Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றி உயர் பாதுகாப்பு வலயம் என்கிற போர்வையில் ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவம் தற்போது இப்பகுதியை நிரந்த சிங்கள இராணுவப் பிரதேசம் என்று பிரகடணப்படுத்தியிருக்கிறது. நேற்று யாழ்ப்பாண்த்தில் அமைந்திருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் தொடர்பாடல் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க இதனைப் பகிரங்கமாகக் கூரியிருக்கிறார். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் வரும் சிங்கள பேரினவாதத்தின் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ மயிலிட்டிப் பகுதியில் சிங்களவருக்கான உல்லாசப் பயணக் கொட்டகைகளைத் திறந்து வைக்கவிருக்கிறா…

  2. திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொந்தளிப்பான போராட்டங்கள் நடைபெற்றது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்று நூற்றுகணக்கான தனது தொண்டர்களுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.திருப்பதிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்ற ஆயிரகணக்கான மதிமுகவினரை போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் .கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் திரு.கலையரசன்,மற்றும் கரூர் நகர செயலாளர் திரு.பாலமுருகன் தலைமையிலான அணியினர் தாங்கள் அடைத்து வைக்கபட்டிருந்த இடத்தில இருந்து போலீஸ்,ராணுவ காவலை …

  3. தியாகி முருகதாசன் நினைவு நாளான் இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், அண்ணல் காந்தியார் சிலை அருகில், ஈழத் தோழமைச் சுடர் ஏந்தி தமிழ் ஈழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், தீக்குளித்து உயிர்களை ஈகம் செய்த தியாகிகளுக்கும், சிங்களவன் நடத்திய இனக்கொலையால் பலியான தமிழ் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு கடலில் மலர்தூவப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய வைகோ " சுதந்திரத்தமிழீழமும், எங்கள் சகோதரர்களை இனக்கொலை செய்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுமே எங்களின் இலக்கு" என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக்கட்சி வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், …

  4. கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14அகவை தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைப்பு பிப் 13, 2013 கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14அகவை தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் கிரிஷாந்தன் என்ற சிறுவனே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்த இச்சிறுவன் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் குடும்ப வறுமை காரணமாக கொழும்பு வந்திருந்த போது கடந்த 8ம் நாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதிய மகஸின் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளான். இச்சிறுவன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுக…

  5. By Hafeez 2013-02-12 18:39:35 கண்டி, அலதெனிய பிரதேசத்தில் ஆகாயத்தில் இருந்து மர்ம பொருளொன்று இன்று காலை விழுந்ததாக கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். கண்டி- குருநாகலை வீதியில் அலதெனிய என்ற இடத்திலுள்ள கற்குழி ஒன்றுக்கு அருகில் விழுந்த இந்த மர்ப பொருள் ஐந்து கிலோ எடையுள்ளதாகவும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களையுடையதென்றும் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு விண் கல்லின் பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை இன்று தம்புள்ளைப் பகுதியிலும் இவ்வாறான ஒரு மர்மப் பொருள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2999

  6. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்புப் படையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டதனால் கடை அரைவாசிக்கு மேல் எரிந்துள்ளதுடன் பொருட்களும் எரிந்து நாசமாகிப் போயுள்ளன. அத்துடன் அதன் மேல் மாடியிலும் தீபிடித்துள்ளது. பூட்டப்பட்டிருந்த கடை எரிந்து கொண்டிருந்த வேளை புகை வெளிவருவதனை அவதானித்த மக்கள் வங்கியின் காவலாளி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயணைப்புப…

  7. இருளில்லாத இலங்கையை உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சி, புநகரி பிரதேசத்திலுள்ள முழங்காவில் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதற் தடவையாக மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், :நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் ஏற்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மின் விநியோகத்திட்டம் இன்று மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இது இந்த அரசாங்கத்தின் பாரபட்சமற்ற முறையில் எல்லா இடத்துக்கும் விரைவான அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஏற்படுத்தும் திட்டத்தின் நடவடிக்கைக்கு சான்றாகும். மன்னார் – …

  8. -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இந்த அறிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் உடனடியாக கையளித்துவிட்டார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் முன்னெடு…

  9. மரண தண்டனை என்பது கூடாது என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒன்றரை மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம். இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த ராஜபஷவை எதிர்த்து ம.தி.மு.க. போராட்டம் நடத்தி உலகத்தின் பார்வையை தமிழகத்திற்கு திரும்ப செய்த…

  10. யாழ். மீள்குடியேற்றம்: த.தே.கூ.வினால் குறை, நிறை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இந்த அறிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனை யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் உடனடியாக கையளித்துவிட்டார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண…

    • 2 replies
    • 464 views
  11. யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: இராணுவம் -சுமித்தி தங்கராசா 'இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்தார். 'யாழ். பல்கலைக் கழகத்தில் தீபமேற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்காகவே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தீபமேற்றினார்கள். அது குற்றம். அதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது' என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட நான்க…

  12. பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html

    • 11 replies
    • 1.6k views
  13. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களை விட முதலாளிமாருக்கே நன்மை பயப்பதாகவுள்ளது : சந்திரசேகரன் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதற்கு பதிலாக முதலாளிமாருக்கே நன்மை பயப்பதாக மாறியுள்ளது என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.பண்டாரவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கூறியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பொதுவாக அநேகமான பிரிவுகளில் தொழில் புரிபவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் போது ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது. தோட்டத்தொழிலாளர்கள் இன்ற…

  14. பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் நீதியமைச்சும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினார். உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு கல்வியமைச்…

  15. 'யாழ் ஒளி' உப மின் நிலையத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்துவைத்தார். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி) http://tamil.dailymirror.lk/--main/58742-2013-02-12-06-13-25.html

    • 2 replies
    • 674 views
  16. இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக, சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து, அலரி மாளிகையில் நேற்று நடந்த அவசர கூட்டம் ஒன்றில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சின் செயலர் எம்.எம்.சி. பேர்டினான்டோ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். சம்பூரில் இந்தியாவுடன் இணைந்து அனல்மின் நிலையத்தை அமைக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் 2011ம் ஆண்டு கையெழுத்திட்ட போதும், இந்தத் திட்டம் இன்னமும் ஆரம்பித்து வைக்கப்படவில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி சிறிலங்கா அரசாங்கமே இதனை இழுத்தடித்து வந்தது. சம்பூர் அனல்மின் நிலையத் திட்ட…

  17. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணி என்று சொல்லப்படுபவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூட்டணி நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதியாக தென்படுகிறது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், "எதிரணி கூட்டணியில் கைச்சாத்திட்டவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர நாடாளுமன்றத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் கிடையாது. வெறும் இரண்டு நான்கு பேர் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தான் ஐக்கிய தேசிய கட்சி எதிரணி கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியையும் ஜனநாயக மக்கள் முன்னணியையும் தவிர ஏனைய கட்சிகள் அரசியல் வங்குரோத்து நிலையிலுள…

  18. லலித் மற்றும் குகன் அரச பாதுகாப்புப் பிரினராலேயே கடத்தப்பட்டுள்ளனர் என முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆடிகல தெரிவித்தார். காணாமல் போனதாக கூறப்பட்டுள்ள லலித் மற்றும் குகன் தொடர்பிலான வழக்கின் சாட்சியப்பதிவுகள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில், குமார் ரட்ணமும் நானும் ஒரே நாள் கடத்தப்பட்டோம். அங்கு எனது கண்கள் கட்டப்பட்டே இருந்தது. அப்போது லலித் மற்றும் குகன் தொடர்பில் என்னை கேட்டனர். அத்துடன் லலித் மற்றும் குகன் இருவரும் இருப்பதாகவும் கூறினர். ஆனால் எனக்கு கண்கட்டப்பட்டிருந்தமையால் வெளிப்புறத்தில் எதுவும் எனக்கு தெரியவில்லை. எனினும் 2011 செ…

    • 0 replies
    • 449 views
  19. யாழ் நகரில் புகைப்படம் எடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் தடை விதித்துள்ளனர். ஜனாதிபதியின் வருகையினை ஒட்டி நகர் எங்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் நிறுத்தப்பட்டு வீதித் தடைகளும் போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. யாழின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுக்கக் கூடாது என பாதுகாப்பு தரப்பு எச்சரித்துள்ளதுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அழிக்கப்பட்ட சம்பவம் இன்று நடைபெற்றது. அத்துடன் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் இடங்களை புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இன்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் பதாகை கட்டிக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதனை அவதானித்…

  20. சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளதாக கொழும்பு அருகே வசிக்கும் சிங்களர் ஒருவர் இந்த மனுவில் தெரிவித்துள்ளார். தானும் தனது சட்டத்தரணிகளும் சிங்கள மொழி மட்டுமே அறிந்தவர்கள் என்பதால் வவுனியா நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு விசாரணையை சிங்கள மொழியில் செயலாற்றும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார…

  21. ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை எதிர்ப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப்போரில், தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதற்கு எதிர்‌ப்பு தெரிவித்து, சர்வதேச நாடுகளின் நெருக்கடியின் பேரில் கடந்தாண்டு நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு அளித்தன. இதன்காரணமாக, இலங்கை தமிழர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைபணிந்தது. ஆனால், தற்போது அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில், சமீபத்தில் நடைபற்றெ சுதந்திர தின உரையில் கூட அதிபர் ராஜபக்சே, இலங்கை தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழ…

    • 2 replies
    • 520 views
  22. -நவரத்தினம் வவுனியா, இறம்பைக்குளத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வைபவத்தின்போது பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த உணவகத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்ள்ளது. வவுனியா நீதிவான் நீதிமன்றில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் சி.கிரிதரனினால் கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்ககு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் நீதிமன்றம் விடுவித்தது. அத்துடன், வழக்கை மே மாதம் மாதம் 30ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்…

  23. மாத்தளை மனித புதைகுழியின் சூத்திரதாரி கோத்தபாய ராஜபக்‌ஷ செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 12, 2013 உள் நாட்டில் மக்களை மிரட்டும் மிகப்பெரும் மனித புதைகுழியான மாத்தளை வைத்தியசாலை புதைகுழியானது கோத்தபாயவின் நேரடி பார்வையில் கொல்லப்பட்ட ஜேவிபி உறுப்பினர்களது சடலங்களே என தகவல் கசிந்துள்ளது. 1988/89 காலப் பகுதிகளில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவப் பிரதானியாக பணியாற்றியவர் இன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவே.அன்றைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முறியடித்து மக்களைக் காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு என பிரதி கல்வியமைச்சரான நந்தமித்திர எக்கநாயக்கா தெரிவித்துள்ளார். நான் அப்போது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந…

  24. இலங்கையின் தற்போதைய முன்னேற்றகரமான நிலைமை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அரசாரங்கத்துக்கு மரபு சாராத மற்றும் சிறப்பு நிதி உதவி எதையும் வேண்டி நிற்கவில்லை என்பதால் இலங்கைக்கு நேரடியாக அல்லது மறைமுகமான வரவுசெலவுத்திட்ட உதவி எதையும் நிதியம் கருத்திலெடுக்காது விடக்கூடும். இப்போது இலங்கை வளர்ச்சியடைந்து சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன்பெறும் ஆற்றலை கொண்டுள்ளது. எனவே வரவுசெலவு திட்டத்துக்கு யாதாயினும் உதவி தேவையெனில் இலங்கையால் அவ்வாறான சந்தை மூலங்களிலிருந்து இலகுவாக பெற்றுகொள்ள முடியும். எனவே வரவுசெலவு திட்ட நிதி திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்கவேண்டியதில்லை. மேலே கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டை கவனத்திலிருந்து இலங்கையின் அதிகாரம் வா…

  25. ஐந்தரை வயது சிறுமியை பலியெடுத்தது ஸ்கானர் இயந்திரம் - நவலோகா வைத்தியசாலையில் சம்பவம்! [Monday, 2013-02-11 22:02:13] நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 'தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங…

    • 7 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.