ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அரசியல் செல்வாக்கு மூலம் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் நியமனம் பெற்ற 29 இராஜதந்திரிகள் உடனடியாக கொழும்புக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். இராஜதந்திர சேவையை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கே இவர்கள் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் நீண்டகாலமாக ஒரே நிலையத்தில் கடமையாற்றும் இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=125254&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 471 views
-
-
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு, இராணுவ சேவையிலிருந்து கட்டாயமாக ஓய்வுறுத்தப்பட்ட 5 மேஜர் ஜெனரல்கள் உள்ளிட்ட 14 இராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது. இந்த அதிகாரிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாயமாக ஓய்வுறுத்தப்பட்டிருந்தனர். ஐந்து பிரிகேடியர்கள், ஒரு கேணல், ஒரு லெப்டினன் கேணல், இரண்டு கப்டன்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குகின்றனர். இவ்வாறு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சூரியபண்டார, அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து அங்கு மாரடைப்பினால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இராணுவ அதிகாரிகளிடமி…
-
- 1 reply
- 290 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷத ராஜபக்சவே எனது மகனைத் தாக்கியுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. மாலக்க சில்வா யோஷிதவின் பாதுகாப்பாளர் ஒருவரை எச்சரித்திருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே எனது மகன் தாக்கப்பட்டார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த தாக்குதல் தொடர்பில் தாமதமாகவே தெரியவந்ததாக என்னிடம் தெரிவித்திருந்தார். எனினும் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மகன் மாலக்கவைப் பார்ப்பதற்கு வருகை தந்திருந்தார். மேலும் சம்பவம் இடம்…
-
- 0 replies
- 714 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யாழ். கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதகுமார்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை அண்மையில் விடுத்துள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் , இறுதிக் கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிய ஆவணத்தை ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ளனர். இதேவேளை , புதிய ஜனாதிபதி மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத…
-
- 0 replies
- 431 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது சாதாரண மனிதரே. அதனடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் அரசு தண்டிக்காது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த செய்திகள் தொடர்பிலேயே ராஜித மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊழல் குற்றங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்வித உடன்பாடுகளும் இல்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தினரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்கப…
-
- 0 replies
- 719 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப் பயன்படுத்தவும் விரும்புவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிம…
-
- 0 replies
- 471 views
-
-
மினுவாங்கொடையில் வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து முன்னாள் பிரதமர் அலுவலக முக்கிய கோப்புகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீடு முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்தினவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது அலுவலக முறைகேடுகளை மறைக்கும் நோக்கில் அவர் இந்தக் கோப்புகளை கிணற்றுக்குள் வீசியெறிந்துள்ளார். எனினும் பொலிசாருக்கு கிடைத்திருந்த ரகசியத் தகவல் ஒன்றை அடுத்து குறித்த கோப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=125265&category=TamilNews&langu…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை தொடர்பினில் தற்போதைய அரசிற்கு முண்டு கொடுத்துவரும் கூட்டமைப்பு மௌனம் காத்தே வருகின்றது. இந்நிலையினில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யாழ். கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதகுமார்கள் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை அண்மையில் விடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் இ இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் க…
-
- 0 replies
- 340 views
-
-
ஊழலை ஒழிக்க சீனாவின் பொருளாதாரத் தலையீட்டை குறைக்க வேண்டியுள்ளது – சிறிலங்கா JAN 24, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஊழலை ஒழிப்பதற்காக சீனாவின் பொருளாதாரத் தலையீடுகளை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். “ஊழலை ஒழிப்பதற்காக, சீனாவின் பொருளாதாரத் தலையீட்டைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. சீனா எமக்கு 0.5 வீத வட்டிக்கு கடன்களைத் தந்தால், நாம் அதனை அன்புடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால், 8 வீத வட்டிக்கு கடன் பெற முடியாது. இரண்டு மூன்று குடும்பங்களின் உறுப்பினர்களின் தனிப்பட்ட சட்டைப் பைக்குள் 4 தொடக்கம் 5 வீத வட்டிப்பணம் சென்றுள்ளது. ராஜபக்ச குடும்பம் …
-
- 3 replies
- 497 views
-
-
போர்க்குற்ற விசாரணை குறித்துப் பேச சிறப்புத் தூதராக ஜெனிவா செல்கிறார் ஜயந்த தனபால JAN 25, 2015 | 2:22by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நாளை ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, ஜயந்த தனபால புதிய அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். ஐ.நா விசாரணையாளர்கள் சிறிலங்கா வருவதற்கு கடந்த ஆண்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் முன்னைய அரசாங்கம் அதற்கு அனுமதி மறுத்து விட்டது. அதேவேளை, போர்க்குற…
-
- 0 replies
- 367 views
-
-
“கோத்தாவின் வங்கிக்கணக்கு அரசியலமைப்பு மீறல்” – முன்னாள் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் JAN 25, 2015 | 2:01by புதினப்பணிமனைin செய்திகள் அரசாங்கப் பணத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். திறைசேரிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் ரூபாவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தனியான வங்கிக்கணக்கில் வைத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய பாதுகாப்புத் தலைமையகத்தை அமைப்பதற்காகவே இந்தப் பணத்தை, தனியான கணக்கில் வைத்திருந்ததாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். இராணுவத் தலைமையகத்துக்க…
-
- 0 replies
- 370 views
-
-
ராஜபக்ஷவினர் தன்னை சிறையில் தள்ளி விட்டு தனக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையிட்டதாக செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எனக்கு 450 நிறுவனங்கள் இருந்தன. 45 ஆயிரம் ஊழியர்கள் அவற்றில் பணியாற்றினர்.15 வெளிநாட்டு அலுவலகங்கள் இருந்தன. நான் திருடன் அல்ல. கோல்டன் கீ நிதி பலம் இருந்தது. செலிங்கோ கூட்டு நிறுவனத்திடம் 13 பில்லியன் இருந்தது. இவை முதலீட்டாளர்களின் பணம். மூன்று வருடங்களில் 13 மில்லியன் பணத்தை திருப்பி கொடுக்கும் யோசனை ஒன்றை நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.அவற்றை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். 200 மில்லியன் ரூபா காசோலையை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தோம். இந்த விடயத்தில் எங்களிடமோ, ம…
-
- 1 reply
- 749 views
-
-
ராஜபக்சவின் குற்றங்கள் அம்பலப்படுவது போல அவுஸ்திரேலியாவும் வெளிப்படுகிறது: தை மாதம், 23, 2015 நெருங்கிய நண்பர்களான அவுஸ்திரேலிய பிரதமர் ரொனிஅபோட்டும் மகிந்த ராஜபக்சவும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் சந்தித்தபோது முதல் தடைவையாக மக்கள் முன்னைய அரசாங்கத்தை தோற்கடித்து அகற்றிய தேர்தலின் பின்னரான சூழலில்,தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சியினுடைய தீய செயற்பாடுகள் பற்றி மக்கள் முன் முன்வைக்கப்பட்டு வருகின்றமையானது புதிய சனாதிபதி பற்றிய கௌரவத்தை உயர்த்துவதற்கும் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் ஒரு புதிய சகாப்தம் நாட்டில் மலர்ந்து விட்டதாக கோருவதற்கும் வழிவகுக்கின்றது. அதே நேரத்தில், மைத்திரி மற்றும் வெட்கம் கெட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம் அடங்கலான மகிந்…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் : டி.எம். சுவாமிநாதன் 825a67995e1138d5a1c1ea30bc4faebd
-
- 0 replies
- 552 views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள் தொடர்பாக, வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, நம்பகரமாக வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கருத்து வெளியிடுகையில், “தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் வினவினார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெள்ளை வானில் வந்தவர்களால் நான் கடத்தப்பட்டேன். அதன் பின்னர், இந்த கடத்தல் தொடர்பில் மேலிடத்துக்கு அழுத்தம் அதிகரித்ததால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்…
-
- 1 reply
- 965 views
-
-
மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் - சீசல்ஸ்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் என சீசல்ஸ் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது நாட்டின் நிதிச்சேவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களால் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையுடன் சிற…
-
- 2 replies
- 2.3k views
-
-
TNA இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள். அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம் வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை…
-
- 31 replies
- 2.1k views
-
-
ஐ.நா விசாரணைக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் – ரணில் JAN 24, 2015 | 15:41by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “13வது திருத்தச்சட்ட வரையறைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எல்லா அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இதன்படி எல்லா மாகாணசபைகளுக்கும் சமமான அதிகாரங்கள் கிடைக்கும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்ட விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 0 replies
- 674 views
-
-
அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து JAN 24, 2015 | 12:14 by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ். மாவட்டத்துக்கு 7 நாடாள…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய அரசாங்கம் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் – அமந்த பெரேரா JAN 24, 2015by நித்தியபாரதிin செய்திகள் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 72 சதவீத வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தமை நாட்டின் தற்போதைய புதிய அரசாங்கம் இந்த மக்களுக்கு உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. இவ்வாறு ஐபிஎஸ் ஊடகத்துக்கான அமந்த பெரேரா எழுதியுள்ள செய்தி ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் வெற்றி கொள்ளப்பட்ட ஆறாவது ஆண்டு நிறைவு நாளுக்கு இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. மே19,2009 அன்று தமிழீழ விடுதல…
-
- 0 replies
- 357 views
-
-
வழமையாக மிக ஆடம்பரமாக மக்கள் சொத்துக்களை பயன் படுத்தி கொண்டாடிய சிராந்தி இன்று வழமைக்கு மாறாக பிறந்தநாள் கொண்டாடியதுடன் நின்மதி இழந்த முகத்தை கணவன் மனைவி முகத்தில் அவதானிக்க முடிகிறது. மெதமுலான வீட்டில் வசிக்கும் இலங்கை முன்னாள் முதல் பெண் சிராந்தி ராஜபக்சேயின் இன்றைய பிறந்த நாளின் போது நாமல் ராஜபக்சவினால் எடுக்கபட்ட செல்பி படங்கள். http://www.canadamirror.com/canada/37118.html#sthash.d29k98c1.dpbs
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய கடந்த வருடம் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மனித உரிமை பேரவையிலும், பாதுகாப்புச் சபையும் வழங்கிய ஆணையின் படி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்றன. இதன்படி சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, …
-
- 0 replies
- 330 views
-
-
பிள்ளையானுக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் அதனை எம்மிடம் முறையாக கூற வேண்டும் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக ஒவ்வொரு இடத்தில் சென்று சொல்லிப் புலம்புகிறார். அவ்வாறு புலம்பி பயனில்லை. அவருக்கு பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. முன்னாள் பிரதி நீதி அமைச்சருக்கு 15 – 20 வரையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனக்கு ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டு பேர் மட்டுமெ என்னுடன் இருக்கின்றார்கள். பாதுகாப்பு உத்தியோகத்தர்களை எனக்கு பணி விடை செய்யும் சேவகர்களாக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாது…
-
- 7 replies
- 788 views
-
-
இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவை தொடர்பில் ஆரம்ப மட்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுவருகின்றன. இதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசாங்கமும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் சிங்கள மக்களை தூண்டிவிடக்கூடிய எந்தவொரு அறிவித்தல்களையும் வெளியிடுவது புதிய அரசாங்கத்துக்கு பாதகமாக முடிந்துவிடும் என்பதற்காக கருத்துக்கள் கவனமாக வெளியிடுப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை பொறுத்தவரை புதிய அரசாங்கத்தினால் உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது. இது எதிர்வரும் ஏப்பரலில் நடைபெறும் பொதுத்தேர்தலில…
-
- 0 replies
- 464 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற இரவு அரச அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்தமைக்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றால், அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதித்துறை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, 'லங்காடெய்லி' இணையத்தளத்திற்க வழங்கிய செவ்வியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு தற்போது விடுவொன்று இல்லையெனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற இரவு அலரி மாளிகையில் சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டதாக சாட்சிகள் கிடைக்கப் பெற்றால் அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 508 views
-