ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
தமிழ் முஸ்லீம் மக்களை வாக்களிக்காமல் தடுக்கும் சில துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியின் இறுதி நேர வெளிப்பாடா என்ற கணிப்பை ஏற்படுத்தியுள்ளன. இனவாத்தை தூண்டும் குறித்த துண்டுப் பிரசுரத்தை அரச தரப்பு அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் புத்தளம் உள்ளிட்ட தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்படுகின்றன. தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதை கணிப்பிட்டுள்ளதடன் அவர்களின் வாக்களிப்பை தடுக்கும் நோக்கம் கொண்ட குறித்த துண்டுப் பிரசுரங்களில் இனவாத கலவர அச்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோல்வி கண்டு வரும் மகிந்த ராஜபக்ச அரசின் இ…
-
- 0 replies
- 248 views
-
-
Source: daily Mirror
-
- 0 replies
- 629 views
-
-
மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகரை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இங்குள்ள இளைஞர்களை அடித்து துன்புறுத்தி வற்புறுத்தி சேர்த்துக்கொண்டு யுத்தம் செய்வதற்கு தூண்டியவர்கள் கருணா,பிள்ளையான் போன்றவர்களே. அவர்கள் குறித்த இளைஞர்களை கொன்றுகுவித்துவிட்டு எஞ்சியிருந்த இளைஞர்களை சிறைகளில் அடைத்துவிட்டு இவர்கள் இரஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிர…
-
- 4 replies
- 634 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டத்தில் பூட்டப்பட்டு கிடக்கின்ற நான்கு அறைகளை திறந்து சோதனைகளை நடத்துமாறு எதிரணியினர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பூட்டப்பட்டிருக்கின்ற நான்கு அறைகளில் பெருந்தொகையான வாக்குச்சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் எதிரணியினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். மண்டப வளாகத்துக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய,ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அத்துரலிய ரத்னதேரர் அங்கிருக்கும் பொலிஸாரிடமே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/137159#sthash.JjX0UIQj.dpuf http://www.tamilmirror.lk/137159
-
- 1 reply
- 557 views
-
-
சொந்தப் பேனாவினால் புள்ளடியிட்டால் வாக்கு நிராகரிக்கப்படும் – தேர்தல் ஆணையாளர் JAN 07, 2015 | 14:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படும் பேனாவினால் புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், வாக்களிப்பு நிலையங்களில் வழங்கப்படும் பேனாவினால் மட்டுமே வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளில் புள்ளடியிட வேண்டும். வாக்காளர்கள் தமது சொந்த பேனாவை எடுத்துச் சென்று புள்ளடியிடுவது தவறு. வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவதற்காக வாக்காளர்களுக்கு நாம் செம்மஞ்சள் அல்லது மண்ணிற பேனாவை வழங்குவோம். ஏனைய எந்த நிறப் பேனாவினாலும் புள்ளடியிடப்…
-
- 0 replies
- 430 views
-
-
சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான ஐந்து காணித்துண்டுகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிமையாளர்கள் ஐவருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். 05.01.2015 என திகதியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமன்ட் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக குறித்த காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு உரிமையாளர்கள் சமுகமளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36715/57//d,article_full.aspx
-
- 0 replies
- 403 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றை போன்ற போலியான பத்திரிகை ஒன்றை நாளைய காலையில் விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் அச்சகத்தில் இந்த பத்திரிகை தயாரிக்கப்பட்டு, வடமாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பதாக முன்பக்க செய்தியில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலின் போதும், இவ்வாறு போலியான பத்திரிகை ஒன்று பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/36718/57//d,article_full.aspx
-
- 0 replies
- 274 views
-
-
இலங்கையில் சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் நிலை கவலைக்கிடமானதே. எம்மை பொறுத்தவரையில் எந்த சிங்கள இனவாதிகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் எமது நிலையில் மாற்றம் ஏற்ப்படுவதென்பது கேள்விக்குறியனதே. இனவாதிகளால் நில ஆக்கிரமிப்பும் ,சமய பௌத்தவிகாரை தோற்றமும் தினமும் நடந்துகொண்டேயிருக்கின்றது. திடீரென முளைத்த வீதிகளும், யாழ் நோக்கிய புகையிரத பாதைகளும் எமது நிரந்தர விடுதலையை தந்துவிடமாட்டாது. வெளிநிலையில் மேடைகளில் கொச்சைத்தமிழ் பேசி எங்கள் மீது பாசம் காட்டுவதாக போலி நாடகத்தை ஆடி எமது இனத்தை மறைமுகமாக அழித்துவரும் இனவாதக் கும்பலுக்கு எமது வாக்குகளை அளிப்பது எவ்வளவுக்கு நியாயமானது ? இம்முறை தேர்தல் மிகவும் சூடு பிடித்த நிலையில் யார் வருவார்கள் என நாடி பிடித்து பார்க்கும் …
-
- 0 replies
- 733 views
-
-
நாளை நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிப்பு காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கு மாறும் அவர் கேட்டுக் கொண்டார். வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை உடன் கொண்டு வந்திருந்தால் மாத்திரமே வாக்களிக்க முடியுமென்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும் அவர் நினைவுறுத்தினார்.தேர்தலில் வாக்களிப்பது உங்கள் உரிமை என்பதனால் அந்த உரி…
-
- 0 replies
- 424 views
-
-
மகிந்த, மைத்திரி தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள 15 மில்லியன் வாக்காளர்கள் JAN 07, 2015 | 0:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, கம்பகா மாவட்டத்தில், அதிகளவு வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு, 1.637 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதையடுத்து, கொழும்பு மாவட்டத்தில், 1.586 மில்லியன் வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் 1.049 மில்லியன் வாக்காளர்களும், குருநாகல மாவட…
-
- 1 reply
- 443 views
-
-
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென பல்டி அடித்துள்ளார் அரச தரப்பு வடக்கின் பங்காளி அமைச்சர். முன்னதாக மஹிந்தவிற்கு வாக்களிக்கச்சொல்லி பகிரங்க பிரச்சாரங்களை செய்துவரும் அவர் பின்னர் தனது முக்கிய ஆதரவாளர்களை மட்டும் தனிப்பட்டதாக அழைத்து மஹிந்தவிற்கு வாக்களிக்க நான் சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மஹிந்தவிற்கு ஆதரவு கோரவென அனுப்பி வைத்த சுவரொட்டிகளை ஒட்டாது மறைவிடத்தினில்…
-
- 1 reply
- 688 views
-
-
நாளை வாக்கு எண்ணும் பணி தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர் JAN 07, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “நாளை காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும் வகையில், எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. உரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள், வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா வாக்குப் பெட்டிகளும், வாக்கு எண்ணும் நிலையத்தை வந்தடைந்த பின்னரே, வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும். வாக்களிப்பு மாலை 4 மணிக்கு மு…
-
- 1 reply
- 720 views
-
-
எமக்கு புத்திகூற வேண்டாம் – ஐ.நா பேச்சாளர் மீது பாய்கிறது சிறிலங்கா JAN 07, 2015 | 11:40by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் கருத்தை அவரது பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று, ஐ.நா பொதுச்செயலர் ஏற்கனவே வெளியிட்ட கருத்தை மீளவும் நினைவுபடுத்தியிருந்தார். இது தேவையற்ற, அநாவசியமான கருத்து என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது. சிறிலங்கா 1931ம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக அடிப்படையில், உரிய காலக் கிரமத்தில், அமைதியாக தேர்தல்களை நடத்தி வருகிறது என்றும், வாக்காளர்…
-
- 0 replies
- 305 views
-
-
யார் வென்றாலும் முதலில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் – பாஜக JAN 07, 2015 | 8:57by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், முதலாவதாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜகவின் தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் ஜோலி, எவர் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறிலங…
-
- 0 replies
- 407 views
-
-
மகிந்தவைத் தூக்கியெறியும் கொமன்வெல்த் – கொழும்பு ஆய்வாளர் எச்சரிக்கை JAN 07, 2015 | 1:25by கார்வண்ணன்in செய்திகள் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், பிரபல அரசியல் ஆய்வாளரான உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க அனைத்துலகப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். கயானாவின் முன்னாள் அதிபர் பார்வத் ஜக்டியோ தலைமையில் கொமன்வெல்த் அமைப்பும் கண்காணிப்பாளர் குழு…
-
- 2 replies
- 378 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை எதிர்க்கட்சியினர் சுற்றி வளைப்பு:-07 ஜனவரி 2015 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை எதிர்க்கட்சியினர் சற்று முன்னர் சுற்றி வளைத்துள்ளனர். எதிர்க்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சுற்றி வளைத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவைத்தலைவர் கரு ஜயசூரிய, துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற அதுரலிய ரதன தேரர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இவ்வாறு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்…
-
- 0 replies
- 706 views
-
-
நாளைய தேர்தலில் வெற்றி பெறுகின்ற வேட்பாளர் யாராக இருந்தாலும், உடனடியாக தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதலில் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளல், அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துதல் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற விடயங்களுக்கு நாளைய தேர்தலின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவாகின்றவர் முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறத்தியுள்ளார். அதேநேரம் சுதந்த…
-
- 0 replies
- 303 views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மணல் மற்றும் கிரவல் அகழ்வு காரணமாக பெருமளவு மரங்கள் அழிவடைந்து வருவதுடன் சூழலியல் பாதிப்புகளும் பெருமளவில் இடம்பெற்று வருகின்றன. 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த இரு மாவட்டங்களிலும் வீதிப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, புனரமைப்புப் பணிகளுக்காக பெருமளவான கிரவல் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் யூனியன்குளம், அக்கராயன், இராமநாதபுரம் ஆகிய கிராமங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயின் அமதிபுரம், கோட்டைக்கட்டியகுளம், புத்துவெட்டுவான், பழைய முருகண்டி, ஐயன்கன்குளம், அம்பகாமம், மாந்தை கிழக்கு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் பெருமளவு…
-
- 0 replies
- 375 views
-
-
http://static1.tamilmirror.lk/images/votingprocess.jpg படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்
-
- 0 replies
- 327 views
-
-
தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தேர்தல் திணைக்கள சட்டத்தை மீறி மகிந்த ராஜபக்கசவுக்காக இன்று காலையிலும் வட்டக்கச்சி சந்தை மற்றும் சமுர்த்தி சங்கம் போன்றவற்றில் அரசோடு சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். வெள்ளைநிற NP.Pஊ.1089 இலக்கமுடைய பிக்கப் வாகனத்தில் சென்று மக்களுக்கு பணம் கொடுத்து பிரச்சாரத்தில் தற்பொழுதும் அவர் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது தொடர்பினில் தேர்தல் திணைக்களத்திற்கு புகார் செய்யப்பட்ட போதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் அது தூங்குகின்றதா என மக்கள் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36700/57//d…
-
- 0 replies
- 252 views
-
-
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு சனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனும…
-
- 0 replies
- 223 views
-
-
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் அரசியல் பங்குபற்றுல் உரிமையை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது தாக்குதல், வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனவே மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதே அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசாங்கம்…
-
- 0 replies
- 188 views
-
-
இராணுவத் தலையீடுகளால் வடக்கில் வாக்களிப்பு குறையும் – கண்காணிப்பாளர்கள் அச்சம் JAN 07, 2015 | 0:17by கார்வண்ணன்in செய்திகள் கடுமையான இராணுவப் பிரசன்னம் காரணமாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையலாம் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் பேச்சாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மற்றும், தலைமை ஒழுங்கிணைப்பாளர் டி.எம்.திசநாயக்க ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். “பாதுகாப்பு வழங்குவது என்ற போர்வையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் இராணுவத்தை நிறுத்தியுள்ளது, வாக்காளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 333 views
-
-
மறுவாக்குப்பதிவு நடத்த தயங்கமாட்டேன் – மைத்திரிக்கு தேர்தல் ஆணையாளர் வாக்குறுதி JAN 07, 2015 | 0:08 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார். எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நேற்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, நீதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தனர். எதிரணித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கரு ஜெயசூரிய, ரவி கரு…
-
- 0 replies
- 387 views
-
-
தேவைப்பட்டால் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைப்போம் – சிறிலங்கா காவல்துறை JAN 07, 2015 | 0:03 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, சிறிலங்கா இராணுவத்தை அழைப்போம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். தேர்தல் பாதுகாப்புப் பணியில் 70 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் நாளன்றும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும், 65 ஆயிரம் காவல்துறையினரும், 5 ஆயிரம் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். நீதியான, நியாயமான முறையில் தேர்தல் நடப்பதற்கு, அரசியல் கட்சிகளும், ஏனைய எல்லாத் தரப்பினரும், தேர்தல் சட்டங்களை மதித்து ந…
-
- 0 replies
- 318 views
-