Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேர்வின் சில்வாவை பிரதமராக நியமிப்பது பொருத்தமானது இந்த நாடு போகும் போக்கைப் பார்க்கும் போது அமைச்சர் மேர்வின் சில்வாவை பிரதமராக நியமிப்பதே பொருத்தமானது என தோன்றுகிறது என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் மர்வின் சில்வாவை ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பினால் நவநீதம்பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து தோலுரிப்பார் எனவும் கூறியுள்ளார். இந்த நாட்டு மக்கள் இன்று ஒரு வேளைச் சோற்றுக்கே வழியற்று உள்ளனர். தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியாது உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் மர்வினை பிரதமராக்கினால் நல்லது என்றே தோன்றுகிறது என்றும் அவர் கூறினார். http://www.eelana…

  2. யாழ்.ஆடியபாதம் வீதி செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வடக்கினைச் சேர்ந்த க.பிரதீபன் (வயது 23), நெடுந்தீவுப் பகுதியினைச் சேர்ந்த தி.மோகனதீபன் (வயது 18) என்பவர்கள் மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த வீதியில் உள்ள செம்மணி சுடலைக்கு அருகில் கடந்த 2 வருடங்களாக புனரமைக்கப்பட்டு வரும் பாலத்திற்குள் தவறுதலாக விழுந்ததாலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புனரமைக்கப்படும் பாலத்திற்கு அருகில் எந்தவிதமான எச்சரிக்கைப் பலகையோ, வேகக்கட்டுப்பாட்டுத் தடையோ அமைக்கப்படாமையே இவ் விபத்துச் சம்பவத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மே…

  3. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 'சவர்வைல் இண்டர்நாஷனல்' என்னும் சர்வதேச அமைப்பு ஒன்றே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுகின்றனர்.தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாக…

    • 5 replies
    • 921 views
  4. யாழ்ப்பாணத்தில் தினமுரசு பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந் தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்படுகின்றது. பொலி கண்டி பகுதியைச்சேர்ந்த கே.விசிந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி , தொண்டமானாறு தம்பனை சந்திப் பகுதியிலேயே நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இவரை வழிமறித்து தாக்கியுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் தெரிவித்துள்ளார். உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மே…

    • 0 replies
    • 488 views
  5. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் வலுவானதாக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் சில கோரியுள்ளன. இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கின்ற பிரேரணை தொடர்பில் பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்தக் கூடியதாக இந்த புதிய தீர்மானம் அமைய வேண்டும் என்று கோரியுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எ…

    • 0 replies
    • 394 views
  6. ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர குடும்பத்தின் ஆறு அங்கத்தவர்கள் பங்குபற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இங்கையின் அரசியல் படுகொலைகளைப்பற்றி இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றுவார். ஜெனிவாவா மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றுவதற்காக பிரேமச்சந்திர குடும்பத்தினருக்கு மனித உரிமை பேரவை அழைப்பு விடுத்ததாக பிரேமச்சந்திரவின் மூத்த சகோதரி சித்திரா பிரேமச்சந்திர தெரிவித்தார். சித்திராவுக்கு மற்றும் பிரேமச்சந்திரவின் சகோதர சகோதரிகள் யாவரும் கனடாவில் வாழ்கின்றனர். சுவர்ணா குணரத்னவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் உரையாற்றவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymir…

    • 0 replies
    • 467 views
  7. அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய கூட்டங்கள் [ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்தியுள்ளன. ஆசிய குழுவின் சார்பில் ஜோர்தான் ஒழுங்கு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, போருக்குப் பிந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அதேவேளை, இன்னொரு அறையில், அமெரிக்கா ஒழு…

    • 3 replies
    • 466 views
  8. ராமேஸ்வரம்: ""இலங்கைக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதால், மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது அதிகரித்துள்ளது,'' என, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி குற்றம்சாட்டி உள்ளார். விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது: சில நாட்களாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள், "நாடக போராட்டம்' நடத்தி வருகின்றன. இதனால், ஆத்திரமடையும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை, காட்டுமிரண்டித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். நலிவடையும் தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குரல் கொடுக்க வேண்டும். இலங்கை பிரச்னைக்கு இப்போது குரல் கொடுப்பது, வெட்கக்கேடானது. இலங்கை அரசின் கோபத்திற்கு, தமிழக மீனவர்கள்தான் பலிகடா ஆகின்றனர். மீ…

  9. ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். ''அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?'' ''ராஜபக்ஷே அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை நிறைவேற்ற வேண்டும் போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தண்டிக்க வேண்டும் என…

  10. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. டேல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து பேசியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60745-2013-03-14-14-59-22.html

  11. சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம 14 மார்ச் 2013 இலங்கையில் சிங்களவர்கள் குறைந்து வருவவதாகவும் இதனால் சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழில் செய்யும் அதேவளை திருமணம் செய்து பிள்ளைகளையும் அதிகளவில் பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துச் சபைக்கான புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக…

  12. இலங்கை - இந்தியா - அமெரிக்கா கூட்டுச் சதி!: விவரிக்கும் வேல்முருகன் மார் 14, 2013 ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், 'இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். ''அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?'' ''ராஜபக்ஷே அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்து…

  13. இலங்கையின் போர்க்குற்றம்: புதியதலைமுறை புதியஆதாரம் வெளியீடு http://puthiyathalaimurai.tv/pt-special-documentary-on-lankan-war-crimes இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்” கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின. இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன. கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்…

    • 7 replies
    • 1.2k views
  14. “ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்” என்ற முழக்கத்தின் கீழே ம.க.இ.க – புமாஇமு- புஜதொமு – பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று காலை 11 மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம். இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் வீதிகளில் 1980களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக…

  15. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர். இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, எலியோட் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த தயக்கம் காட்டி வருவதாகவும், பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு அமெர…

    • 2 replies
    • 490 views
  16. இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஜெனீவாவில் நடத்தப்படவிருந்த போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் அரச சார்பு இலங்கையர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறும் கட்டிடத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்திற்காக இத்தாலியிலிருந்து ஜெனீவா செல்ல பேருந்து ஆசனங்களை ஒதுக்கியவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நாளைய தினமே திட்டமிட்ட மேற்படி போராட்டம் நடத்தப்படவிருந்தது. இந்தப் போராட்டத்தை வெளிவிவகார அமைச்சு ரத்து …

  17. வன்னி மாவட்டத்தில் வாழ்கின்ற காணிகளின்றி தவிக்கின்ற இந்திய வம்சாவளியினருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தில் பல தசாப்தங்களாக வாழும் இவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரகோனிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "1977, 1983 இனக்கலவரங்களின் போது களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று காணிகளின்றி தவிக்கின்றனர். பல தசாப்தங்களாக வன்னி மாவட்…

  18. தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள். தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான க…

  19. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்தது - இந்தியா 14 மார்ச் 2013 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற் பரப்புக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிக்க மாட்டார்கள் என இந்தியா உறுதியளித்திருந்தது. 2008ம் ஆண்டு உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற போது இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு சில வாரங்களில் பூணகரி பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும் இதன…

    • 2 replies
    • 725 views
  20. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவத்திருப்பதாவது.. கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இராணுவமயமா…

  21. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் போது, இந்தியா தமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நம்புவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, தீர்மானத்தின் இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் போது, கடைசி நிமிடத்தில் இந்தியா முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். “இந்தியா எமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நிச்சயம், நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130314107937

  22. இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது – ஆனந்தவிகடன் அடுக்கடுக்கான போர்க் குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால்ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் இணைய வழி உரையாடல் நடத்தினேன்… : ”ஐ.நா-வின் 22-வது மனித உரிமை அமர்வுகள் ஜெனிவாவில் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழ மக்களுக்கு நன்மை பயக்குமா?” ”ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேறவே செய்யும் என்றாலும், அந்தத் தீர்மானம் சிறீ…

  23. சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கம் மார் 14, 2013 வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில், சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதியை செலவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு விமானமொன்றை விண்ணுக்கு அனுப்பி நூற்றாண்டானதை முன்னிட்டு சிவில் விமான சேவைகள் அமைச்சு நேற்று முன்தினம் நடாத்திய நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக ஒருகோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவாகியதாக உள்ளிடத்து வரவு செலவு அறிக்கைகள் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவில் உள்ள பொருளாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் விமானத்தை வானுக்கு ஏற்றி ஒரு நூற்றாண்டு பூர்த்தி…

  24. மட்டக்களப்பு சிறைச்சாலை மாந்தீவுக்கு மாற்றம்: முரளிதரன் வியாழக்கிழமை, 14 மார்ச் 2013 07:40 -ஏ.எச். அப்துல் ஹுஸைன் மட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.