மக்கள் வழங்கிய ஒட்சிசன் முடிவடைந்துவிட்டது எனப் பிரதமரே கூறுகின்றார். அப்படியானால், நாடாளுமன்றத்தை உடன் கலைத்து தேர்தலுக…

  4. சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி உண்மையை பேசுவார்: சம்பந்தன் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத…

    • 19 replies
    • 1.3k views
  5. வடமாகாண சபை உறுப்பினரின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து மோதல்: [Monday 2015-05-11 20:00] வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா அவர்களின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டனர். வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமது கருத்துக்களை கூட்டமைப்பு உறுப்ரினர்கள் வழங்கிய போது தமது அங்கத்துவ கட்சிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர். அந்த வகையில் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையபற்றிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈபிஆர்எல்எப் கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்ப…

    • 2 replies
    • 584 views
  6. முன்னைய ஆட்சி காலத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவையில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்திய பிரபல சட்டத்தரணி வெலியமுனவை இலக்குவைத்து பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்துவதற்கு நாமல்ராஜபக்சவும்,நிசாந்த விக்கிரமசிங்கவும் திட்டமி;ட்டுள்ளனர். வெலியமுன குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக வெளியாகியுள்ள விடயங்கள் காரணமாக சீற்றமடைந்துள்ள மகிந்த குடும்பத்தினர்,வெலியமுன குழுவினரின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்குவதற்காக உச்சநீதிமன்றம் செல்லுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக அவர்கள் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்களுக்கு விசுவாசமான சட்டத்தரணிகளின் உதவி…

    • 0 replies
    • 384 views
  7. பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களினால் தீர்க்கப்படாத பல மனிதாபிமான பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலய காணிகள் மீளளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119588/language/ta-IN/articl…

    • 7 replies
    • 966 views
  8. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பொலிஸாரின் அழைப்புக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் கோட்டாபய மேற்கொண்டார் என சந்தேகிக்கப்படும் ஆயுத விற்பனையுடன் தொடர்புடைய நிதி மோசடி பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டாபய ராஜபக்சவை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தது. இன்று அந்த விசாரணைகளுக்குத் தன்னால் வரமுடியாது எனத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளிப்பதற்கு இன்னொரு தினத்தை ஒதுக்கித்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். தற்போதைய பிரதமர் ரணில் வ…

    • 0 replies
    • 435 views
  9. யாழில் 60 முட்டை குடித்து தலைகீழாக நின்று சாதனை படைத்த இளவாலை நபர் தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள். குறித்தவாராக இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் இளவாலை புனித அந்நாள் ஆலய முன்றலில் அலையென திரண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் தனது சாதனை முயற்சி ஆரம்பிக்கபட்டது. முதலில் 1மணி நேரம் தலை கீழாக நின்று சாதனை படைக்க போவதாக கூறி சாதனை முயற்சியை ஆரம்பித்த திரு.இராசேந்திரம் அவர்கள் வெகு இலகுவாக இலக்கை நிறைவு செய்து அதாவது 1 மணி நேரம் தலை கீழாக நின்று தனது முதாலவது சாதனையை இலங்கை சாதனையாக பதிவு செய்தார். அதனை தொடர்ந்து முட்டை குடித்தலில் உலக சாதனை…

    • 11 replies
    • 1k views
  10. தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையை கோரியது ஒன்றே. சிங்கள பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியா மற்றும் மேற்க்கத்திய நாடுகளே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும் பிராந்திய மேலாதிக்கத்திர்க்காகவும் நமது இனத்தை கொத்து கொத்தாக கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால் ஒப்புக்கு சில வெற்றுத் தீர்மானங்களை கொண்டுவந்துக் கொண்டும் பின்னணியில் தமது வணிக ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டும் வ…

    • 1 reply
    • 371 views
  11. ஜெயலலிதா எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்று நம்புகிறோம் - தமிழர் அரசியல் பிரமுகர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன், “தமிழ்நாட்டில் வலுவானதொரு தலைவர் இருக்க வேண்டியது இலங்கைத் தமிழர்களுக்கு அவசியம். ஜெயலலிதா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், எமது பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டில் பேசுவதற்கு அதிகாரம் கொண்டு யாரும் இருக்கவில்லை. சென்னையில் வலுவானதொரு…

    • 0 replies
    • 665 views
  12. கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். அவர்களுக்கு இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம். ஈழத்தமிழர்களுக்காக தமிழக சட்ட மன்றத்தில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்றென்றும் நினைவுக் கூற தக்கவை. அம்மா அவர்களின் விடுதலை குறித்து தமிழீழத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் அடிமை வாழ்வின் துயரங்களுக்கு இடையிலும் பெரு மகிழ்ச்சியடைகிறார்கள். தாங்கள் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து மேன்மேலும் சிறப்பான பல பணிகளை ஆற்றவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். http://www.pathivu.com/news/39975/57//d,article_fu…

    • 0 replies
    • 470 views
  13. வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பான நோய் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது. முதலில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதிகமாக இந்த நோய் பரவி இருந்த நிலையில், தற்போது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதும், அதில் முன்னேற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/39909/57//d,article_full.aspx

    • 5 replies
    • 744 views
  14. மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து, இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாவினால், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் செய்யப்பட்ட மூன்று வௌ;வேறு முறைப்பாடுகளை அடுத்தே இவர் இன்று காலை கைது செய்யப்பட்டு இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒப்பந்தகாரர் வி.றஞ்சிதமூர்த்தி தன்னிடம் 20 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி ந…

    • 0 replies
    • 591 views
  15. நாட்டின் நிதி நிலை குறித்த சந்திரிகாவின் கருத்தை நிராகரிக்கிறார் நிதியமைச்சர்! [Monday 2015-05-11 20:00] அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கத்திடம் நிதி இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப…

  16. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பம்! - நினைவு கூரும் உரிமை தமிழருக்கு கிடைக்குமா? [Monday 2015-05-11 20:00] முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் நாளை ஆரம்பமாகும் நிலையில் போரில் கொல்லப்பட்டவர்களை அச்சமின்றி நினைவு கூரவும் அவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்யவும் வழமைபோன்று இம்முறையும் தடைகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்புக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சுக்களும் பரபரப்புக்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளன. 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் குறிப்பாக 12 முதல் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஆ…

  17. ஜெனிவா கூட்டத்தொடரைக் குறிவைத்து காய் நகர்த்தும் மகிந்த! [Monday 2015-05-11 20:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது. செப்டம்பர் மாதம் அமர்வுகள் நடைபெறும் வரையில் பொதுத் தேர்தல் நடைபெறுவதனை காலம் தாழ்த்த வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்திற்…

  18. இராணுவம் நடத்தும் உல்லாச விடுதியை வட மாகாணசபைக்கு வழங்க வேண்டும்! - ஐங்கரநேசன் கோரிக்கை [Monday 2015-05-11 20:00] சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான கருத்தமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிகளின் இறுதி அமர்வாக மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று யாழ் பொதுந…

  19. சஜின்வாஸ் குணவர்த்தன கைது! - 20ம் திகதிவரை விளக்கமறியல் [Monday 2015-05-11 20:00] பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=131894&c…

  20. கைது செய்வதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் கோத்தபாய மனு! [Monday 2015-05-11 20:00] முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோத்தபாய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோத்தபாய ராஜபக்ஷ தனது மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ த…

  21. மகிந்தவிடம் 2000 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரவுள்ளார் ரவி கருணாநாயக்க! [Monday 2015-05-11 20:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை நித்திரை விட்டு தெளிவான நிலையில் கருத்து வெளியிடுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் ரவி கருணாநாயக்க கேட்டுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ மீது சட்ட நடவ…

  22. ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு! [Monday 2015-05-11 20:00] பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்றில் ஆஜராகாது இருந்த குற்றச்சாட்டில் ஞானசாரவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள ஞானசார தேரர் நாடு திரும்பியதும் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் …

  23. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! [Monday 2015-05-11 20:00] சதோச நிறுவன நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=131884&category=TamilNews&language=tamil

  24. நல்லாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கும் நல்லாட்சியை விரும்புவோருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார். புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் பிழையான வழிகளில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் நல்லாட்சியை தடுக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…

  25. யாழ். மண்டைதீவுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 18 ஏக்கர் செம்மண் தோட்டக்காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை கையகப்படுத்தவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்து, காணிகளை மீட்டுத் தருமாறு வேலணை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.பதிவு இணைய செய்தி இன்னமும் கடற்படையினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்லவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காணிகளை மீட்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் பல தரப்பிடமும் கோரியுள்ளனர்.பதிவு …

    • 0 replies
    • 329 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.