ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக, அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், சிறிலங்கா அரசாங்கத்துடனும். ஏனைய வெளிநாட்டு அரசாங்கங்களுடனும், பிரித்தானியா, கிரமமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள அவர், “2013ம் ஆண்டு நொவம்பர் மாதம் தொடக்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒரு தொகை கூட்டங்களை நடத்தியுள்ளோம். இவற்றில், 2013 டிசெம்பரில் பிரித்தானியத் தூதுவர், சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்திருந்தார். லன்காஸ்டர் இல்லத்தில் கடந்த பெப்ரவரி 24ம் நாள் சிறிலங…
-
- 0 replies
- 442 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த 5ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிகழ்த்திய உரை யில் இடம்பெற்றுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- 1. இலங்கையில் வசிக்கும் மக்கள் பிரிவினர் இடையே சுயமரியாதையுடனான நிரந்தர அமைதி, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை கட்டியெழுப்பவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கம் என்பன முக்கிய தேவைகளாக இருக்கின்றன. 2. இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேற்கொண்ட உரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் காணப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமென நாம் கருதுகின்றோம். மீளிணக்கம் ஏற்பட வேண்…
-
- 0 replies
- 336 views
-
-
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று நேற்று பிற்பகல் தர்மபுரம் பகுதி வீடொன்றிற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். அந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து தப…
-
- 2 replies
- 345 views
-
-
வணக்கம் பாருங்கோ கொஞ்ச நாளா எங்கட தொப்புள்கொடி உறவுகள் தமிழகத்தில அமெரிகவுற்க்கு எதிர நல்ல போராட்டங்களை செய்து கொண்டு வருகினை . இது பிடிக்காமல் எங்கட நாடுகடந்த அரசாங்கம் போராடுற பொடியளுக்கு தொலைபேசி எடுத்து நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை இப்படி எரிக்கபுடது , கிழிக்க கூடாது நாங்கள் அந்த தீர்மானத்தை கொண்டுவர இரவுபகல வேலை செய்கிறம் வெளிநாட்டில [அப்ப நீங்கள் சொலுற வேலை குடிச்சு போட்டு கும்மாளம் அடிக்கிறது ] எண்டு சொல்லுகினை அது பத்தாது என்று தமிழகத்தில் சில வால் பிடிகளை வைசிருகினை அவை என்னடா நாக்கறுந்த நாடுகடந்த அரசாங்க அமைசர்கள் என்று தங்களை தானே சொளுரவையோட நேரடி தொடர்ப்பம் . இந்த வால் பிடிகள் தமிழ் நாட்டில் மாணவர்களுக்கு சொல்லுறது உருத்திரகுமார் [ உளுந்தூர் பேட்டை உருத்திரகு…
-
- 0 replies
- 343 views
-
-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன், பழைய கலால் காரியாலயத்திற்கு பின்பக்கமாக உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 25 அல்லது 26 வயது மதிக்கத்தக்க குறித்த சடலத்திற்கு உரியவர் 5 அடி 2 அங்குலம் என்றும் இறுதியாக கறுப்புநிற டெனிம் காற்சட்டையும் நீல நிற ரீ-சேர்ட்டும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிஸார் அந்த சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ஊடக பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/103154-2014-03-14-02-08-38.html
-
- 0 replies
- 183 views
-
-
தொண்டு நிறுவனத்தின் வஞ்சக வலையில் இருந்து ஈழ விடுதலை தப்புமா? செய்திகள் 18 hours ago அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் அல்லது கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்க கூடாது என்பவர்களுக்கு வெளிப்படையாக எமது கேள்விகளை முன்வைக்கிறோம்… பின்வரும் நிகழ்வுகளை முழுமையாக படித்துவிட்டு பின் பேசுங்கள், பொத்தாம் பொதுவான விவாதத்திற்கு நாங்கள் வரவில்லை. விவரங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் பேசலாம்…. ( அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்) 1. 2009 போர் முடிந்தவுடன் மே மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் சர்வதேச விசாரணையை பான் கி மூன் அதிகாரத்தின் கீழ் (விதி எண் 99) கொண்டு வரவேண்டும் எனக் கோரியது. 2. பான் கி மூன்னின் சட்ட வல்லுனர் குழு 2009 ஜூலையில் இதே கோரிக்கையை முன் வைத்தது. 3. …
-
- 0 replies
- 387 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் விபசாரி எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் ஒட்டிக்கொள்ளும் கொள்கையே ஹக்கீமிற்குள்ளது என பொதுபலசேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்தினை பரப்பி கிழக்கினை பிரிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் காங்கிரசே செய்து வருகின்றனர். சிங்கள இனம் அழிக்கப்படுமாயின் நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாது போய்விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டின் தீர்மானிக்கு…
-
- 0 replies
- 416 views
-
-
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக 10 இலட்சம் கையொப்பங்களைத் திரட்ட தங்காலை தொடக்கம் கோட்டை வரை வாகனப்பேரணி! [Friday, 2014-03-14 09:59:15] ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் ‘ஜனபல நெகும’ என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்று இன்று காலை தங்காலை ஹேனகடுவ ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் உதவிச் செயலாளர்களின் சங்கத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தங்காலையிலிருந…
-
- 0 replies
- 323 views
-
-
ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவுக்குத் தோல்வி பயம் என்கிறார் மாவை! [Thursday, 2014-03-13 07:52:20] இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்கும் தமது தீர்மானம் தோல்வியடைந்து விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனகமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தும், தீர்மானத்தை ஆதரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை. இந்த நிலையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானத்தை சமர்ப்பித்து அதில் தோல்வி கண்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கவனமாக இருக்கின்றன. அந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதுஇத…
-
- 2 replies
- 588 views
-
-
யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் வைத்து 19 வயது பெண்ணொருவரை 3 பேர் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் சனிக்கிழமை (08) தெரிவித்தனர். தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு ஒருவர் மாறி ஒருவராக குறித்த யுவதியினை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங…
-
- 5 replies
- 1k views
-
-
(ப. பன்னீர்செல்வம்) தேசத்துரோக குற்றமிழைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கிழக்கில் பெளத்த அடிப்படை வாதம் அல்ல முஸ்லிம் அடிப்படைவாதமே இயங்குகின்றதென்றும் அக்கட்சி தெரிவித்தது. பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க இங்கு உரையாற்றுகையில், இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கையளித்த அறிக்கையில் இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் த…
-
- 1 reply
- 571 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை நாட்டில் இல்லாதொழித்து பொறுப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது. யுத்தத்தின் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை வடக்கில், யுத்தம் இடம்பெற்று குறைந்த காலப்குதிக்குள் மக்கள் சாதாரன வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு என சக வசதிகளும்…
-
- 0 replies
- 354 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தின் எழுத்தூர், தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம் தாயான நிஸாந்தன் தேவிகா( வயது 27) என்பவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். புதன்கிழமை (12) இரவு அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்று மண்ணென்ணை வாங்கிக்கொண்டு வீடு சென்ற குறித்த தாய், வீட்டுச் சமயலறையில் தனக்குத்தானே தீ மூட்டியதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர். இந்நிலையில், வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அவரது கணவர் தனது மனைவி தீயில் எரிவதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வந்து தீயை அணைத்து குறித்த தாயை மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறினர். இருப்பினும், இவர் சிகிச்சை…
-
- 0 replies
- 305 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம்! – யாழ்.அரச அதிபரிடம் கனேடியத் தூதுவர் தெரிவிப்பு. [Thursday, 2014-03-13 16:58:56] வடக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் தங்கியுள்ள மக்கள் வடக்கில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதற்கு ஏற்ற வகையிலான திட்டங்கள் உள்ளனவா என்று யாழ். அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைட்டிங் அம்மையார்.வடக்கில் முதலீடு செய்வதற்கு ஏற்ற வசதிகள் உள்ளன. வடக்கைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கனடாவில் தங்கியுள்ளனர். இவர்களே வடக்கில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். போக்குவரத்து வசதிகள் இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முதலீட்டுக்கு இது நல்ல தருணம். போக்குவரத்து வசதிகளை இன்னும் விஸ்த…
-
- 0 replies
- 249 views
-
-
திருமலையில் விசாரணைக்கு என கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்! [Thursday, 2014-03-13 21:21:40] திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்றைச் சேர்ந்த நான்கு வயதுப் பிள்ளையின் (மகன்) தாயாரும் கர்ப்பிணியுமான பாலகுருபரன் தர்மிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) காலை 1 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள் குறித்த பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் தந்தையின் முன் கடுமையாக அடித்துத் தாக்கிய…
-
- 0 replies
- 209 views
-
-
தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம் By Editor on March 12, 2014 விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் நாங்கள் நியமனம் வழங்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்கு போய் முறையிட்டாலும் தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது என தன்னைச் சந்திக்க வந்த பட்டதாரிகளிடம் கிழக்கின் ஆளுநர் கூறியதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கென நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாமல் இருந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் கிழக்கின் ஆளுநர…
-
- 7 replies
- 863 views
-
-
மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் சதி: சஜீவன் குற்றச்சாட்டு யாழ்.வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திற்குள் வசிக்கும் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேசசெயலகங்கள் ஊடாக தாங்கள் ஏற்கனவே பதிவு செய்யத மீள் குடியேற்றப்பதிவினை இரண்டு நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக வடக்கு இடம்பெயர்ந்தோர் மற்றும் புனர்வாழ்வுக் குழுவின்தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வலிவடக்கில் மீள குடியேற்றப்படுகின்றவர்களின் எண்ணிக்கையினை குறைத்துக் காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தங்களுடைய பதிவை உறுதிப்படுத்தும்படி கேட…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கை மனித உரிமைகள் போராளி நிமல்கா பெர்னாண்டோ சொந்த வேலையாக சென்னை வந்திருந்தார். அவரை ‘தி இந்து’ சார்பில் சந்தித்தோம். போருக்கு பிந்தைய இலங்கை எப்படி உள்ளது? உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ந்திருக்கின்றன. ஆனால் இஸ்லாமியர், கிறித்தவர் மீதான தாக்குதல், புத்பாலசேனாவின் எழுச்சி இவை யெல்லாம் இலங்கை அரசு அமைதியின் விதைகளை தூவ தவறிவிட்டது. இலங்கை அரசு மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு நெருக்கமான ஒரு சிலரைத் தவிர ஒவ்வொரு இலங்கையரும் துன்பத்தில் வாடுகின்றனர். ஒவ்வொரு இலங்கையரும் எனும் போது சிங்களர்கள், தமிழர்கள் இரு இனத்தவரையும் குறிப்பிடுகிறீர்களா? சிங்களரின் போராட்டத்தையும் தமிழர்களின் போராட்டத்தையும் ஒப்பிட முடியாது. ஆனால்…
-
- 0 replies
- 247 views
-
-
சந்தேகிக்கப்படுகின்றது:-குளோபல்தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் வன்னியின் மாங்குளம் பகுதியில் ஏ – 9 வீதி ஓரமாகவுள்ள காணியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் கடந்த ஆண்டில் காணாமல் போயிருந்த ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன்-வயது 36 உடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.கடந்த ஆண்டின் நவம்பர் மாதமளவில் அவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டிருந்ததாக குடும்பத்தவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சொந்த இடமாக சேர்ந்த நிரூபன் வன்னியில் நீண்டகாலமாக கற்பித்து வந்திருந்ததாகவும் பின்னர் வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பித்து வந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. திருமண வாழ்வினை உதறித்தள்ளியிருந்த அவர்…
-
- 0 replies
- 438 views
-
-
அணிசேரா நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அணிசேரா நாடுகள் தங்களது முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமை அணிசேரா நாடுகளின் வேறும் நாடுகளினாலும் எதிர்நோக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாடு பாரிய சவல…
-
- 0 replies
- 415 views
-
-
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமாம்! - புதுக்கதை விடுகிறார் பிரிகேடியர் ஈஸ்வரன். [Thursday, 2014-03-13 08:04:04] வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்து…
-
- 3 replies
- 538 views
-
-
வியாழன், மார்ச் 13, 2014 - 04:39 மணி தமிழீழம் | ஞாலவன், திருகோணமலை நான்காம் மாடியில் சித்திரவதைக்குள் உள்ளாகும் கர்ப்பிணித் தாயின் விடுதலைக்கு உதவுங்கள்! திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்றைச் சேர்ந்த நான்கு வயதுப் பிள்ளையின் (மகன்) தாயாரும் கர்ப்பிணியுமான பாலகுருபரன் தர்மிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) காலை 1 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள் குறித்த பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் தந்தையின் முன் கடுமையாக அடித்துத் தாக்கியுமுள்ளா…
-
- 5 replies
- 823 views
-
-
வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கவில்லையாம்! – ஜெனிவாவில் அரசாங்கம் விளக்கம். [Thursday, 2014-03-13 07:37:53] இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள், தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை என்றும், அவை தனித்தனியான சம்பவங்களே என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை என்று ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதங்களுக்கு இடையில…
-
- 0 replies
- 241 views
-
-
இந்த அரசாங்கத்தை தாமே காப்பாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதனை தாம் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சி கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தால் இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட…
-
- 1 reply
- 335 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நேர்ந்ததே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் நேரும் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு எதிராக துரோகம் இழைப்பவர்களுக்கு பிரபாகரனின் தலைவிதியே காத்திருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொருத்தமில்லாத உரைகளை ஆற்றி மக்களிடையே இன முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வாயை மூடிக்கொண்டு அமைச்சுப் பதவியை காப்பாற்றிக்கொள்வதே ஹக்கீம் செய்ய வேண்டிய புத்திசாதூரியமான காரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்…
-
- 1 reply
- 384 views
-