ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவணமே தடைக்கு அடிப்படை! - என்கிறது ஆங்கில வாரஇதழ். [sunday, 2014-04-06 10:14:30] இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. போரின் பின்னர் 39 பக்கங்கள் அடங்கிய இந்த ஆவணம் விடுதலைப் புலிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே சுமார் 400 அமைப்புக்களும் தனி ஆட்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தது. எனினும் இது குறித்து சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை தடை செல்லுடியற்றதாகவே இருக்க…
-
- 4 replies
- 736 views
-
-
மூன்று இலக்குகளை குறிவைத்து புலம்பெயர் அமைப்புகள் மீது தடை?! – (தினக்குரல்) புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் பிரதானமாக மூன்று இலக்குகளைக் குறிவைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். முதலாவது ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான உடனடியான பதிலடி. இரண்டாவது, ஜெனிவாத் தீர்மானத்தில் தனக்கு எதிராகக் காணப்படும் அம்சங்களுக்கு எதிரான முன் தடுப்புக்களை உருவாக்குதல். மூன்றாவது, தமிழ் டயஸ் பொறாவில் தமிழ்த் தேசிய நெருப்பை, அணைய விடாமற் பேணும் தரப்புக்களை நீண்ட கால நோக்கில் முடக்குதல். இதி…
-
- 0 replies
- 479 views
-
-
யாழ். பருத்தித்துறைமுனையில் ஐந்து மீனவ குடும்பஸ்தர்கள் கைது: பதற்றத்தில் மக்கள் ! [Monday, 2014-04-07 06:00:15] யாழ் பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ் மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தசில மாதங்களாக தமிழர் தாயக பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான அடாவடி கைதுகள் கடத்தல்கள் என்பன வகை தொகையாக நடைபெறுவது யாவரும் அறிந்த விடயம். அதன் தொடர்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தாயக நேரம் 12.30 ற்கு கடற்கரையில் வைத்து கடற்தொழிலுக்கு சென்று விட்டு கரைதிரும்பிய மீனவர்களான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான மோ.வின்சன் மரியதாஸ்(42) , நான்கு பிள்ளைகளின் தந்தை…
-
- 0 replies
- 517 views
-
-
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விசாரணையை வலியுறுத்துகிறார் ஜெஹான் பெரேரா. [sunday, 2014-04-06 19:52:15] அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென தேசிய சமாதானப் பேரவையின் முன்னாள் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டியது, நிகழ்கால நல்லிணக்கத்திற்கான முக்கிய ஏதுக்களில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இவ்வாறான விசாரணைகள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்.அவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அது நல்லிணக்கமாக அமையாது. சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, சர்வதேச விசா…
-
- 1 reply
- 445 views
-
-
800 பயணிகளுடன் வருகை தந்த சுற்றுலா கப்பல். -எம். இஸட். எம். இர்பான் ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 800 சுற்றுலா பயணிகளுடன் கப்பல் ஒன்று வருகை தந்திருந்தது. இந்த கப்பலில் 132 ஊழியர்கள் சேவையாற்றுவதுடன் இவர்கள் ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று பார்வையிட்டனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்த இரண்டாவது சுற்றுலா கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது. www.dailymirror.lk/
-
- 2 replies
- 535 views
-
-
கோப்புப் படம் இலங்கையின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது. வட மாகாணத்தில் வவுனியாவில் அதிகூடிய வெப்ப நிலைமையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகியிருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியிருக்கிறார். இந்த வருடம் பல விவசாய மாவட்டங்கள் கூடுதலான வறட்சியை எதிர்நோக்கியிருப்பாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வவுனியா, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் சூரியன் கடும் வெப்பத்துடன் உச…
-
- 2 replies
- 511 views
-
-
மாகாண நிர்வாகத்துக்கு மத்திய அரசாங்கம் இடையூறு செய்கிறது வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். மாவட்டங்களின் விவசாய விரிவாக்கத்துக்கெனப் பிரதிவிவசாயப் பணிப்பாளர்கள் இருக்கும்போது, இவர்களுக்கு மேலதிகமாக மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்களை மத்திய அரசாங்கம் நியமித்து வைத்திருக்கிறது. இது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயற்பாட்டு உரிமைகளைப் பறிக்கின்ற, மாகாண நிர்வாகத்துக்கு இடையூறு செய்கின்ற ஒரு திட்டமி;ட்ட நடவடிக்கையாகும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா மாவட்டப் பிரதி விவசாயப்…
-
- 0 replies
- 676 views
-
-
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் மீள்குடியமர்வுக்கு அனுமதிப்பதென்பது சாத்தியமற்றது - வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் மீள்குடியமர்வுக்கு அனுமதிப்பதென்பது சாத்தியமற்றதென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது. உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு தொடர்பில் உதய பெரேராவிற்கு விநாயகமூர்த்தி கடிதமொன்றினை பெப்ரவரி அனுப்பி வைத்துள்ளார். அதை தொடர்ந்தே சந்திப்பொன்றிற்கு உதய ப…
-
- 0 replies
- 389 views
-
-
அழிவுகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் மக்களின் இடத்தில் நாம் எம்மை வைத்துப் பாரக்க வேண்டும்: பான் கீ மூன் சொல்கிறார்! [sunday, 2014-04-06 19:30:57] அப்பாவிப் பொதுமக்கள் பெருந்தொகையாகப் படுகொலை செய்யப்படுகின்ற போது குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் அதனைத் தடுக்க விரும்பாது இருக்கின்ற போது, அல்லது அரசாங்கங்களே குறித்த வன்முறைகளைப் பிரயோகிக்கின்றவர்களாக இருக்கின்ற போது சர்வதேச சமூகம் என்ன செய்ய முடியும்? இந்த விதமான கொடுமைகள் எப்போதுமே நிகழாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இக்கேள்விகளுக்கான பதில்களை உலக சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் வெளியாகும் '…
-
- 0 replies
- 432 views
-
-
நாட்டில் சதா தொந்தரவிற்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வரும் ஊடகவியலாளர்களின் இலங்கை பத்திரிகை பேரவை வலைத்தளம் ஊடாக தங்கள் முறைப்பாடுகளை இணையத் தளத்தில் செய்து கொள்ள முடியுமென கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்டுள்ள தேசிய திட்டச் செயலணி தெரிவித்துள்ளது. மேற்படி செயலணியில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பட்டியலில் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கென எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள www.slpc.lk எனும் வலைத்தளத்தில் இணையத்தள முறைப்பாட்டு முறையொன்றின் ஊடாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு எதனையும் உடனடியாகவே செய்யக் கூடிய வாய்ப்…
-
- 0 replies
- 325 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சின் உரிமைகளைப் பறிக்கிறது மத்திய அரசு! – அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு. [sunday, 2014-04-06 19:44:30] வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயற்பாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாகாண நிர்வாகத்துக்கு இடையூறு செய்யும் வகையிலும் மத்திய அரசாங்கம் செயற்படுவதாக, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார். வவுனியா மாவட்டப் பிரதி விவசாயப் பணிமனை வளாகத்தில் அன்னாசிப் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வயல் விழா நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் ஹிலா பானு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்- வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவச…
-
- 0 replies
- 369 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஹொக்கி போட்டி கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயம்! - உடுவில் மாணவியின் பற்கள் நொருங்கின. [sunday, 2014-04-06 19:49:55] வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஹொக்கிப் போட்டியில் இரு பாடசாலை அணிகளுக்கு இடையே இடம் பெற்ற கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். இலங்கைப் பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளின் 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான மூன்றாம் இடத்துக்காக, சாகிராக் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரிகளுக்கு இடையே நடை பெற்ற போட்டியின் போது இந்த கைகலப்பு இடம்பெற்றது. இதில் மாத்தளை சாகிராக் கல்லூரியின் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டதில் தலையில் காயங்களுக்கு ஆளாகிய நிலையில் மைதானத்தில் நின்ற இராணுவத்தினரின் நடமாட…
-
- 0 replies
- 420 views
-
-
வலி.வடக்கு மீள்குடியேற்றம் இனிச் சாத்தியமில்லை! – திட்டவட்டமாகத் தெரிவித்தார் யாழ். படைத்தளபதி. [sunday, 2014-04-06 20:12:06] வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வலி.வடக்கு மீள்குடியேற்றம், வீடுகள் , ஆலயங்கள் உடைப்பு தொடர்பிலும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டார். தையிட்டி , மையிலிட்டி …
-
- 0 replies
- 204 views
-
-
இலங்கைக்கு எதிரான விசாரணைகள் அடுத்த மாதம் ஆரம்பம்? 06 ஏப்ரல் 2014 இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் அடுத்த மாதமளவில் ஆரம்பமாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது, ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 435 views
-
-
அமெரிக்க, இந்திய, தென்கொரிய இராஜதந்திரிகளுடன் சந்திரிகா இரகசியப் பேச்சு! [sunday, 2014-04-06 10:06:38] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.ஹொரகொல்லவில் அமைந்துள்ள சந்திரிகாவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஐ.நாவின் முன்னாள் அதிகாரி ஜயந்த தனபால மற்றும் பிரபல வர்த்தகர் ஒருவரும் பங்கேற்றுள்ளனர். இராஜதந்திரிகள் மற்றும் ஏனையோருக்கு சந்திரிகா விருந்துபசா…
-
- 1 reply
- 273 views
-
-
ஆசன வாயில் 330 கிராம் தங்கத்தை பதுக்கி வந்த பயணி மதுரை ஏர்போர்ட்டில் கைது. மதுரை: இலங்கையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் தனது ஆசன வாயில் ரூபா எட்டரை லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது . அவரை பின்னர் போலீஸார் கைது செய்தனர். மதுரைக்கு கொழும்பிலிருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று மாலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது 3 பேர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள சோதனையிட்டனர். அப்போது அதில் ஒருவரின் ஆசன வாயில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். மொத்தம் 3…
-
- 2 replies
- 863 views
-
-
வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் 60 பேரிடம் ஐ.நா குழு விசாரணை! – சிங்கள ஊடகம் கூறுகிறது. [sunday, 2014-04-06 10:24:05] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார் என்று சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது. வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்க…
-
- 2 replies
- 651 views
-
-
ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவின் தந்திரம்! – அல்ஜெசீரா பேட்டியில் ரஜீவ விஜேசிங்க கருத்து. [sunday, 2014-04-06 10:03:23] ஐ.நா மனிதஉரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம், அமெரிக்காவின் தந்திரமான செயற்பாடு என்று, ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். அல்ஜெசீரா இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர், இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தீர்மானத்துக்கு தேவையற்றவை. வஞ்சனையான சில நோக்கங்களுடன் அமெரிக்கா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் மறுசீரமைப்பு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. …
-
- 2 replies
- 425 views
-
-
வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி உதவி வழங்கும்படி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு நேரடியாக 10 இலட்சம் அமெரிக்க டொலர் (சுமார் 13 கோடி ரூபா) நிதியை அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தான் அரசு இணங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த விடயம் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. நிதி அமைச்சின் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களம் ஊடாக மட்டுமே அமைச்சுக்களும் அமைச்சர்களும் திட்டங்களுக்கான நிதி மற்றும் உதவிகளை வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து திரட்ட முடியும். அதுதான் வழமையான நடைமுறை. அதற்கு மாறாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு என்…
-
- 1 reply
- 273 views
-
-
3 நாட்கள் படைத்தரப்பின் சுற்றிவளைப்பில் கைதானவர்களின் வீடு? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடக்கில் தொடரும் வகை தொகையற்ற கைதுகளிடையே தென்மராட்சிப் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் கைதாகியுள்ளனர். பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஒருவரும் அவரது குடும்பத்தவர்கள் மூவருமே மீசாலைப் பகுதியில் கைதாகியுள்ளனர். அவர்களது வீட்டினை மூன்று நாட்களாக சுற்றி வளைத்து இலங்கைப்படையினர் வைத்திருக்க அங்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இவர்களை இரவோடிரவாக கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் இக்கைது தொடர்பாக பத்திரம் ஒன்றினையும் உறவினர்களிடம் கையளித்து சென்றிருப்பதாகவும் தெரியவருகின்றது. எனினும் கைதான அவர்கள் தற்போது எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பத…
-
- 1 reply
- 504 views
-
-
இலங்கை அரசின் பாசிச போக்கிற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு. [sunday, 2014-04-06 09:59:47] தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்புக்களை தடை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் பாசிச போக்கிற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்படவுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்- ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை ஒன்றினை கொண்டு வருவதற்காக மேற்படி புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள…
-
- 0 replies
- 242 views
-
-
வவுனியா வடக்கில் 14 ஆயிரமாக இருந்த மாணவர்களின் தொகை 8 ஆயிரமாக குறைந்தது! – யுத்தத்தின் விளைவு என முதலமைச்சர் வருத்தம். [sunday, 2014-04-06 09:50:57] வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பதின்நான்காயிரமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, யுத்தம் காரணமாக தற்போது எட்டாயிமாக குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று நடைபெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், போரின் பின்னர் எமது மாணவர் சமூகம் பெரும் அல்லல்பட்டு மிகவும் அவலமான நிலையில் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது…
-
- 0 replies
- 273 views
-
-
தேவ அச்சுதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையினையும் எழுவான் கரையினையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைத்துறை பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ஆம்திகதி திறந்துவைக்கவுள்ளார் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜப்பான் அரசாங்கத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மண்முனைத்துறைப்பாலத்துக்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் 1736மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதேவேளை இந்த பாலத்தினை திறக்கப்பட்டதன் பின்னர் இரு பகுதிகளிலும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட…
-
- 0 replies
- 304 views
-
-
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் செயற்படும் மனித உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என மனித உரிமை அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. போரின் இறுதியில் சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழனன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறிலங்காவுக்கு எதிராக மிக அண்மைய ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட மூன்றாவது தீர்மானமாக இது அமைந்துள்ள போதிலும்,…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கை அரசு ஒத்துழைக் காவிட்டாலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணையில் எந்தவிதத் தடங்கலும் இருக்காது. அது சர்வதேச விசாரணை தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு இலங்கை மீது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அடித்துக் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங் கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக்கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போரின் பின்னர் தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். மனித…
-
- 0 replies
- 377 views
-