ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
இலங்கை அரசின் ஆணைக்குழு முன்பாகவும் சாட்சியமளிக்கத் தயார்! - என்கிறார் சொல்ஹெய்ம். [sunday 2014-07-27 09:00] இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தயார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனக்கு தெரிந்தவற்றை எவர் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கும் தயார் என அவர் ஏற்கனவே அறிவி;த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsI…
-
- 0 replies
- 595 views
-
-
வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டுமானால், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! - இலங்கைக்கு இந்தியா நிபந்தனை. [sunday 2014-07-27 09:00] இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று இலங்கையிடம் இந்தியா, தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சேஷாத்ரி ஷாரி இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை தாம் இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் விடயத்திலும் இந்தியா தெளிவான போக்கை கொண்டுள்ளது. அருணாச்சல் பிரதேசம் தொடர்பில் எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்பதை சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் ஷாரி …
-
- 0 replies
- 332 views
-
-
சம்பந்தன், மஹிந்தவுடன் ஏன் இணையக்கூடாது: இனியபாரதி கேள்வி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரினவாதி என வர்ணிக்கும் இவர்கள் ரணிலை என்னவென்று சொல்லப்போகின்றார்கள் என்றும் அவர் வினவியுள்ளார். பொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி மேற்…
-
- 6 replies
- 828 views
-
-
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கையில்லை – ருத்ரகுமாரன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கையில்லை என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஆணைக்குழுவிற்கு, யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பிலும் விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விசாரணைகளில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளின் மூலமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார். பக்கச்சார்பற்ற விசாரணைகளையே புலம…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறைக்கு TNPF கண்டனம்: [saturday 2014-07-26 20:00] நேற்றய தினம் வெள்ளிக்கிழமை(25-7-2014) மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த யாழ் ஊடகவியலாளர்கள் மீது பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி கைது செய்ய முயன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளர்கள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ஹயஸ் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இவர்களது வகனம் சோதனையிடப்பட்டுள்ளது. சோதனையிடுதல் என்ற போர்வையில் இவர்களது வாகன சாரதியின் ஆசனத்தின் கீழ் சிகரட் பெட்டி ஒன்றினை ஒரு இராணுவ சிப்பாய் வைத்ததை அதில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் மூவர் நேரில் அவதானி…
-
- 1 reply
- 358 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேலைத்திட்டத்திற்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. மேற்படி இயக்கத்தினர் 15 விடயங்களுடன் கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்கி அது குறித்து பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக முனைப்புகளை மேற்கொண்டு வரும் இந்த குழுவினர் குறித்து உயர்மட்டம் மௌனம் காத்து வருகிறது. மகிந்த அரசாங்கத்தை விமர்சிக்கும் 50க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் அரச உயர்மட்டத்தின் ஒற்ற…
-
- 0 replies
- 377 views
-
-
ஹெரோயின் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்து இலங்கைக்கு விநியோகித்து வரும் 30 முக்கிய போதைப் பொருள் வர்த்தர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் டுபாய் இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் இருந்தவாறு இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமது சகாக்களை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. வேலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார மற்றும் மொஹமட் வகிம் மொஹமட் சித்திக் ஆகிய இரண்டு பேரே இலங்கையின் ஹெரோயின் வர்த்தகத்தின் பிரதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் டுபாய் நாட…
-
- 0 replies
- 413 views
-
-
காரைநகரில் புலிச் சீருடை அணிந்தவரே சிறுமியை தூக்கிச் சென்றாராம்! - நாடாளுமன்றத்தில் கதைவிட்ட பிரதமர் [saturday 2014-07-26 09:00] காரைநகர் முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர், சிறுமியை அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார் பிரதமர் டி.எம். ஜயரட்ண. நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்தி விசேட உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இ…
-
- 9 replies
- 477 views
-
-
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விடுதிகளுக்கு அருகே குப்பைக் கூளங்கள் எரிக்கப்பட்டபோது இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த வெடிச்சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. குப்பைக்குள் அல்லது நிலத்தின் கீழ் இருந்த ஏதேனும் வெடிப் பொருள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=211983261426553695
-
- 0 replies
- 295 views
-
-
இந்தோனேசியாவில் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றிப்பெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் அவருக்கு 53.15வீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இன்று அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை ஜனாதிபதி அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை விடோடோ எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதியே இந்தோனேசியாவின் 7வது ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=863193261326202217
-
- 0 replies
- 213 views
-
-
போரில் தமிழ் மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவேன் என்று தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகத் தங்களைத் தமது சொந்த இடத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீளக்குடிய மர்த்த வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர் சம்பூர் மக்கள். சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 8 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்கின்றனர். தமது அவல நிலை தொடர்பாக அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபசக்வுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்னரும் கூட அகதி முகாம்களில் வாழும் எமது துயரத்தை தங்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றோம். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகத…
-
- 0 replies
- 370 views
-
-
பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கத் திட்டம்? 26 ஜூலை 2014 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ஷிரானி பண்டாரநாயக்கவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாதுலுவே சோபித தேரர் தலைமையில் அண்மையில் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக போட்டியிடக் கூடிய அடிப்படைத் தகமைகளை ஷிரானி பண்டாரநாயக்க கொண்டிருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்ப…
-
- 1 reply
- 506 views
-
-
சிறு சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு முயலக்கூடாது - பிரதமர் டி. எம். ஜயரட்ன வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருசில சம்பவங்களை வைத்துக்கொண்டு அதனை சர்வதேச மயப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 11 வயது சிறுமியொருவர் கடந்த 15 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். காரைநகர் பகுதியில் …
-
- 1 reply
- 282 views
-
-
யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமாக கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த மாணவியின் சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறுகின்றன. உயிரிழந்த மாணவி களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்தவர். அவர் பயின்று வந்த நடிப்பு கலை பாடநெறியில் யோகாசனமும் ஒரு பாடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil24news.com/news/archives/176377
-
- 1 reply
- 527 views
-
-
இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகளவானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தொலைத்தொடர் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளமை சிறந்தது என்ற போதிலும் அதில் கெடுதிகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மக்கள் தொகையானது இரண்டு கோடியே பத்து லட்சமாகும். எனினும் இரண்டு கோடியே 20 லட்சம் தொலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன. மக்கள் தொகைக்கு மேல் தொலைபேசிகள் உள்ளன. நாட்டிலுள்ள அனைவரிடமும் தொலைபேசிகள் உள்ளன. அலுவலகங்களில் வேறு வேறு வேலைகளுக்காக தொலைபேசியில் பேச அரை மணிநேரம் ஒதுக்க வேண்டும். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கி கொண்டு 30 நிமிடம் மு…
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கையில் போதைக்கு அடிமையானவர்கள், தினமும் ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆபத்தான ஔடதங்களை கட்டுப்படுத்தும் சபை நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இதனடிப்படையில் இவர்கள் போதைப் பொருளுக்காக வருடத்திற்கு 565 கோடி ரூபாவை செலவிடுவதாகவும் சுமார் இரண்டு லட்சம் பேர் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகவும் ஆபத்தான ஔடதங்களை கட்டுப்படுத்தும் சபை குறிப்பிட்டுள்ளது. http://tamil24news.com/news/archives/176371
-
- 0 replies
- 223 views
-
-
140 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்து நுழைவிசைவு வழங்கும் இலத்திரனியல் பயண அனுமதித் திட்டத்தை இந்திய அரசாங்கம் வரும் ஒக்ரோபர் 2ம் நாள் ஆரம்பிக்கவுள்ளது. திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில், இதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை செய்யும்படி, குறிப்பிட்ட 9 விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, 180 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், தற்போது, 140 நாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கே இந்த வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விளக்கங்களுக்காக காத்திருப்பதாக, குடிவரவு…
-
- 0 replies
- 378 views
-
-
தென்சீனக் கடல் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படும், சீனா, மற்றும் ஜப்பானிய தலைவர்கள் வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் நாள் தொடக்கம், 8ம் நாள் வரை சிறிலங்கா மற்றும் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, சிறிலங்காவுடன், கடல்சார் பயணப் பாதையின் பாதுகாப்புத் தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், சீனாவின் அதிகளவு உதவிகளைப் பெற்றுள்ள நாடுகளான சிறிலங்கா மற்றும், பங்களாதேசுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக் கொள்ளும் நோக…
-
- 0 replies
- 405 views
-
-
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், அஜித் ரோஹண தெரிவித்தார். கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வருகைதந்து, மீண்டும் திரும்பி வரும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.onlineuthayan.com/News_More.php?id=357163260726559861
-
- 0 replies
- 358 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்துப் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் இன்று ஆடி அமாவசை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. கீரிமலை தீர்த்த கேணியில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட அடியவர்கள் நீராடி தமது தந்தை மற்றும் மூதாதையர்களின் பெயர் நட்சத்திரங்களை அந்தணர்களிடம் கூறி தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பிதிர்கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களிற்கு அருள் பாலிக்க நகுலேஸ்வர பெருமானும் பார்வதி அம்மையும் கீரிமலை தீர்த்த கேணி பகுதியில் அமைந்துள்ள எழுந்தருளி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். மேலும் இன்றைய பிதிர்கடன் நிறைவேற்றும் வழிபாட்டில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து தமது பிதிர்க்கடன்களை நிறை வேற்றியிருந்தமை…
-
- 0 replies
- 573 views
-
-
கறுப்பு ஜூலை நினைவுகள் இன்னும் மறையவில்லை! - பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் தெரிவிப்பு [saturday 2014-07-26 08:00] இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை நினைவுகள் இன்னும் மறையவில்லை என்று பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் எட்வேட் மில்லிபேன்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் வன்முறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவுகள் இந்த மாதத்தில் நினைவுகூரப்படுகின்றன.இந்த வன்முறைகளில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பது யாருக்கும் தெரியாது. எனினும் அதன் நினைவுகள் இன்னும் அழியவில்லை. அத்துடன் அதனை நாம் மறக்கவும் முடியாது என்றும் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரி…
-
- 0 replies
- 212 views
-
-
அவுஸ்ரேலிய அகதிகள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டுக்கு எதிர்ப்பு! [saturday 2014-07-26 08:00] அவுஸ்ரேலியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 அகதிகள் தொடர்பாக இந்தியாவுடன் அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் முனைப்புக்கள் சட்டரீதியானதாக இருக்காது என்று அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அகதிகள் இந்திய அதிகாரிகளின் அடையாள சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார். இந்த அகதிகளில் இந்தியர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பேற்க இந்தியா உறுதியளித்திருந்ததன் அடிப்படையிலேயே இந்த சோதனை இடம்பெறவுள்ளதாக மொரிசன் குறிப்பிட்டார். இந்தநிலையில் அகதி அந்தஸ்து கோரிவோர் வள நிலைய நிறைவேற்று அதிகாரி கொன் கராபனக…
-
- 0 replies
- 285 views
-
-
அமைச்சர் எஸ்.பி. வீட்டருகே கண்டிய மன்னன் இராஜசிங்கனின் புதையல் பெட்டகம்! [saturday 2014-07-26 09:00] 1800 ல் கண்டியை ஆண்ட இராஜசிங்க மன்னனின் பெட்டகம் ஒன்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி.திஸாநாயக்கவின் வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். கண்டிக்கு அருகில் உள்ள ஹங்குராங்கெத்தையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இலங்கையை பற்றி வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட ரொபட் நொக்ஸின் புத்தகத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை வளவ்வ என்ற இடமே இராஜசிங்கனின் தலைநகராக இருந்ததாகவும் நொக்ஸ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தந…
-
- 3 replies
- 652 views
-
-
ஒல்லாந்தர் தேவாலய பொறுப்பாளருக்கு விளக்கமறியல் சனிக்கிழமை, 26 ஜூலை 2014 02:08 0 COMMENTS கொழும்பு, கொட்டாஞ்சேனை ஆட்டுப்பட்டி தெருவிலுள்ள ஒல்லாந்தர் தேவாலயத்தின் பொறுப்பாளரை, ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, நேற்று உத்தரவிட்டுள்ளார். தேவாலயத்தில் இருக்கின்ற இடிதாங்கியின் அடிப்பகுதி புதைக்கப்பட்டிருக்கின்ற இடத்தை தோண்டுவதற்கு உதவியளித்ததாக அவருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். விலை மதிக்க முடியாத பொருளொன்றையே குறித்த நபர் தேடியுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த…
-
- 0 replies
- 387 views
-
-
மீண்டும் யாழ்.தேவி யாழிற்கு news யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். யாழ். வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் செப்ரெம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார். செப்ரெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ்தேவி இந்த வருட இறுதி…
-
- 0 replies
- 745 views
-