ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
-நவரத்தினம் கபில்நாத் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏ9 வீதியை கடந்துகொண்டிருந்த முதலையொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் முதலைகள் தற்போது நீர் தேடி நிலப்பரப்பிற்குள் வருகின்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை (01) ஏ9 வீதியை சுமார் 5 அடி நீளமுள்ள முதலையொன்று கடந்துகொண்டிருந்த சமயம், எதிர்பாராத விதமாக வாகனமொறு அதன் தலை மீது ஏறியமையினால் அவ்விடத்திலேயே இறந்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/116360-9----.html
-
- 8 replies
- 902 views
-
-
பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றிற்கே இவ்வாறு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்துடன் பன்றி இறைச்சி துண்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயத்தில் பள்ளி வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக புனர்நிர்மானப் பணிகளை நிறுத்துமாறும் கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், பள்ளிவாசல் நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிய…
-
- 1 reply
- 785 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சால் 02 வாரங்களில் 37,700 கிலோ பார்த்தீனியம் கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'வடமாகாண விவசாய அமைச்சின் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்களிடமிருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்கு 10 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டத்தை யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறது. விவசாயத்துக்கும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ளூர்த் தாவரங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் அந்நிய ஊடுருவலான பார்த்தீனியம் எமது சூழலில் வேகமாக பரவுகிறது. பார்த்தீனியத்தை ஒழிப்பதற்கு கடந்த காலங்கள…
-
- 0 replies
- 393 views
-
-
கோத்தபாயவுக்கு எதிரான முக்கிய சாட்சியாக சரத் பொன்சேகாவைப் பயன்படுத்த அமெரிக்கா முயற்சி! [Tuesday 2014-07-01 09:00] பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளின் சாட்சியாளராக, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அமெரிக்கா கொழும்பில் உள்ள தமது தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்திருந்த வேளையில், அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன் போது ஒல்கோஹோமா நகர பாதுகாப்பு திணைக்களம், சரத் பொன்சேகாவை விசாரணைக்கு அழைத்திருந்தது. எனினும் இந்த விசாரணைக்கு ஒதுக்கப்பட்டிருந்த தினத்துக்கு முன்னதாகவே அமெரிக்…
-
- 1 reply
- 585 views
-
-
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுவதாக டிரான்ஸ்பரன்சி இன்டநசனல் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் ஜேசி வெலியமுன தெரிவித்துள்ளார். ரேடியோ அவுஸ்திரேலியாவின் சென் லாமிற்க்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் என்பது புதிய புதிய சவால்களை சந்திக்கிறது. அரசாங்கம் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதில் மாத்திரம் அக்கறை செலுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் என்பது சாத்தியமல்லாத விடயமாக மாறி வருகிறது. அரசாங்கம் ஆர்வமாக உள்ள தேசிய நல்லிணக்கம் என்பது அதன் பரம்பரை திட்டமாக மாறி உள்ளது. நாடு இன்றைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான சிலரால் ஜனநாயகத்தின் அடிப்…
-
- 1 reply
- 759 views
-
-
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன. அருகில…
-
- 16 replies
- 1.8k views
-
-
-வடிவேல்-சக்திவேல் மட்டக்களப்பு, களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலய பாற்குடபவனி நேற்று ஞயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்றது. களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவின் 5ஆம் நாள் திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக களுதாவளை போற்றி நாச்சி குடும்ப மக்களினால் இப்பாற்குடப் பவனி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆடல் பாடல் மற்றும் காவடி ஆட்டங்களுடன் களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பூசிக்கப்பட்ட பசும்பாலை ஏந்தி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் மூல மூர்த்தியான சுயம்பு லிங்கப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு கிரியைகள் நடைபெற்றன. இதில் பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அபிஷேகக் கிரியைகள் யாவும், ஆலய பிரதம குரு சி…
-
- 0 replies
- 398 views
-
-
நடக்க முடியா கணவனைப் பார்க்கும் மனைவியின் வியக்கும் செயல்
-
- 0 replies
- 650 views
-
-
செவ்வாய், ஜூலை 1, 2014 - 09:16 மணி தமிழீழம் | வேந்தன் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் ஐநா விசாரணை நடக்கும்! இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும…
-
- 0 replies
- 536 views
-
-
- எம்.றொசாந்த் அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மஹிந்தோதயத் திட்டத்தின் கீழ், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்பப்பீடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அப்பாடசாலைகளில் திங்கட்கிழமை (30) நடைபெற்றன. இந்த நிலையில், வேம்படி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழில்நுட்பம் ஒரு பாடமாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந…
-
- 0 replies
- 335 views
-
-
இனப்படுகொலை மறக்கக்கூடிய காயமல்ல தமிழகத்தில் திரைப்படத் திரையிடல் நிகழ்வின்போது சிலர் பிரசன்னாவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? தனி ஈழம்தான் தமிழர்களுக்கு தீர்வு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்விகளே அங்கு எழுப்பட்டன. பிரசன்ன விதானகே வன்னிக்கு வரும்போது ஒரு பொதுவெளியில் வைத்து இத்தகைய கேள்விகளை யாரும் அவரிடம் கேட்கவில்லை. அவர் வன்னிக்கு வந்து தன் திரைப்படபங்களை திரையிட்டுக் காட்டினார். பிரசன்ன சிறந்த சிங்கள இயக்குனர் மட்டுமல்ல. அவர் உலகத்தரமான இயக்குனர். அவரது நோக்கம் திரைப்படத்தை வணிகமாக்குவதல்ல. அதை அவரது திரைப்படத்தை பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும். தன் திரைப்படங்களின் மூலம் இனப்பிரச்சினைய…
-
- 1 reply
- 664 views
-
-
நெதர்லாண்ட் நாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய செயற்பாட்டாளர் தனது வழக்கை, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என அடையாளப்படுத்தி தொடர்ந்து வருகையில் இவ் வழக்கு விடையமான முக்கியமான விசாரணை எதிர்வரும் 4.07.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதால் பெருமளவான தமிழ் மக்கள் அன்றைய தினத்தில் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை மக்கள் அமைப்பு என ஆதரவு தெரிவிக்க அழைக்கப்படுகின்றனர் . இத்தாலி நாட்டிலும் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பு என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது . இத்தருணத்தில் தமிழினத்தைக் காத்த விடுதலை அமைப்புக்கு அங்கீகாரம் வேண்டியும் தமிழ…
-
- 0 replies
- 386 views
-
-
- செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் இம்முறை 1,500 ஹெக்டேயரில் கோடைகால வெங்காயச் செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை (30) தெரிவித்தார். பருவமழை மற்றும் கிணறு, குளங்களை நம்பி ஜுலை மாதம் இச்செய்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் வழமையாக 1,400 ஹெக்டேயரில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், தற்போது வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால் 1,500 ஹெக்டேயரில்; செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். சிறுப்பிட்டி, உடுவில், கோப்பாய், தெல்லிப்பழை, அச்சுவேலி, புத்தூர், தீவகம் உள்ளிட்ட பல இடங்களில் பெருமளவில் வெங்காயச் செய்…
-
- 1 reply
- 478 views
-
-
திருமதி அனுஷியா சிவராஜா இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகராக சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பதவி ஏற்கவுள்ளார்.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவி பிரமாண வைபவத்தில் கலந்துக் கொள்வதற்காக புது டெல்லி சென்றிருந்த போது அவருடன் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சென்றிருந்தார். அவ்வேளையில் அடிகடி கட்சி மாறும் திரு.s.v.செகர் மஹிந்த ராஜபஷ்சவையும் ஆறுமுகம் தொண்டமானையும் சந்தித்தார். அம்மாவை பற்றியும் தமிழக அரசை பற்றியும் விரிவாக மஹிந்தவிற்கும் தொண்டமானிற்கும் அறியபடுத்தினார் அத்தோடுஅம்மாவை சமாளிப்பதென்றால் ஒரு பெண் உதவி உயர்ஸ்தானிகரை சென்னையில் அமர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.உடனே மஹிந்த ராஜபஷ்ச தொண்டமானிடம் ஒரு பெண் பெயரை பரிந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் பள்ளிவாசலைத் தீக்கிரையாக்க முயற்சி:- 30 ஜூன் 2014 இரத்மலானை கந்தவல வீதியிலுள்ள தாளயம் பாவா ஜும்மா பள்ளிவாசலை தீக்கிரையாக்கச் சிலர் மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலின் வாயில் கதவருகில் பழைய ஆடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளது. பழைய ஆடைகள் எரிந்து கதவுக்கு தீ பரவியதால் பள்ளிவாசலில் தீப்பிளம்பு கிளம்புவதையும் புகைவருவதையும் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை நீர் ஊற்றி அணைத்து பெரும் அனர்த்தத்தை தடுத்துவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்…
-
- 0 replies
- 551 views
-
-
பண்டா குரூப்" எனப்படும் பாதாள உலக குழுவுடன் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வு சேவையில் கடமையாற்றிய முஸ்லிம் நபர் ஒருவர் 'இலங்கை இஸ்லாமிய போராளிகள்" என்ற பெயரில் அமெரிக்க இராஜங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இத்தகவலை குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டா குரூப் எனப்படும் பாதாள உலக குழுவுடன் முஸ்லிம் அமைச்சருக்கு தொடர்பு உள்ளதாகவும் குறித்த குழுவுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கொழும்பு மாளிகாவத்தையில் நான்கு பாதாள குழுக்களும், அம்பாறையில் முஜைதீன் என்ற குழுவும் திருகோணமலையில் ஒ…
-
- 2 replies
- 579 views
-
-
-நவரத்தனிம் கபில்நாத் வன்னிப் பிரதேசத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தினத்தை வருடம் தோறும் ஓகஸ்ட் மாதத்தில் அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புக்களால் நகரசபைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் செயலாளர் சி. சத்தியசீலன் தெரிவித்தார். வவுனியா நகர வரியிறுப்பாளர்கள் சங்கம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பண்டாரவன்னியன் நற்பணி மன்றம், வன்னி மக்கள் முன்னேற்றக்கழகம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், சிக்கன கடன் கூட்டுறவுச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்தே இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வன்னி பிரதேசத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் நினைவுதினம் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 31 …
-
- 0 replies
- 390 views
-
-
திங்கள், ஜூன் 30, 2014 - 00:23 மணி தமிழீழம் | வேந்தன் அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்' இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே இந்தக் கோரிக்கைக்கு காரணம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். இந்த ஆணைகுழு மூவினங்களையும் உள்ளடக்கிய, துறைசார்ந்த மற்றும…
-
- 1 reply
- 426 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதத்தில் இந்திய பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய இந்திய தலைவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க உள்ளனர். எனினும், சந்திப்பு நடைபெறவுள்ள சரியான திகதி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு நடாத்த சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரியிருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல், வடக்கின் இராணுவப் பிரசன்னம், வடக்கின் சனத்தொகைப் பரம்பல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 651 views
-
-
ஐ.நா விசாரணைக் குழு முன் கூட்டமைப்பு சாட்சியமளிக்குமா? - கருத்து வெளியிட சம்பந்தன் மறுப்பு. [sunday 2014-06-29 19:00] போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமித்துள்ள விசாரணைக் குழு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்குமா என்பது குறித்து கருத்து வெளியிட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறுத்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு, இரா.சம்பந்தன்- இந்த விவகாரம் தொடர்பாக எமது கட்சி ஒரு முடிவை எடுக்கும்.அதற்கு அப்பால் என்னால் எந்தக் கருத்தையும் கூற முடியாது. தமிழ் மக்களின் உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது நிச்சயம். இந்த நிலைமையை சிறிலங்கா…
-
- 0 replies
- 503 views
-
-
இலங்கை சுற்றுலாத்துறைக்கு விருது news இலங்கை சுற்றுலாத்துறைக்கு த பெஸ்ட் கன்றி பூத் விருது (the best country booth award) கிடைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இடம்பெற்று வரும் சர்வதேச சுற்றுலாக் கண்காட்சியிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 30 ஜுன் 2014, திங்கள் 9:00 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=472003175430653445#sthash.ocJFvxxu.dpuf
-
- 1 reply
- 402 views
-
-
சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்தன உயர் அழுத்த மின்கம்பங்கள்! - இருளில் மூழ்கியது தீவகம். [Monday 2014-06-30 07:00] News Service காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. நேற்று மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர் - பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன. யாழ். -ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இப்பகுதியில்…
-
- 0 replies
- 285 views
-
-
கிரான்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி! [Monday 2014-06-30 07:00] கொழும்பு கிரான்ட்பாஸ் மாவத்த வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மற்றும் இருவர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீதியில் நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடுநடத்தியவர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு ஓட்டோவில் தப்பிச் சென்றனர். வீதியில் துப்பாக்கிச் சன்னங்கள் சிதறிக்கிடந்தன. போதை வர்த்தகத்தில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையோன மோதலே இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என பிரதேசவாசிகள் தெர…
-
- 0 replies
- 377 views
-
-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இவ்வருடம் சா/த மாணவர்களுக்காக நடாத்தும் இரண்டாம் தவணைப் பரீட்சையில் வரலாறு பாடத்திற்காக தலைகீழான உலகப்படம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 25 ம் திகதி நடைபெற்ற வரலாறு பாடத்தின் பகுதி 2 வினாப் பத்திரத்திற்காகவே இவ்வாறு தலைகீழான உலகப்படம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்வித் திணைக்களத்தின் கவனயீனமான இந்த நடவடிக்கையால் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை பரீட்சை நேரத்தில் எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=774863170628478146#sthash.YahIhNkP.dpuf
-
- 2 replies
- 629 views
-
-
விபூசிக்கா மற்றும் ஜெயகுமாரி சார்பில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றுக்கு வராததால் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 13ம் திகதி பா.ஜெயகுமாரியும் அவரது மகளான விபூசிக்காவும் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சியில் ஈடுப்பட்டார் என்று குற்றம்சாற்றப்பட்ட கஜீபன் என்பவருக்கு அவர்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் பின்னர், விபூசிக்கா கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறுவர…
-
- 1 reply
- 953 views
-