Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 05:43 PM அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி பெருந்தோட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது. ஹட்டன் நகர மத்தியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது. தற்போது தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பதவிகளை வழங்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு அர…

  2. 16 JUN, 2024 | 02:17 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல…

  3. 25 MAR, 2024 | 05:16 PM இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179685

  4. இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங…

  5. வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏம…

  6. Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:56 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக…

  7. சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை! வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டம…

  8. 15 JUN, 2024 | 09:48 PM காரைதீவை சொந்த இடமாக கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி விழுந்து இன்று சனிக்கிழமை இரவு இறந்துள்ளார். இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர். கணித பாட முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.இலங்கநாதனின் மூத்த புதல்வன் ஆவார். இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எஸ்.அக்சயன் லகுகல கடலில் தவறி விழுந்து இறந்த சோகத்தில் இருந்து மீளாத காரைதீவு மக்களுக்கு மற்றுமோர் பேரிழப்பை இந்த வைத்தியரின் இழப்பு ஏற்படுத்தியுள்ளது. …

  9. 15 JUN, 2024 | 12:03 PM யாழ். நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமையவே இன்று சனிக்கிழமை (15) குறித்த திட்டவரைபுகளை இறுதிசெய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கான திட்டவரைபுகள் இறுதி…

  10. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925

  11. தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம் (ஆதவன்) பொதுவேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டிக் கோரிக்கை அடிபட்டுப்போகும் என்ற எண்ணம் சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப் பிராந்தி - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது மாதாந்த கேள்வி பதில் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அதை எதிர்ப்பவர்கள் பற்றியும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர்களை எதிர்ப்பவர்கள் தொடர்பில் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள…

  12. June 15, 2024 10:21 am எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) பிற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இக்கட்டான பொருளாதாரச் சூழலிலும் அரசாங்கம் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வியே நாட்டின் பலம் என்றும் வலியுறுத்தினார். கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்குச் இன்று பிற்பகல் செ…

  13. Published By: VISHNU 14 JUN, 2024 | 02:52 AM தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குற…

  14. Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 05:15 PM ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பிரதிச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் சென். …

  15. எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது ஏன் பிரச்சினைகள் வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம், கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 13ஆவது திருத்தம் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

  16. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 04:30 PM அம்பாறை, அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற நீர்பாசன திணைக்கள எந்திரியும், அவரின் வாகன சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார். காணி ஒன்றுக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றிவரும் எந்திரி இலஞ்சம் கோரியதாக நபரொருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். இத…

  17. இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பூட்டு சின்னம் உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு இலங்கை வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடிக்கு சிக்காமல் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு…

  18. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று(14) அறிவிக்கப்பட்டது. Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303772

  19. 14 JUN, 2024 | 05:33 PM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் இடம்பெறுமாயின் உரிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்தலை நடத்துவது எமக்கு பிரச்சினையில்லை.இருப்பினும் தற்போதைய செயற்திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார். இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மூன்றாம் தவணை தொடர்பில் வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்ற நிகழ்நிலை முறைமை ஊடான ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

  20. SMART CITY ஆக போகும் யாழ் நகர். யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று(14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகஆக போகும் யாழ் நகர் யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (ளுஆயுசுவு ஊஐவுலு) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று(14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்…

  21. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 09:40 AM மீன் பிடி இழுவை படகில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை தென் கடல் பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இழுவை படகு கைப்பற்றப்பட்டது. இந்த இழுவை படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டதில் அதிலிருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், படகிலிருந்த 6 பேரை பொலிஸ் போதைப்பொருள் தடுப…

  22. 14 JUN, 2024 | 07:43 PM இந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு வருடங்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். …

  23. 13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா ! 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார். 13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்? …

      • Like
    • 7 replies
    • 530 views
  24. 14 JUN, 2024 | 07:26 PM வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்…

  25. பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வட மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், தமிழர்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன், பிரதான எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து, வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்வதை காண முடிகின்றது. அதிபர் ரணில் விக்ரமசிங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.