Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வல்லப்பட்டை பொலிஸாரால் கைது, வல்லப்பட்டை கொண்டு செல்ல முயற்சித்தவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது போன்ற செய்திகள் அண்மைக் காலமாக ஊடகங்களில் பரவலாக அடிபடுகின்றன. ஆனால் வல்லப்பட்டை என்றால் என்ன அது எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்ற கேள்வி பெரும்பாலானோருக்குத் தோன்றுகின்றது. வல்லப்பட்டை மூலிகை தொடர்பில் மேல்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்திய அதிகாரி எம். கே. நிமல்கருணாசிறியை மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை வாசகர்களுக்கு தருகின்றோம். கிரினோப்ஸ் வல்லா என்ற விஞ்ஞானப் பெயரில் அழைக்கப்படும் வல்லப்பட்டை ஆங்கிலத்தில் Agarwood என அழைக்கப்படுகின்றது. தைமலேசியா (Thymelaeaceae) என்ற குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரம் தெற்கு ஆசியாவைப் பூர்வ…

    • 0 replies
    • 1.3k views
  2. http://virakesari.lk/content/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE

  3. இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் மோடிக்கு எதிராக அரசாங்க ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்:- 10 ஜூன் 2014 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு-காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/arti…

  4. -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகமான வயல்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், விவசாயிகள் மத்தியில் மறுபயிர் செய்கையை விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தி நெல் வயலில் கிடைக்கும் வருமானத்தை விட 03 மடங்கு வருமானம் மறுபயிர்ச் செய்கையில் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.குசைன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் மறுபயிர்ச் செய்கை பற்றி அவரிடம் கேட்டபேதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், 'அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் இவ்வருட இறுதிக்கு முன்னர் மாற்றுப்பயிர்ச் செய்கையின் உற்பத்திகளை இறக்குமதி செய்வதைக் குறைத்து உள்ளூர்; உற்பத…

  5. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியாவும், அமெரிக்காவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்படும் சர்வதேச விசாரணகைளின் குழுவின் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகின்றது என தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகளில் பங்கேற்ற அமெரிக்க பிரித்தானிய பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். விசாரணை நடாத்தும் பிரதிநிதிகளுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை ஒழுங்கு செய்தமை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடு…

  6. திருக்கேதீஸ்வரம் வருடாந்த தேர்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் தொடர்ந்து நடைபெற்று இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. பிள்ளையார், சிவன், முருகன், அம்மன், சண்டேஸ்வரர் ஆகியோர் தனித்தனியே தேர்களில் ஆலயத்தை சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தனர். நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தேர்த்திருவிழாவைக் கண்டுகளித்தனர். திருக்கேதீஸ்வரம் சிவாச்சாரியார் பலசுப்பிரமணியம், கண்ணன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் இந்து மாமன்றத்தின் யாழ். கிளை தலைவர் ஆறு திருமுருகன், திருக்கேதீஸ்வர திருப்பணித்தலைவர் மாணிக்கம் தவயோகராஜா, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்…

    • 0 replies
    • 503 views
  7. யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறைவின் 5வது ஆண்டை கடந்தமாதம் கொண்டாடியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய தமது அலுவலகத்தால், நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்வார்கள் அந்த யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய இலங்கை அரசு ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவடை…

  8. - ற.றஜீவன் 'வடமராட்சி கிழக்கில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வினால் அப்பிரதேசம் அழிவடையும் நிலையில் உள்ளது. மக்களின் நலனுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட இதில் அக்கறை இல்லாமல் இருப்பது மிக கவலையாகவுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எமது கூட்டமைப்பு மக்கள் பிரநிதிகள் கூட்டங்களில் மட்டுமே கதைக்கிறார்கள். அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வடமராட்சியின் பல இடங்களுக்கு இங்கு இருந்துதான் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதியில் கடல் மட்டத்துக…

    • 0 replies
    • 463 views
  9. நீண்டகாலமாக இயங்கமுடியாத நிலையில் இருக்கும் திக்கம் வடிசாலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். திக்கம் வடிசாலை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட யெலகத்தில் இன்று காலை 11மணிக்கு இடம்பெற்றது. அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், திக்கம் வடிசாலை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான பல கதைகள் வெளியாகி வருகின்றது. அண்மை நடைபெற்ற நடாளுமன்ற கூட்டத்தின் போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் எனது அமைச்சின் கீழ் இருக்கும் விடயம் குறித்து நான் இல்லாத வேளை விவாதித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே குறித்த விவாதம் தொடர்பில் மிகவிரைவில் பதி…

  10. குருநகர் பகுதியிலிருந்து சென்று மண்டைதீவுக் கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் படுகொலைசெய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் குருநகரில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இன்று காலை 6 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் எற்றி மலரஞ்சலி செலுத்தினர். இதேவேளை முற்பகல் 10 மணியளவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு வருகை தந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன…

  11. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இன்று ஜெனிவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் போது, மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஆற்றிய உரையினை அடுத்து இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://onlineuth…

  12. விசாரணைக் குழுவின் இரண்டாவது நிபுணர் சூடானியர்? - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் [Tuesday, 2014-06-10 18:38:17] இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை செய்ய, மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டவுள்ள குழுவில் கேமர் ரூஜ் யுத்த குற்ற விசாரணை நீதிமன்ற நீதிபதியாக இருந்த சில்வியாவுடன் சூடானைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறரலாம் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இன்று குறித்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அ…

  13. (முல்லைத்தீவு விஜயத்தின் போது மாவட்ட கட்டளைத் தளபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-) தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கான எங்களது பயணத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்து நாங்கள் பெற்றுக் கொண்ட பொன்னான வாய்ப்பான வடக்கு மாகாண சபை இன்று செயலிழந்து காணப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கூறிவருகின்றனர் உண்மையில் இதற்கு அரசாங்கம் தடையாக இருப்பதாக கூற முடியாது இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருப்பவர்கள் யார் என்பது பற்றி பகிரங்கமாக விவாதிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மல்ல…

  14. கூரகல, ஜெய்லானி பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிவாசல் உடமைகளையும் பொருட்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திக்கொள்ளுமாறும் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து முஸ்லிம்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இப் பகுதியில் தொல்பொருள் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெளியார் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இப் பிரதேசத்திற்குள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் அகற்றப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று முஸ்லிம…

    • 2 replies
    • 506 views
  15. சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் முகம் கொடுக்காவிட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சி அரசாங்கம் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில், யுத்தம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை அரசாங்கம் நிராகரிப்பது ராஜ தந்திர ரீதியான புத்துசாரியமான விடயமல்ல. அவ் விசாரணையை ஏற்றுக் கொண்டு சாட்சியங்களை வழங்க வேண்டும்.இது அரசாங்கத்திற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். சர்வதேச ரீதியாக எமது பட…

  16. மாத்தளன் முதல் சாலை வரையான கடற்கரை அடங்கிய பிரதேசத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் அரசசார்பு முதலாளிகள் (அரச திமிங்கிலங்கள்) கடலட்டை பிடிக்கும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் செல்ல முடியாதவாறு இராணுவத் தடை முகாம் போடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரங்களில் ஒளியூட்டி ஒட்சிசன் சிலிண்டர்களின் உதவியுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் ஒளியூட்டி கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களால் மீன்கள் ஆழ்கடலை தாண்டி கரையோரப்பகுதிக்கு வருவதில்லை எனவும் இதனால் தமது நாளாந்த மீன்பிடி தொழில் பத்து மடங்கு குறைவடைந்து 30 கிலோவில் இருந்து 3 கிலோ வரை குறைந்து…

  17. வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வுக்கான அனுமதியினை வழங்குவதற்காக கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை பிரதேச சபை பல மில்லியன் இலஞ்சம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமராட்சி கிழக்கில் அடாத்தாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த மகேஸ்வரி நிதியம் வடமாகாணசபை தேர்தலின் பின்னராக கடுமையான தடைகளையும் எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கின் நிர்வாகத்தை கொண்டுள்ள பருத்தித்துறை பிரதேசசபையிடம் மணல் அகழ்விற்கான புதிய அனுமதியினை மகேஸ்வரி நிதியம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்விடயம் தொடர்பில் பல மில்லியன் கைமாறியுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தரப்புக்கள் தெரிவித்துள்;ளன. இந்த நிலையில் தன்னிச்சையாக பருத்த…

    • 0 replies
    • 323 views
  18. மகனின் மர்ம உறுப்பை வெட்டிய தந்தை கைது செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2014 11:56 யாழ்., ஈவினை கிழக்குப் பகுதியில் தனது மகனின் மர்ம உறுப்பினை உடைந்த போத்தலினால் வெட்டிய தந்தையை நேற்று திங்கட்கிழமை (09) மாலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 வயதான மகன், யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதினை அறிந்த மகன் அதனைத் தட்டிக்கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த தந்தை பியர் போத்தலினை உடைத்து மகனின் மர்ம உறுப்பினை வெட்டியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.http://tamil.dailymirror.lk/2010-07…

  19. தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று (10.3) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமது கட்சியின் கருத்தாக இல்லாமல் எனது கருத்தாக தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கி கொள்வதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதுவரை காலமும் பல விதமான குழுக்கள் தமிழர்கள…

    • 0 replies
    • 345 views
  20. 'ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது, 'கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபாலப்பிள்ளை திரேஸ்கான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற தீப்பாய்வதில் கலந…

    • 0 replies
    • 378 views
  21. -ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயிகள், தங்களது விவசாயக் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் தடைவிதித்துள்ளதை எதிர்த்து அக்கரைப்பற்று பஸ் நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை (10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வட்டமடு கண்ட விவசாய அமைப்பு, கிறீன் பீல்ட், விவசாய அமைப்பு, வட்டமடு புதிய கண்ட விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. வட்டமடு பிரதேசத்திலுள்ள முறானாவெட்டி, வேப்பையடி, வட்டமடு புதுக்கண்டம் ஆகிய 1,641 ஏக்கர் விவசாயக் காணிகளில் தாங்கள் 40 வருடங்களாக விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான அனுமதியை பிரதேச செ…

    • 0 replies
    • 311 views
  22. முஸ்லிம் ஆள்கள்தான் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து எங்கள் அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றனர். மறுநாள் புதுக்குடியிருப்பு கடற்கரையில் அவர்களுடன் பலரது சடலங்களைக் கண்டோம். பார்த்து விட்டு வந்த அண்ணனும் சுடப்பட்டார் என ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஒரு பெண் சாட்சியமளித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வில் சாட்சியமளித்த தேவராசா தயாளினியே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது சாட்சியத்தில் - நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்த வேளை இரவு 12 மணியளவில் வந்த சிலர், எங்களது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகியோரைக் கூட்டம் ஒன்று இருப்பதாகக் கூற…

  23. தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலர் இந்திய நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். இந்திய அரசாங்கத்தினால் 13 இலங்கை மீனவர்கள் திங்களன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்திய பாதுகாப்பில் உள்ள ஏனைய இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பிலும் கைதுசெய்யப்பட்ட 82 மீனவர்களையும் விளக்க…

  24. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத்தொடர் இன்று செவ்­வாய்க்­கி­ழமை காலை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் 27 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பிரே­ர­ணைகளும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இன்றைய ஆரம்ப அமர்வில்உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்து இதன்­போது அறிக்கை ஒன்றை வெளி­யி­ட­வுள்­ள­துடன் மனித உரிமை மீறல் விவ­காரம் குறித்து விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ரணைக் குழு குறித்தும் அறி­விக்­க­வுள்ளார். அத்­துடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­…

    • 0 replies
    • 469 views
  25. ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பம் இலங்கை அரசின் பதில் இன்று news இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலான ஐ.நா. விசாரணைக் குழுவின் புதிய நியமனங்கள் குறித்த இலங்கை அரசின் பதில் இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமை ஆணைக் குழுவின் கூட்டத்தொடருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான குழு பற்றிய விவரங்களை கடந்த வாரம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.