ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
கிருலப்பனையில் உள்ளி தனியார் வங்கியொன்றில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த கொள்ளை முயற்சி எச்சரிக்கை மணி ஒலித்தமையினால் தோல்வியடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107890-2014-04-23-10-19-46.html
-
- 0 replies
- 461 views
-
-
கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த பிரித்தானியப் பெண், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணான, நயோமி மிச்சேல் கோல்மன், நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த காரணத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நாடுகடத்துவதற்கான குடிவரவுத் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த…
-
- 5 replies
- 666 views
-
-
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பௌத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரக விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தியதையும் நாட்டை ஆளும் மஹிந்த தர்மம், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை கண்காணிக்க ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்ததையும் பார்த்து இந்த நாடே தலைகுனிகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும…
-
- 0 replies
- 436 views
-
-
கசினோ சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு! - இரா.சம்பந்தன் தெரிவிப்பு. [Wednesday, 2014-04-23 09:33:50] நாடாளுமன்றத்தில் கசினோ சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கசினோ சட்ட மூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலங்களுக்கு ஆதரவளிக்க முடியாது. இதனை நாம் எதிர்ப்போம். இவ்விடயம் தொடர்பாக இன்று1 நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராயப்படவுள்ளது எனக் குறிப்பிட்…
-
- 1 reply
- 236 views
-
-
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.கடந்த ஒருவாரமாக தொடரும் கடுமையான வெப்பநிலை காரணமாக நீர் நிலைகளில் வற்றிவருகின்றன. இதனால் விவசாய உற்பத்திகளும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இம்மாவட்டத்தின் வழமையான வெப்பநிலை 30 பாகை செல்சியஸாக இருந்த போதிலும் தற்போது 34 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார். . http://tamil.dailymirror.lk/--main/107808-2014-04-23-04-37-47.html
-
- 0 replies
- 276 views
-
-
ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் நடைபெறும் கருங்கல் அகழ்வு சட்டவிரோதம் எனவும் அதனால் இயற்கை சமநிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது என்றும் ஏற்கனவே சுட்டிக்காட்டி அச்செயன்முறையை நிறுத்திய நிலையில் மீண்டும் அங்கு நடைபெறும் கருங்கல் அகழ்வு, தாயகத்தின் வளங்கள் சூறையாடப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது என்று வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். மேலும் இவ்வாறான இயற்கை சிதைப்பு வளச்சுரண்டல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட நிறுத்தப்பட மீண்டும் அவை நடைபெறுதல் சிலரது அதிகார துஷ்பிரயோகத்தையும் அவர்களின் சட்ட விரோத அனுமதி வழங்கலையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் நடைபெறும் சட்டவிரோத கரு…
-
- 0 replies
- 387 views
-
-
-சுமித்தி தங்கராசா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகள், இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளனர். ஹெலிகொப்டர் மூலம் பலாலி படைத்தலைமையத்தைச் சென்றடைந்த அவர்களுக்கு பலாலி இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ். கோட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/107846-2014-04-23-06-47-34.html
-
- 0 replies
- 468 views
-
-
வடமாகாண முதல்வருக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்! - கன்னி அமர்வில் மனோ கணேசன் உரை. [Wednesday, 2014-04-23 10:24:40] தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஆறாவது மேல் மாகாணசபையின் கன்னியமர்வில் மனோ கணேசன் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இங்கே என்னுடன் எங்கள் மாகாணசபை உறுப்பினர் குகவரதன் நமது கட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் நான்கு இலட்ச…
-
- 0 replies
- 344 views
-
-
ஜெனிவா தீர்மானம் தொடர்பான கூட்டமைப்பின் கடப்பாடுகள் என்ன? - ஆராயும் கூட்டம் அடுத்தவாரம் திருகோணமலையில். [Wednesday, 2014-04-23 10:02:06] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடுகள் என்ன என்பது பற்றி கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூடி ஆராயவுள்ளனர். இந்தக்கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்ட கலந்துரையாடலே தற்போது திருகோணமலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள…
-
- 0 replies
- 225 views
-
-
வடமாகாண கல்விமுறை குறித்த ஆய்வுப் பட்டறை - கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்ட கதையானது. [Wednesday, 2014-04-23 10:18:04] வட மாகாணக் கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி முறைமை மறுசீரமைப்பு பற்றிய ஆய்வுப் பட்டறையை இன்றும் நாளையும் கோண்டாவிலில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஏற்பாடு செய்துள்ள போதிலும், அதனை நடத்துவதற்கு ஆளுனரும் மத்திய அரசும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வுப் பட்டறை ஏற்பாட்டுக்கான சகல விடயங்களுக்கும் ஆளுநரினதும், மத்திய கல்வி அமைச்சினதும் வழிகாட்டலையும், பணிப்புக்களையும் உள்வாங்கி அதன்படி மட்டுமே செயற்பட வேண்டிய நிலைக்கு அவரும், அவரது அமைச்சும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த ஆய்வுப் பட்…
-
- 0 replies
- 425 views
-
-
காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்த நடவடிக்கை! - தென்கொரிய விசேட தூதுவரிடம் தெரிவித்தார் ஜனாதிபதி. [Wednesday, 2014-04-23 09:18:26] காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்கொரிய விசேட தூதுவரும் அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மியுங் ஹ்வான் தலைமையிலான தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை அனைத்துத் துறைகளிலும் பாரிய முன…
-
- 0 replies
- 183 views
-
-
இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுவடையும் என அவுஸ்திரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கை கோர்த்துக் கொண்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முனைப்புக்களைப் போன்றே எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுக்கவும் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க நியாயமான காரணங்கள் இருந்தால்…
-
- 0 replies
- 188 views
-
-
-அழகன் கனகராஜ் முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை என முசலி பிரதேச சபையின் தலைவர் வை.எம்.எஹியான் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில், சர்ச்சைக்குரிய முஸ்லிம் குடியேற்றம் பற்றி அறிந்துகொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான …
-
- 0 replies
- 239 views
-
-
இந்தியா வழங்கிய 500 டிராக்டர்கள் எங்கே? - விபரம் தர மத்திய அரசு மறுப்பதாக அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு. [Wednesday, 2014-04-23 09:47:04] வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட டிராக்ரர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே, அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை முடக்குகின்ற வகையிலேயே மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. கமநலசேவைகள் திணைக்களம் பொருளாதார அமைச்சின் கீழ் தற்போது உள்வாங்கப்…
-
- 1 reply
- 618 views
-
-
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தும், தீர்மானத்துக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி அமெரிக்க செனட் உறுப்பினர்களால் தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுரகத்தின் முயற்சியினால், 11 செனட் உறுப்பினர்கள் இணைந்து உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை முன்வைத்திருந்தனர். கடந்த பெப்ரவரி 27ம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானம் செனட் வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. …
-
- 0 replies
- 240 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் காணப்பட்ட சனத்தொகையை விடவும் தற்போது மீள்குடிய மர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சுமார் 13 ஆயிரம் பேருக்கு என்னாயிற்று என்றே தெரியவில்லை. அவர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் இன்னமும் மக்கள் மீள்குடியமர்த்தப்படாது உள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில…
-
- 0 replies
- 265 views
-
-
http://www.youtube.com/watch?v=2I4_S7JjtOw&feature=youtu.be
-
- 0 replies
- 431 views
-
-
புலிகளுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கிய யாழ்.கச்சேரிப் பதிவாளரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது! [Wednesday, 2014-04-23 09:55:05] உயிரிழந்தவர்களின் மரண மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள, யாழ்ப்பாண கச்சேரியின் முன்னாள் பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கச்சேரியில் பதிவாளராக கடமையாற்றிய சின்னராசா சிவராஜா என்பவரின் வங்கிக் கணக்கே முடக்கப்பட்டுள்ளது. இவர் இந்த சான்றிதழ்களை வழங்குவதற்காக பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 80 லட்ச ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் குற…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழர்களின் கலை, கலாசாரத்தில் ஏனைய இனத்தவர்களின் கலை, கலாசாரங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதில் தமிழர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். மண்முனை பாலத்திறப்பு விழாவின்போது ஜனாதிபதி மற்றும் பிரதியமைச்சர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக விளக்கமளிக்கும்போதே இதனை அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கூறியதாவது, மண்முனைப் பாலமானது அம்பாறையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பாலம் என்று இந்தப் பாலத்தினை கூறுவதற்கான காரணம் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்து மீறிய குடியேற்றங்களை அதிகரிப்பதற்கேயாகும். இதன் மூலம் படுவான்கரையிலுள்ள தமிழ் மக்களின் தனித்துவம் இழக்கப்படும். தமிழர்களது வரலாற்றுத் தடயங்களில் சிவபூமி எ…
-
- 0 replies
- 345 views
-
-
ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கவும், அரசாங்கத்தை ஏற்படுத்தவும் பொது பல சேனா அமைப்பால் முடியும் என அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க பொது பல சேனா அமைப்புக்கு எந்த தேவையும இல்லை. பொது பல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் முடிந்தால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அமைச்சர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் சிலர் முஸ்லிம் சகோதரத்துவத்தை பயத்திற்கு உள்ளாக்கி வைத்திருப்பதாகவும் இவர்கள் பொது பல சேனாவுடன் மோதி முஸ்லிம் மக்கள் முன்னிலையில் எதிர்ப்பு போல் காட்டி வருகின்றனர். மேலும் அமைச்சர் வாசுதேவ நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக கூறி வருகின்…
-
- 1 reply
- 318 views
-
-
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான தீவிரவாதிகளே கொல்லப்பட்டனர். எனினும் இன்னும் வடக்கில் புலிகள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாத்து போராட்டத்திற்கு தயார்படுத்தும…
-
- 5 replies
- 1.1k views
-
-
நாட்டில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்தவிடம், மாநாயக்கத் தேரர் முறைப்பாடு! [Tuesday, 2014-04-22 20:13:44] நாட்டில் பாரியளவில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், கட்டம்பேரஜோபராமா விஹாரையின் மாநாயக்கத் தேரர் கெப்பட்டியாகொட சிறிவிமல தேரர் முறைப்பாடு செய்துள்ளார். நாட்டின் வேறு எந்தத் தலைவரினாலும் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் முன்னொருபோதும் இல்லாத வகையில் நாட்டில் பாரியளவில் சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. ஆளும், எதிர்க்கட்சியினரின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் சீரழிவுகள் இடம்பெற்றுள்ளன. அரசியல்வாதிகளுக்கு எவ்வித அடிப்படைத் தகைமையும் இல்லாமை பெரும் துர்ப்பாக்கிய நிலைமையேயாகும…
-
- 1 reply
- 258 views
-
-
13 வயதுச் சிறுமியை கைது செய்த இலங்கை எவ்வாறு சிறுவர்களை பாதுகாக்கும் நாடாக முடியும்? - பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி. [Tuesday, 2014-04-22 08:02:02] 13வயது சிறுமி ஒருவரை கைது செய்த இலங்கை எவ்வாறு சிறுவர்களை பராமரிக்கும் நாடுகளின் பட்டியலில் எவ்வாறு நான்காம் இடத்தை பெறும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து. கிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து 13 வயது சிறுமி ஒருவரை இலங்கை அரசாங்க படையினர் கைது செய்தார்கள்.அவரது தாயை சந்திப்பதற்குக்கூட அனுமதிக்காமல் அவரை சிறுவர் முகாம் ஒன்றில் தடுத்து வைத்துள்ளனர்.கோபி என்ற விடுதலைப் புலிகளின் சந்தேக நபரது மனைவியை கைது செய்த புலனாய்வு பிரிவினர் அவரைத் துன்புறுத்தி, அவரது …
-
- 0 replies
- 389 views
-
-
அரசாங்கமே ஜோசப் எம்பி, லசந்த கொலைகளைச் செய்தது! - எரிக் சொல்ஹெய்ம் கூறுகிறார். [Tuesday, 2014-04-22 18:22:14] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே கொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நடந்த விவாதம் ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இது குறித்து தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர். அதுபோலவே, ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே ப…
-
- 0 replies
- 1k views
-
-
புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த நவோமி மிஷேல் கோல்மென் எனும் அந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, தனது வலது கையில் புத்தர் மற்றும் தாமரையின் உருவங்களை பச்சை குத்தியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இதன் காரணமாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர், நீதிபதி ஒருவர் முன்பாக நிறுத்தப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார். நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக அவர் இப்போது குடியகல்வுத் துறையின் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் புத்தரின் உருவங்கள் மிகவும் உணர்வுபூ…
-
- 0 replies
- 339 views
-